சனி, 28 ஜனவரி, 2017

தைப்பூசம்!


சி வபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புதமான திருநாள் இது.
தைப்பூசம், வியாழக்கிழமை, மத்தியான வேளை... ஆயிரம் முகங்களை உடைய பானுகம்பர், ஆயிரம் சங்குகளை ஊதினார். ஆயிரம் தோள்களை உடைய வாணாசுரன் குடமுழவு என்னும் வாத்தியத்தை இசைத்தான். மேலும், ஐந்து வகையான துந்துபி வாத்தியங்கள் ஒலிக்க, கந்தர்வர்கள் கீத ஒலி எழுப்ப, வேத ஒலி முழங்கிட சிவபெருமான் அம்பிகையோடு ஆனந்தத் தாண்டவம் ஆடியருளி னார்.

வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, திருவுடை அந்தணர் மூவாயிரம் பேர் என எல்லோரும் அந்த ஆனந்த நடனத்தை தரிசித்தார்கள். மெய் சிலிர்த்தது. உள்ளம் உருகியது, ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
                        
‘‘சிவபெருமானே! இங்கேயே உமாதேவியருடன் இன்று முதல் எப்போதும் இந்த ஆனந்தத் தாண்டவத்தை எல்லோரும் தரிசிக்கும்படியாக அருள் புரிய வேண்டும்’’ என வேண்டினார் பதஞ்சலி முனிவர்.

                        
சிவபெருமான் உடன்பட்டார். அதன் பின் சிவபெருமானின் உத்தரவுப்படி அங்கேயே பொன்னாலான ஒரு சபை உண்டாக்கப்பட்டது. அன்று முதல் அந்தக் கனக சபையில் (சிதம்பரத்தில்) வியாக்ரபாதர், பதஞ்சலி முதலான எல்லோரும் வணங்க, அம்பிகையுடன் தன் திருநடனக் காட்சியை எப்போதும் தரிசிக்கும்படி தந்தருளிக் கொண்டு இருக்கிறார் சிவன்.

பூச நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழ பகவான். ஞான வடிவம் இவர். பூச நட் சத்திரத்தன்று நாம் செய்யும் வழிபாடுகளால், தேவகுருவின் அருளைப் பரிபூரணமாகப் பெற லாம். அதுவும் புண்ணிய காலமான தைப்பூசத்தன்று செய்யும் வழிபாடு மிக மிக விசேஷம்!
                        
தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவிடைமருதூரில் தைப்பூசம் விசேஷம். இங்கு கோயிலில் உள்ள சித்த தீர்த்தத்தில் மூழ்கி, வில்வ மரத்தை வலம் வந்து இடை மருதீசனைத் தரிசித்தால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
                        
திருநெல்வேலியில்- அம் பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூரில் தைப் பூசத்தன்று தாமிரபரணியில் நீராடி திருப்புடைமருதூர் ஈசனைத் தரிசிப்பது விசேஷம். அளவிட முடியாத புண்ணியம் கிடைக்கும். மிகவும் அமைதியான தலம் இது. அமைதியைத் தரும் தலமும் இது.
                        
தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படும். இது ஏன் என்பதற்கு ஒரு தகவல்:
                        
சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் துயரத் தில் துடித்தார்கள். அவர் களின் துயரங்களை தேவ குருவான வியாழ பகவான், முருகப் பெருமானிடம் காரண - காரியங்களுடன் விவரித்துச் சொன்னார்.

குறை கேட்ட குமரன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களின் துயரங்களைத் தீர்த்தார்.

தேவகுருவான வியாழ பகவான், இப்படி தன் சீடர்களின் துயரங்களை முருகனிடம் எடுத்துரைத்தது தைப்பூசம் அன்றுதான். அதனால்தான் நம் குறைகளையும் தீர்ப்பதற்காக முருகப் பெருமானிடம், தைப்பூசத் திருநாளில் விசேஷமான கோரிக்கைகளை வைக்கிறோம் என்று சொல்லப்படுகிறது.
                        
இன்னொரு தகவலும் உண்டு. அது:

பூசம் நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழ பகவான். அந்த குருவுக்கும் குருவாக இருப்பவர் குமர குருபரனான முருகப்பெருமான். அதனால்தான் உத்தராயணம் பிறந்ததும் புண்ணிய காலமான தை மாதத்திய பூச நட்சத் திரத்தன்று முருகனை வழிபடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக