புதன், 27 செப்டம்பர், 2017

கார்த்திகை (சுக்ல பட்ச) நந்த சப்தமி!

நந்த சப்தமி
கார்த்திகை சுக்ல பட்ச  மாத வளர்பிறை சப்தமி திதியை நந்த சப்தமி என்று வழிபடுவர்.
அன்றைய தினம் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சிறப்பு.
பசுவின் உடலில் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். "உபநிடதங்கள் அனைத்தும் பசுக்கள்; அதை மேய்ப்பவனும் கறப்பவனும் கிருஷ்ணன்' என்று பகவத்கீதை கூறுகிறது.
பசுவுக்கு "ரிக்வேதம்' பின்பக்கமாகும். யஜுர்
வேதம் நடுப்பகுதி. சாம வேதம் முகமும், கழுத்துமாகும். இஷ்டம், பூரிதம் ஆகியன இருகொம்புகள். பசுவின் ரோமங்கள் சகல சூக்தங்கள். சாந்தி கர்மாவும், புஷ்டி கர்மாவும் கோமயம். வேதம் வகுத்த நான்கு வர்ணங்கள் பசுவின் பாதங்கள். ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், ஹந்த் என்ற நான்கும் பால்சுரக்கும் தனங்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டிப் பாற்கடலைக் கடையும்போது பல அரிய பொருட்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று காமதேனு என்கிறது புராணம். காமதேனுவின் வாரிசாக பல பசுக்கள் பூவுலகில் தோன்றின. அவற்றுள் சிறப்புமிக்க நால்வகை தெய்வப் பசுக்களில் சுஷுதையை இந்திரனுக்கும், கபிலையை எமனுக்கும், ரோஹினியை வருணனுக்கும், காமதேனுவை குபேரனுக்கும் வழங்கினாராம்
மகாவிஷ்ணு.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதால் பசுவை எங்கு கண்டாலும், அதனைத் தொட்டு வணங்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது! குறிப்பாக பசுவின் பின்புறம் சாணம் வெளிப்படும் பகுதியில் தொட்டு வணங்கினால் மகாலட்சுமியின் அருள்கிட்டும். அந்தப் பகுதியில்தான் மகாலட்சுமி வாசம் செய்வதாக வேதங்கள் கூறுகின்றன.
பசுவிடமிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், சாணம், கோமயம் இவை  ஐந்துமே "பஞ்ச கவ்யம்' எனப்படுகிறது. ஆனால் ஒரே பசுவிடமிருந்து பஞ்ச கவ்யம் தயாரிக்கக்கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
"ஆன்-ஐந்து' என்பது பஞ்ச கவ்யத்திற்கு இணையான தமிழ்ச்சொல். இந்தச் சொல்லே தேவாரத் திருமுறைகளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
பசுவின்பால் ஐந்து பங்கு, பசுவின் தயிர் மூன்று பங்கு, நெய் இரண்டு பங்கு, பசுவின் சிறுநீர் ஒரு பங்கு, பசுஞ்சாணம் கைப்பெருவிரல் அளவில் பாதி சேர்த்து ஒரு வெள்ளிப்பாத்திரம் அல்லது தாமிரப் பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, அதற்குரிய மந்திரம் சொல்லிப் பூஜை செய்தபின், அந்தப் பஞ்ச கவ்யத்தின் ஐந்து பொருட்களும் ஒவ்வொரு தேவதைக்கு உரித்தாகிறது. கோஜலத்
துக்கு வருணனும், சாணத்துக்கு அக்கினியும், பாலுக்கு சந்திரனும், தயிருக்கு, வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள் என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன.
மின்னும் செந்நிறப் பசுவிடமிருந்து கோநீரையும், வெள்ளைப் பசுவிட மிருந்து சாணத்தையும், பொன்னிறப் பசுவிடமிருந்து பாலையும், நீலநிறப் பசுவினிடமிருந்து தயிரினையும், கருநிறப் பசுவினிடமிருந்து நெய்யினையும் கொள்ளின் நலமெனப்படும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.


பஞ்ச கவ்யம் தயாரிக்கும்பொழுது காயத்ரி மந்திரத்தைச் சொல்லி கோநீரையும், "கந்தத்வாராம்' என்ற மந்திரத்தால் பசுஞ்சாணத்தையும், "ஆபயாயஸ்ய' என்று தொடங்கும் மந்திரத்தால் பசும்பாலையும், "ததிக்ராப்னோ'  என்று தொடங்கும் மந்திரத்
தால் பசுந்தயிரையும் "சூக்ரமஸி' என்று தொடங்கும் மந்திரத்தால் பசு நெய்யையும், "தேவ ஸ்யாத்வா' என்ற மந்திரத்தால் தத்துவதீர்த்தத்தையும் மந்திரித்து சேர்த்து தயாரிப்பதே மிகவும் சக்திவாய்ந்த பஞ்ச கவ்யம் எனப்படுகிறது.
இந்தப் பஞ்ச கவ்யத்தை தினமும் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பூஜித்து அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்புசக்தி கூடும், உடல் வளம்பெறும்.


பஞ்ச கவ்யம்  சிவ வழிபாட்டிலும், விஷ்ணு வழிபாட்டிலும் இடம்பெறுகிறது. இறைவனுக்கு அபிஷேகிக்கப்பட்ட பஞ்ச கவ்ய பிரசாதத்தை பக்தியுடன் அருந்தினால் நோய்
நொடியின்றி நீண்டகாலம் வாழலாம்.
இத்தகைய பஞ்ச கவ்யத்தைத் தரும் கோமாதாவான பசுவை வழிபடுவதால் தோஷங்கள் விலகும். பசுஞ் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு நோய் எதிர்ப்பு சக்திகளைக் கொடுக்கும் வல்லமை படைத்தது.
கயிலையில் வீற்றிருக்கும் நந்திதேவருடன் ஐந்து பசுக்கள் வாழ்கின்றன. நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை,, சுமலை என்னும் அந்த பசுக்களின் வழியில் வந்து பூமியில் தோன்றின இப்போது வாழும் பசுக்கள். இந்தப் பசுக்களின் சாணத்தால் பங்குனி மாதத்தில் சிவாகமத்தில் அருளியபடி அக்கினியில் மந்திரம் சொல்லி பஸ்பமாக்குவது "கற்பவிபூதி' என்பர்.


நந்தை என்னும் பசு கருமை இல்லாத பொன்னிறம் கொண்டது. இதன்மூலம் கிடைக்கும் சாணத்திலிருந்து தயாரிப்பது விபூதியாகும். பத்திரை எனும் பசு கருமை நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது பசிதமாகும். சுரபி எனும் வெண்ணிறப் பசுவிடமிருந்து கிடைப்பது பசுமம் ஆகும். சுசீலை எனும் பசு புகை நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது சாரம் எனப்படும். சுமலை என்னும் பசு செந்நிறமுடையது. இதன்மூலம் கிடைப்பது இரட்சை ஆகும்.
சித்திரை மாதத்தில் பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்லும் இடங்களில் உலர்ந்து கிடக்கும் பசுவின் சாணத்தைத் தூளாக்கி, விதிமுறைப்படி அக்கினியில் அதற்குரிய மந்திரம் ஜெபித்து புடமிட்டுத் தயாரிப்பது அநுகற்ப விபூதியாகும். காட்டில் இயற்கையால் ஏற்பட்ட அக்னியில் உண்டாக்கிய சாம்பலை எடுத்து, பஞ்ச கவ்யம் விட்டு மந்திரங்கள் ஜெபித்து மீண்டும் அக்னியில் புடமிட்டு எடுப்பது உபகற்ப விபூதியாகும். முறைப்படி தயாரிக்கப்பட்ட விபூதியை நெற்றியிலும் உடலிலும் மந்திரம் ஜபித்து அணிந்தால் நோய்நொடியின்றி ஆரோக்கிய
மாக வாழலாம் என்று வேதங்கள் கூறுகின்றன.
பல மகத்தான சக்திகளைக்கொண்ட கோமாதவான பசுவை அதற்குரிய நாளான நந்த சப்தமியன்று பூஜித்தால் கூடுதல் பலன்கள் பெற்று வளமுடன் வாழலாம். பசுவை வழிபட்டபின், அதற்கு ஆகாரமாக ஒரு கைப்பிடி புல், சிறிதளவு அகத்திக்கீரை, வாழைப்பழங்கள் கொடுப்பது மிகவும் நல்லது.



 

வேண்டுவன அருளும் காமதேனு!

"ஸர்வ காமதுகே தேவி
ஸர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி ஸ்ரேஷ்டே
தேவி துப்யம் நமோஸ்துதே.'

"எல்லாருடைய விருப்பங் களையும் பூர்த்தி செய்பவள்; எல்லா புண்ணிய நதிகளின் தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவள்; மங்கள கரமானவள்; சிறப்புவாய்ந்த காமதேனுவே உனக்கு நமஸ்காரம் (வணக்கம்)' என்பது இந்த மந்திரத்தின் பொருளாகும். மனிதப்பிறவியை எப்படி உயர்வாகச் சொல்கிறோமோ அப்படித்தான் பசுவின் பிறவியும் உயர்வானது. தெய்வ லோகத்தின் தெய்வீகப் பசுவை (காமதேனு) வணங்குவதன்மூலம் நாம் வேண்டிய வளங்களைப் பெறலாம். மேலும் எல்லாவிதமான தோஷங்களும் பாவங்களும் நீங்கி மங்களம் உண்டாகும்.

தேவாசுரர்கள் அமிர்தம் பெறவேண்டி பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அரிய பொருட்கள் பல வெளிவந்தன. அதில் வெளிப்பட்டது தான் காமதேனு
. கேட்பவர்களுக் குக் கேட்ட வரத்தைத் தரும் அபூர்வ சக்தி காமதேனுவுக்கு உண்டு.உடலால் வெள்ளைநிறப் பசுவின் தோற்றமும், முகம், மார்புப் பகுதிகள் பெண் உருவத் தோற்றமும், பின்புறம் மயில் போன்ற அழகிய தோகையும் இறக்கையும் கொண்டு, ஒரு புதுவிதமான அற்புதத் தோற்றத்தைக் கொண்டதுதான் காமதேனு. தேவலோகத்தில் இந்த தெய்வீகப் பசு வாழ்ந்து வந்தது. இதற்கு சுரபி என்னும் பெயரும் உண்டு.

காமதேனுவைப் பற்றி வியாச பகவானால்
உபதேசிக்கப்பட்ட புராணங்களிலும், இதிகாசங் களிலும் பல செய்திகள், குறிப்புகள் உள்ளன. அதேபோன்று வேதங்களிலும் ஸ்ரீமத் தேவி பாகவதத்திலும் "பசு' என்கிற பெயரில் பல குறிப்புகளும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. ஐந்தாவது வேதமாக இந்துக்களால் போற்றப்படும் பகவத்கீதையில் பசுவான் கிருஷ்ணர் காமதேனுவைப் பற்றி சொல்லும்போது "காமதுக்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸஹயக்ஞா: பர்ஜா: ஸ்ருஷ்ட்வா
புரோவாச ப்ரஜாபதி
அனேன ப்ரஸவி ஷ்யத்வமேஷ
வோ அஸ்த்ஷிஷ்ட காமதுக்'.
(கீதை 3.10)

(படைக்கும் கடவுளாகப் போற்றப் படும் பிரம்மதேவன் முதலில் மனித உயிர்களைப் படைத்துவிட்டு அவர் களிடம், "உங்களின் குலம் தழைக்கும். உங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் இந்திரனின் பசுவான காமதேனு (காமதுக்) மூலம் பெறுவீர்கள்' என்றார்.

அதேபோன்று மற்றொரு இடத்தில் பகவான் கிருஷ்ணர்-"ஆயுதாநாம் அஹம் வஜ்ரம்
தேநூநாம் அஸ்மி காமதுக்
ப்ரஜந: ச அஸ்மி கந்தர்ப்ப
ஸ்ர்ப்பாணாம் அஸ்மி வாசுகி'
(கீதை: 10-28)என்கிறார். இதில் "பசுக்களில் நான் (பகவான் கிருஷ்ணன்) காமதேனுவாக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
தன்னை வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தரும் சக்தியும் ஆற்றலும் பெற்ற பசுக்களின் தாயான காம தேனுவை அதற்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் நிச்சயம் பலன் தரும்.
"ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ர்யை ச தீமஹி
தந்நோ தேனு ப்ரசோதயாத்.'

காமதேனுவாக நினைத்து பசுவை வெள்ளிக்கிழமையன்று  கன்றுடன் சேர்த்து வழிபடுவது சிறப்பு.







செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்!

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்

நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு.


சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.

வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.




சமித்து குச்சிகளும் பலன்களும்:

அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.

நொச்சி : காரியத்தடை விலகும்.
வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும்.
வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.
துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.
சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.
பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.
அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.
செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்

நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.
வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.
தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.
கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.
ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.
இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.
தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.
சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.
மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.
நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.
மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.
 
 
 

போற்றித்திருத்தாண்டகம்!

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம்
தேவாரத் திருப்பதிகம்

 

6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம்
 

551வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.1
552பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.2
553மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடு முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.3
554வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.4
555ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.5
556சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.6
557பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.7
558இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான ஒருவா போற்றி
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.8
559மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.9
560நெடிய விசும்போடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
6.55.10
561உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி                   
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

 
இத்தலம் வட நாட்டிலுள்ளது;
சுவாமிபெயர் - கைலாயநாதர்,
தேவியார் - பார்வதியம்மை.
 

திருச்சிற்றம்பலம் 




 

நாராயணா என்னும் நாமம்!

நாலாயிர திவ்ய பிரபந்தம்



 திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
947வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
      பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
      அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
      உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்             (1)
  
948ஆவியே அமுதே என நினைந்து உருகி
      அவர் அவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும்
      பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்
      சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்             (2)
  
949சேமமே வேண்டி தீவினை பெருக்கி
      தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
      ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள்
      தம் அடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம் (3)
  
950வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி
      வேல்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்
      என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட
      பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்             (4)
  
951கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்
      கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்
      சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்
      உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்
      - நாராயணா என்னும் நாமம்             (5)
  
952எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
      எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
      அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
      மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்             (6)
  
953இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்
      இன்னது ஓர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்
      கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
      சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்
      - நாராயணா என்னும் நாமம்             (7)
  
954கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
      கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
      பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்
      செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்
      - நாராயணா என்னும் நாமம்             (8)
  
955குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
      படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
      அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
      தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்             (9)
  
956மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்
      மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை
      இவை கொண்டு சிக்கென தொண்டீர்
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்
      துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்
நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு
      - நாராயணா என்னும் நாமம்             (10)




 
  

திருப்பல்லாண்டு!

திருப்பல்லாண்டு பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும்.

இது 12 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரையுள்ள பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும்.


காப்பு        குறள்வெண்செந்துறை

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு (1)


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு*
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2)


வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மிண்*
கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்*
ஏழாட்காலும் பழிபபிலோம் நாங்கள் இராக்கதர்வாழ் இலங்கை*
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாணடு கூறுதுமே.* (3)


ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து*
கூடுமனமுடையீர் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ*
நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணா வென்று*
பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாணடு கூறுமினே. (4)


அண்டக்குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை*
இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் றனக்கு*
தொண்டைக்குலத்தில் உள்ளீர்!வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி*
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாணடு பல்லாயிரத்தாண்டென்மின. (5)


எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை*
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே. (6)

 
தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின்*
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப்பொருபடை வாணனை ஆயிரம்தோளும் பொழிகுருதி
பாய*சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (7)


நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல*
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. (8)


உடுத்துக் களைந்தநின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில்*
படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (9)


எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே* அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற் றுய்ந்ததுகாண்*
செந்நாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனித்து *ஐந்தலைய
பைநாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. (10)


அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்கோன்* அபிமான துங்கன்
செல்வனைபபோலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்*
நல்லவகையால் ந்மோநாராயணா வெனறு நாமம் பலபரவி*
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. (11)


பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச்* சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விரும்பியசொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று*
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே. (12)


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!




 

இசை உலகின் பட்டத்து ராணி!

இசை உலகின் பட்டத்து ராணிக்கு  செப்டம்பர் 16 பிறந்த நாள்.

திருவேங்கடமுடையானை தினமும் பள்ளியெழுப்பும் பாக்கியம் பெற்றவர். தன் தெய்வீகக் குரலால் உலகத்துக்கே மகிழ்ச்சி உண்டாக்கியவர்.
 
 
”குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்று மனம் உருகி பாடும்போது உண்மையிலேயே அவருக்கு குறை ஒன்றும் இல்லை என்பதை அறியலாம்.
 
 
அதிலும் “ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா” எனும்போது அவருடைய முகபாவனையில் ஒரு கம்பீரம் தெரியும், “எனக்கு ஒரு குறையும் இல்லை கண்ணா, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று சொல்வது போல் இருக்கும்.
 

அவரின் இசையை மட்டுமே கேட்டு மயங்கியதை தவிர வேறொன்றும்  தெரியாது!
 
 
அம்மாவின் பாதங்களை  நமஸ்கரிக்கிறேன். குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் அருள் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா.