வியாழன், 19 ஜனவரி, 2017

வானவெளியில் நட்சத்திரங்களின் தோற்றம்!

அஸ்வினி என்பது மூன்று நட்சத்திரங்களாக, குதிரைமுகம் போன்ற உருவத்தில் விளங்குவதாகும். 

இவ்வாறே பரணியும் மூன்று நட்சத்
திரங்களாக (முக்கோணமாக) யோனி வடிவத்தில் தோன்றும்.

கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரங்களாக நாவிதனின் கத்தி வடிவத்திலும்; ரோகிணி என்பது ஐந்து நட்சத்திரங்களாக வண்டி உருவத்திலும்; மிருகசீரிடம் என்பது மூன்று நட்சத்திரங்களாக மானின் முகம் போன்ற உருவத்திலும்; திருவாதிரை ஒரே நட்சத்திரமாக ஓசைதரும் மணி உருவத்திலும்; புனர்பூசமானது. நான்கு நட்சத்திரங்களாக வீடு உருவத்திலும் காட்சிதரும்.

பூசம் என்பது மூன்று நட்சத்திரங்களாக அம்பு வடிவத்திலும்; ஆயில்யம் ஐந்து நட்சத்திரங்களாக சக்கர உருவத்திலும்; மகம் ஐந்து நட்சத்திரங்களாக வீடு உருவத்திலும்; பூரம் இரண்டு நட்சத்திரங்களாக கட்டில் உருவத்திலும்; உத்திரம் இரண்டு நட்சத்திரங்களாக படுக்கை உருவத்திலும்; ஹஸ்தம் ஐந்து நட்சத்திரங்களாக மனித உள்ளங்கை வடிவத்திலும்; சித்திரை என்பது ஒரு நட்சத்திரமாக முத்து உருவத்திலும்; சுவாதி ஒரு நட்சத்திரமாக பவழம் எனும் ரத்தின உருவத்திலும் தென்படும்.

விசாகம் என்பது நான்கு நட்சத்திரங்களாக நிலைவாயில் உருவத்திலும்; அனுஷம் நான்கு நட்சத்திரங்களாக அன்னபலி உருண்டை வடிவத்திலும்; கேட்டை மூன்று நட்சத்திரங்களாக வட்டமாக குண்டல உருவிலும்; மூலம் பதினோரு நட்சத்திரங்களாக சிங்கவால் வடிவில் அமைந்ததாயும்; பூராடம் இரு நட்சத்திரங்களாக யானையின் தந்த உருவத்திலும்; உத்திராடம் இரு நட்சத்திரங்களாக கட்டில் உருவத்திலும் இருக்கும்.

திருவோணம் மூன்று நட்சத்திரங்களாக விஷ்ணுவின் பாத உருவத்திலும்; அவிட்டம் நான்கு நட்சத்திரங்களாக மத்தள வடிவிலும்; சதயம் நூறு எண்ணிக்கையில், நட்சத்திரக்கூட்டமாய் வட்டவடிவிலும்; பூரட்டாதி இரு நட்சத்திரங்களாக கட்டில் உருவிலும்; உத்திரட்டாதி இரு நட்சத்திரங்களாக இரட்டை வடிவமாகவும்; ரேவதி முப்பத்திரண்டு நட்சத்திரக் கூட்டங்களாக மங்களவாத்திய உருவிலும் வானில் வெளிப்பட்டு விளங்கும்.

(உத்திராடம், திருவோணம் ஆகியவற்றுக்கு இடையிலுள்ளதாகச் சொல்லப் படும் அபிஜித் என்பது மூன்று நட்சத்திரங்களுடன் முக்கோண வடிவம் கொண்டது).



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக