சனி, 28 ஜனவரி, 2017

சந்தோஷ வரமருளும் சந்தோஷிமாதா!



சந்தோஷிமாதா காயத்ரி!

ஓம் ரூபா தேவி ச வித்மஹே
ச’க்தி ரூபிணி தீமஹீ |
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத் ||



ஒரு முறை விநாயகப்பெருமான், தனது மனைவியர் சித்தி, புத்தி மற்றும் மகன்கள் சுபன், லாபன் உடன் பூலோகம் வந்தபோது, அங்கு ரக்ஷாபந்தன்  நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பெண்கள் அனைவரும் தங்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைக் கண்ட விநாயகரின் மகன்கள் இருவரும், தங்களுக்கு கயிறு கட்ட, ஒரு சகோதரி இல்லையே! என்று வருந்தினர். பின்னர் தங்களுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்று தந்தையான விநாயகரிடம் வேண்டினர். விநாயகர், தன்னுடைய மகன்கள் கேட்ட வரத்தை அளித்தார். அதன்படி விநாயகருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்த பெண் குழந்தை பிறந்த நாள் வெள்ளிகிழமை. அந்த அழகான பெண் குழந்தை தன் இருகரங்களால் தன்னுடைய அண்ணன்மார்களுக்கு ராக்கி கட்டியவுடன் அழுத பிள்ளைகள் சிரித்தன. இதை கண்ட விநாயகர், 'மற்றவர்களை சந்தோஷப்படுத்திய இந்த குழந்தையின் பெயர் 'சந்தோஷி" என்று அழைக்கப்படட்டும்.!" என்றார்.



இதை கேட்ட நாரதர், 'இனி வெள்ளிகிழமை தோறும் சந்தோஷியை பூலோகவாசிகள் வணங்கினால் அவர்களின் இன்னல்கள் மின்னல் வேகத்தில் மறைய வேண்டும். அதற்கு உங்களின் ஆசி, உங்களின் மகளுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டினார். அதற்கு எல்லாம் நடக்கும் நாரதா" என்று ஆசி வழங்கினார் கணபதி.

ஆனந்த நகரம் என்ற ஊரில் போலாநாத் என்ற பக்தர், சுனீதி என்ற சந்தோஷி மாதா பக்தையை மணந்தார். சுனீதியை கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தினர். அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. யார் என்ன சொன்னாலும் விடாப்பிடியாக சந்தோஷி மாதா விரதத்தை மட்டும் அவள் விடாமல் செய்துவந்தாள். அவளது பக்திக்காக சந்தோஷி மாதா குடும்பத்தினரை திருத்தி சுனீதிக்கு அருள்செய்தாள். குடும்பம் ஒற்றுமையானது.



சந்தோஷி மாதாவிற்கு விரதம் இருக்கும் முறை :


இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் விரதத்தைத் தொடங்க வேண்டும். தொடர்ச்சியாக 11 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். இல்லத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும்.

விரதம் இருக்கும் நாளன்று, வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறைக்குள் சுத்தமான பலகை வைத்து, அதன் மேல் கோலம் போட்டு, அதற்கு மேலே கும்பம் வைக்க வேண்டும். சந்தோஷி மாதா படத்தையும், சந்தனத்தில் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரையும் வைப்பதோடு, படத்துக்கும், கும்பத்துக்கும் மாலை போட்டு, அருகில் குத்துவிளக்கும் ஏற்றிவைக்க வேண்டும்.



நைவேத்தியமாக சந்தோஷி மாதாவுக்கு பிடித்தமான கொண்டைக்கடலை, வெல்லம் வைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், விரத நாள் அன்று புளிப்பு சேர்க்கக்கூடாது. தொடர்ந்து நாம் நினைத்த காரியம் நடைபெற வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு, விநாயகருக்கும், சந்தோஷி மாதாவுக்கும் பூஜை செய்து வணங்க வேண்டும். பின்னர் கும்பத்தில் உள்ள நீரைத் தீர்த்தமாகப் பயன்படுத்த வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் யாருக்கும், தட்சணை கொடுக்கக்கூடாது.



சந்தோஷிமாதா 108 போற்றி!

சந்தோஷிமாதாவே போற்றி
சகலமும் அருள்வாய் போற்றி
வேதங்கள் துதிப்பாய் போற்றி
வெற்றிகள் தருவாய் போற்றி
கன்னியிற் சிறந்தாய் போற்றி
கற்பகத்தருவே போற்றி
கருணைக்கடலே போற்றி
காரணத்தின் உருவே போற்றி
காரியமும் ஆனாய் போற்றி
காசித்தலம் உறைவாய் போற்றி
கதை கேட்டு மகிழ்வாய் போற்றி
காலதேசம் கடந்தாய் போற்றி
கஜமுகன் குழந்தாய் போற்றி
முக்குண உருவே போற்றி
மூவுலகிற் சிறந்தாய் போற்றி
இனியதின் உருவே போற்றி
இனிப்பினை விரும்புவாய் போற்றி
வாட்டமிலா முகத்தாய் போற்றி
வரம் மிகத்தருவாய் போற்றி
அகர முதல எழுத்தே போற்றி
ஆதி அந்தமில்லாய் போற்றி
ஈடிணையற்றாய் போற்றி
இணையடி தொழுதோம் போற்றி
கோரியது கொடுப்பாய் போற்றி
குலம் காக்கும் சுடரே போற்றி
விரதத்திற்கு உரியாய் போற்றி
விளக்கத்தின் விளக்கமே போற்றி
ஆனைமுகத்தான் மக@ள போற்றி
ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றி
பெருவாழ்வு அருள்வாய் போற்றி
பிழைகளைப் பொறுப்பாய் போற்றி
வணக்கத்திற்குரியாய் போற்றி
வணங்கினால் மகிழ்வாய் போற்றி
உயர்வுகள் தருவாய் போற்றி
கோள்களும் போற்றும் போற்றி
குறைகளைத் தீர்ப்பாய் போற்றி
நிறைவினைத் தருவாய் போற்றி
நித்தமும் அருள்வாய் போற்றி
சக்தியின் உருவே போற்றி
சரஸ்வதி ஆனாய் போற்றி
திருமகள் வடிவே போற்றி
தெய்வத்தின் தெய்வம் போற்றி
குலம் தழைக்க அருள்வாய் போற்றி
வாசனை மலரணிந்தாள் போற்றி
தீமைகளை அழிப்பாய் போற்றி
திசைகளெட்டும் நிறைந்தாய் போற்றி
அற்புத உருவே போற்றி
ஆனந்த நிலையே போற்றி
தாமரை முகத்தவளே போற்றி
தர்மத்தின் வடிவே போற்றி
தாயாக வந்தாய் போற்றி
தக்கவர்க்கு பொருளருள்வாய் போற்றி
நினைத்ததை முடிப்பவளே போற்றி
நிம்மதி அருள்வாய் போற்றி
உமையவள் பேத்தியே போற்றி
உன்னதத் தெய்வமே போற்றி
செல்வத்தின் உருவமே போற்றி
ஜெகமெல்லாம் காப்பாய் போற்றி
உயிருக்கு உயிரானாய் போற்றி
உலகமெல்லாம் நிறைந்தவளே போற்றி
ஆபரணம் அணிந்தாய் போற்றி
ஆடைகள் தருவாய் போற்றி
ஒளிமிகு முகத்தாய் போற்றி
ஓம்காரப் பொருளே போற்றி
கருணைசேர் கரத்தாய் போற்றி
மங்களம் தருவாய் போற்றி
உன்னையே துதித்தோம் போற்றி
உடமைகள் தருவாய் போற்றி
நங்கையர் நாயகியே போற்றி
நலமெலாம் தருவாய் போற்றி
ஆரத்தி ஏற்பாய் போற்றி
ஆனந்த உருவே போற்றி
பாடல்கள் கேட்டாய் போற்றி
பாசத்தைப் பொழிவாய் போற்றி
குணமெனும் குன்றே போற்றி
குங்குமம் தருவாய் போற்றி
தேவியர் தேவியே போற்றி
சிவனருள் பெற்றாய் போற்றி
சிறப்பெலாம்கொண்டாய் போற்றி
விஷ்ணுவரம் பெற்றாய் போற்றி
விண்ணவர் செல்வமே போற்றி
நலன்களின்உருவமே போற்றி
புண்ணிய நாயகி போற்றி
செல்வத்தின் வடிவே போற்றி
செல்வத்தைப் பொழிவாய் போற்றி
சரணமடைந்தால் மகிழ்வாய் போற்றி
சற்குணவதியே போற்றி
ஐங்கரன் மகளே போற்றி
அனைத்துமே நீ தான் போற்றி
கண்ணுக்கு இமையே போற்றி
கருணை செய்து காப்பாய் போற்றி
கனகமாமணியே போற்றி
கல்வியெலாம் தருவாய் போற்றி
சித்திபுத்தி செல்வமே போற்றி
சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
தத்துவச் சுடரே போற்றி
தக்கவர்க்கு பொருள் அருள்வாய் போற்றி
வித்தகச் செல்வியே போற்றி
வினைகளெலாம் களைவாய் போற்றி
பழங்களை ஏற்பாய் போற்றி
பாயாசம் உண்பாய் போற்றி
கரும்பாய் இனிப்பாய் போற்றி
காமதேனு பசுவே போற்றி
குடும்ப விளக்கே போற்றி
கொலுவிருந்து அருள்வாய் போற்றி
சந்தோஷம் தருவாய் போற்றி
சவுபாக்கியம் அருள்வாய்  போற்றி!  போற்றி!



பண்டிகை பொங்கல்!

பொங்கல் திருநாள் நான்கு நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது. அவை: போகி, பொங்கல், மாட்டுப் பொங் கல், காணும் பொங்கல்.
போகிப் பண்டிகை:

பொங்கலன்று வரக் கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற் கும் முகமாக போகி, முதல் நாளன்று (மார்கழி மாதக் கடைசி நாளன்று) கொண்டாடப்படுகிறது.
                        
உதவாத பழைய பொருட்களை எல்லாம் தீயில் இட்டுப் பொசுக்கி, வீட்டைத் தூய்மை செய்து வெள்ளை அடிப்போம். தீய குணங்களை எல்லாம், தூய்மை யான அறிவு என்னும் ஞானத்தீயில் இட்டுப் பொசுக்கி, உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் உட்பொருள். தீயவற்றைப் போக்கு வதால், இந்த பண்டிகை, ‘போக்கி’ எனப்பட்டு, ‘போகி’ என மருவி வழங்கப்படுகிறது.
                        
போகிப் பண்டிகை வட நாட்டிலும் கொண்டாடப்படு கிறது. அங்கே இந்திரனைப் போற் றும் முகமாக இதை ‘இந்திர விழா’ என்று கொண்டாடுகிறார்கள். இந்திரனுக்குப் ‘போகி’ என்ற பெயரும் உண்டு. அதனால் அங்கே இந்திர விழா, போகிப் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. ‘லோரி கொளுத்துவது’ என்ற பெயரில் (நம் தமிழ்நாட்டைப் போலவே) கட்டைகளைப் போட்டு நெருப்பு மூட்டுவதும் உண்டு.
                        
பொங்கல்:

உழவுத் தொழிலின் மேன்மையை உலகுக்கு உணர்த்து வது பொங்கல் பண்டிகை. தை மாதம் தொடங்குவதற்குள் அறுவடை எல்லாம் அநேகமாக முடிந்துவிடும். அறுவடை ஆன பொருட்களை வைத்து, அனைத்து உயிர்களும் வாழ அருள் புரியும் பிரத்தியட்ச தெய்வமான சூரியனை வழிபடுவதே பொங்கலின் அடிப் படைக் கோட்பாடு.
சூரிய பூஜை;

காலையில் எழுந்த தும் நீராடி, அதன் பிறகு பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் அன்று தலைக்குக் குளிக்க வேண் டும். எண்ணெய் தேய்த்துக் குளிக் கக் கூடாது.
                        
புது பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி இலை ஆகியவற்றைக் கட்டி வைக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். சிலர் அடுப்பைக் கூடப் புதிதாக வைப்பார்கள்.
பொங்கல் பொங்கி வழியும் போது, ‘‘பொங்கலோ பொங்கல்!’’ என்று குரலெடுத்துக் கூவுவார்கள். சமையல் முடிந்ததும், நைவேத்தி யப் பொருட்களையும் வைத்து சூரிய பூஜை செய்ய வேண்டும்.
                         
சுருக்கமாக கணபதி பூஜையை முடித்துக் கொண்டு அதன் பிறகே சூரிய பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ய வேண்டிய இடத்தில் (திறந்த வெளியில்) அரிசி மாவால் அழகாகக் கோலமிட்டு, கோலத்துக்கு வடக்குப் பக்கம் சூரியனையும், தெற்குப் பக்கம் சந்திரனையும் வரைந்து வைத்து (கோலம் போட்டும்) பூஜை செய்ய வேண்டும்.
                        
ஒரு தலைவாழை இலை யில், சமைத்து வைத்ததை எல்லாம் போட்டுப் பிசைந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் போடும் வழக்கமும் உண்டு. அப் போதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவுவார்கள்.
                        
பொங்கல் அன்று - பொங்கல் செய்த பானையையோ, சாதம் வடித்த பாத்திரத்தையோ காலி செய்யக் கூடாது!
கணுப் பண்டிகை:

பொங்கலுக்கு மறுநாள் செய்யப்படும் ஒரு விசேஷ நிகழ்ச்சி இது. பெண்களுக்கு உரியது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். இல்லாதபட்சத்தில் கணவனிடமே மஞ் சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.
                        
கணுப்பிடி வைக்கும் முறை:

இரண்டு மஞ்சள் இலைகள் (அல் லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ (மொட்டை மாடியிலோ) கணுப்பிடி வைப் பார்கள்.
கணுப்பிடி வைக்கும் இடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்வார்கள். முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து கொள்வார்கள். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
                        
ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைப்பார்கள். இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றப்படும்.
                        
வெற்றிலை-பாக்கு,பழம்,தேங் காய், கரும்பு (துண்டு களாக), மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி), பூக் கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் (மஞ்சள், சுண்ணாம்பு, குங்குமம் கலந்து கரைத்த நீர்) தயா ராக வைக்கப்பட்டிருக்கும்.
                        
கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பூஜை:

அட்சதையையும் பூக்களையும் இட்டு (கணுப்பிடியாக வைத்த சாத வகைகளுக்கு), ‘‘கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல் லாம் கல்யாணமாம் கல்யாணம்’’ என்று சொல்வார்கள். அதன் பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள்.
                        
கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய்-பூனை போன்றவை எச்சில் பண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
                        
கணுப்பிடி அன்று சமையலில் எலுமிச்சம் சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் இடம்பெறும்.
                        
கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட் டார்கள் என்பது மரபு. இந்த நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுகிறது (கணுப்பிடி). ஆதலால், ‘‘உடன்பிறந் தவர்கள் எந்தக் குறையும் இல் லாமல் நன்றாக இருக்க வேண்டும்!’’ என்று வேண் டிக் கொள்வார்கள். இதன் உண்மையை, ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என் னும் பழமொழி விளக்கும்.
                        
கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம்.
                        
பிறந்த வீட்டுச் சீராகப் பெண் களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் இருந்து வரும். உள்ளூரிலேயே இருப்பவர்கள், தாய் வீட்டுக்குப் போய் மதியம் உணவு உண்பது வழக்கம்.



மாட்டுப்பொங்கல்!

பல விதங்களிலும் நமக்கு உதவி புரிந்து, நம்மை வாழ வைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தி, அவற்றைப் பெருமைப் படுத்துவதே மாட்டுப் பொங்கல். 
                        
மாட்டுப் பொங்கல் அன்று மாடு களைக் குளிப்பாட்டி அவற்றுக்கு சந்தனம்-குங்குமம் வைத்து, மாலை யிட்டு அலங்காரம் செய்து கோ பூஜை செய்வார்கள்.
                        
ஒரு தலைவாழை இலையில் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கரும்புத் துண்டங்கள், வாழைப் பழங்கள் முதலியவற்றை வைத்து மாடுகளுக்கு விசேஷ விருந்து படைப் பார்கள். 

இது வரை பார்த்து வந்த மாட்டுப் பொங்கல் வைபவத்தில் இருந்து மாறுபட்டது இது. பல பேருக்குத் தெரியாது. நாம் தெரிந்து கொள்வதற்காகவும் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காகவும் விசேஷமான இந்த ‘மாட் டுப் பொங்கல்’ இங்கே படைக்கப்படுகிறது.
                        
மாட்டுப் பொங்கல் அன்று மாலையில், ஊரி லுள்ள மாடுகள் எல்லாம் ஒரு மந்தையில் கூடும்.

ஊரில் இருக்கும் பெரியவர்கள் வீடு வீடாகப் போய், ஒரு வீடு கூட விட்டுப்போகாமல் வெல்லம், அரிசி, தேங்காய், தயிர், பழம், சீயக்காய், எண்ணெய் முதலானவற்றை வாங்கிச் சேகரித்துக் கொண்டு வருவார்கள்.
                        
சேகரிக்கப்பட்ட அரிசியை (மந்தையிலேயே ஓர் ஒதுக்குப் புறமாக) மிச்சம் மீதி வைக்காமல், பிரமாண்டமான பாத்திரங்களில் போட்டுப் பொங்கல் செய்வார்கள்.
                        
மந்தையின் மேற்புறத்தில் மண் ணால் செய்யப்பட்ட பெரும் மேடை ஒன்று இருக்கும். அதில் வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் நீள நீளமான, நுனியுடன் கூடிய வாழை இலைகளை வரிசையாக விரித்து வைப்பார்கள். அந்த வாழை இலை களில், அங்கேயே தயார் செய்யப்பட்ட பொங்கலைப் பரப்பி வைப்பார்கள்.
                        
பிறகு தயிர், உரித்த வாழைப்பழங்கள், தேங்காய் பத்தைகள், வெல்லம் ஆகியவற்றைப் பொங்கலுடன் சேர்த்துக் கலக்கு வார்கள். கலவையான அந்தப் பொங்கல் ஒரு மலையாகக் குவிக்கப்பட்டு, சிவலிங்கம் போல் காட்சி தரும். இந்தச் செயல்களை எல்லாம் வாயில் துணி கட்டி மறைத்தபடியே செய்வார்கள். தவறிப் போய் வாயில் இருந்து எச்சில் தெறித்து, புனிதம் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது.
பொங்கல் குவிக்கப்பட்ட அந்தப் பெரிய மண்மேடைக்குத் ‘திட்டாணி’ என்று பெயர். அதற்கு நேராக, கீழ்த் திசையில் ‘கள்ளி வட்டம்’ என்பது இருக்கும்.
                        
அங்கே கிளை கிளையாகப் படர்ந்திருக்கும் திருகுக் கள்ளியை ஒடித்துக் கொண்டு வந்து, அவற்றில்- எண்ணெயில் நனைக்கப்பட்ட ஏராளமான திரிகளைச் சர விளக்குகளைப் போலச் செருகி வைத்திருப்பார்கள். இங்கே ஒரு பெரிய சட்டியில் சாம்பிராணியும் புகைந்து கொண்டிருக்கும். இவற் றுக்குப் பாதுகாவலாக ‘திட்டாணிக் காவலர்’ என்று ஒருவர் அங்கேயே அமர்ந்து இருப்பார்.

பொங்கல் கொட்டி வைத்திருக் கும் பெரிய மண் மேடைக்கும் (சற்று முன் பார்த்த) கள்ளி வட்டத் துக்கும் நடுவே மாடுகள் எல்லாம் கொண்டு வரப்படும்.
                        
‘வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாகி விட்டதா?’ என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு ‘மாட் டுப் பொங்கல்’ வைபவம் ஆரம்ப மாகும்.
                        
முதலில் மாடுகளுக்கு முடி (சவரம்) எடுப்பார்கள். அதாவது மாடுகளின் வாலில் இருந்து சிறி தளவு முடி, நறுக்கி எடுக்கப்படும். அதன்பின் அவற் றின் முதுகில் கொஞ்சம் கொஞ்சம் எண்ணெய் தடவி, சீயக்காய்த் தூளைத் தேய்ப்பார்கள். பிறகு தண்ணீர் நிரம்பிய சொம்புகளில் மாவிலையை நனைத்து மாடுகளை நோக்கி வீசுவார்கள். இது குளிப்பாட்டும் நிகழ்ச்சி.
                        
இது முடிந்ததும்... வாயைக் கட்டியபடி இருக்கும் பெரியவர் ஒருவர், மலை போன்ற பொங்கல் குவியலில் இருந்து பொங்கலை எடுத்து, அங்குள்ளவர்களிடம் கொடுப்பார். வாங்கியவர்கள் அதை மாடுகளுக்கு ஊட்டுவார்கள். பிறகு, ‘‘மாலை கட்டலாம்’’ என அறிவிப்பு வரும். மாவிலை, ஆவாரம் கொத்து, பிரண்டை, பீளைப் பழம் ஆகியவற்றைக் கோரையில் மாலையாகக் கட்டி மாடுகளுக்கு அணிவிப்பார்கள்.                        
வண்ண மயமான நெட்டி மாலைகளும் போடப்படும். கற் றாழை நாரால் ஆன வண்ணக் குஞ்சங்களை சிறுவர்கள் மாடுகளின் கொம்புகள், கழுத்து, கால்கள் ஆகியவற்றில் கட்டுவார்கள். அவ் வப்போது ஆரவாரம் எழும்.
                        
அடுத்ததாக, அங்கிருப்பவர்கள் வரிசையாக நிற்க, ஒருவர் கையில் தீச்சட்டி இருக்கும். மற்றொருவர் சேகண்டியை (வெண்கலத்தால் ஆன தட்டையான, நூல் கட்டப் பட்ட இசைக் கருவி) பிடித்து இருப்பார். இன்னொருவர் கையில் சங்கு இருக்கும். ஒருவர் நீர் நிறைந்த சொம்பில் மாவிலையைப் போட்டு வைத்திருப்பார். நல்ல குரல் வளம் மிக்க ஒருவர் ‘மாட்டுப் பொங்கலை’ வாழ்த்திப் பாடுவார். அதை அப் படியே பின்பற்றி மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்திசையாகப் பாடுவார்கள்.
                      
வரிசையாக அணி வகுத்து நின்றவர்கள் மாட்டு மந்தையைச் சுற்றி வட்டமாக வலம் வரு வார்கள். சேகண்டி ஒலி எழுப்பும். சங்கு முழங்கும். தண்ணீர்ச் சொம்பில் இருந்து மாவிலையால் தண்ணீர் எடுத்து, மாடுகளின் மீது தெளிக் கப்படும்.                         
இந்த ஊர்வலம்- கள்ளிவட்டம், பொங்கல் கொட்டி வைக்கப் பட்டிருந்த பெரிய திட்டாணி என்னும் பள்ளயம் ஆகியவற்றை மூன்று முறை வலம் வரும்.
                        
அப்போது ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூவுவார்கள்.
                        
இந்தச் சத்தம் வீட்டில் இருக்கும் பெண்களின் காதுகளில் விழுந் ததும், (இந்த வைப வத்தின்போது பெண்கள் மந்தைக்கு வருவதில்லை) அவர்கள் பலகாரங்கள் பலவற்றுடன் கூடிய படையலை, வீட்டில் தெய்வத்துக்குப் படைப்பார்கள். இது நடைபெறும்போது இரவு மணி இரண்டு, மூன்று கூட ஆக லாம். அதுவரை பெண்கள் தூங்க மாட்டார்கள்.
                        
இதன் பிறகே மாடுகள் மந்தையில் இருந்து வீடு திரும்பும். அப்போதும், மந்தையில் இருந்து அனைவரும் வீடு திரும்ப மாட்டார்கள். வீட்டுக்கு ஒருவர் என்று, மந் தையிலேயே இருப்பார்கள். ஒவ் வொருவர் கையிலும் ஒரு பாத்திரம் இருக்கும்.
                        
திட்டாணியில் இருக்கும் பொங்கல் கவளங்களாக உருட்டப்பட்டு, பாத்திரம் வைத்திருப்பவர்களுக்கு ஒவ் வொரு கவளம் தரப்படும். அனைவருக்கும் தந்த பிறகு மீதி இருக்கும் பொங்கலை அங்கு இருக்கும் மற்றவர்களுக்கும் சிறு சிறு உருண்டைகளாகக் கொடுப் பார்கள்.
                        
‘பெருமாள் சோறு’ என்று சொல்லி, அதை எல்லோரும் அங்கேயே சாப்பிடுவார்கள். மந்தையில் இருந்து, விழா முடிந்து மாடுகள் வீடு திரும்பும்போது, பெண்கள் தங்கள் வீட்டின் எல் லையில் சிறிதளவு வைக்கோலைப் போட்டுக் கொளுத்தி, ஓர் உலக்கையையும் குறுக்காகப் போட்டு வைப்பார்கள். மாட்டுக்கு திருஷ்டி படக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. வியாதிகள் வராமல் இருக்கவும், நல்ல விளைச்சல் கிட்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இவ்வாறு செய்யப்படுகிறது.

நமக்கெல்லாம் நன்கு பழக்கப்பட்ட மாட்டுப் பொங்கலில் இருந்து மாறு பட்ட ‘மாட்டுப் பொங்கல் விழா’ இது!

ஜல்லிக்கட்டு!

                           பொ ங்கலை முன் னிட்டு, ஜல்லிக்கட்டு என் னும் வீர விளையாட்டு பெரும்பாலான கிரா மங்களில் நடைபெறு கிறது.                         

தமிழ்நாட்டுக்கே உரித்தான வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று. இது, கொல்லேறு தழு வுதல், மஞ்சு விரட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப் படுகிறது.
                        
‘‘இந்தக் காளையை அடக்கு பவனுக்குத்தான் என் மகள் மாலை யிடுவாள்!’’ என்று பெண்ணைப் பெற்றவர் சொல்ல, அவர் வீட்டுக் காளை சீறிப் பாய்ந்து கிளம்பும். ஓரளவு அனைவருக்குமே தெரிந்தது தான் இது.
விவரம் தெரிந்த நாள் முதல் பெண் ஒருத்தி, ஒரு காளைக் கன்றைச் செல்லமாக வளர்த்து வருவாள். அவளுக்குத் திருமணப் பருவம் வரும்போது, கன்று வளர்ந்து காளை மாடாக கொழுகொழுவென்று இருக்கும். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர், அந்தக் காளை மாட்டை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
                        
ஜல்லிக்கட்டு என்பது வெறும் வீர விளையாட்டு மட்டுமல்ல. பார்ப்பவர் களுக்குக்கூட உற்சாகத் தையும் மன ஊக்கத்தையும் தரும் நிகழ்ச்சி அது.
                        
ஜல்லிக்கட்டில் கலந்து கொள் ளும் மாடுகளை முன்னாலேயே தயார் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள், கூராக இருந்தாலும், இன்னும் அழகாகச் சீவி எண் ணெய் தடவிப் பக்குவம் செய் யப்பட்டு வண்ணம் பூசப்படும். கொம்புகளில் கூரான கொப்பிகள் பொருத்தப்படும். இந்தக் கொப்பி கள் அவரவர் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு என்னும் ஏதாவது ஓர் உலோகத்தில் அமைந்து இருக்கும்.
                        
மாடுகளுக்குச் சந்தனம் பூசி, மருக்கொழுந்து மாலை போட்டு, கொம்பில் சிறு (புது) துண்டைச் சுற்றி வைப்பார்கள். கழுத்தில் புதிய ஒரு சிவப்புத் துணியைக் கட்டி விடுவார்கள். அவற்றில் பணத்தையோ அல்லது பொரு ளையோ வைத்துக் கட்டுவதும் உண்டு.
                        
பளபளவென்ற கொம்புகளுடனும் கழுத்தில் மாலை களுமாகக் கம்பீரத்து டன் ஜல்லிக்கட்டுக் காளைகள் போராட் டக் களத்தில் நுழை யும். ஜல்லிக்கட்டு நடை பெறும் இடத்தின் நுழைவாயில் ‘வாடி வாசல்’ எனப்படும்.
                        
அங்கே ஊர்ப் பெரியவரான நாட் டாண்மைக்காரர் மாடுகளுக்கு மாலை போட்டு மரியாதை செய்வார். அதற்கு முன், ஊரில் உள்ள அம்மன் கோயில்களில் எல்லாம் ‘செவ்வாய் சார்த்துதல்’ என்ற பெயரில் பூஜை நடக்கும்.
                        
மாடுகளுக்கு மாலை, மரியாதை முடிந்தவுடன் அவற்றின் கயிறுகள் அவிழ்க்கப்பட்டுக் களத்தில் இறக்கப்படும். முதன்முதலில் களத்தில் நுழைவது கோயில் மாடுதான். அதை யாரும் பிடிக்க மாட்டார்கள்.
பிறகு, நெற்றிப் பட்டயத்தில் பணம், கழுத்தில் பணம், கொம்பில் பணம் என விதவிதமாகக் காளை கள் களத்தில் பாயும்.
                        
ஜல்லிக்கட்டுக் காளைகள் களத்தில் இறங்கியதும் அவற் றுக்கு வேகத்தையும் வெறியையும் ஊட்டுவதற்காகத் தாரை, தப் பட்டை, ஊதுகொம்பு முதலியவை முழங்கும்.
                        
ஒவ்வொரு காளையைப் பற்றிய தகவல்களும் சொல்லப்படும். ‘இது இத்தனை போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற போட்டிகள் இத்தனை; இத்தனை பேரைக் குத்திக் கிழித்திருக்கிறது’ போன்ற தகவல்கள் எல்லாம் அதில் இடம்பெறும்.
                        
சீறிப் பாயும் இந்தக் காளைகளின் மீது, வாலிபக் காளைகள் உயிரையும் பொருட்படுத்தாமல் பாய்வார்கள்.
                        
மாடுகளின் கழுத்தில் உள்ள துணியை உருவி எடுக்க முயற்சிப்பார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது அவரவர் பலத்தையும், நேரத்தை அனுசரித்து இயங்கும் திறமையையும் பொறுத் தது. வாட்டமின்றி வாகாக வளைய வரும் காளைகள், களத்தில் இருக்கும் வாலிபர்களைத் தூக்கிப் பல முறை கொம்பினால் வீசிப் பந்தாடிவிட்டு ஓடும்.
                        
ஓடாமல் ஒரே இடத்தில் இருந்தபடி, ‘வா! வந்து என்னைப் பிடி! பார்க்கிறேன்!’ என்று எதிர் சவால் விட்டுப் பாய்ந்து விரட்டும் காளைகளும் உண்டு. இவற்றுக்கு ‘நின்று குத்திக் காளை’ என்று பெயர்.
காளையை அடக்கி அதன் கொம்பிலோ அல்லது கழுத்திலோ உள்ள துண்டையும் பணத்தையும் எடுத்துவிட்டால், அது காளையை அடக்கிய வீரனுக்கே சொந்தம். பார்வையாளர்களிடம் இருந்தும் பரிசு கிடைக்கும்.
                        
மாடுகளின் திமிலைக் கெட் டியாகப் பிடித்தபடி, குறிப்பிட்ட தூரம் வரை அவற்றுடன் சேர்ந்து ஓடுபவர்கள் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படு வார்கள். தங்கள் கால்கள் தரையில் பட்டும் படாமலும், மாட்டின் மீது உரசியபடியே குறிப்பிட்ட தூரம் ஓடினாலும் அதுவும் வெற்றி பெற்றதாகவே கருதப்படும்.
                        
யாராலும் அடக்க முடியாமல் களத்தையே கலக்கி வெற்றிபெறும் காளைகள், சில நேரங்களில் அங்கேயே ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுவதும் உண்டு.
 
                        
 

காணும் பொங்கல்!

          
தை மாதம் மூன்றா வது நாளன்று ‘கன் னிப் பொங்கல்’ கொண் டாடப்படும். இதை ‘கன்றுப் பொங்கல்’ என் றும் சொல்வார்கள். இரண்டுக்கும் பெயர்க் காரணங்கள் உண்டு.
                        
கல்யாணம் ஆகாத பெண்களுக்கு உரியது இது. ஆகையால் இது ‘கன்னிப் பொங்கல்’.
கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு(ம்) உரியது இது. ஆதலால் இது ‘கன்றுப் பொங்கல்’ எனவும் அழைக்கப்படுகிறது.
                        
கல்யாணம் ஆகாத இளம்வயதுப் பெண்கள் எல்லோரும், வெள்ளைத் துணியால் மூடப்பெற்ற தாம்பாளங்களை எடுத்துக் கொண்டு மாலை நேரத்தில் ஓரிடத்தில் கூடுவார்கள். ஒவ்வொருவர் தாம் பாளத்திலும் கரும்புத் துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவை இருக்கும்.
எல்லோரும் கும்மியடித்துப் பாடல்களைப் பாடியபடியே ஊரில் உள்ள ஆற்றங்கரை, குளக் கரை, ஏரிக்கரை (ஏதாவது ஒன்றை) நோக்கிச் செல்வார்கள். பக்க வாத்தியமாக மேளமும் போகும்.
தண்ணீர்க் கரையை அடைந்த வுடன் அங்கே ஒரு சிறிய மண் மேடை அமைப்பார்கள். இது திட்டாணி எனப்படும். கொண்டு வரப்பட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய தாம்பாளங்களை, அந்த மண் மேடையின் மீது வரிசை யாக அடுக்கி வைப்பார்கள்.
                        
தாம்பாளங்கள் கொண்ட அந்த மண் மேடையைச் சுற்றி வட்டமாக நின்றபடி கும்மியடித்துப் பாட்டுப் பாடுவார்கள். பாடல்கள் பாடி முடிந்ததும், அவரவர் தாம்பாளங்களில் இருக்கும் பச்சரிசியில் சர்க்கரையைச் சேர்த்து, நீர் வார்த்துக் கலந்து வைப்பார்கள்.
                        
கற்பூரம் ஏற்றிக் கடவுள் வழிபாடு செய்வார்கள். ‘‘சீக்கி ரம் திருமணம் நடக்க வேண்டும்’’ என்று வேண்டிக் கொள்வார்கள். அவர்களுக்கு அந்த வருடத்திலேயே கல்யாணம் நடந்து விடும் என்றும் சொல்வார்கள்.
                        
சர்க்கரை கலந்த பச்சரிசி, அங்கு வேடிக்கை பார்க்க வந்திருக்கும் எல்லோருக்கும் விநியோகம் செய்யப்படும்.
                        

‘கன்றுப் பொங்கல்’!
                        
கட்டிளங் காளை ஒருவன் காளையை அடக்கித் தன் வீரத்தை வெளிப்படுத்துவான். காளையைக் கன்று என்று கூறுவதும் உண்டு. இதை முன்னிட்டு இவ்விழா ‘கன்றுப் பொங்கல்’ எனக் கூறப் படுகிறது.

                        
கன்னிப் பொங்கல் - 2:
                        
இளம் வயதுப் பெண்கள் கூட்டமாகக் கூடிக் கும்மியடித்துப் பாட்டுப் பாடியபடி ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். அங்கே, இஷ்டப்படி ஆடல், பாடல் என விளை யாடி விட்டுக் கூட்டாஞ்சோறு சமைப்பார்கள்.
                        
அதை ஆற்றுக்குப் படைத்துப் பூஜை செய்வார்கள். ஆற்றுக்குக் ‘கன்னி’ என்று பெயரும் உண்டு. ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ என்று பெருமை பெற்று, வான் மழை பொய்த்து விட்டாலும் தன்னுடைய ஊற்று நீரால் அனைவரையும் வாழ வைக்கும் ஆற்றை, கன்னி அம்மனாகவே நினைத்துப் பூஜை செய்வார்கள்.
                        
நதிகளுக்கு, நவ கன்னிகைகள் வடிவில்-கங்கை, யமுனை, சரஸ் வதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, நர்மதா, துங்கபத்ரா, சரயூ என்னும் ஒன்பது திருநாமங்களில் வழிபாடு நடக்கும்.
                        
இந்த நவ கன்னிகைகளின் அழகிய விக்கிரகங்களைக் கும்பகோணத்தில் மகாமகக் குளக்கரையில் இருக்கும் விஸ்வநாதஸ்வாமி கோயிலில் தரிசிக்கலாம்.
                        
வழிபாடு முடிந்ததும் கூட்டாஞ்சோறை அங்கேயே சாப்பிட்டு விட்டுக் குதூகலத்துடன் வீடு திரும்புவார்கள் பெண்கள்.
                        
கன்னிகள், கன்னிக் (ஆற்றங்) கரையில், கன்னியை (ஆற்றை)க் குறித்துச் செய்யும் கன்னிப் பொங் கல் இது.
                        
காணும் பொங்கல்: நெருங்கிய நண் பர்களையும் உறவினர்களையும் பார்த்து, நலம் விசாரித்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் பண்டிகை இது.
                        
சென்னை முத லான கடற்கரை உள்ள பகுதிகளில், குடும்பத்துடன் கடற் கரைக்குப் போய்க் கூட் டத்தோடு கூட்டமாக மகிழ்ச்சியோடு பொழு தைக் கழிப்பதும் உண்டு.
                        
இதைவிட விசே ஷமான நிகழ்ச்சி!

உழைப் பாளர்களும், இசை மற்றும் நாடகக் கலைஞர்களும், ஜமீன் தார்கள், பிரபுக்கள் முதலான பெருந்தனக்காரர்களைப் போய்ப் பார்ப்பார்கள்.
                        
‘வாழ்நாள் எல்லாம் நமக்காகப் பல விதங்களிலும் உழைப்பவர்கள் இவர்கள்’ என்ற எண் ணத்துடன் வேட்டி, சேலை, அரிசி, பணம் முதலானவற்றைக் கொடுத்து அவர் களை மகிழ்வுறச் செய்வார்கள் பணக்காரர்கள். தெருக்கூத்துக் கலை ஞர்கள் கௌரவிக்கப் படுவார்கள்.
                        
இவ்வாறு அடுத்தவர்கள் மனமும் முகமும் மகிழ்ச்சியில் மலர்வதைக் காண்பதே உண்மையான ‘காணும் பொங்கல்’.



 
 

தை கிருத்திகை!


தை கிருத்திகை!
உ த்தராயண புண்ணிய காலத்தில் வரும் (ஆடிக் கிருத்திகையைப் போல்) தை மாதக் கிருத்திகை மிகவும் விசேஷம். ‘‘தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். முக்தி யையும் கொடுப்பேன்!’’ என்று சிவபெருமானே வாக்குறுதி அளித் திருக்கிறார்.


வீரபத்திர விரதம்!
ம ங்கலவாரம் எனப் படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் கடைப் பிடிக்க வேண்டிய விரதம் இது. வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது நல்லது. வீரபத்திரரைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதம் நீங்காத தடைகளை எல்லாம் நீக்கும்.

பைரவ விரதம்!                             
தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை குறித்துச் செய்யப்படும் விரதம் இது. செவ்வாய்க் கிழமையை மங்கல வாரம் என்று அழைப்பார்கள். செக்கச் செவேல் என்று சிவந்த ஒளி வீசுவதால் இந்தக் கிரகம் ‘செவ்வாய்’ எனப் பெயர் பெற்றது. சித்திரை மாத பரணி நட்சத்திரமும், ஐப்பசி மாத பரணி நட்சத்திரமும் பைரவ விரதத்துக்கு உரிய நாட்களாகும்.
 

                        
 

தைப்பூசம்!


சி வபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புதமான திருநாள் இது.
தைப்பூசம், வியாழக்கிழமை, மத்தியான வேளை... ஆயிரம் முகங்களை உடைய பானுகம்பர், ஆயிரம் சங்குகளை ஊதினார். ஆயிரம் தோள்களை உடைய வாணாசுரன் குடமுழவு என்னும் வாத்தியத்தை இசைத்தான். மேலும், ஐந்து வகையான துந்துபி வாத்தியங்கள் ஒலிக்க, கந்தர்வர்கள் கீத ஒலி எழுப்ப, வேத ஒலி முழங்கிட சிவபெருமான் அம்பிகையோடு ஆனந்தத் தாண்டவம் ஆடியருளி னார்.

வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, திருவுடை அந்தணர் மூவாயிரம் பேர் என எல்லோரும் அந்த ஆனந்த நடனத்தை தரிசித்தார்கள். மெய் சிலிர்த்தது. உள்ளம் உருகியது, ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
                        
‘‘சிவபெருமானே! இங்கேயே உமாதேவியருடன் இன்று முதல் எப்போதும் இந்த ஆனந்தத் தாண்டவத்தை எல்லோரும் தரிசிக்கும்படியாக அருள் புரிய வேண்டும்’’ என வேண்டினார் பதஞ்சலி முனிவர்.

                        
சிவபெருமான் உடன்பட்டார். அதன் பின் சிவபெருமானின் உத்தரவுப்படி அங்கேயே பொன்னாலான ஒரு சபை உண்டாக்கப்பட்டது. அன்று முதல் அந்தக் கனக சபையில் (சிதம்பரத்தில்) வியாக்ரபாதர், பதஞ்சலி முதலான எல்லோரும் வணங்க, அம்பிகையுடன் தன் திருநடனக் காட்சியை எப்போதும் தரிசிக்கும்படி தந்தருளிக் கொண்டு இருக்கிறார் சிவன்.

பூச நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழ பகவான். ஞான வடிவம் இவர். பூச நட் சத்திரத்தன்று நாம் செய்யும் வழிபாடுகளால், தேவகுருவின் அருளைப் பரிபூரணமாகப் பெற லாம். அதுவும் புண்ணிய காலமான தைப்பூசத்தன்று செய்யும் வழிபாடு மிக மிக விசேஷம்!
                        
தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவிடைமருதூரில் தைப்பூசம் விசேஷம். இங்கு கோயிலில் உள்ள சித்த தீர்த்தத்தில் மூழ்கி, வில்வ மரத்தை வலம் வந்து இடை மருதீசனைத் தரிசித்தால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
                        
திருநெல்வேலியில்- அம் பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூரில் தைப் பூசத்தன்று தாமிரபரணியில் நீராடி திருப்புடைமருதூர் ஈசனைத் தரிசிப்பது விசேஷம். அளவிட முடியாத புண்ணியம் கிடைக்கும். மிகவும் அமைதியான தலம் இது. அமைதியைத் தரும் தலமும் இது.
                        
தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படும். இது ஏன் என்பதற்கு ஒரு தகவல்:
                        
சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் துயரத் தில் துடித்தார்கள். அவர் களின் துயரங்களை தேவ குருவான வியாழ பகவான், முருகப் பெருமானிடம் காரண - காரியங்களுடன் விவரித்துச் சொன்னார்.

குறை கேட்ட குமரன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களின் துயரங்களைத் தீர்த்தார்.

தேவகுருவான வியாழ பகவான், இப்படி தன் சீடர்களின் துயரங்களை முருகனிடம் எடுத்துரைத்தது தைப்பூசம் அன்றுதான். அதனால்தான் நம் குறைகளையும் தீர்ப்பதற்காக முருகப் பெருமானிடம், தைப்பூசத் திருநாளில் விசேஷமான கோரிக்கைகளை வைக்கிறோம் என்று சொல்லப்படுகிறது.
                        
இன்னொரு தகவலும் உண்டு. அது:

பூசம் நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழ பகவான். அந்த குருவுக்கும் குருவாக இருப்பவர் குமர குருபரனான முருகப்பெருமான். அதனால்தான் உத்தராயணம் பிறந்ததும் புண்ணிய காலமான தை மாதத்திய பூச நட்சத் திரத்தன்று முருகனை வழிபடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.


வம்சம் தழைக்க அருளும் தை அமாவாசை வழிபாடு!

வாழையடி வாழையாய் வம்சம் தழைக்க அருளும் தை அமாவாசை வழிபாடு!

ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச 
ஸுகதாய பிரஸன்னாய ஸூப்ரீதாய மஹாத்மனே!

பொருள்:
எம் பிறப்புக்கு காரணமான முன்னோர்களே!
தெய்வீக சக்தி பெற்றவர்களே!
உங்கள் ஆசியால் எங்களுக்கு நல்வாழ்வும், மகிழ்ச்சியும் உண்டாகட்டும்!
நல்லவர்களால் போற்றப்படும் உங்களை வணங்குகின்றேன்!   
 


ஆத்மகாரகனாகிய சூரியனும், மனோகார கனாகிய சந்திரனும் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இணைவார்கள். இதையே அமாவாசை என்கிறோம். சூரியன் என்பதை பித்ருகாரகன் என்றும், சந்திரன் என்பதை மாத்ருகாரகன் என்றும் சொல்கிறது ஜோதிடம். ஆகவே சூரியன், சந்திரன் இணைகிற  அமாவாசையில்,  இறந்த தாய், தந்தை மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம்.

இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!

சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாட்களில், வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. அதேபோல், சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்களும் சரி, பெண்களும் சரி, நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது. இவை, இறைவனை வழிபட நாம் செய்யும் காரியங்கள். பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய இந்தக் காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், தெய்வத்தை வழிபடும் வேளையில், பித்ருக்கள் வரப் பயப்படுவார்கள் என்கிறது சாஸ்திரம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.  நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும். இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள். அதைத் தவிர்ப்பது உத்தமம். ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது. அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு 

சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒன்றையே குறிப்பன ஆகும். நதிகள் பல இடங்களில் உற்பத்தியாகி, பல ஊர்களின் வழியாக வரும்போது, அவை ஆறு என்று பெயர் பெற்று சமுத்திரத்தில் கலக்கின்றன. அதுபோல், நாம் செய்கிற சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது. படையல் என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படுவது. ஆனால் இவை அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிற சடங்குகள். இவை நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது சத்திய வாக்கு.
 
கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

தை அமாவாசை நாளில், அந்தப் புண்ணிய தினத்தில், நம் முன்னோருக்குச் செய்யும் கடமைகளைக் குறைவறச் செய்வோம்.

நம் குலம் தழைத்து, வாழையடி வாழையாய் வளமுடன் வாழ்வோம்!

 
 

ரத சப்தமி விரதம்!


ஒரு முறை, ஜோதி வடிவமான ஈஸ்வரன், தான் ஒருவன் மட்டும் சகல உலகங்களுக்கும் பெரிய சுடராகப் பிரகாசிப்பது போதாது என எண்ணினார். உடனே மற்றொரு சுடரை உண்டாக்கினார். அதுதான் சூரியன்.

அப்போது சூரிய மண்டலம் மிகப் பெரிதாக இருந்து, உலகத்துக்கு சுகத்தையும் வெளிச்சத்தையும் தந்தது. ஏராளமான ரிஷிகளும் தேவர்களும் அதிலேயே வசித்து, சூரிய பகவானைத் துதித்து வந்தார்கள்.

யுகங்கள் பல கழிந்தன. திடீரென்று சூரியனின் ஒளி குறைந்தது. தேவர்கள் துயரத்தில் ஆழ்ந்தார்கள். பிரம்மதேவரிடம் போய், ‘‘நான்முகக் கடவுளே! சூரியன் ஒளி மங்கிப் போய் விட் டான். அவன் மறுபடியும் ஒளிபெற வேண்டும். அருள் செய்யுங்கள்!’’ என வேண்டினர்.

பிரம்மதேவர், இந்திரன் முதலா னோர் ஆலோசித்தார்கள். ‘விஸ்வ கர்மாவின் சாணை பிடிக்கும் இயந்திரத்தில் இந்தச் சூரியனைக் கடைந்தால், முன்போல் சூரியன் ஒளி பெற்று விளங்குவான்’ என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி செய்ததும் சூரியன் பழையபடியே ஒளி பெற்று விளங்கினான்.

சூரியனைக் கடைந்த அந்த நாளே ‘ரத சப்தமி’.

அதே நாளில் மஹாவிஷ்ணு ஒரு சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை சூரியனுக்குக் கொடுத்தார்.

தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ‘ரத சப்தமி’ கொண் டாடப்படுகிறது. சூரியன் வடக்கு நோக்கித் தன் பயணத் தைத் தொடங்குவது இந்த நாளில் தான்.


ரத சப்தமி அன்று அதிகாலையிலேயே சப்தமி திதி இருந்தால், அன்றே விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். ஒரு வேளை சப்தமி திதி - இரண்டு நாள் தொடர்ந்து அதிகாலையில் இருக்கும்படி வந்தால், முதல் நாளிலேயே விரதத்தையும் பூஜை யையும் செய்ய வேண்டும்.

ரத சப்தமியன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். தங்கம், வெள்ளி, தாமிரம் முதலான ஏதாவது ஒரு பாத்திரத்தில் எண் ணெய் வார்த்து தீபம் ஏற்ற வேண்டும். சூரிய வடிவத்தை வரைந்து (அல்லது பிம்பமாக வைத்து) பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்தத் தீபத்தை கங்கை-காவிரி முதலான புண்ணிய நதிகளில் விட வேண்டும். இதன் பிறகு பித்ருக்களுக்கு உண்டான தர்ப்பணம் முதலானவற்றைச் செய்ய வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்வதன் மூலம் ஏழு ஜன்ம பாவங்களும் விலகிப் போகும்.

ரத சப்தமி அன்று குளிக்கும் முறை:

ஏழு எருக்கு இலைகள், ஏழு இலந்தை இலைகள் எடுத்து ஒன்று சேர்த்து அவற்றுடன் அட்சதை, மஞ்சள்தூள் சேர்த்துத் தலையில் வைத்தபடி பெண்கள் நீராடுவது மரபு.

ஆண்களாக இருந்தால் மேலே சொன்னவாறு எருக்கு, இலந்தை இலைகளுடன் அட்சதை மட்டும் சேர்த்து உச்சந் தலையில் வைத்து நீராடுவது மரபு. பெற்றோர் இல்லாதவர்கள் மேற் சொன்ன இலைகளுடன் பச்சரிசியும் எள்ளும் சேர்த்து வைத்து நீராட வேண்டும்.

ரத சப்தமி ஆயிரம் சூரிய கிரகணங்களுக்குச் சம மானது.
ஆரோக்கியம், செல்வம், புத்திரப் பேறு, நீண்ட ஆயுள், புண்ணியம்,  வெற்றி, சொத்து (நிலம்), தானியம் முதலியவற்றைத் தரக் கூடிய விரதம் இது. 
 



பஞ்சாயுத ஸ்தோத்திரம்!



ஸ்புரத் ஸஹஸ்ரார சிகாதி தீவ்ரம்

ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்

ஸுரத் விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:

சக்ரம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே!



ஆயிரமாயிரம் ஆதவன் கதிரென

சுதர்சனம் சொலித்திடும் தீச்சுடராய் - தேவர்தம்

பகைவரை அழித்து நிற்கும் பெருமான்

கைச்சக்க்ரத்தைச் சரணடைவோம்!
 


 

            விஷ்ணோர் முகோத்தா நில பூரிதஸ்ய

          யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:

          தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்

          சங்கம் ஸதா(அ)ஹம் ச்ரணம் ப்ரபத்யே!



கோடி மதியின் வெள்ளொளியாய் – பெருமான்

கோவைச் செவ்வாய் காற்றொலியால்

தானவர் தன்குலம் கலங்கடிக்கும் – சங்கு

பாஞ்சஜன்யத்தை வணங்கி சரணடைவோம்!



            ஹிரண்மயீம் மேருஸமான ஸாரம்

          கௌமோதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்

          வைகுண்ட வாமாக்ர கரா பிம்ருஷ்டாம்

          கதாம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே!



பொன்னென மின்னும் மேருவைப் போல் - கெட்ட

தைத்யர் தன் குலம் அழித்து நின்று

வைகுந்த வாசனின் கரந்தவழும் – கதை

கௌமோதகீயை வணங்கி  சரணடைவோம்!



          ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்ட

          சேத க்ஷர சோணித திக்த தாராம்

          தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்

          கட்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே!

 

தேவர்தம் குடியை காத்திடவே – கொடிய

ராக்கதர் தந்தலை கொய்தவர்தம்

உதிரத்தில் குளித்த செவ்வாளாம்

நந்தகம் தன்னை வணங்கி சரணடைவோம்!



யஜ்ஜ்யாநி நாத ஸ்ரவணாத் ஸுராணாம்

சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:

பவந்தி தைத்யாஸநி பாண வர்ஷ

ஸார்ங்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே!

 

மின்னலாய் பயஇருள் போக்கி நின்றுபகைவர்

பின்னமாய் இடிந்திநாணொலிக்க

சாரமாய் அம்பு மாரியை பொழிந்திடும்

சாரங்கத்தை என்றும் வணங்கி சரணடைவோம்!



இமம் ஹரே பஞ்ச மஹாயுதா நாம்

ஸ்தவம் படேத் யோ (அ)நுதிநம் ப்ரபாதே

ஸமஸ்த து:காநி பயாநிஸத்ய:

பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி!



காலையில் அனுதினம் கருத்துடனே – ஆயுத

மாலையிதை ஓதி நின்றால்

துன்பங்கள் அனைத்தும் நீங்கியிங்கு நித்ய

தூயன் அருளில் துய்த்திடலாம்!

 

வநேரணே சத்ரு ஜலாக்நி மத்யே

யத்ருச்யா பத்ஸு மஹா பயேஸு

இதம் படன் ஸ்தோத்ர நா குலாத்மா

ஸுகி பவேத் தத்க்ருத ஸர்வ ரக்ஷ:



போரினில் எதிரிகள் சூழ்ந்திடினும் - கெட்ட

பேரிடர் பொழுதின் பயங்களிலும்

தோத்திரம் இதனை ஓதி நின்றால் - சுகம்

மாத்திரம் கிட்டிங்கு வாழ்ந்திடலாம்!
 
 
 
 

வியாழன், 26 ஜனவரி, 2017

24 ஏகாதசி விரத பலன்கள்!

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்து தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது.

  * மார்கழி தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி" எனப்படும். பகையை வெல்ல உதவும்.

* தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரா" எனப்படும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.

* தை தேய்பிறை ஏகாதசி "ஸபலா" எனப்படும். இன்று பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

* மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா" எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.

* மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா" எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும்.

மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா"" என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

* பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.

* பங்குனி வளர்பிறை ஏகாதசி "ஆமலகீ" எனப்படும். இன்று நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.

* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி "காமதா" எனப்படும். நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும். திருமண யோகம் தரும்.

* சித்திரை தேய்பிறை ஏகாதசி "பாபமோசனி" எனப்படும். பாபத்தை போக்கும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர்.

* வைகாசி வளர்பிறை ஏகாதசி "மோஹினீ"" எனப்படும். உடல் சோர்வு நீக்கும். பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்த சோகை அகலும். வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.

* வைகாசி தேய்பிறை ஏகாதசி "வரூதினீ"எனப்படும். உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.

* ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜலா " என்று பெயர். பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது ஆகும். எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன்வாயு அம்சம்.

* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா" எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.

* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி "தயினி" எனப்படும். இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும். ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "யோகினி" என்று பெயர். இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.

* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா" என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.

* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "காமிகா" எனப்படும். இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும். ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும். காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது.

* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் "பத்மநாபா" எனப்படும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.

* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா" என்று பெயர். அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து இழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று பல்லாண்டுஅரசு செய்தான். எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).

* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "பாபாங்குசா" எனப்படும் வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

* ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு "இந்திரா" எனப் பெயர் இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள். ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.

* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு "ப்ரமோதினீ" என்று பெயர். கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு "ரமா" என்பர். இன்று இருக்கும் விரதம் இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.

* வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி "கமலா" எனப்படும். கமலம் என்றாள் தாமரை. தாமரை மலரில் இருந்து அருள் தரும் அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால் நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.


ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும் தனித்தனி விரதமாக இருப்பதும்,-(வைகுண்ட ஏகாதசியில்) "மோட்ச ஏகாதசியில்" உண்ணாமல் அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.


வெள்ளி, 20 ஜனவரி, 2017

தை மாத வளர்பிறை புத்ரதா ஏகாதசி!

தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா ஏகாதசி’ எனப்படும்.

அதன் மகிமை: பத்ராவதி நகரின் அரசர் சுகேதுமான். அவர் மனைவி சம்பகா. ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!’ என வாழ்த்துவது வழக்கம். கலையாத கல்வி, குறை யாத வயது, ஒரு கபடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணி இலாத உடல், சலியாத மனது, அன்பு அகலாத மனைவி, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடைகள் வாராத கொடை, தொலையாத நிதியம், கோணாத கோல், ஒரு துன்பமும் இல்லாத வாழ்வு, தெய்வபக்தி- என்னும் இந்தப் பதினாறு பேறுகளில் ஒன்பதாவதான ‘புத்திரப்பேறு’ மட்டும், சுகேதுமானுக்கும் சம்ப காவுக்கும் வாய்க்கவில்லை. ‘பிள்ளை இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை’ என்ற சாஸ்திரத்தை உணர்ந்த மன்னர் வருந்தினார்.

இதன் காரணமாக மன வருத்தத்துடன் மன்னர் செய் யும் சிராத்தத்தை அவரின் முன்னோர்கள், துன்பத்துடன் ஏற்றார்கள். இதுவும் மன்னரின் மன வருத்தத்தை அதிகரிக்கச் செய்தது.

‘‘போன பிறவியில் நாம் செய்த தீவினைதான் இந்தப் பிறவியில் இவ்வாறு நம்மைப் படுத்துகிறது’’ என்று புலம்பிய மன்னர், அதை நீக்குவதற்காக யாகம்- ஹோமம் முதலானவற்றைச் செய்தார். பலன் இல்லை. மன்னர் மனம் கலங்கியது. பைத்தியம் பிடித்தவரைப் போலக் குதிரை மீது ஏறி விரைந்தார். ‘எங்கு போகிறோம்? எதற்காகப் போகிறோம்?’ என்பதெல்லாம் மன்னருக்குத் தெரியவில்லை.

பாய்ந்து ஓடிய குதிரை காட் டுக்குள் நுழைந்து அழகான ஒரு குளத்தின் அருகில் நின்றது. குதி ரையை விட்டுக் கீழே இறங்கினார் மன்னர். குளமும் அதைச் சுற்றியிருந்த ஆசிரமங்களும் அலைபாய்ந்த மன்னரின் மனதை அமைதிப்படுத்தின.

ஓர் ஆசிரமத்துக்குள் நுழைந் தார் அரசர். சூரியனைப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த முனிவர்களை வணங்கினார். ‘‘முனிவர்களே! தாங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்?’’ எனக் கேட்டார்.

‘‘மன்னா! நாங்கள் விச்வே தேவர்கள். மாசி மாதம் வரப் போவதை முன்னிட்டு, இங்கே நீராட வந்தோம். இன்று புத்ரதா ஏகாதசி. உபவாசம் இருந்து இன்று மகாவிஷ்ணுவை பூஜை செய்தால், உத்தமமான பிள்ளை பிறக்கும்!’’ என்று சொன்னார்கள் முனிவர்கள்.

அந்த பதிலிலேயே தன் மனக் கவலைக்கான மருந்து இருப்பதை மன்னர் உணர்ந்தார். முனிவர்களுடன் சேர்ந்து தானும் நீராடினார். உபவாசம் இருந்தார். முனிவர்களை வணங்கி நாடு திரும்பினார்.

ஏகாதசி விரதத்தின் பலனாக மன்னரின் மனைவிக்கு மணி வயிறு வாய்த்தது. பத்தாவது மாதத்தில் அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். மன்னர் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்.

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கு இணங்க, ‘‘இந்த நாட்டிலுள்ள அனைவரும் இந்த (புத்ரதா) ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும்!’’ என்று கட்டளையிட்டார் மன்னர். ‘‘என்னைப் போலவே என் மக் களும், குறை இல்லாமல் இருக்க வேண்டும்!’’ என்றும் கூறினார்.

நல்ல பிள்ளையை அளிக் கக் கூடிய விரதம் இது.


தை மாத தேய்பிறை ஸபலா ஏகாதசி!

ஸபலா ஏகாதசி!

ச ம்பாவதீ நகர மன்னர் மாஹிஷ்மதனுக்கு ஐந்து பிள்ளை கள். லும்பகன் என்பவன் மூத்த வன்; பாவங்களுக்கு எல்லாம் இருப்பிடம் ஆனவன் அவன். தந்தையின் பெரும்பாலான செல்வத்தை மது, மங்கையரிடம் கொண்ட ஆசைக்காகவே செலவு செய்தான் லும்பகன்.
                        
‘‘தெய்வமாவது ஒன்றாவது? ஸ்வாமிக்குப் பூஜை செய்கிறேன், அது இது என்று அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்!’’ என்று வாய்போன போக்கில் தெய்வத்தையும் அடியார்களையும் திட்டுவதே, லும்பக னின் தினசரி நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருந்தது.
                        
குடிமக்களை எல்லாம் குறையின்றிக் காத்து வந்த மன் னர், மைந்தனின் நடவடிக்கைகளால் மனம் நொந்தார். வேறு வழியற்ற நிலையில் காவலாளிகளை அழைத்து, ‘‘லும்பகனைக் கொண்டு போய்க் காட்டில் விட்டுவிடுங்கள்!’’ என்று உத்தரவிட்டார் மன்னர்.
                        
காட்டுக்குப் போயும் லும்பகன் திருந்தவில்லை. காட்டில் இருந்த படியே அவ்வப்போது நகரத்துக்குள் நுழைந்து திருட ஆரம்பித்தான். திருடுவதும் தப்புவதும் அவனுக்குக் கைவந்த கலையாகிவிட்டது.

ஒரு நாள்... தன் வழக்கப்படி திருடிக் கொண்டு லும்பகன் திரும்பும் நேரம். காவலர்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவனை அடித்துத் துவைத்தார்கள் காவலர்கள்.
                        
‘‘அடிக்காதீர்கள்! அடிக்காதீர் கள்! நான் மாஹிஷ்மத மன்னனின் மகன். என் பெயர் லும்பகன்!’’ எனக் கதறினான். அரசன் மகன் என்பதால் கருணையுடன் லும்பகனை விட்டுவிட்டனர் காவ லர்கள்.

அடிபட்ட லும்பகன் திருந்தி னான். ‘நல்லவேளை! அரசன் மகன் என்பதால் விட்டார்கள். இல்லா விட்டால்? நம்மைக் கொன் றிருப்பார்கள். இனிமேல் திருடக் கூடாது’ எனத் தீர்மானித்தான்.
மனம் திருந்திய லும்பகன் மரத்தடியிலேயே வசித்தான். காட் டில் கிடைத்த கனிகளையும், கிழங்குகளையும் உணவாகக் கொண்டான்.
                        
அடுத்தவர்களை அல்லல்படுத்தி வாழ்ந்து வந்தவனுக்கு, அந்த உணவு போதுமானதாக இல்லை. உடல் மெலியத் தொடங்கியது. குளிர் காலம் வந்தது. நன்கு வெயில் ஏறி, குளிர்போன பிறகே, வெளியே கிளம்பி உணவு தேடுவதை வழக்க மாகக் கொண்டான்.
                        
ஒரு நாள்... லும்பகனுக்கு ஏதும் கிடைக்கவில்லை. அந்தி சாயும் வரை அலைந்து திரிந்தும் ஒரு சில பழங்கள்தான் கிடைத்தன. மரத்தடிக்குத் திரும்பிய லும்பகன், இரவு முழுவதும் குளிராலும் பசியாலும் வாடினான். தூக்கம் வரவில்லை. கிடைத்த ஒரு சில பழங்களையும் பகவானுக்கே அர்ப்பணம் செய்தான்.

பொழுது விடிந்தது. ஆகா யத்தில் ஓர் அசரீரி ஒலித்து,
                        
‘‘லும்பகா! நேற்று ஸபலா ஏகாதசி. நீ தங்கியிருந்தது அரச மரத்தின் அடியில். இரவு முழுவதும் நீ தூங்கவில்லை. கிடைத்த பழங்களையும், பசி யோடு இருந்தும் நீ உண்ணவில்லை. பகவானுக்கு அர்ப் பணம் செய்தாய்! உன் பாவங்கள் அனைத்தும் பறந்தோடின. காட்டை விடு. நாடு திரும்பு. அரச பதவி உனக்குத்தான்!’’ என்றது.
                        
அசரீரி சொன்னது போல், லும்பகனின் எதிரில் அவன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், பட்டத்து யானையுடன் வந்தனர்.
                        
‘‘மன்னர் மறைந்து விட்டார். தாங்கள் வந்து தரணி ஆள வேண்டும்!’’ என்று வேண்டி, லும்பகனை பட்டத்து யானையின் மேல் ஏற்றிப் பரிவோடு அழைத்துப்போய், பட்டாபிஷேகம் நடத்தி வைத் தார்கள்.
நல்ல முறையில் நாட்டை நிர்வாகம் செய்த லும்பகன் எதிர்காலத்தில் பிள்ளையிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு வைகுண்டம் அடைந்தான்.
                  
தை மாதம் வரும் தேய்பிறை ஏகாதசியின் மகிமையை விளக்கும் லும்பகன் சரிதம் இது.