சனி, 28 நவம்பர், 2015

ஆயிரம் கண்ணுடையாளின் ஆதி சமயபுரம்!



மகமாயி சமயபுத்தாயே - உன்
    மகளெனக்கு எல்லாமும் நியே
    கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்
    தரும் குங்குமத்தான் மங்கையர்க்கு காவல் (மகமாயி)

பெண்  கண்கொடுக்கும் கண்ணபுர தேவி
    அருள் தருவாள் இமயமலைச் செல்வி
    மூவிலை வேல் கைகொண்ட காளி
    பகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி (மகமாயி)

பெண்  வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு - அது
    வினைதீர்க்க நீ அமைந்த கூடு
    திருநீறே அம்மா உன் மருந்து - அதை
    அணிந்தாலே நோய் ஓடும் பறந்து

பெண்  பெற்றவளே நீ அறிவாய் என்னை உன்
    பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை
    கற்றகலை சிறு துளியே எனக்கு - அதை
    கடலாக்கி வைத்த புகழ் உனக்கு (மகமாயி)


 
மாரியம்மன் ஆலயங்களில், அவை அனைத்துக்குமான தலைமை பீடம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் ஆலயம். ‘சாய்ஞ்சா சமயபுரம்... சாதிச்சா கண்ணபுரம்’ என்பதற்கிணங்க வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் அளித்து சாதித்தவள் அவள். சாதித்து வருகிறவள். சாதிக்கப் போகிறவள். முக்காலங்களிலும் முதன்மை பெற்றவள்; வெகு சூட்சுமமானவள் முத்துமாரி!
 
கிருஷ்ணாவதார காலத்தில் கம்சன், தன்னைக் கொல்ல வந்த குழந்தை இதுவென எண்ணி, ஒரு பெண் குழந்தையை விண்ணிலே வீசியெறிந்து, அதனை வெட்ட வாளினை உயர்த்துகிறான். அக்குழந்தை வானத்தில் மிதந்தபடி, “ஏ... கம்சனே! உன்னைக் கொல்லப் போகிறவன் கோகுலத்தில் வளர்கிறான். நான் மாயாதேவி!” எனச் சொல்லியபடி வானில் பறந்து வந்து, பூமியில் ஒரு வேம்பு வனத்தினில் வந்தமர்கிறாள். அதுவே, ஆயிரம் கண்ணுடையாளின் ஆதி சமயபுரம் ஆயிற்று என்பதாக புராணம்.



கிழக்கு பிரதான வாசல். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதால், மேல் நோக்கி ராஜகோபுரத்தைத் தேடுகிறோம். பிறை நிலவுபோல ஒரு பகுதி துருத்திக்கொண்டு வெளியே தெரிகிறது. காரணம், மண்டபங்கள். அதுமட்டுமல்ல; சற்றே உயரம் குறைவான ராஜகோபுரம்.

அதைக் கடந்து உள்ளே சென்றால், எதிரே மின்னுகிறது தங்கத் தகடுகள் வேய்ந்த துவஜஸ்தம்பம். பலி பீடம். முதல் பிரகாரத்தின் உள்ளே இடதுபுறம் திரும்புகிறோம். விநாயகர் சன்னிதி!

பெரும்பாலான ஆலயங்களில் கன்னி மூலையில்தான் விநாயகர் சன்னிதி அமைந்திருக்கும். இங்கு கன்னி மூலைக்கும் அக்னி மூலைக்கும் மத்தியில் மகா கணபதி சன்னிதி! இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளையும் உள்ளடக்கிய மூன்று விநாயகர்கள் காட்சியளிக்கின்றனர். முச்சக்தி விநாயகர்களின் திருவருள் பெற்று, பிரகாரத்தில் நடக்கிறோம். ஸ்தல விருட்சமான சுயம்பு வேப்ப மரம் வளர்ந்தோங்கி நிற்கிறது. அதன் கிளைகள் எங்கிலும் வேண்டுதல் எழுதப்பட்ட திருவுளச்சீட்டுகள் நிறைந்துள்ளன. இது புனித மரமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


முதல் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நவராத்திரி மண்டபம். மேற்கு வாயில். மேற்கு கோபுரம். வட மேற்கில் வசந்த மண்டபம். ஈசான மூலையில் யாக சாலை மண்டபம். தங்க ரதக் கூடம். முதல் பிரகாரத்தின் வடபுறத்தில் அபிஷேக அம்மன் சன்னிதி. இந்த அம்மனின் திருமேனி மீது பட்டு வெளியேறும் திருமஞ்சன தீர்த்தம்தான், பக்தர்களுக்கான அருமருந்து. அம்மை நோய் கண்டவர்கள், சரும நோய் கொண்டவர்களுக்கான தெய்விக சர்வ ரோக நிவாரணியே, இந்த திரு மஞ்சன தீர்த்தம்தான்.

அபிஷேக அம்மனை வலம் வந்து பொன்னிறக் கொடிமரம், பலிபீடம் கடந்து நகர்ந்து சென்றால் எதிரே கருவறை! அங்கே காணும் விழிகள் கசிந்து, வேண்டும் மனங்கள் உருகி, வருந்தி வந்து வணங்கி நிற்கும் தம் மக்களை மெய்சிலிர்க்க வைத்து அரவணைத்துக் கொள்கிறாள் சமயபுரத்தாள்!
 

விக்கிரம சிம்மாசனத்தில் விற்றிருக்கிறாள், சுயம்புவும் கருவறை மூலவருமான மாரியம்மன். பூவுலகில் வேறெந்த மாரியம்மனுக்கும் விக்கிரம சிம்மாசனம் கிடையாது என்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. “இங்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டால், அது நிச்சயம் நிறைவேறும்.” என்கிறார்கள் பக்தர்கள். அந்த மகாமாரியம்மனைத்தான் இப்போது தரிசிக்கிறோம்.



 

  
மாதுளம் பூ நிற மேனி! சிரசில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. தங்கக் கிரீடம் தாங்கிக் குங்குமச் சிவப்பு நிறத்திருமுகத்துடன் திகழ்வதே ஒரு தனியழகு. அம்பாளின் திருமுகத்தில் திலகமாக முப்பத்தியாறு வைரக்கற்கள்.
 

  
அது என்ன கணக்கு? விக்கிரமாதித்தனுக்கு இந்திரன் பரிசளித்த சிம்மாசனத்தின் இரு புறங்களிலும் பதினெட்டு பதினெட்டு என மொத்தம் முப்பத்தியாறு படிகள். அவைகளை நிலைநிறுத்தும் விதமாக அம்மனின் திருமுகத்தில் திலகமென முப்பத்தியாறு வைரக்கற்கள்.
எட்டு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். கத்தி, சூலம், தாமரை, உடுக்கை ஆகியன வலது திருக்கரங்களில். பாசம், வில், மணி, கபாலம் ஆகியன இடது திருக்கரங்களில். ஏழு அசுரர்களின் தலைகளைக் கொய்து, அவைகளையே மாலையாக அணிந்துள்ளாள். இடது காலை மடக்கி (மடித்து) வைத்து, வலது காலை தொங்கவிட்டபடி வீற்றிருக்கிறாள்.

மாயா அசுரன் தலைமீது வலது கால் பதித்துள்ளாள். அதன் வலப்பக்கம் அசுரன் சண்டன் தலை, இடப்பக்கம் அசுரன் முண்டனின் தலையென, அம்பாளின் வலது காலின் அடியில் மூன்று அசுரர்களின் தலைகள்.


இத்தனை உக்கிரங்களைத் தாங்கியிருந்தபோதிலும், திருமுகத்தில் கருணை பொங்க, மந்தகாசப் புன்னகையுடன் காட்சி அருள்கிறாள், ஸ்ரீமாரியம்மன்.

கருவறைக்கு அருகில் உற்சவ அம்மன் சன்னிதி. மாரியம்மன் இங்கு ஆயிரங்கண்ணுடையாள் திருமேனியாக விக்கிரக வடிவில், தெற்கு நோக்கி சன்னிதி கொண்டுள்ளாள். முன்னோடியான கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி தனிச் சன்னிதி கொண்டுள்ளார்.



மத்தியில் சூர்ப்பநாயக்கர் சன்னிதி. அதன் கிழக்கே செல்லாண்டியம்மன் சன்னிதி. கிராம தேவதை அவள். அடுத்து, நின்ற திருக்கோலத்தில் பொன்னுக்கு அருளும் விநாயகர்.

“ஆதியில் கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம் என்றாகி தற்போது சமயபுரம். அதனால் ஊர் மாறி. காளிதான் இவள். பேர் மாறி, மாரி ஆனவள். மாரி என்றாலே கருமை நிறம் கொண்டவள். இவள் நிறமோ மாதுளம் பூ செந்நிறம். அதனால் உருமாறி (மேனி நிறம் மாறி). ஆயிரம் கண்ணுடையாள் உற்சவ மாரியம்மன் விக்கிரகம். பாலாபிஷேகத்தின்போது, அவளது திருமேனி மீது எண்ண முடியாத அளவுக்கு, அம்மை முத்துக்கள் தெரியும்.

எல்லா வயதினரின் அம்மை மற்றும் சரும நோயினை நீக்கிக் காத்தருள்பவளாக இங்கு வீற்றிருக்கிறாள் ஆயிரம் கண்ணுடையாள். அவளே சமயபுரத்தாள்!”



ஆடி வெள்ளித் திருவிழா!
ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். அதுவும் ஆடி கடைசி வெள்ளியன்று, லட்சக்கணக்கில் பெண்களும் ஆண்களும் திரள்கின்றனர். பொதுவாக எல்லா மாதங்களிலுமே செவ்வாய், வெள்ளி தினங்களில் சுமார் 50,000 பக்தர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சம்; அமாவாசை நாட்களில் இரண்டு லட்சம்; சித்திரை தேர்த் திருவிழாவின்போது ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் வந்து செல்கின்றனர்.


பச்சைப் பட்டினி விரதமும் பூச்சொரிதலும்!
மாசி மாதம் பூச்சொரிதல் விழா. மாசி கடைசி ஞாயிறு தொடங்கி, பங்குனி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் பூச்சொரிதல். முதல் பூ ஸ்ரீரங்கம் பெருமாளிடம் இருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே, மற்ற ஊர்கள் மற்றும் பக்தர்களிடமிருந்து வரும் பூக்கள் அம்மன் மீது சொரியப்படும். அந்த இருபத்தியெட்டு நாட்களிலும் சமயபுரம் மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் அனுஷ்டிக்கிறாள். அம்மனுக்கு இளநீர், பானகம், பழங்கள், பச்சரிசி துள்ளு மாவு மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது தினசரி ஆறு கால பூஜைகளிலும்.



ரெங்கநாதன் தங்கச்சி... அவளுக்கு எத்தனை தங்கச்சி?

தைப்பூசத் திருநாளின்போது, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே எழுந்தருள்கிறாள் சமயபுரம் மாரியம்மன். ஸ்ரீரங்கம் பெருமாளும் அங்கு எழுந்தருள்கிறார். தன் தங்கை மாரியம்மனுக்கு, சீர் வரிசைப் பொருட்கள் தந்து அனுப்புகிறார் அண்ணன் நம்பெருமாள். அன்பில் மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், வலங்கைமான் மாரியம்மன், நார்த்தாமலை மாரியம்மன், பவானி பெரியபாளையம் மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன் என சமயபுரம் மாரியம்மனுக்கு மொத்தம் ஆறு தங்கைகள்.



திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது சமயபுரம்.
 
 

திருச்சானூரில் திகழும் திரு!

செல்வ வளம் தரும் தாயார்! 

பெருமாள் கோவிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை வணங்கி, அதன் பிறகே பெருமாளை வணங்குவது மரபு. திருப்பதி செல்பவர்கள், நேராக வெங்கடாசலபதியைத் தரிசித்த பிறகே திருச்சானூர் செல்கின்றனர்; ஆனால், முறைப்படி திருச்சானூர் சென்று, அலமேலு மங்கை எனப்படும் பத்மாவதி தாயாரைத் தரிசித்த பிறகே, வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும்.

முற்பிறப்பில் வேதவதி என்னும் பெயரில் பிறந்தாள் பத்மாவதி தாயார். அழகில் சிறந்த அவள், ஒரு தபஸ்வினியாகி காட்டில் தவமிருந்தாள். ஒரு முறை, அவளை பார்த்தான் ராவணன். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினான். ராமபிரானைத் தவிர, வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று அவனிடம் தெரிவித்த வேதவதியை பலவந்தப்படுத்தினான் ராவணன்.


அவனிடம், “பெண்ணிச்சையால் என்னைப் பலவந்தப்படுத்திய உனக்கு இதே இச்சையால் அழிவு நேரும்…’ என சாபமிட்டாள் வேதவதி. பின்னர் தன் கற்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அக்னியில் விழுந்த அவளை, எரிக்காமல் பாதுகாத்தார் அக்னிபகவான்.
ஒருமுறை, அவள் ராமபிரானைச் சந்தித்தாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டாள். “இப்பிறவியில் நான் ஏகபத்தினி விரதன். கலியுகத்தில், நான் திருமலையில் சீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். நீ, அந்த மலையை ஆளும் ஆகாசராஜன்- தரணிதேவி தம்பதியருக்கு புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்…’ என்று வாக்களித்தார் ராமபிரான்.


இதன்படி, திருமலைக்கு சீனிவாசன் வர, பத்மாவதியைச் சந்தித்தார். தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினார். தன் முற்பிறவி வரலாறை மறந்துவிட்ட பத்மாவதி, அவரைக் கண்டு அஞ்சினாள். பத்மாவதியின் தோழிகள் அவர் மீது கல்லெறிந்து துரத்தினர். காயமடைந்த சீனிவாசன், தன்னை வளர்த்து ஆளாக்கிய வகுளாதேவியிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார்.


சீனிவாசனுக்காக ஆகாசராஜனிடம் தூது சென்றாள் வகுளாதேவி. தன் மகன் சீனிவாசன், நாராயணனின் அம்சம் என்பதை மன்னனிடம் தெரிவித்தாள். அதுகேட்டு ஆனந்தமடைந்தார் மன்னர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் நடக்கவிருந்த திருமணத்தைக் காண தேவலோகமே கூடியது.


சீனிவாசன் ஏழை என்பதால், ராஜா வீட்டுப்பெண்ணை மணம் முடிக்க வேண்டிய நிலையில், திருமணச்செலவுக்காக குபேரனிடம் கடன் வாங்கினார்.
“குபேரா! என்னை வணங்குவதற்கு இந்த திருத்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப அவர்களிடம் நான் செல்வத்தை வசூலித்து விடுவேன். அதை உனக்கு வட்டியாகத் தருவேன்! கலியுகம் முடியும் போது அசலை முழுமையாகத் தந்துவிடுவேன்…’ என்று எழுதிக்கொடுத்தார்.


சீனிவாசன்- பத்மாவதி திருமணம் இனிதே முடிந்தது. நாராயணன், இன்னொரு திருமணம் முடித்துவிட்டார் என்ற தகவலை லட்சுமியிடம் சென்று சிண்டுமுடித்தார் நாரதர். கோபமடைந்த லட்சுமி, சீனிவாசனிடம் வந்து நியாயம் கேட்டு அழுதாள். அவளைச் சமாதானம் செய்து விளக்கமளித்தார் சீனிவாசன்.


“லட்சுமி! முற்பிறவியில் நீ சீதையாக பிறந்த போது ராவணன் உன்னைக் கடத்த வந்தான். அப்போது அக்னியின் பாதுகாப்பில் இருந்த மாயசீதையான இவள், உனக்குப் பதிலாக ராவணனுடன் சென்றாள். உண்மையில் இவள் உன்னைக் காப்பாற்றியவள்…’ என்றார். சமாதானமடைந்த லட்சுமி, பத்மாவதியைத் தன் தங்கையாக ஏற்றாள்.
பின்னர், லட்சுமியிடம், “நீ என் மார்பில் அமர்ந்துகொள்.


என் மார்பில் வலப்பக்கம் பத்மாவதி இருப்பாள். அவளது மற்றொரு வடிவத்தை பத்மசரோவர தீர்த்தக்கரையில் அமையும் வகையில் ஏற்பாடு செய். நீங்கள் இருவரும் இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அருள் வழங்குங்கள்…’ என்றார் சீனிவாசன். பத்மாவதி அமர்ந்த இடமே அலமேலுமங்காபுரம் எனப்படுகிறது. பிற்காலத்தில் திருச்சானூர் என்ற பெயர் சூட்டப்பட்டது.


 
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, குறத்தி ஒருத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்கின்றனர் ஆந்திரத்து பெரியவர்கள்.

திருப்பதி திருமலையை, ஆகாசராஜன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். இவனுக்கு, லட்சுமி தாயாரே, பத்மாவதியாக அவதாரம் எடுத்து, மகளாக பிறந்திருந்தாள். இவளைத் திருமணம் செய்யும் நோக்கத்துடன், திருமால், ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் பரம ஏழையாக அவதாரம் செய்தார். ராஜா வீட்டுப் பெண்ணை, ஏழைக்கு, எப்படி திருமணம் செய்து வைப்பர்! எனவே, குறத்தி வேடமிட்டு, ஸ்ரீநிவாசன், பத்மாவதியின் அரண்மனைக்குள் நுழைந்தார்.

இங்கிருந்து தான், திருமணத்தடை உள்ளவர்கள், கதையை கவனமாக படிக்க வேண்டும்.



அந்தக் குறத்தி மிகவும் அழகாக இருந்தாள். அவளைப் பார்த்து, திருமலையில் வசிக்கும் மக்கள் மட்டுமல்ல, விண்ணில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேவர்களும் அசந்து போய் விட்டனர். ஆகாசராஜனும், அவன் மனைவியும், குறத்தியைப் பார்த்தனர். அவளது பேரழகும், முகத்தில் இருந்த பிரகாசமும், அவர்களை அறியாமலேயே, அவளை, அரண்மனைக்குள் அழைக்க வைத்தது.
 

தங்களுடன் அழைத்துச் சென்று, தங்கள் மகள் பத்மாவதி முன் உட்கார வைத்தனர்.

‘குறத்தியே… உனக்கு எந்த ஊர்?’ என்று கேட்டாள் பத்மாவதி.



‘நான் முத்துமலையில் வசித்திருக்கிறேன்; குடகுமலையில் வாழ்ந்திருக்கிறேன்…’ என்று, சொல்லிக்கொண்டே போனவள், ‘இன்று, இந்த திருமலைக்கு வந்திருக்கிறேன். உலகிலுள்ள எல்லா மலைகளும், என் மலை தான்…’ என்றாள்.
‘ஓகோ… அப்படியானால், நீ குறி சொல்வாயா?’

‘என்ன… அப்படிகேட்டு விட்டீர்கள்… சிவனும், பார்வதியும் வசிக்கும் கைலாய மலைக்கு சென்று, அவர்களுக்கும் குறி சொல்லியிருக்கிறேன்; இந்திரலோகம் சென்று, தேவேந்திரனுக்கு
ம், இந்திராணிக்கும் குறி சொல்லியிருக்கிறேன்…’ என்று, பிரதாபித்தாள் குறத்தி.



‘உங்கள் நாட்டில் எல்லா
ரும் நலமா?’ என்று, கேட்டாள் பத்மாவதி.
‘இளவரசி… எங்கள் நாட்டில் எல்லாரும் நண்பர்களே… பகை என்ற சொல்லே அங்குள்ளவர்களுக்கு தெரியாது. புலியும், பசுவும் ஒரே ஓடையில் தண்ணீர் குடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எங்கள் ஊரில், வாழை, கிழக்கு நோக்கி குலை தள்ளும்; பலாப்பழமோ மேற்கு நோக்கி காய்க்கும்…’ என்றாள்.
இவ்வாறு நடப்பது, ஒரு நாட்டிலும், வீட்டிலும், மங்கல நிகழ்ச்சி நடப்பதற்கான அறிகுறிகள்.

பின், பத்மாவதியின் கையைப் பார்த்த குறத்தி, ‘எந்தக் கை, இப்போது, உன் கையைப் பிடித்திருக் கிறதோ, அந்தக் கைக்கு நீ சொந்தமாவாய்…’ என்றாள்.
பத்மாவதி, ஏதும் புரியாமல், குறத்தியைப் பார்க்க, ‘இளவரசி… உன் மனதுக்குப் பிடித்தவனே, உனக்கு கணவன் ஆவான்…’ என்றாள்.
பத்மாவதிக்கு, நிம்மதிப் பெருமூச்சு.

ஆம்… அவளுக்கு, உலகையே காக்கும் அந்தக் கோவிந்தனே தன் மணாளன் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை நிறைவேறி, பத்மாவதி தாயார் திருச்சானுாரில் குடியிருந்து, நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறாள். கார்த்திகை மாதத்தில், அவளுக்கு பிரம்மோற்சவம் நடக்கும்.

அவள், ‘அலர்மேல் மங்கை’ எனப்படுகிறாள். சொல் வழக்கில், அலமேலு என்பர். அலர் என்றால் தாமரை. ‘செந்தாமரை மலர் மேல் வீற்றிருப்பவள்’ என்று பொருள். பத்மம் என்றாலும் தாமரை. எனவே, அவளுக்கு, பத்மாவதி என்ற பெயரும் பொருத்தமாகிறது.

பெருமாள் குறத்தியாக வந்து குறி சொன்ன இந்தக்கதையைப் படிப்பவர்கள், அன்னையின் தேரோட்டத்தை தரிசித்து வாருங்கள். விரைவில், திருமணம் நடக்க, அந்த அலர்மேல் மங்கை அருள் செய்வாள்.
 

கங்காஷ்டகம்!

 

1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-
கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!
அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்
விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!


பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ, தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர் (கலிகல்மஷம் பாதிக்காமல்)

2.ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!
க்ஷே£ணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ
பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!


ப்ரும்மாண்டத்தை உடைத்துக் கொண்டும், ஸ்ரீ பரமேச்வரனின் ஜடாவல்லியை கிளு கிளுக்கச் செய்து கொண்டும், ஸ்வர்கத்திலிருந்து கீழே இறங்கி மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடி பூமியில் புரண்டு, மக்களின் பாப பட்டாளத்தை விரட்டியடித்து, பின் சமுத்திரத்தில் கலந்து நிரப்பிக்கொண்டுமிருக்கிற புண்யகங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

3.மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்
ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி
ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்
பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் !!


யானை தும்பிக்கையும், முதலைகளும் அலை வேகத்தை சற்றே தடுக்க, ஒடும் கங்கை ப்ரவாஹம் நம்மை காப்பதாக!அது, மூழ்கும் யானைகளின் காதோரம் ஜலப்பெருக்கால் வாசனை பெற்றதால் வண்டு மொய்க்கும் தண்ணீரையுடையது. குளிக்கும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நிறமுள்ளது. காலை மாலை வேளைகளில் முனிவர் பூஜை செய்வதால், தர்பை, புஷ்பம் ஆகியவை கரையோரம் தண்ணீர் மிதக்கின்றன.

4.ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்
பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்!
பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்
கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாது மாம் !!


முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னும், பரமேச்வரன் ஜடா மகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னுமஹர்ஷியின் மகளான கங்கை பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

5.சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ I
பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ I
சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ
காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீ!!


காசீயருகில் ஒடி விளையாடும் அழகிய கங்கை ஹிமயமலையில் உற்பத்தியாக, தனது ஜ்லப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது. அது ஆதி சேஷன்போல், பரமேச்வரன் தலையில் பில்வதளம் போல் விங்குகிறது.

6.குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்
த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி!
த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்
ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: !!


ஹே கங்கைத்தாயே!உனது தண்ணீர் அலை பட்டுவிட்டாலே போதும் வீழ்ச்சி கிடையாது. சற்று பருகினாலே வைகுண்ட லோக வாஸத்தை அருளுகிறாய். உனது பிரவாஹத்தில் ஸ்னாநம் செய்தவருக்கு இந்திரபதவி கூட எளிதாயிற்றே!

7.பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்
விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி !
ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே
தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத !!


ஹே கங்காதேவி!பகவதி!மினுமினுப்பான அலைகள் கொண்டவளே!ஸகலபாபங்களையும் அகற்றுபவளே!ஸ்வாகத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!எனக்கு மனமிரங்கமாட்டாயா?உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்று அற்றவனாய், ஸ்ரீகிருஷ்ணனை ஆராதிக்கிறேனே!அனுமதியேன்.

8.மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்
த்வத்தீரே வபுக்ஷே£sவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !
ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே
பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!


கங்காமாதாவே!ஸ்ரீசங்கரரின் தொடர்புடையவளே!உன்னை பிரார்த்திக்கிறேன். உனது கரையில் தங்கி தலை மேல் கைகூப்பிக்கொண்டு, உடல் பட்டுப்போகும் நேரத்தில் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை தியானித்துக்கொண்டு ஆனந்தமாய் கழிக்கும் நேரம் பிராணவியோகமும் நேரலாம். அப்பொழுது ஹரியும், ஹரனும் ஒன்று, என்றே அசையாத (நிலையான) பக்தி எனக்கு உண்டாக வேண்டுமே.

9.கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி
ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி !!


புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.


கங்காஷ்டகம் முற்றிற்று.
 

 

அன்னபூர்ணா ஸ்துதி!

1.நித்யானந்தகரீ வராபயகரீ லௌந்தர்யரத்னாகரீ
நிற்தூதாகில கோரபாபநிகரீ ப்ரயக்ஷமாகேச்வரி !
ப்ராலேயாசல வம்சபாவனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ II 


நித்யானந்தம் செய்பவள், வரம், அபயம் இவற்றை கையில் கொண்டவள், அழகின் கடலானவள், கோரபாபங்களை நீக்குபவள், நேரில் காணும் மஹேச்வரஸ்வரூபமானவள், ஹிமய மலையின் வம்சத்தை வளர்த்து பரிசுத்தமாக்கியவள், காசீபுரியில் வீற்றிருந்து ஆட்சி புரிபவள், கருணையைப் பொழிபவள் ஆகியதாய் அன்னபூர்ணா தேவியே எனக்கு பி¬க்ஷ கொடுப்பாயாக.

2.நாநாரத்ன விச்த்ரபூஷணகரீ ஹேமாம்பராடம்பரீ
முக்தாஹார விடம்பமான விலஸத்வக்ஷே£ஜ கும்பாந்தரீ !
காச்மீராகருவானி தாங்கருசிரா காசீபுராதீச்வரி
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !! 


பலவித ரத்னங்களிழைத்த ஆபரணங்களையணிந்தவள், தங்கமயமான அங்கியை யணிந்தவள், பளபளக்கும் முத்து மாலைத்துவளும் மார்பகத்தையுடையவள், காச்மீர -அகில் சந்தனம் மணக்கும் தேகம் கொண்டவள் காசீபுரத்தின் ஆட்சித் தலைவி, கருணைப் பிடி தருபவள் ஆகிய அன்னபூர்ணேச்சவரி, எனக்கு பி¬க்ஷ கொடுக்கட்டுமே.

3.யோகானந்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மைகருஷ்டாகரீ
சந்த்ரார்கானல பாஸமானயஹரீ த்ரைலோக்யரக்ஷ£கரீ
ஸர்வைச்வர்யகரீ தப:பல கரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !! 


யோகத்தினால் ஆனந்தம் விளைவிப்பவள், தர்மம் ஒன்றிலேயே கவனம் அமையச் செய்பவள், சந்திரன், சூர்யன் அக்னி இவர்கள் போல் பிரகாசிப்பவள், மூவுலகையும் காப்பவள், எல்லோருக்கும் ஐச்வர்யம் நல்குபவள், தவத்திற்கு பயனளிப்பவள் - அவளே காசீபுரியில் ஆட்சிபுரியும் அன்ன பூர்ணையே!எனக்கு க்ருபை செய்து பி¬க்ஷயளிப்பாயே!

4.கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீஹ்யுமா சாங்கரீ
கௌமாரீ நிகமார்த்தகோசரகரீ ஹ்யோங்கார பீஜாக்ஷரீ!
மோக்ஷத்வார கவாட பாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !! 


கைலாஸமலைக் குகையை கோயிலாகக் கொண்டவள், கௌரீ, உமை, சங்கரீ, குமாரி, வேதப்பொருளாகப் புலனாகிறவள், ஒங்கார பீஜாக்ஷரங்களைக் கொண்டவள், மோக்ஷ வாசலைத் திறப்பவள், காசீபுரியில் ஆட்சி செய்பவள், ஆகிய என் தாயே!க்ருபை செய்பவளே!எனக்கு பி¬க்ஷ கொடுப்பாயாக.

5.த்ருச்யாத்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ருஹ் மாண்டபாண்டோதரீ
லீலாநாடகஸ¨த்ர கேலனகரீ விஜ்ஞானதீ பாங்குரீ
ஸ்ரீவிச்வேச மன:ப்ரஸாதநகரீ காசீபுராதீச்வரி
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !! 


கண்ணுக்கு எட்டியதும் எட்டாததுமான ஐச்வர்யத்தை விளைவிப்பவள், அண்டசராசங்களை வயிற்றில் கொண்டவள். பற்பல லீலைகளை நடிக்கும் அவள் விஜ்ஞான தீபச்சுடரானவள். மேலும் ஸ்ரீவிச்வநாதரின் மனதிற்கினியவள். காசீபுரத்து ஆட்சியாளரான அந்த அன்னபூர்ணேச்வரித்தாய் கிருபை என்ற ஊன்றுகோலைத் தந்து பி¬க்ஷ கொடுக்கட்டுமே!


6.ஆதிக்ஷ£நிதஸமஸ்த வர்ணநிகரீ சம்புப்ரியா சாங்கரீ
காச்மீர த்ரிபுரேச்வரீ த்ரிநயனீ விச்வேச்வரீ சர்வரீ
ஸ்வர்க த்வார கவாட பாடநகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணேச்வரீ !! 


அ தொடங்கி க்ஷ வரையிலான எழுத்துக்கள் வடிவானவள். சம்புவின் ப்ரியை, மங்களம் தருபவள், காச்மீரத்து த்ரிபுரேச்வரீ, மூன்று கண்ணுடையவள்;உலகமாதா; ஒய்வெடுக்கச்செய்பவள்;ஸ்வர்க வாசல் திறப்பவள், காசியையாளும், கருணை சுரக்கும் அன்னை அன்னபூர்ணை எனக்கு பி¬க்ஷ கொடுக்கலாமே.


7.உரிவீ ஸர்வஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ
நாரீநீலஸமான குந்தலதரீ நித்யான்னதானேச்வரீ
ஸாக்ஷ£ன் மோக்ஷகரீ ஸதாசுபகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ !!


பூமி உருவாக இருந்து எல்லா மக்களையும் காப்பவள். வெற்றி தருபவள். கருணைக் கடலாகிய அன்னையும் அவள். கருமையான குந்தலம் தரித்தவள். நித்யம் அன்னமளிப்பதில் வல்லவள். மோக்ஷம் அருளுபவள். எப்போதும் நன்மை பயப்பவள். காசீயையாள்பவள். கருணையுருவானவளே, அன்னையே, அன்னபூர்னேச்வரீ, எனக்கு பி¬க்ஷ கொடுப்பாயாக.

8.தேவீ ஸர்வ விசித்ர ரத்னருசிரா தாக்ஷ£யணீ ஸுந்தரி
வாமா ஸ்வாதுபயோதரா ப்ரியகரீ ஸெளபாக்யமாஹேச்வரீமி
பக்தாபீஷ்டகரீ ஸதாசுபயகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ !!


எல்லா (பற்பல) ரத்னங்களால் அழகிய தேவீ அவள், சற்றுக் கடுமையாக இருப்பினும் இனிய பால் சுரக்கும் அன்புக்குகந்தவள். ஸெளபாக்கியங்களை தன்வசப்படுத்தியவள் மட்டுமில்லை. பக்தர்களுக்கு (வேண்டியதை வாரி வழங்கும் காசீபுரத்து அரசி) க்ருபையை ஊன்றுகோலாக அமைத்துக் கொடுக்கும் அன்னை அன்னபூர்ணாம்பிகை எனக்கு பி¬க்ஷ கொடுக்கட்டும்.

9.சந்த்ரார் கானல கோடி ஸத்ரூசீ சந்த்ராம்சு பிம்பாதரீ
சந்த்ரார்காக்னி ஸமான குண்டலதரீ சந்த்ரார்க வர்ணேச்வரீ
மாலாபுஸ்தகபாச ஸாங்குசதரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ !!


சந்திரன், சூர்யன், அக்னி இவர்கள் கோடிக்கணக்கில் இருந்தால் அவர்கள் நிகராகலாம் என்றபடி இருப்பவளும், சந்திர கிரகணமும், கோவைப்பழமும் ஒன்று சேர்ந்தார் போன்ற உதட்டையுடையவளும், சந்திரன், சூர்யன், அக்னி இவரையத்த குண்டலம் அணிந்தவளும், சந்திரசூர்ய நிறம் வாய்ந்தவளும், மாலை, புஸ்தகம், பாசம், அங்குசம் இவற்றை கையில் கொண்டவளும், காசீபுரத்தின் அரசியுமான எனதன்னை அன்னபூர்னேச்வரீ தயவுடன் பி¬க்ஷயளிக்கட்டும்.

10.க்ஷத்ரத்ராரகரீ மஹாபயகரீ மாதா க்ருபாஸாகரீ
ஸர்வானந்தகரீ சிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீமி
தக்ஷ£க்ரந்தகரீ நிராமயகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷ£ம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ !!


க்ஷத்ரியருக்கு பாதுகாப்பு அளித்தவள், பெரும் பயத்தைப் போக்குபவள், கருணைக் கடலானவள், அனைவருக்கும் ஆனந்தமளிப்பவள், மங்களமளிப்பவள், விக்னேச்வரீ, செல்வியும் அவளே. மேலும் தக்ஷனை கதற வைத்தவள், நோய் தீர்ப்பவள். காசீ ராஜ்யத்தின் அரசியும் ஆவாள். அந்த அன்னை அன்னபூர்ணை பி¬க்ஷ தந்தருளட்டும்.

11.அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கரப்ராணவல்லபே I
ஜ்ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷ£ம் தேஹிச பார்வதீ II 


ஹே அன்னபூர்ணே, எப்பொழுதும் நிறைவானவளே, ஸ்ரீ சங்கரின் ப்ரியே. ஹே பார்வதீ, எனக்கு ஜ்யானம், வைராக்யம் உண்டாகும் வண்ணம் பி¬க்ஷ யருள்வாயாக.

12.மாதா ச பார்வதீதேவீ பிதா தேவோ மஹேச்வர: I
பாந்தவா:சிவபக்தா:ச ஸ்வதேசோ புவனத்ரயம் II 


எனக்கு தாய் பார்வதீ, தந்தை மஹேச்வரன், சிவ பக்தர்களே உறவினர், மூன்று உலகுமே எனது ஊராகும்.


அன்னபூரணா ஸ்துதி முற்றிற்று.      





 

சௌபாக்ய சுந்தரி விரதம்



பெண்கள் செல்வச் செழிப்போடு நல்ல கணவன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என நிறை வாழ்வு வாழ்வதே சௌபாக்கியம் எனப்படும்.

அத்தகைய நிறை வாழ்வு வரம் தரும் இவ்விரதத்தில் அன்னையை சௌபாக்ய சுந்தரி என்னும் திருநாமத்தால் சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபட வேண்டும்.

தக்ஷனின் மகளான சதி தேவி இவ்விரதத்தின் பயனால் சிவனாரை மணந்தாள்.

இவ்விரதம் சௌபாக்கியம் எனப்படும் அனைத்து (பதினாறு) வகை பேறுகளையும் பெற்றுத் தரும்.

இது அகண்ட வரதானம் பெற்றுத் தரும் விரதங்களுள் ஒன்று.

ஒரு சமயம் சில யோகினி தேவதைகள் பார்வதி தேவியின் தோழியரான ஜெயா, விஜயாவிடம்  "தேவியை மகிழ்வித்து வரம் பல பெற சுலபமான விரதம் எது? எனக் கேட்க, அவர்கள் "சௌபாக்ய சுந்தரி" விரதத்தை விரிவாகக் கூறினார்கள். எவ்விரதத்தை அனுசரிப்பதால் குடும்பம் செழித்து விளங்கும்.

விரத நாள்:

இவ்விரதம் சித்திரை மாதம் வளர்பிறை திருதியை (அக்ஷய திருதியை) அன்றும், கார்த்திகை மாதம் தேய்பிறை திருதியை (கார்த்திகை பௌர்ணமிக்குப் பிறகு வரும் திருதியை) அன்றும் அனுசரிக்கப்படுகிறது.

விரத முறை:

விரத தினத்தில் அதிகாலை நீராடி  முறையாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவனாருடன் தேவி இணைந்த கோலத்தில் அம்பிகையின் உருவ படத்தை மலர் மாலை சூட்டி  சிவப்பு வஸ்திரத் தால் அலங்கரிக்க வேண்டும்.

மங்கல பொருட்கள் என சொல்லப்படும் பதினாறு வகை பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், காதோலை, கருமணி, மர சீப்பு, கண் மை,  மஞ்சள் கயிறு, மெட்டி, கொலுசு, வளையல்கள், மருதாணி, தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), புடவை, ரவிக்கை துண்டு ஆகியவை தயாராக வைத்துகொள்ள வேண்டும்.

பூக்கள், பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள் ஆகியவையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜையை காலை அல்லது மாலை செய்யலாம்.

முதலில் கணபதியை பூஜிக்க வேண்டும். பின்னர் நவக்ரகங்களை வணங்க வேண்டும்.

பின்னர் சிவ பார்வதியை பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

தூப, தீப, கற்பூர ஆரத்தியுடன் ,  தயாராக உள்ள பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள், மங்கள பொருட்கள் அனைத்தையும் பக்தியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

பின்னர் யாரேனும் இருவருக்கு  உணவளித்து, பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.









 

வெள்ளி, 27 நவம்பர், 2015

திந்த்ரிணி கௌரி விரதம்





பார்வதி தேவி, எம்பெருமானை அடையும் பொருட்டுத் தவம் இருந்த காலத்தில், ஒவ்வொரு மரத்தின் அடியிலும் அமர்ந்து தவம் செய்தார். அவ்வாறு தவம் இருந்த தினங்களே கௌரி விரத தினங்களாக அனுசரிக்கப்படுகின்றன.












கௌரி தேவியின் 108 விதமான ரூபங்களில் மிக முக்கியமான சில ரூபங்களைப் போற்றும் விதமாகவும் கௌரி விரத தினங்கள் அமைகின்றன.

பார்வதி தேவி, எந்தெந்த மரத்தின் அடியில் அமர்ந்து தவம் இயற்றினாரோ அந்தந்த மரத்தின் மலர்கள் அல்லது இலைகளைப் பயன்படுத்துதல், அந்தந்த மரக் கிளைகளின் கீழ் கௌரி தேவியின் சிறுவடிவத்திலான சிலையை வைத்துப் பூஜித்தல் அதிக பலன் தரும்.











திந்த்ரிணி கௌரி விரதம், பார்வதி தேவி, மகிழ மரத்தடியில் தவம் செய்ததைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுவதால், மகிழ மரத்தின் அடியிலோ அல்லது மகிழ மரக்கிளைகளின் அடியிலோ கௌரி தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜிக்கலாம். மகிழம்பூவால் அர்ச்சித்தல் நலம் தரும்.














விரதம் அனுசரிக்கும் தினம்:

கார்த்திகை மாதம், அமாவாசைக்குப் பின் வரும் துவிதியை திதி தினமே திந்த்ரிணீ கௌரி விரதம் அனுஷ்டிக்கும் தினமாகும்.

அன்றைய தினம் விரதமிருந்து, மஞ்சளால் கௌரி தேவி பிரதிமையை அலங்கரித்து ஐந்து வகை பழங்கள், இனிப்பு பொருட்கள், நைவேத்திய பொருட்கள், பட்சணங்கள்  வைத்து மகிழ மர கிளையை அருகில் வைத்து , மகிழம்பூவால்  அர்ச்சித்து வழிபட வேண்டும்.

முதலில் விக்னேஸ்வர பூஜை செய்து, பின் கௌரி தேவியை அஷ்டோத்ரம் கூறி அர்ச்சித்து, தூப, தீப ஆராதனை செய்து நிவேதனம் சமர்பிக்க வேண்டும்.


பின்னர், கற்பூர ஹாரத்தி எடுத்து பிரதட்சிண நமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.


பிரசாதங்களை அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும்.














கேதார கௌரி விரதம்





Image result for arthanareeswarar










ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி வரை (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும்.  இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.




"கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது.சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்ற விரதமே கேதார கௌரி விரதமாகும்.பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும். இதனை விட சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும் இவ் விரதத்திற்கு வழங்கப்படும் அடுத்த சிறப்பாகும்.


அர்த்தநாரீஸ்வரர் ஆன கதைபிருங்கி முனிவர் அதிதீவிர சிவபக்தர். ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் கயிலைநாதன்தான் என்றும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்குவார். சிவனைத்தவிர வேறு யாரையும் சிந்திக்காத அவரது போக்கு பிற கடவுளரை அவமதிக்கும் வகையில் அமைந்ததுண்டு. அப்படி ஒரு நிலை பார்வதிக்கே ஏற்பட்டது. கயிலையில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும் போது அங்கு வரும் பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னை திரும்பியே பார்க்காமல் போவதும் கண்டு பார்வதி மனம் வருந்தினாள்.எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்கவேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள். வழக்கம்போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார்.பார்வதியின் சாபம்இதனைக்கண்டு ஆத்திரமடைந்த பார்வதி, தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப்போகட்டும் என்று சபித்தாள். உடனே அது பலிக்கவே நடக்க சக்தியில்லாமல் முனிவர் தடுமாறினார். ஆனால் தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார்.முனிவருக்கு ஆதரவாக சிவன் நடப்பது கண்டது பொறுக்காத பார்வதி அவரை விட்டு விலகி பூலோகம் வந்தாள்.


தன்கணவரை விட்டு ஒருகணமும் பிரியாத வரம் வேண்டும் என்று தவமிருந்தாள். கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார். சிவனை கண்ட பார்வதி ஒருநாளும் உமை விட்டு பிரியாக வரம் வேண்டும் என்று வேண்டினாள். பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார். இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒருபாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக்கொண்ட நாள்தான் கேதார கௌரி விரதநாள். கணவன் மனைவியிடையே மாறாத அன்பை வளர்த்துக்கொள்ளும் பண்டிகைதான் இந்த கேதார கௌரி விரதம்.


 21 நாள் விரதம் இருந்து தீபாவளி தினத்தன்று சிவனை வேண்டி வணங்கினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.தம் மாங்கல்யபலம் நீடிக்கவும். கணவரின் மீதான அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டியும் கேதார கெளரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கின்றனர். அன்றைய தினத்தில் தீபாவளிப் பண்டிகைக்கான பூஜைகள் முடிந்த பின்னர், பூஜையறையில் விளக்கேற்றி சிவ பார்வதியின் படத்தின் முன்பு அமர்ந்து தியானம் செய்யவேண்டும். ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை நாள்முழுவதும் துதிக்க வேண்டும்.மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இதனை அனுஷ்டிப்பர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு. விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் "பாரணம்' பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.


பிரம்மா, விஷ்ணு, இந்திரன்இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை.


இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார்.


எனவே நாமும் இவ் அரிய நோன்பினை நோற்று பரம் பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!'






துளசிக்கல்யாணம்



கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசி தேவி  அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித்தாய்க்கு விரதமிருந்து பூஜை செய்வது மிகுந்த பலனை தரும்.


துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை ‘‘பிருந்தாவன துளசி’’ அல்லது ‘துளசிக்கல்யாணம்’ எனக் கொண்டாடுவார்கள்.


அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, விரதமிருந்து துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும். சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) சேர்த்து வைக்க வேண்டும். வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும்.

பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்து கொடுக்க வேண்டும். ஒரு ஏழை அந்தண சிறுமியை மனையில் அமரவைத்து சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத்துணி கொடுக்க வேண்டும். பால் பாயாசத்தை பாத்திரத்துடன் தானம் கொடுக்கலாம்.

வட மாநிலங்களிலும் கொண்டாடப்படும் சாத் என்கிற சஷ்டி விரதம்

           
                                     
தமிழ்க்கடவுள் முருகனை வட மாநிலத்தவர் "கார்த்திகேயன்' என்ற பெயரில் அழைப்பதோடு, இந்த சஷ்டி விரதத்தை "சாத்' என்ற பெயரில் தீவிரமான சிரத்தையுடன் மிகவும் பிரபலமான ஒரு விரதமாக அனுஷ்டிக்கின்றனர்.

இந்த விரதத்தை அனுஷ்டித்தால் வாழ்க் கையில் மிகச் சிறந்த புண்ணியங் களைப் பெற முடியும் என்று வடநாட்டு மக்கள் நம்புகின்றனர். பீகார், மத்தியப் பிரதேச மாநிலங் களில் பல இடங்களிலும், உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளிலும் இந்த விரதம் பரவலாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை முடிந்த மறுநாளான பிரதமையன்று "சாத்' விரதம் துவங்கி தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆறு நாட்களுமே விரதத்தின் முக்கிய அங்கமாக, "விரதம் அனுஷ்டிப்பவர்கள் பொய் பேசக்கூடாது' என்ற கட்டுப்பாடு நிலவுகிறது.

ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் மூன்றாவது நாள் முடிந்து நான்காம் நாள் விரதத்தை ஆரம்பிக்கின்றனர். இந்த மூன்றாம் நாளை "நகான் கானா' (குளித்து விட்டு சாப்பிடுதல்) என்றே அழைக்கின்றனர். விரதத்தின் முதல் நாள் "கர்ணா' என்று அழைக்கப்படுகிறது. விரதம் அனுஷ்டிக்கும் நாட்களில் தண்ணீர்கூட அருந்துவதில்லை. பூஜைக் குரிய நிவேதனம் தயாரிக்க புதிய பாத்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இறைவனுக்குப் படைக்கப் படும் கீர், பூரி போன்றவற்றுக்குக்கூட புதிய கோதுமை வாங்கி வீட்டிலேயே சுத்தமாக அரைத்து மாவாக்கி அவற்றைச் செய்கின்றனர்.

இந்த "சாத்' விரதத்தின்போது பல பகுதிகளிலும் சூரிய பகவானும் வழிபடப்படுகிறார். இந்த விரத நாட்களில் கார்த்திக் பகவானுக்குரிய (முருகன்) பூஜையில் முதலில் "கணேஷ்கி' (விநாயகருக்கு) தனி பூஜை உண்டு. விரதம், பூஜை ஆகியவை முடிந்த பின்னர் "போக்' எனப்படும் சிறப்பு விருந்து உண்டு. இந்த விருந்து உண்ணும்போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூடாது என்ற ஐதீகம் உள்ளது. ஒருவரையொருவர் பெயர் சொல்லிக்கூட கூப்பிடுவதில்லை.

அப்படி யாராவது மறந்து போய் அழைத்து விட்டால், விரதம் அனுஷ்டிப்பவர் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விரதத்தை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டுமாம். பீகார் மாநிலத்தில் இந்த சாத் விரதம் மிகவும் பிரசித்தமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாட்களில் சூரிய பகவானுக்கும் சிறப்புப் பூஜைகள் செய்கின்றனர்.

சூரிய பகவானை வழிபடும் "சாத்' விரதத்தின் மூன்றாம் நாள் முதல் மக்கள் ஒரு புதிய முறத்தில் கொப்பரைத் தேங்காய், கரும்புத் துண்டுகள், வெள்ளை முள்ளங்கி, இனிப்புகள், மலர்கள், முளைவிட்ட தானியங்கள், "கஜுரி' எனப்படும் மைதா இனிப்பு ஆகியவற்றோடு, சூல்டா என்ற இளஞ்சிவப்பு வண்ணக் காகிதங்களையும் வைத்து அருகிலுள்ள ஆறு, நீர்நிலைகளுக்கு மாலை நேரத்தில் சென்று, தண்ணீரில் நின்றபடியே முறத்தை இரு கைகளில் ஏந்தி சூரிய பகவானை வணங்கி, முறத்தில் உள்ள பொருட்களை சூரியனுக்கு அப்படியே தண்ணீரில் அர்ப்பணித்து விடுகின்றனர்.

பின் அமைதியாக கரையில் அமர்ந்து சூரிய வழிபாடு செய்கின்றனர். இந்த சூரிய வழிபாடு "சாத்' விரதத்தின்போது ஒரு சமுதாய விழாவாகவே கொண்டாடப்படுகிறது. அன்று இரவு முழுவதும் நீர்நிலைகளின் கரைகளிலேயே அவர்கள் தங்கிவிடுகின்றனர். முறத்தில் வைக்கப்படும் எஞ்சிய பொருட்களை பிரசாதமாக உண்டு மகிழ்கின்றனர். பொழுது புலரும் வேளையில் மீண்டும் சூரிய பகவானை வரவேற்று வணங்கி அவர்கள் வீடு திரும்புகின்றனர். "கந்த சஷ்டி' என்ற கார்த்திகேய வழிபாட்டினையொட்டிய விரதம், தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் ஒரு முக்கியமான பக்திச் சிரத்தையோடு அனுஷ்டிக்கப்பட வேண்டிய விரதமாக விளங்கி வருகிறது.





திருகார்த்திகை தீபம்

நெருப்பிற்கான ஸ்தலம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலை நெருப்பிற்கான தலம் என்று ஏன் சொல்லப்படுகிறது என்றால், படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையே யார் தங்களில் பெரியவர்கள் என்ற போட்டி ஏற்பட்டது. இதை சிவபெருமானிடம் கேட்டார்கள்.
அதற்கு ஈசன், “யார் என்னுடைய அடியையோ அல்லது முடியையோ காண்கிறார்களா அவர்களே பெரியவர்கள்.“ என்றார் சிவபெருமான்.
சிவபெருமானின் அடியை காண்பதற்காக ஸ்ரீமகாவிஷ்ணு, வராக அவதாரமெடுத்து பூமியை துளைத்துக்கொண்டு சென்றார்.
ஆனால், சிவபெருமானின் அடியை காணமுடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார் ஸ்ரீமகாவிஷ்ணு.
பிரம்மா, அன்னப்பறவையாக மாறி ஈசனின் முடியை காண பறந்துசென்றார்.
எத்தனை உயரம் பறந்தும் ஈசனின் முடியை காணமுடியாமல் சோர்வுற்றார் பிரம்மா. அப்போது, ஈசனிய் சிரசில் இருந்து ஒரு தாழம்பூ பூமியை நோக்கி வந்துக்கொண்டு இருந்தது.
அந்த தாழம்பூ சிவனின் சிரசில் இருந்துதான் வந்துக்கொண்டு இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்ட பிரம்மா, தாழம்பூவை எடுத்துக்கொண்டு விஷ்ணு பகவானிடம் சென்று, “ஈசனின் முடியை கண்டேன். அதற்கு சாட்சி இந்த தாழம்பூ.” என்றார்.
தாழம்பூவும், ”ஆமாம்… பிரம்மா சொன்னது உண்மைதான்.” என்று பொய் சாட்சி சொன்னது.
அப்போது, சிவபெருமான் அங்கே தோன்றினார். பிரம்மாவும் தாழம்பூவும் பொய் சொல்கிறார்கள் என்பதால் கடும் கோபம் அடைந்தார்.
“படைக்கும் தொழிலில் உள்ள பிரம்மா பொய் சொன்னதால் இனி பூலோகத்தில் பிரம்மாவுக்கு ஆலயம் இன்றி வழிபாடு இன்றி போகட்டும். பிரம்மாவுக்குகாக பொய் சாட்சி சொன்னதால் தாழம்பூ இனி சிவ வழிபாட்டுக்கு உகந்தது இல்லை.” என சிவபெருமான் சபித்து விடுகிறார்.
பிறகு விஷ்ணுபகவானுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவாக காட்சி கொடுத்த ஸ்தலமே திருவண்ணாமலையாகும்.

அர்த்தநாரீஸ்வரர்

சிவபெருமானின் வடிவங்களில் முக்கியமான ஒன்று அர்த்தநாரீஸ்வர வடிவமும் ஒன்றாகும்.
சிறந்த சிவபக்தரான பிருங்கி முனிவர், சக்திதேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பராசக்தி, பிருங்கிமுனிவரின் சக்தியை பறித்து விடுகிறார்.
உடலில் சக்தி இல்லாமல் பிருங்கி முனிவர் துவண்டு போனார். இதை கண்ட சிவபெருமான், சிவனும் – சக்தியும் ஒன்றே என்பதை இவர்கள் மூலமாக உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திதேவியை விட்டு பிரிந்தார் ஈசன்.
சிவபக்தரை சோதித்துவிட்டோமே என வருந்திய சக்திதேவி, தன் தவறை உணர்ந்து சிவலிங்கமே மலையாக இருக்கும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று தவம் செய்தார். தவத்தை ஏற்ற சிவபெருமான், சக்திதேவிக்கு காட்சி தந்து, தனது இடதுபாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.
ஆகவே, கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் அர்த்தநாரீஸ்வராக வலம் வருவார். இந்த நாளில் அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டால் கோடி புண்ணியம் கிட்டும்.
திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க இயலாதவர்கள், மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
கார்த்திகை தீபதன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்கள்.
பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவார்கள். இதனை, ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
சிவபெருமானே அனைத்து வடிவங்களிலும் இருக்கிறார் என்பதை இது தெரியப்படுத்துகிறது.
மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
அவ்வேளையில் விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவமாக காட்சிகொடுத்ததுபோல் நமக்கும் ஈசன் ஜோதிவடிவமாக காட்சி தருகிறார்.
மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.
நம் இல்லத்தில் கார்த்திகை தீபதன்று அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மன் படத்தை வைத்து, கார்த்திகை தினத்தில் தோன்றிய முருகப்பெருமானையும், கார்த்திகை பெண்களையும் மனதால் நினைத்து ஆறு தீபங்கள் ஏற்றி வழிபடவேண்டும் .
இந்த ஆறு தீபங்களை ஏற்றுவதற்கு முன்னதாக மஞ்சளில் விநாயகரை பிடித்து பூஜிக்க வேண்டும். பிறகு மாவிளக்கு தீபம் ஏற்றிய பிறகு வீட்டின் வெளிபுறத்திலும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு அரிசிபொரியை வைத்து அர்த்தநாரீஸ்வரரை மனதால் நினைத்து வணங்க வேண்டும்.
இதனால் சிவ-சக்தியின் அருளாசி நமக்கும் நம் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைத்து, சகல நலங்களோடு சுபிச்சமான வாழ்க்கை அமையும்.


அண்ணாமலைக்கு அரோகரா!


* திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம்.
* கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம்.
* கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
* கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.
* கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.
* கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.
* கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.
* கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.
* கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
* கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
* கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.
* கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
* தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
* திருவண்ணாமலை தீபத்தை ஒருதரம் பக்தியுடன் பார்த்தவர் சந்ததி தழைக்கும். அவருக்கும் மறுபிறப்பும் இல்லை.
* திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுதை கண்டவர்களின் மானிடத் தன்மை நீங்கி ருத்ர தன்மை உண்டாகிறது. அவர் பாக்கியவான் ஆகிறார்.
* கார்த்திகை தீபத்தன்று காமம் முதலான குணங்களை விட்டு பெரும் முயற்சி செய்தாவது தீபத்தை தரிசிக்க வேண்டும்.
* திருக்கார்த்திகை தினத்தன்று ஈஸ்வரனை ஒரு வில்வத்தால் பூஜித்தவர் கூட முக்தி அடைகிறார்.
* தீப தரிசனத்தால் கங்கை முதலான சகல புண்ணிய தீர்த்த பலன்களும் ஒருங்கே உண்டாகும்.
* கர்த்திகை பவுர்ணமி அன்று சந்திர பகவான் 16 கலைகளுடன் பரிபூர்ணமாக பிரகாசிக்கிறான். அந்த அமிர்த கிரணங்களை ஒரு மனிதன் தன் உடலில் ஏற்றால் அவனுக்கு அற்புதமான மனோ சக்தியும், தெய்வ பலனும் கிடைக்கும்.


கோவர்த்தன விரத பூஜை







வடமாநிலங்களில் தன திரயோதசி, நரக சதுர்த்தி, தீபாவளி, அன்னக்கூட்டு, பாய்ஜ் என அடுத்தடுத்து வரும் ஐந்து நாட்கள் முக்கியமாகும். இதில் கோவர்த்தன பூஜையை பீகார், அரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேச மாநிலங்களில் சிறப்பாகச் செய்வர்.

மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் மானச கங்கை குளக்கரையில் கோவர்த்தனகிரி உள்ளது. 5,000 வருடங்களுக்கு முன்பு இது 29 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததாம். இப்போது 80 அடி உயரமாக உள்ளது. பக்தர்கள் விழாவன்று இரவு விழித்திருந்து ஆடிப் பாடுவர். சிறு மலை உருவாக்கி அலங்கரிப்பர்.

அதன்முன் பலவித பலகாரங்களும், 56 வகை பதார்த்தங்களும், சாப்பாடும் வைத்து மலைபோல செய்வர். இதற்கு அன்னக்கூட்டு எனப் பெயர். பின் பூஜை செய்து அனைவரும் சாப்பிடுவர். 38 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரிவலப் பிரதட்சிணமும் செய்வர். இதனால் கோவர்த்தன கிரிதாரி அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தீபாவளிக்குப் பின்வரும் துவாதசியன்று துளசிச் செடிக்கு, திருமாலாக பாவித்த நெல்லி கிளைக்கும் திருமணம் செய்விப்பார்கள்.

பிரபோதன ஏகாதசி என்பது தீபாவளி அமாவாசைக்குப்பின் வரும் ஏகாதசி. அன்றுதான் திருமால் மகாபலிக்கு காவலாக நான்கு மாத யோக நித்திரை செய்து பின் வைகுண்டம் திரும்பிய நாள். அதற்கு மறுநாள் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற திருமால் துளசியை மணந்து கொண்டார்.



சனி, 21 நவம்பர், 2015

கோலாகல தீபாவளி!

 

 செல்வம் தரும்  குளியல்

நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் தீர, தீபாவளி அன்று முதலில், சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேணடும். இத்துடன் அந்த குளிக்கும் வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். எதனால் என்றால், தீபாவளி தினத்தில் கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகாவும் ஐதீகம்.
இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. உடலில் இருக்கும் தோஷங்கள் நீங்குகிறது. விடிவதற்குள் குளித்து விட வேண்டும் என்பதற்கு காரணம் என்னவென்றால், சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். இதனால் ஸ்ரீமகாலஷ்மியும், திருமாலும் நம் மேல் கருணை காட்ட மாட்டார்கள் என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அதுபோல, நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரிதிரமும் நீங்கும்.

மங்களம் தரும்  மஞ்சள்

புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும்.

துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு

பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். அதனால்தான் கேரள நாட்டில் சில ஆலயங்களில் வெடி வெடிப்பார்கள். இதனால் துஷ்ட சக்திகள் விலகும். வெடி சத்தத்தை கேட்டு மிருகங்கள் பயந்து ஓடுவதுபோல, துஷ்ட சக்திகளும் ஒடி விடும்.

வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி.

தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும்.
ஸ்ரீஇராமர், வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய தினம், ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி. இந்த நாளை, “தீயாஸ்” என்று சொல்லி அகல் விளக்கு ஏற்றி கொண்டாடினார்க்கள். அயோத்தி மக்கள், இத்திருநாளை தீபாவளி என்றும் சொல்கிறார்கள்.
ஸ்ரீஇராமர் அயோத்திக்கு வந்த பிறகுதான் அயோத்தியே வெளிச்சத்தில் ஜொலித்தது. வெற்றியின் சின்னம் ஜொலிக்கும் தீப ஒளி். அந்த தீப ஒளி, நம் இல்லத்திலும் ஜொலித்தால், காரிய தடை என்கிற இருள் நீங்கி, நம் வாழ்க்கையில் முன்னேற்றம் என்கிற வெளிச்சத்தை தந்திடும்..
அதேபோல, மாலையில் வாசலில் இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபாவளி அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தமது பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தனது சகோதரிகள் போலவே எனறெண்ணி, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.
அதேபோல, இனிப்பை நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் ஸ்ரீமகாலஷ்மியின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
மாலையில் வடதிசையை நோக்கி குபேரனையும், ஸ்ரீமகாலஷ்மியையும் பூஜிக்க வேண்டும். குபேரனின் ஆசியும் – அருளும் கிடைக்கும்.

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம் என்ற கேதாரரேஸ்வரரை வேண்டி, பெண்கள் நோம்பு எடுப்பார்கள். இதனால் அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கும். இந்த நோம்பின் பயனால்தான் கௌரிதேவி, ஈசனின் இடது பாகத்தை பெற்றாள்.
தீபாவளியை நம் முன்னோர்கள் சொன்னது போல சாஸ்திரபடி கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கையே ஜொலிக்கும். எப்போதும் வெற்றிதான்.


ஒருமுறை, தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து தோன்றியவர் ஸ்ரீமகாலஷ்மி. ஸ்ரீமகாலஷ்மியை பார்த்த சந்தோஷத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு, லஷ்மிதேவிக்கு மாலையிட வந்தார்.

சிறிது நேரம் ஸ்ரீமகாவிஷ்ணுவுடன் விளையாடலாம் என்ற எண்ணத்தில், லஷ்மிதேவி ஓடிபிடித்து விளையாடினார். அப்போது அங்கிருந்த எள் செடியின் மீது லஷ்மிதேவியின் பாதம்பட்டு, எள்ளில் இருந்து எண்ணெய் வெளியேறியது. இதை கண்ட ஸ்ரீவிஷ்ணுபகவான், “இந்த நாளில் நீ நல்லெண்ணெயில் வாசம் செய்வாயாக” என்று உத்தரவிட்டார்.
தீபாவளி திருநாள் அன்று,  ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற தண்ணீர், கங்கையாக மாறும் என்பது ஐதீகம்.
அதனால் தீபாவளி திருநாளாள் அன்று நல்லெண்ணைய் தேய்த்து குளிக்கும்போது, அந்த  தண்ணீரை கங்கை நீராக பாவித்து வணங்கி ஸ்நானம் செய்தால், தரித்திரங்கள் விலகும்.


தீபாவளி திருநாள் அன்று ஸ்ரீமகாலஷ்மியை நம் இல்லத்திற்கு அழைக்க வேண்டும். சுத்தமும் – சுகாதாரமும் இருக்கின்ற இடத்தில்தான் ஸ்ரீலஷ்மிதேவி வாசம் செய்வாள். அதனால் தீபாவளி திருநாள் அன்று, காலையில் வீட்டு வாசல் பெருக்கி, பசும் சாணம் அல்லது பன்னீரில் மஞ்சள் கலந்த தண்ணீரை வாசலில் தெளித்து, தாமரை பூகோலம்  போட வேண்டும்.
வாசற்காலுக்கு மஞ்சள் – குங்குமம் வைக்க வேண்டும். வாசலுக்கு மாயிலை தோரணம் கட்டி, மல்லிகை பூவைத்து அலங்கரிக்க வேண்டும். இதனால் அந்த இல்லத்தினுள் ஸ்ரீலஷ்மிதேவி நுழைவாள் என்கிறது சாஸ்திரம்.
அத்துடன் இந்த தீபாவளி திருநாள் அன்று பித்ருக்கள் (முன்னோர்கள்) நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் கூறுகிறது.
பித்ருக்களின் புகைப்படம் இருந்தால் அவர்களின் புகைப்படத்திற்கு துளசியும், வாசனை மலர்களையும் வைக்க வேண்டும்.  அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைக்க வேண்டும். தீப திருநாள் அன்று, பித்ருகளுக்கும் முக்கியதுவம் இருப்பதால் இதற்கு, “நரக சதுர்த்தி” என்று பெயர்.

மகாபலி சக்கரவர்த்திக்கு ஸ்ரீலஷ்மிதேவி சொன்ன ரகசியம்

ஒருமுறை, மகாபலி சக்கரவர்த்தி ஸ்ரீமகாலஷ்மியிடம், “தாயே, உன் பக்தர்களின் இல்லத்தில் நீ நிரந்தரமாக இருக்க என்ன செய்ய வேண்டும். உன் விருப்பம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீலஷ்மி தேவி, மகாபலி சக்கரவர்த்திக்கு ரகசியமாக சில பூஜை முறைகளை பற்றிச் சொன்னார்.
ஐப்பசி மாதம்  – கிருஷ்ணபட்சத்தில், திரயோதசி முதல் அமாவாசைவரை, தீபம் ஏற்றி யார் என்னை வணங்குகிறார்களோ அவர்களின் இல்லத்தில் ஆண்டு முழுவதும் இருப்பேன்.” என்றார் ஸ்ரீமகாலஷ்மி.
மகாபலி சக்கரவர்த்தியின் தயவில் நாம் இந்த ரகசியத்தை தெரிந்துக் கொண்டாம். இதனை நம்பிக்கையுடன் கடைபிடித்து ஸ்ரீலஷ்மிதேவியின் அருளை பெறுவோம்.
தீபாவளி திருநாள் அன்று, மாலையில் பெருமாள் படத்திற்கு துளசி, மல்லிப்பூ வைத்து, ஸ்ரீலஷ்மிதேவிக்கும் தாமரை பூ, மல்லிகைப் பூ வைத்து, அத்துடன் நெல்லிக்கனியையும் வைத்து வணங்குவது மிக சிறப்பு.
நெல்லிக்கனி, ஸ்ரீமகாலஷ்மியின் அம்சம் என்கிறது விருக்ஷ் சாஸ்திரம்.
மாலையில் தீபம் ஏற்றிய பிறகு, ஸ்ரீகனகதார ஸ்தோத்திரம் சொல்லலாம். அல்லது ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாடல்களை கேசட்டில் ஒலிக்கச் செய்யலாம்.
வடக்கு வாசம் – குபேர  வாசம் என்பார்கள். அதனால் வடக்கை நோக்கி குபேர பகவானை வணங்குங்கள்.
தீபாவளி திருநாள் அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய  தீபம் ஏற்றினால், தன் பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தன் சகோதரிகள் போலவே எனறெண்ணி, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக்கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.
தீபதிருநாள் அன்று கேதார கௌரி விரதத்தை கடைபிடிப்பார்கள்.
கேதாரேஸ்வரரை வேண்டி கௌரிதேவி நோம்பிருந்து, ஈசனின் இடப்பாகத்தை பெற்றார் என்கிறது புராணம்.
இதனால் கேதார கௌரி நோம்பை கடைபிடித்தால், கணவருடன் ஒற்றுமையான வாழ்க்கை அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
இப்படி, முன்னோர்களின் ஆசியும், ஸ்ரீலக்ஷ்மி தேவியின் ஆசியும், இன்னும் பல தெய்வங்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கச் செய்யும் மகிமை வாய்ந்த அற்புத திருநாள்தான் தீபாவளி திருநாள்.
தீப திருநாளாம் இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.