சனி, 28 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு!

                           பொ ங்கலை முன் னிட்டு, ஜல்லிக்கட்டு என் னும் வீர விளையாட்டு பெரும்பாலான கிரா மங்களில் நடைபெறு கிறது.                         

தமிழ்நாட்டுக்கே உரித்தான வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று. இது, கொல்லேறு தழு வுதல், மஞ்சு விரட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப் படுகிறது.
                        
‘‘இந்தக் காளையை அடக்கு பவனுக்குத்தான் என் மகள் மாலை யிடுவாள்!’’ என்று பெண்ணைப் பெற்றவர் சொல்ல, அவர் வீட்டுக் காளை சீறிப் பாய்ந்து கிளம்பும். ஓரளவு அனைவருக்குமே தெரிந்தது தான் இது.
விவரம் தெரிந்த நாள் முதல் பெண் ஒருத்தி, ஒரு காளைக் கன்றைச் செல்லமாக வளர்த்து வருவாள். அவளுக்குத் திருமணப் பருவம் வரும்போது, கன்று வளர்ந்து காளை மாடாக கொழுகொழுவென்று இருக்கும். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர், அந்தக் காளை மாட்டை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
                        
ஜல்லிக்கட்டு என்பது வெறும் வீர விளையாட்டு மட்டுமல்ல. பார்ப்பவர் களுக்குக்கூட உற்சாகத் தையும் மன ஊக்கத்தையும் தரும் நிகழ்ச்சி அது.
                        
ஜல்லிக்கட்டில் கலந்து கொள் ளும் மாடுகளை முன்னாலேயே தயார் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள், கூராக இருந்தாலும், இன்னும் அழகாகச் சீவி எண் ணெய் தடவிப் பக்குவம் செய் யப்பட்டு வண்ணம் பூசப்படும். கொம்புகளில் கூரான கொப்பிகள் பொருத்தப்படும். இந்தக் கொப்பி கள் அவரவர் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு என்னும் ஏதாவது ஓர் உலோகத்தில் அமைந்து இருக்கும்.
                        
மாடுகளுக்குச் சந்தனம் பூசி, மருக்கொழுந்து மாலை போட்டு, கொம்பில் சிறு (புது) துண்டைச் சுற்றி வைப்பார்கள். கழுத்தில் புதிய ஒரு சிவப்புத் துணியைக் கட்டி விடுவார்கள். அவற்றில் பணத்தையோ அல்லது பொரு ளையோ வைத்துக் கட்டுவதும் உண்டு.
                        
பளபளவென்ற கொம்புகளுடனும் கழுத்தில் மாலை களுமாகக் கம்பீரத்து டன் ஜல்லிக்கட்டுக் காளைகள் போராட் டக் களத்தில் நுழை யும். ஜல்லிக்கட்டு நடை பெறும் இடத்தின் நுழைவாயில் ‘வாடி வாசல்’ எனப்படும்.
                        
அங்கே ஊர்ப் பெரியவரான நாட் டாண்மைக்காரர் மாடுகளுக்கு மாலை போட்டு மரியாதை செய்வார். அதற்கு முன், ஊரில் உள்ள அம்மன் கோயில்களில் எல்லாம் ‘செவ்வாய் சார்த்துதல்’ என்ற பெயரில் பூஜை நடக்கும்.
                        
மாடுகளுக்கு மாலை, மரியாதை முடிந்தவுடன் அவற்றின் கயிறுகள் அவிழ்க்கப்பட்டுக் களத்தில் இறக்கப்படும். முதன்முதலில் களத்தில் நுழைவது கோயில் மாடுதான். அதை யாரும் பிடிக்க மாட்டார்கள்.
பிறகு, நெற்றிப் பட்டயத்தில் பணம், கழுத்தில் பணம், கொம்பில் பணம் என விதவிதமாகக் காளை கள் களத்தில் பாயும்.
                        
ஜல்லிக்கட்டுக் காளைகள் களத்தில் இறங்கியதும் அவற் றுக்கு வேகத்தையும் வெறியையும் ஊட்டுவதற்காகத் தாரை, தப் பட்டை, ஊதுகொம்பு முதலியவை முழங்கும்.
                        
ஒவ்வொரு காளையைப் பற்றிய தகவல்களும் சொல்லப்படும். ‘இது இத்தனை போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற போட்டிகள் இத்தனை; இத்தனை பேரைக் குத்திக் கிழித்திருக்கிறது’ போன்ற தகவல்கள் எல்லாம் அதில் இடம்பெறும்.
                        
சீறிப் பாயும் இந்தக் காளைகளின் மீது, வாலிபக் காளைகள் உயிரையும் பொருட்படுத்தாமல் பாய்வார்கள்.
                        
மாடுகளின் கழுத்தில் உள்ள துணியை உருவி எடுக்க முயற்சிப்பார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது அவரவர் பலத்தையும், நேரத்தை அனுசரித்து இயங்கும் திறமையையும் பொறுத் தது. வாட்டமின்றி வாகாக வளைய வரும் காளைகள், களத்தில் இருக்கும் வாலிபர்களைத் தூக்கிப் பல முறை கொம்பினால் வீசிப் பந்தாடிவிட்டு ஓடும்.
                        
ஓடாமல் ஒரே இடத்தில் இருந்தபடி, ‘வா! வந்து என்னைப் பிடி! பார்க்கிறேன்!’ என்று எதிர் சவால் விட்டுப் பாய்ந்து விரட்டும் காளைகளும் உண்டு. இவற்றுக்கு ‘நின்று குத்திக் காளை’ என்று பெயர்.
காளையை அடக்கி அதன் கொம்பிலோ அல்லது கழுத்திலோ உள்ள துண்டையும் பணத்தையும் எடுத்துவிட்டால், அது காளையை அடக்கிய வீரனுக்கே சொந்தம். பார்வையாளர்களிடம் இருந்தும் பரிசு கிடைக்கும்.
                        
மாடுகளின் திமிலைக் கெட் டியாகப் பிடித்தபடி, குறிப்பிட்ட தூரம் வரை அவற்றுடன் சேர்ந்து ஓடுபவர்கள் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படு வார்கள். தங்கள் கால்கள் தரையில் பட்டும் படாமலும், மாட்டின் மீது உரசியபடியே குறிப்பிட்ட தூரம் ஓடினாலும் அதுவும் வெற்றி பெற்றதாகவே கருதப்படும்.
                        
யாராலும் அடக்க முடியாமல் களத்தையே கலக்கி வெற்றிபெறும் காளைகள், சில நேரங்களில் அங்கேயே ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுவதும் உண்டு.
 
                        
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக