சனி, 28 ஜனவரி, 2017

தை கிருத்திகை!


தை கிருத்திகை!
உ த்தராயண புண்ணிய காலத்தில் வரும் (ஆடிக் கிருத்திகையைப் போல்) தை மாதக் கிருத்திகை மிகவும் விசேஷம். ‘‘தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். முக்தி யையும் கொடுப்பேன்!’’ என்று சிவபெருமானே வாக்குறுதி அளித் திருக்கிறார்.


வீரபத்திர விரதம்!
ம ங்கலவாரம் எனப் படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் கடைப் பிடிக்க வேண்டிய விரதம் இது. வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது நல்லது. வீரபத்திரரைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதம் நீங்காத தடைகளை எல்லாம் நீக்கும்.

பைரவ விரதம்!                             
தை மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை குறித்துச் செய்யப்படும் விரதம் இது. செவ்வாய்க் கிழமையை மங்கல வாரம் என்று அழைப்பார்கள். செக்கச் செவேல் என்று சிவந்த ஒளி வீசுவதால் இந்தக் கிரகம் ‘செவ்வாய்’ எனப் பெயர் பெற்றது. சித்திரை மாத பரணி நட்சத்திரமும், ஐப்பசி மாத பரணி நட்சத்திரமும் பைரவ விரதத்துக்கு உரிய நாட்களாகும்.
 

                        
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக