திங்கள், 18 ஜூலை, 2016

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்!

1.ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம் 

சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச வராபய கராந் விதாம் அப்ஜத்வய கராம்போஜாம் அம்புஜாசநஸமஸ்த்திதாம் ஸஸிவர்ண கடேபாப் யாம் ப்லாவ்யமானாம் மஹாச்ரியம் சர்வாபரண சோபாட்யாம் சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம் சாமரக்ரஹ நாரீபி : ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ : ஆபாதலம்பி வசநாம் கரண்ட மகுடாம் பஜே. 

பலன்கள்:- மேற்கண்ட சுலோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் செய்தால் ஒரு நாட்டையே ஆளும் பொறுப்பிற்கு சமமான அரசயோகத்தையும், உயர்ந்த அரசுபதவி, அதிகாரி ஆகிற யோகத்தையும்  ஸ்ரீ கஜலட்சுமி தேவியானவள் வழிபடுபவர்களுக்கு தந்து, எல்லா ஐசுவர்யங்களையும், வாழ்வில் வளமும் தருவாள்.


 2.ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம் 

த்வி புஜாஞ்ச த்விநேத்ராஞ்ச சாபயாம் வரதாந்விதாம் புஷ்யமாலாதராம் தேவீம் அம்புஜாசன சம்ஸ்த்திதாம் புஷ்ப தோரண சம்யுக்தாம் ப்ரபா மண்டல மண்டிதாம் சர்வ லக்ஷண சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம் பீதாம்பரதராம் தேவீம் மகுடே சாரு பந்தநாம் ஸ்தநோந்நதி சமாயுக்தாம் பார்ச்மயோர் தீபசக்திகாம் செளந்தர்ய நிலையாம் சக்திம் ஆதிலட்சுமி மஹம் பஜே. 

பலன்கள்:- இந்த சுலோகத்தை தினமும் காலை முறைப்படி பாராயணம் செய்து வந்தால் எந்தக் காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழுவெற்றியுடன் நடக்க ஸ்ரீ ஆத்லட்சுமி நமக்கு அருள்புரிவாள். மேலும், எதிர்பார்த்ததை விடச் சிறந்த பலன்கள் கிடைக்கும். 


3.ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம் 
ஜடாமகுட சம்யுக்தாம் ஸ்த்தி தாசந சமந்விதாம் அபயம் கடகஞ் சைவ பூர்ணகும்பம் புஜத்வயே கஞ்சுகம் ச்சந்த வீரஞ்ச மெளக்திகம் சாபிதாரீணீம் தீபசாமர நாரீபி:சேவிதாம் பார்ச்வ யோர்த்வயோ பாலே சேநாநி சங்காசே கருணாபூரி தாநநாம் மஹாராஞ் ஞீஞ்ச சந்தான லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே 

பலன்கள்:- மேற்கூறிய சுலோகத்தை தினசரி சொல்லி வந்தால் நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ரதோஷத்தையும் ஸ்ரீசந்தான லட்சுமி நீக்கி அருள்புரிவாள். 


4.ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம் 

கிரீட மகுடோ பேதாம் ஸ்வர்ண வர்ண சமந்விதாம் சர்வாபரண சம்யுக்தாம் சுகாசந சமந்விதாம் பரிபூர்ணஞ்ச கும்பஞ்ச தக்ஷிணேன கரேணது சக்ரம் பாணஞ்ச தாம்பூலம் ததா வாம கரேணது சங்கம் பத்வஞ்ச சாபஞ்ச கண்டி காமபி தாரிணீம் சத்கஞ்சுக ஸ்தநீம் த்யாயேத் தன லக்ஷ்மீம் மநோஹரம். 

பலன்கள்:- இந்த சுலோகத்தை தினமும் சொல்லி வழிபட்டால், நல்ல வழியாகிய தர்மநெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீதனலட்சுமி அருள்புரிவாள். 


5.ஸ்ரீ தான்யலட்சுமி ஸ்தோத்திரம் 

வரதாபய சம்யுக்தாம் கிரீட மகுடோஜ்வலாம் அம்புஜஞ் சேக்ஷீசாலிஞ்ச கதலீ பலத்ரோணிகாம் பங்கஜம் தக்ஷவாமேது ததாநாம் சுக்லரூபிணீம் க்ருபா மூர்த்திம் ஜடாஜீடாம் சுகாசந சமந்விதாம் சர்வாலங்கார சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம் மதமத்தாம் மநோஹரி ரூபாம் தான்யட்ரீயம் பஜே

பலன்கள்:- 
மேற்கண்ட சுலோகத்தை தினமும் கூறி ஸ்ரீதான்யலட்சுமியை வணங்கி வழிபட்டால், தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறைந்து விளங்கும். நம் வாழ்வில் உணவுப் பஞ்சமே இராது. 


6.ஸ்ரீ விஜயலட்சுமி ஸ்தோத்திரம் 

அஷ்ட பாஹீயுதாம்தே வீம் ஸிம்ஹாசன வரஸ்த்திதாம் சுகாஸநாம் சுகேசீம்ச கிரீட மகுடோஜ்வலாம் ச்யாமாங்கீம் கோமளாகாரம் சர்வாபரண பூஷிதாம் கட்கம் பாசம் ததா சக்ரம் அபயம் சவ்ய ஹஸ்தகே கேடகஞ் சாங்குசம் சங்கம் வரதம் வாமஹஸ்தகே ராஜரூபதராம் சக்திம் ப்ரபா செளந்தர்ய சோபிதாம் ஹம்சாரூடாம் ஸ்மரேத் தேவீம் விஜயாம் விஜயாப்தயே 

பலன்கள்:- மனித வாழ்வில் வெற்றிகளுக்கெல்லாம் உரிய காரண தேவதையாக இருப்பவள் ஸ்ரீவிஜயலட்சுமி, இவளது அருட்பார்வை இருந்தால்தான் தொடர்ந்து வெற்றியை அடைய முடியும். மேற்கூறிய சுலோகத்தை 1 தினமும் பக்தியுடன் முறைப்படி கூறி ஸ்ரீவிஜயலட்சுமி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இந்த தேவியை வழிபட்ட பின்னரே எந்த முயற்சியையும் தொடங்க வேண்டும். ஸ்ரீவிஜயலட்சுமியை அலட்சியம் செய்து தொடங்கப் பெறும் எந்த முயற்சியிலும் வெற்றியே கிட்டாது என உணர வேண்டும். 


7.ஸ்ரீ வீரலட்சுமி ஸ்தோத்திரம் 

அஷ்டபாஹியுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாசந வரஸ்த்திதாம் தப்த காஞ்சந சங்காசாம் கிரீட மகுடோஜ் வலாம் ஸ்வர்ண கஞ்சுக சம்யுக்தாம் ச்சன்ன வீரதராம் ததா அபயம் வரதஞ் சைவ புஜயோ:சவ்ய வாமயோ: சக்ரம் சூலஞ்சபாணஞ் ச சங்கம் சாபம் கபாலம் தததீம் வீரலக்ஷ்மீஞ் ச நவதாலாத் மிகாம் பஜே. 

பலன்கள்:- இந்த சுலோகத்தை தினமும் பக்தியுடன் கூறி வந்தால் மன உறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், ஸ்ரீ வீரலட்சுமி அளிப்பாள். எனவே, இச்சுலோகத்தை தவறாமல் தினமும் கூறி வழிபட வேண்டும். 


8.ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம் 

சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்ம சுபூஜிதாம் பத்ம பத்ராப நயனாம் வராபய கரோஜ்வலாம் ஊர்த்வ த்வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ர காம் பத்வாசநே சுகாஸீநாம் பஜே அஹம் சர்வ மங்களாம்.

 பலன்கள்:- மேற்கூறிய சுலோகத்தை தினமும் கூறி ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம், அத்துடன், இவளை உண்மையுடன் வழிபட்டவர்களின் வாழ்க்கை என்றும் ஆனந்தமாயிருக்கும் என்பது உறுதி. 

பொதுவாக, அஷ்டலட்சுமி வழிபாடு செய்ய விரும்புகிறவர்கள் ஏதோ ஒரு நாள் பண்டிகையாக நினைக்காமல், தனது வாழ்வின் அன்றாடக் கடமையாகக் கொள்ள வேண்டும். அப்போது தான் மஹாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும். வீட்டில் வழிபடுவதோடு , நேரம் கிடைக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமி எழுந்தருளியிருக்கிற புண்ய தலங்களுக்கும் அடிக்கடி புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக