திங்கள், 25 ஜூலை, 2016

ஐஸ்வர்யம் அருளும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம்!

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியைப் பற்றிய எட்டு ஸ்லோகங்களும் அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு, உயர்கல்வி ஆகியவற்றை அளிக்கவல்லவை. ஸ்ரீராஜராஜேஸ்வரி என்றாலே, எல்லா கடவுள்களுக்கும் மேலானவள், சர்வ வல்லமை பொருந்தியவள், எல்லா இடத்திலும் வ்யாபித்துள்ளவள் என்று பொருள்.

ஆனால், இந்த எட்டு ஸ்லோகங்களும் அம்பா என்றே ஆரம்பிக்கின்றன. அம்பா என்றால் தாய். எல்லா உலகுக்கும் தாய்.  அதேபோல ஸ்லோக முடிவில் பார்வதி தேவியை, எல்லோருக்கும் மேம்பட்டவள், சர்வ ஐஸ்வர்யம் படைத்தவள், தேவதைகளுக்கு எல்லாம் மேலானவள் என்று குறிப்பிடும் பதமாக ராஜராஜேஸ்வரி என்று முடிகிறது. எல்லா ஸ்லோகங்களுமே பார்வதி தேவியின் பல அவதாரங்களைக் குறிப்பவையே.

1. அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய-லக்ஷ்மீ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

பொதுப் பொருள்: தாயே, சாம்பவி, சந்த்ரமௌளி, அபலா, அபர்ணா, உமா, பார்வதி, காளி, ஹிமவானின் புதல்வி, சிவா, முக்கண்ணளான காத்யாயநீ, பைரவீ, சாவித்ரீ என பல ரூபங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மையே, புதுப்புது இளமைத்தோற்றம் கொண்டவளே, சுபத்தைத் தருபவளே, சாம்ராஜ்ய சம்பத்தை அளிப்பவளே, ஆத்ம ஸ்வரூபிணியே, பரதேவதையே, பகவதி ராஜ ராஜேஸ்வரியே நமஸ்காரம்.

2. அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த-ஸந்தாயினீ
வாணீ-பல்லவ-பாணி-வேணு-முரளீ-கானப்ரியா-லோலினீ
கல்யாணீ உடுராஜபிம்ப-வதனா தூம்ராக்ஷ-ஸம்ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, மோகினி தேவதையே, மூவுலகத்தையும் ஆள்பவளே,, பேரானந்தம் தருபவளே, சரஸ்வதியே, இளந்தளிர்க் கரங்கள் கொண்டவளே, புல்லாங்குழல் இசையை பிரியத்துடன் இசைத்து மகிழ்பவளே, மங்களமானவளே, சந்த்ர பிம்பம் போன்ற பிரகாச முகம் கொண்டவளே, தூம்ராக்ஷனை வதம் செய்தவளே, ஆத்மஸ்வரூபிணியே, பரதேவதையே, பகவதி ராஜ
ராஜேஸ்வரியே நமஸ்காரம்.

3. அம்பா நூபுர ரத்ன கங்கண தரீ கேயூர ஹாராவலீ
ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீக்ரைவேயகை ராஜிதா
வீணா வேணு விநோத மண்டித கரா வீராஸனா ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, ரத்னத்தால் ஆன சதங்கை கைவளை கழுத்தட்டிகை பலவித ஹாரமாலைகள்  ஜாதி, சம்பக மாலைகள் வைஜயந்தி மாலை கழுத்து ஆபரணங்கள் ஆகியவற்றை அணிந்து அவற்றுக்கு மெருகூட்டுபவளே, வீணை மற்றும் புல்லாங்குழல் இசைக்கும் திருக்கரங்கள் கொண்டவளே, வீராஸனத்தில் வீற்றிருப்பவளே, ஆத்ம ஸ்வரூபிணியே, பரதேவதையே, பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரியே நமஸ்காரம்.

4. அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மானோஜ்ஜ்வலா
சாமுண்டாச்ரித-ரக்ஷ-போஷ-ஜநநீ தாக்ஷாயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, ரௌத்ரிணியே, பத்ரகாளியே, தீக்கொழுந்து ஒளிர்வதுபோன்ற முகம் கொண்ட பகலா தேவியே, வைஷ்ணவி, ப்ரஹ்மாணி, திரிபுராந்தகி, தேவர்களால் வணங்கப் பெறுபவளே, பளபளக்கும் ஒளிபடைத்தவளே, சாமுண்டா, அண்டியவர்களைக் காப்பவளே, அவர்களுக்கு ஆரோக்கியம் அருளும் தாயே, தாக்ஷாயணி, வல்லமை பொருந்தியவளே, ஆத்மஸ்வரூபிணி, பரதேவதையே, பகவதி, ஸ்ரீராஜராஜேஸ்வரியே, நமஸ்காரம்.

5. அம்பா சூல-தனு:-குசாங்குச-தரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப-ப்ரசமனீ வாணீ-ரமா-ஸேவிதா
மல்லாத்யாஸுர-மூகதைத்ய-மதனீமாஹேச்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, சூலம், வில், கதை, அங்குசம் ஆகியவற்றைத் திருக்கரங்களில் தரித்தவளே, தலையில் அர்த்த சந்த்ரனைச் சூடியிருப்பவளே, வாராஹியே, மது-கைடபரை அழித்தவளே, சரஸ்வதி-லக்ஷ்மியாலும் துதிக்கப் பெற்றவளே, மல்லாதி அசுரர்களையும் மூகாசுரனையும் அழித்தவளே, மாஹேச்வரி, அம்பிகையே, ஆத்மஸ்வரூபிணி, பரதேவதையே, பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரியே நமஸ்காரம்.

6. அம்பா ஸ்ருஷ்டி-விநாச-பாலனகரீ ஆர்யா விஸம்சோபிதா
காயத்ரி ப்ரணவாக்ஷர அம்ருதரஸ: பூர்ணானுஸந்தீ-க்ருதா
ஓங்காரீ விநதாஸுதார்ச்சித பதா உத்தண்ட-தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, ஸ்ருஷ்டி-ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்பவளே, உயர்ந்தவளாக விளங்குபவளே, காயத்ரி-ப்ரணவம் (ஓங்கார எழுத்து) இவற்றின் அமிர்த ரசமானவளே, ஓங்காரஸ்வரூபிணியே, தேவதைகளால் வணங்கி அர்ச்சிக்கப்படும் திருவடியை உடையவளே, அசுரர்களை முன்னின்று கொல்பவளே, ஆத்மஸ்வரூபிணியே, பரதேவதையே, பகவதி, ஸ்ரீராஜராஜேஸ்வரியே நமஸ்காரம்.

7. அம்பா சாச்வத-ஆகமாதி-வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி-பிபீலிகாந்த-ஜநநீ யா வை ஜகன்மோஹினீ
யா பஞ்சப்ரணவாதி-ரேபஜனனீயா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, அழியாத தேவர்களால் போற்றப்படு பவளே, உயர்ந்த மஹாதேவதையாக விளங்குபவளே, சதுர்முக ப்ரஹ்மா முதல் ஈ, எறும்பு வரை எல்லாவற்றையும் படைக்கும் ஜகன்மாதாவே, உலகோர் அனைவரையும் நேசிப்பவளே, பஞ்ச பூதங்களையும் உண்டாக்குபவளே, அனைத்திற்கும் மூலமானவளே, சித்கலா, மாலினியே, ஆத்மஸ்வரூபிணியே, பரதேவதையே, பகவதி, ஸ்ரீராஜராஜேஸ்வரியே நமஸ்காரம்.

8. அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய:படேத்
அம்பா லோல கடாக்ஷ வீக்ஷ-லலிதஞ்ச ஐச்வர்யமவ்யாஹதம்
அம்பா பாவன மந்த்ரராஜபடனா தந்தே சமோக்ஷ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாயே, பக்தர்களைக் காப்பதில் பற்றுள்ளவளே, உன்னைப் பற்றிய இந்த அம்பாஷ்டகத்தைப் படிக்கும் அனைவரும் அம்பாவின் லீலா விநோத கடைக்கண் பார்வைக்கு இலக்காகி உன்னதமான அழியா நற்செல்வங்களைப் பெறுவான். மேலும் உன்னுடைய இந்த மந்த்ர ராஜத்தைப் படிப்பவனுக்கு நீ மோக்ஷமளிப்பாய். நீயே ஆத்மஸ்வரூபிணி. பரதேவதையே, பகவதி, ஸ்ரீராஜராஜேஸ்வரியே, நமஸ்காரம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக