புதன், 29 மார்ச், 2017

மங்களம் அருளும் பங்குனி உத்திரம்!


பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும்.

12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.  திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும்.  

உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன.


புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது. பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 




சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். 

அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். 


ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான்.


ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார். 


மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்கு உத்திரத்தன்றுதான்.


மோகினிசுதன் ஐயப்பன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள். 

நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது; மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான். 


அன்னை மகாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். 


அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது. 


கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடைக்காது. 

அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை. 


இந்நாளில் மற்ற வைணவ ஆலயங்களிலும் மணக்கோலத்தில் தாயாரும் பெருமாளும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார். 


காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள், 


மதுரையைப்போலவே.தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்-கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன. 

ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன. 


அதுபோல திருமழபாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.

இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும்; பூரணா-பூஷ்பாகலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது. 


வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய ராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போதுதான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசன கவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்தபோது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். 

அன்றிலிருந்து ராமானுஜர் ‘உடையவர்’ என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார். 


கோதை பிறந்த ஊராம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மகிழ்ந்திருக்கும் வேளையில், 

கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர் 
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்  நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர் என்று துதித்து மகிழ்வோம். 


மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோயில்  பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காக குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே. 


பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான். 

ஸ்ரீ ராம நவமி!


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமு மின்றித் தீருமே
இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்'' 

காவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். 
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், 

பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே...!
ஸஹஸ்ர நாமதத் துல்யம் ராம நாம வராநநே

ஒரு சமயம் பார்வதி அதி விசேஷமான மந்திரத்தை தமக்கு உபதேசிக்க வேண்டும் என்று கேட்டாளாம். சிவபெருமான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பார்வதிக்கு உபதேசித்தார்.

ஒரு சமயம் இருவரும் அவசரமாக வெளியே கிளம்பினார்கள். பார்வதியால் முழு பூஜையைச் செய்ய இயலவில்லை. மேற்கூறிய ``ஸ்ரீ ராம ராமேதி'' என்ற மந்திரத்தை மட்டும் கூறிவிட்டுப் புறப்பட்டாளாம்.

இந்த மந்திரத்தை மட்டும் கூறினால் கூட விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பூஜித்த பலன் கிடைக்கும்.

விரதம் இருக்கும் முறை :

ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.

அன்றைய தினம் ராமர் கோவில் களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். 

வீடுகளில் பாயசம், வடை அத்துடன் நீர் மோர், பானகம், பயத்தம் பருப்பை ஊற வைத்து அதில் வெள்ளரிக்காய், மாங்காய் போட்டுக் கலந்து கடுகு தாளித்து விநியோகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

நல்ல கணவர், குழந்தைகள் இரண்டையுமே இந்த விரதம் தந்துவிடும்.

பஞ்சபூதங்களுக்கான மூலிகைகள்!



நிலம் ........ -- அருகம்புல் .
நீர் .............._ மாஇலை .
நெருப்பு .... -- வாழை .
காற்று .......-- வேப்பிலை .
ஆகாயம் ..-- வெற்றிலை

ஐஸ்வர்யம் அருளும் சங்கு!

சங்கு பொதுவாகவே லக்ஷ்மியின் அம்சத்தை தாங்கியிருப்பது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப் படுகிறது. எந்த இனத்து சங்காக இருந்தாலும் அவற்றிலிரு வகைகள் உண்டு. இடம்புரி வலம்புரி என்று அவற்றைக கூறுவார்கள்.

இறை வழிபாட்டில்  சங்குக்கு முக்கிய பங்கு உண்டு . தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது . தருமர் வைத்துள்ள சங்கு , ' அனந்த விஜயம் ' என்றும் , அர்ஜுனர் வைத்திருக்கும் சங்கு, ' தேவதத்தம் ' என்றும் , பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , ' மகாசங்கம் ' என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, ' சுகோஷம் ' என்றும் , சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, ' மணிபுஷ்பகம் ' என்றும் அழைக்கப்படுகிறது . ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் ' பாஞ்சஜன்யம் ' என்ற சங்கு, இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது .

சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையும், அரிய வகையான வலம்புரிச் சங்கும் தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை . இந்த பதினாறு வகை சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும் .


சாதாரணமாக உள்ள சங்கில் ...
அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள்.

சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது .இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது . இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர்.

பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர். வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. சங்கு ஊதுவதால் மூலாதார சக்கரம் நன்றாக செயலாக்கம் பெறுகிறது .மேலும் மூச்சு சீராகவும் ,நுரையீரல் செயல் பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது . சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுப்படுகிறது இதனால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகிறது.

ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும். மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஷ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார்.

சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, ஐஸ்வர்யம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது.


அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர்.

கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம். 


 

15 திதிகளும் அவற்றிற்குரிய தெய்வங்களும்!

 சுக்லபட்ச ப்ரதமை திதிக்கும் கிருஷ்ணபட்ச அமாவாசை திதிக்கும் அதிதேவதை காமேச்வரி

சுக்லபட்ச த்விதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதிக்கும் அதிதேவதை பகமாலினி

சுக்லபட்ச த்ருதியை திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ரயோதசி திதிக்கும் அதிதேவதை நித்யக்லின்னா
சுக்லபட்ச சதுர்த்தி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்வாதசி திதிக்கும் அதிதேவதை பேருண்டா
சுக்லபட்ச பஞ்சமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதிக்கும் அதிதேவதை வஹ்நி வாஸினி
சுக்லபட்ச சஷ்டி திதிக்கும் கிருஷ்ணபட்ச தசமி திதிக்கும் அதிதேவதை மகா வஜ்ரேச்வரி
சுக்லபட்ச சப்தமி திதிக்கும் கிருஷ்ணபட்ச நவமி திதிக்கும் அதிதேவதை சிவதூதி
சுக்லபட்ச அஷ்டமி திதிக்கும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதிக்கும் அதிதேவதை த்வரிதா
சுக்லபட்ச நவமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சப்தமி திதிக்கும் அதிதேவதை குலஸுந்தரி
சுக்லபட்ச தசமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சஷ்டி திதிக்கும் அதிதேவதை நித்யா
சுக்லபட்ச ஏகாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச பஞ்சமி திதிக்கும் அதிதேவதை நீலபதாகா
சுக்லபட்ச த்வாதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதிக்கும் அதிதேவதை விஜயா
சுக்லபட்ச த்ரயோதசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்ருதியை திதிக்கும் அதிதேவதை ஸர்வமங்களா
சுக்லபட்ச சதுர்த்தசி திதிக்கும் கிருஷ்ணபட்ச த்விதியை திதிக்கும் அதிதேவதை ஜ்வாலாமாலினி
சுக்லபட்ச பவுர்ணமி திதிக்கும் கிருஷ்ணபட்ச ப்ரதமை திதிக்கும்
அதிதேவதை சித்ரா!







 

ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம் - தமிழில்!

அங்கம் புளகமுற ஹரிமேனி தன்னை
அனுபவித்து அணி செய்நின்,ஒளிநிறைந்த,பார்வை
துங்கமுறும்,தம்மால,முகை தமையே,சார்ந்து
சுடரும்பெண் வண்டுகள் தாம் சூழ்ந்திருப்ப தொக்கும்
மங்களம்சேர் மகாலட்சுமி அனைத்து நல மெல்லாம்
வழங்கு திறல் நின் கண்படைத்து விளங்கு கின்றதம்மா
பொங்கு நலன் அத்தனையும் பொழிவது வேயாகப்
பொருந்துக நின் பார்வையது என்மீது தாயே. 1


நீலோத்பல மலருள் போய்வந்து மீண்டும்
நிறைகாணா தவிக்கின்ற பெண் வண்டைப் போல
மாலின்முக மண்டலத்தே நோக்கும் நின் விழிகள்
மயங்குவதும் ரசிப்பதுவும் ஆசை வெட்கம் துள்ள
பாலித்துத் தியங்குவதாய் பார்வையது கொண்டாய்
பாற்கடலின் திருமகளே நினது கடைப் பார்வை
சால்புடைய என்மீது தவழவிட வேண்டும்
சகல நலன் அப்பார்வை தந்துவிடும் தாயே. 2
 
அரிதுயிலும் முகுந்தனையே இமையால் நோக்கி
ஆனந்தப் பெருமிதப்பில் ஆழ்த்துகின்றாய் தாயே
வரிகாமன் வசம்பட்டு நின்கரு விழிகள் இரண்டும்
வட்டாடி நிலை புரண்டு இமையோடு சேர்ந்து
புரிசெவியின் அருகுவரை போய்வந்து மீண்டு
பூரித்து நீண்டு விட்டதென விளங்கும்
விரிவிழியின் கருணை நிறை ஒளி நிறைந்த பார்வை
வீழ்ந்தென்மேல் இன்பத்தில் ஆழ்த்துக என்னாளும். 3
 
திருமாலின் திருமார்பில் திகழ் துளபமாலை
தேவி நீ நோக்க இந்திர நீலமதாய் மாறும்
பெருமானின் விருப்பமதை நிறைவேற்றும் வலிமை
பெற்றுத் திகழ்கின்றது நின் ஒளி நிறைந்த பார்வை
திருமகளே கடைக் கண்ணால் எனை நோக்கு வாயேல்
திருவுடனே மங்கலங்கள் எனைச் சரணம் செய்யும்
பெருமனது கொண்டு கடைக்கண் அதனால் நோக்காய்
பேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே. 4
 
நீருண்ட மேகமெனத் திகழும் திருமாலின்
நெடிய திருமார்பதனில் கொடி மின்னலென்ன
சீருடனே விளங்கும் நின் திருவுருவம் தாயே
செய்தவத்தால் பிருகுமுனி நினைமகளாய்ப் பெற்றான்
பாருலக மெலாம் நின்னைத் தாயெனவே வாழ்த்தி
பக்தியுடன் தொழுகின்றார் நினது திருவுருவை
சார்ந்திட்டேன் நின்னடியைச் சகல நலமருள்
தாயே என்மீது கடைக் கண் வைப்பாய் நீயே. 5
 
மங்களங்கள் அத்தனையும் தங்குமிடம் எதுவோ
மாலுக்கே வலிமைதரும் பார்வையது எதுவோ
சிங்கநிகர் மதுவென்னும் தீயவனைச் செருக்கத்
திறம்படைத்த திருமாலின் செளலப்யம் எதுவோ
பொங்குமதன் மாலிடமே புகுந்ததுறை எதுவோ
பேரலை கொட்டும் சாகரத்தின் தவமகளே நின்றன்
தங்குமுக மண்டலத்தில் தவழும் திருப்பார்வை
தமியேன் என்மீது சிறுதுளி படட்டு மம்மா. 6
 
விளையாட்டாய் நின்பார்வை எவர்மீது படினும்
வியனுலக இன்ப நுகர் அமரேந்திரனு மாவான்
முளைமுரன் தனைசெகுத்த முகுந்தனும் நின்பார்வை
முழுவிழியின் திருஷ்டியினால் ஆனந்தத் துயிலாழ்ந்தான்
துளக்கமுறு நீலோத்பல மலர் மகுடம் போன்று
தூயநின் திருமுகத்தில் தோன்றும் கடைப் பார்வை
விளக்கமதாய் அரைப் பார்வை க்ஷண நேரமேனும்
வீழட்டும் என்மீது கருணை நிறை தாயே. 7
 
அஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்
அத்தனையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ!
இச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்
இனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ
உச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப
ஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை
விச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க
வியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே. 8
 
சாதகப் புள்ளென நாளெல்லாம் தவித்தேன்
தரித்திரம் விஞ்சவே வாடினேன் பலநாள்
பாதகம் தாபம் தரித்திரம் துக்கமெல்லாமும்
பற்றிய எனைவிட்டு வெகுதூரமே ஓட
ஆதரவாம் கருணைக் காற்றினால் அசைய
அருள்பொழி மேகமாய் நின்கண்களெ விளங்கி
போதனை போல் பொன்மலை என்மீது நீ
பொழிந்திடு தாயே நின் கருணையாம் விழியால். 9
 
சிருஷ்டியிலே கலைமகளாய்த் திகழ்கின்றாய் தாயே
சீவர்களைக் காப்பதற்குத் திருமகளே யாவாய்
மருட்டுகின்ற அரக்கர்களை அழிக்கின்ற போது
மகா துர்க்காயென விளங்கும் வல்லபையும் நீயே
பெருகு பிறைச் சந்திரனைச் சூடுகின்ற பெம்மான்
பிரியபத்தினி பார்வதியாய் விளங்குபவள் நீயே
குரு விஷ்ணு பத்தினியே மூவுலக மெல்லாம்
கொண்டாடும் மகாலட்சுமி திருவடிக்கே சரணம். 10
 
வேதப்பிரம சொரூபமாக விளங்கும் தாயே சரணம்
விணையின் பயனை பகிர்ந்தளிக்கும் ஆதித்தாயே சரணம்
சோதி அழகுவடிவாம் ரதியே சுடரே தாயே சரணம்
தூயமங்கள குணங்கள் அமைந்த கருணைத் தாயே சரணம்
இதயத் தாமரை இருப்பிடமாக ஏற்கும் தாயே சரணம்
இதயசுத்தி வடிவாய்த் திகழும் சக்தித்தாயே சரணம்
உத்தமோ உத்தமன் பத்னியான லட்சுமித்தாயே சரணம்
உயர்ந்த பூரண சொரூபியான புஷ்டித் தாயே சரணம் 11
 
பங்கயத்தை யொத்த திருமுக முடையாய் சரணம்
பாற்கடலில் உதித்த திரு லட்சுமியே சரணம்
மங்களம் சேர்மதி அமுதம் உடன்பிறப்பாய் பெற்றாய்
மகிமை மிக்க நாராயணன் மனையரசி லட்சுமி சரணம் 12
 
தங்கத் தாமரை தன்னில் அமர்ந்த தாயே லட்சுமி சரணம்
தரணிக் கெல்லாம் தலைவியான தாயே திருவே சரணம்
மங்கள தயவே தேவர்க்கருளும் மகாலட்சுமி சரணம்
மகிமை மிக்க சாரங்கபாணி மனையரசி லட்சுமி சரணம் 13
 
மகரிஷி ப்ருகு முனியின் திருமகளே சரணம் சரணம்
மகாவிஷ்ணு மார்பில் திகழும் மகாலட்சுமி சரணம்
தங்க ஆசனம் தாமரை மீதில் தங்கும் தாயே சரணம்
தாமோதரனின் தர்மபத்னி லட்சுமித் தாயே சரணம் 14
 
சோதிவடிவே கமல நயனம் துலங்கும் தாயே சரணம்
செல்வம் சிருஷ்டி தலைவியான திருவே தாயே சரணம்
ஆதிதேவர் அனையர் போற்றும் அன்னை லட்சுமி சரணம்
ஆயர்நந்த குமரன் துணைவி அருளும் லட்சுமி சரணம் 15
 
தாமரைக் கண்கள் படைத்த தாயே செளபாக்ய நல்கும் தேவி
சகல மாந்தர் போற்றும் தாயே சாம்ராஜ்யம் நல்கும் தேவி
நேம புலன்கள் ஆனந்தம் பெறவே நெடிய பாபம் தீர்ப்பாய்
நிந்தன் திருவடி துதிக்கும் பாக்யம் நீயே எனக்குத் தருவாய் 16
 
கடைக்கண் பார்வை வேண்டியே நாளும் கைதொழுது பூசனை
புரிவோர்க்கு தமக்கு தடையிலாச் செல்வம் தருபவள் எவளோ
தயையே மிக்க தயாபரி எவளோ மடை திறந்தென்ன நல்வரங்கள்
நல்கும் மாயன் முராரியின் இதயத் தலைவி அடைந் திடற்கரிய
அன்னைநின் திருவடி அடைக்கலம் அம்மா அடக்கலம் போற்றி 17
 
கமல வாசினி கரக் கமலம் உடையாய் களப சந்தன மாலையும்
தரித்து நிமலவெண் துகில் மேனியில் தவள நிர்மல ஜோதியாய்
திகழ்பவள் நீயே அமல முகுந்தன் இன்னுயிர்த் தலைவி அலகில்
கீர்த்திகொள் மனங்கவர் செல்வி விமலையே நலன்கள்
எங்களுக் கருள்வாய் வேண்டினேன் தாயே அருள்புரி நீயே 18
 
தெய்வக் கங்கை நன்னீர் எடுத்து திசையானைகள் தங்கக்
குடத்தில் ஏந்திஉய்ய நீராட்டும் உடலே உடையாய் உலகத்
தாயே உலகைப் புரக்கும் தெய்வத் திருமால் மார்பில் திகழும்
திருவே பாற்கடல் தோன்றிய செல்வி மெய்யாம் நின்றன்
திருவடிச் சார்ந்தே வைகறை தொழுதேன் வாழ்வளிப் பாயே 19
 
கமலிநீயே கமலக் கண்ணன் காதலீ கருணை வெள்ளமே
பொழிந்திடும் திருவே கமலக் கண் பார்வைக் கேங்கி
இளைத்துக் கதறும் என்றன் துதியினைக் கேட்டு தமியேன்
நின்றன் தயையினுக் கேங்கும் தரித்திரன் தக்கான்
எனநீ கனிந்து சமயமறிந்து என்றனுக் கருள நின் தவளும்
கடைக்கண் வைப்பாய் என்மீதே 20
 
மறைகள் மூன்றின் வடிவாய்த் திகழும் வையகம் மூன்றுமே தொழுதிட
நின்றாய் முறையாய் இந்தத் தோத்திரம் தன்னைநின் முன்றில்
துதித்துப் போற்றுவோர் தமக்கு நிறைசெல்வம் கீர்த்தி, கல்வி
ஆரோக்யம் நிறைஆயுள் புத்தி சக்தியும் தந்து துறையெனப்
புலவோர் போற்றிடச் செய்யும் துணிவும் சக்தியும் தருவாய் தாயே. 21
 
 
 
 

குபேர சம்பத்து அருளும் சங்கு ஸ்தாபண பூஜை!

பணத்தைக் கொட்டி வீடு கட்டினேன் நிம்மதி இல்லை என்று புலம்புவர்களுக்கும் இனி வீடு கட்டப்போகிறவர்கள் குபேர சம்பத்துடன் வாழ்வதற்கும் சங்கு ஸ்தாபன முறை முக்கியமான விஷயம்.

வீட்டில் ஆயாதநிலை பார்த்து ஓட்டு மொத்தப் பணிகளைச் செய்வதற்கு சங்கு ஸ்தாபணம் என்று சொல்வது வழக்கச்சொல். இவை தவிர சங்கு ஸ்தாபண பூஜை என்று ஒரு விதி இருக்கிறது.

வாஸ்து பகவான் விழித்திருக்கும் காலம் அல்லது சுப தினங்களில் வாசற்படி அருகே கலச பூஜையில் வாஸ்து பகவானை வழிபட்டு அதன் எதிரெ வடக்கு(அ) கிழக்கு முகமாக அரிசியில் வலம்புரிசங்கு ஒன்றை வைத்து அதற்கு உபசாரங்கள் செய்து.

தபினீ கலா முதல்... பூர்ணா கலா வரை 18 கலைகளை சங்கீன் மேல் வர்ணித்து நிலைவாசம் மேல் மையக்குறியீடு செய்து அதில் சங்கு அளவு பார்த்து சுழிமுனை உள்ளே வரும்படி பிரதிட்டை செய்தல் வேண்டும் சங்கினுள் நவரத்திம் பஞ்ச லோகம், லட்சுமிகாசு வைத்து ஆலய குடமுக்கில் யாகத்தில் இட்ட காசு ஒன்றையும் வைத்து இரண்டு சிமெண்டு கலவையால் மூடிவிட வேண்டும். 


நவதான்யம்,பூமிகிழங்கு, பூமிசமூலம் என்ற கலவை ஆகிய வற்றால் நிலை வாசல் அருகே உட்பகுதியில் வாஸ்து கிருஹலட்சுமி மூல மந்திரத்தால் சிறிதளவு(ஹோமம்) யக்ஞ வழிபாடு செய்து விடல் வேண்டும். சங்கு ஸ்தாபனம் பூஜை செய்து வலம்புரிச்சங்கு பதித்து பிரதிட்டா பணம் செய்யும் வீட்டில் பொருளாதார வசதி, ஏற்பட்டு பணம் காசுகள் சேர்ந்து கொண்டிருக்கும் குபேர சம்பத்துக்குக் குறைவு இருக்காது.

ஓம் ஐம் ஸ்ரீம் க்லிம் வாஸ்து க்ரஹ லக்ஷ்ம்யை
குபேர ஸகாயை, ஐஸ்வர்ய நிலயாயை, சௌபாக்ய கராயை
க்ரஹ பீடா கரணாயை  ஸ்ரீம் க்லீம் சுவாகா!


என்ற மூலமந்திரத்தால் அரசங்குச்சி நவதான்யத்தால் ஹோமம் செய்து ஜெபிக்க வேண்டும்.

ஓம் வாஸ்து தேவியே போற்றி
ஓம் கிருஹ லட்சுமியே போற்றி
ஓம்வளமூலமே போற்றி
ஓம்யோக சக்தியே போற்றி
ஓம் இல்லத்தின் செழிப்பேபோற்றி
ஓம் சிந்தாமணியே போற்றி
ஓம் கலசம் ஏந்திய தேவி  போற்றி
ஓம் கற்பக விருட்சம் போற்றி
ஓம் சங்கு மூலமே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் தானியத் திருமகனே போற்றி
ஓம் கலைகள் உடையோய்  போற்றி
வாஸ்து கிருஹ லட்சுமியே போற்றி! போற்றி !

 
 
 
 

முத்தைத் தரு (திருப்புகழின்) பொருள் விளக்கம்!

திசைகள் நான்கிலும் உள்ள அன்பர்கள் அற்புதம் அற்புதம் என்று ஆனந்திக்கும்,  சித்திர கவித்துவ சத்த மிகுத்து அருளாலும், பொருளாலும், சந்தத்தாலும், ஓசையாலும் உயர்ந்தது திருப்புகழ்.

முகுந்தன், ருத்ரன், கமலன் என்ற மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டவன், அல்லல்களில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு அருமருந்தானவன். மு, ரு, க,  எனும் அழகன்.

நினைக்க  முக்தி தரும் திருஅண்ணாமலையில் அருணகிரிப் பெருந்தகையார் முன் காட்சி அளித்து,
''முத்தைத் தரு'' என்று அடியெடுத்துக் கொடுத்துப், பாடப் பணித்து மறைந்தார் முருகப் பெருமான்.


எல்லாம் வல்ல முருகப்பெருமானின் திருவருளினால்  இந்தத் திருப்புகழின் பொருள் விளக்கம்!



                                       நூல்

ராகம்: ஷண்முகப்ரியா                           தாளம்: த்ரிபுடை


                          முத்தைத்தரு பத்தித் திருநகை
                                 அத்திக்கிறை சத்திச் சரவண
                                 முத்திக்கொரு வித்துக் குருபர                        எனவோதும்-

                          முக்கட்பர மற்குச் சுருதியின்
                                  முற்பட்டது கற்பித் திருவரு
                                  முப்பத்துமு வர்க்கத் தமரரு                             மடிபேணப்;

                          பத்துத்தலை தத்தக் கணைதொடு
                                  ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
                                   பட்டப்பகல் வட்டத் திகிரியி                          லிரவாகப் -

                          பத்தற்கிர தத்தைக் கடவிய
                                 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
                                 பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது                         மொருநாளே;

                          தித்தித்தெய வொத்தப் பரிபுர
                                   நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
                                   திக்கொட்கந டிக்கக் கழுகொடு                  கழுதாடக்-

                          திக்குப்பரி யட்டப் பயிரவர்
                                  தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
                                  சித்ரப்பவுரிக்குத்  த்ரிகடக                             எனவோதக்;

                          கொத்துப்பறை  கொட்டக் களமிசை
                                   குக்குக்குகு குக்குக் குகுகுகு
                                   குத்திப்புதை புக்குப் பிடியென                      முதுகூகை

                          கொட்புற்றெழ நட்பற் றவுணரை
                                    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
                                    குத்துப்பட வொத்துப் பொரவல                   பெருமாளே.


முத்தைத் தரு பத்தித் திருநகை-
பத்தியென்றால் வரிசை. முத்துப் போன்ற பல்வரிசை தெரியுமாறு புன்னகை பூக்கிறான் முருகன். அது முருகப் பெருமானுடைய முகத்தில் -'திருநகை'-முத்தால் ஆன ஆபரணம் போல-ஒளி வீசுகிறது. அது பக்தர்களுக்கு 'திரு'வைக் கொடுக்கிறது. திரு என்றால் செல்வம். என்ன செல்வத்தைக்  கொடுக்கிறது? பக்தியைக் கொடுத்து, மோட்ச சாம்ராஜ்யமாகிய அழியாத செல்வத்தைக் கொடுக்கிறது.

அத்திக்கிறை-
அத்தி-தெய்வானை. தெய்வானை முத்தின் தலைவனை

சத்திச் சரவண
மலைமுத்தான உமையம்மையின் புதல்வன், சரவணப் பொய்கையில் தோன்றியவன். எனவே 'சத்திச் சரவணன்.'அன்னையிடம் இருந்து சக்தி மிக்க வேலாயுதத்தைப் பெற்றவன்.

முத்திக்கொரு வித்து
முக்தி அடைய விரும்புபவர்கள் முருகவேளுடைய திருவடிகளிலே கருத்தைச் செலுத்தி பக்தி எனும் விதையை இதயத்தில்  நடவேண்டும்.

குருபரன்
கு - அந்தகாரம் அல்லது இருள்
ரு -   நீக்குபவர். ஆணவ இருளை நீக்குபவர்
பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு குருவடிவாய் வந்து அருள் புரிபவர் குருபரன்.

எனவோதும்
என்று போற்றிய

முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து
மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு, நான்கு வேதங்களிலும் முதன்மையான 'ஓம்'என்ற பிரணவ மந்திரப் பொருளை உபதேசித்து

இருவரும் முப்பத்து முவர்க்கத்து அமரரும் அடிபேண
பிரமனும், திருமாலும், முப்பத்து முக்கோடி தேவர்களும் திருவடிகளிலே வணங்கப் பெரும் பெருமை உடையவன்,

பத்துத்தலை தத்தக் கணைதொடு
இராமாவதாரத்தில் இலங்காபுரி அரசனான இராவணனின் பத்துத் தலைகளும் வீழுமாறு அம்பு தொடுத்த வீரனும்

ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்தரமலையை மத்தாக்க, அதைத் தாங்கும் பொருட்டு கூர்மாவதாரம் எடுத்தவனும்

பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் 
மகாபாரதப் போரில், கண்ணனாய், பட்டப்பகலில் சூரியன் மறைந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி  ஜெயத்ரதன்  மாளும்படிச் செய்தவனும்

பத்தற்கு இரதத்தைக் கடவிய
தன் நண்பனும், பக்தனுமான அர்ச்சுனனுக்குத்  தேரோட்டியாய் இருந்து அருள் புரிந்தவனும் ஆகிய

பச்சைப்புயல் மெச்சத் தகு பொருள்
நீலமேக வண்ணனான திருமாலும்லும்  பாராட்டப் பெற்ற பெருமை உடைய முருகப்  பெருமானே.

பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது  ஒரு நாளே
பரிவோடு  என்னைக்  காத்து  அருள் புரிதல் வேண்டும்.

தித்தித்தெய வொத்தப் பரிபுர           

கால்களில் அணிந்த சிலம்புகள் தித்தித்தோம் என ஒத்து ஒலிக்கவும்

நிர்த்தப்பதம்  வைத்துப் பயிரவி
காளியானவள் நடனமிட

திக்கொட்க நடிக்கக் கழுகொடு-  கழுதாட
திசைதொறும்  ஒலிக்குமாறு ஆட, உடன் கழுகுகளும் பேய்களும் ஆடுகின்றன.

திக்குப்பரி யட்டப் பயிரவர்
எட்டுத் திக்குகளையும் காக்கும் அஷ்ட பயிரவர்களும்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
தொ..க்..குத்.... தொ....கு... என

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக - எனவோதக்
அழகிய வாத்ய ஒலிக்கு ஏற்றவாறு கூத்தாட

கொத்துப்பறை கொட்டக் களமிசை
பல பறைகள் முழங்க, போர்க்களத்தில்

குக்குக்குகு குக்குக் குகு
குத்திப்புதை புக்குப் பிடியென  - முதுகூகை
குத்து, வெட்டு, பிடியென கிழக்கோட்டான்கள்  சுழன்று ஆட,

கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
சுழன்றாடும்  எதிரிகளாகிய அசுரர்களை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
கொன்று குவித்து கிரவுஞ்சமலையை வேலால் துளைத்து

குத்துப்பட ஒத்துப் பொரவல - பெருமாளே.
பொடிப்பொடியாக்கி  வெற்றிவாகை சூடிய முருகப்பெருமானே.
என்னையும் கருணையுடன் காத்து அருள் புரிவீராக.

குறிப்பு;
குலகிரியான  பொன்னிறமான கிரவுஞ்சமலை மாயைக்கு எடுத்துக்காட்டு. தாரகாசுரன் அரசு புரிந்த மாயமாபுரியில் கிரவுஞ்சன் என்ற ஓர் அரக்கன் இருந்தான். இவன் முனிவர்கள் செல்லும் வழியில் மாயையின் ஆற்றலினால் மலைவடிவாக நின்று, மலைக்குள் வழியிருப்பது போலக் காட்டி, உள்ளே நுழையும்  முனிவர்களை மயக்கிக் கொன்று தின்பான்.

அகத்திய முனிவர் மேருமலையிலிருந்து  தென்திசையில் உள்ள பொதியமலைக்கு வந்தார். அவர் வரும் வழியில் பெருமலை உருவாக நின்று அதற்குள் வழியிருப்பது போல் காட்ட, அவரும் உள் நுழைந்து வெகு தூரம் போய் வழிகாணாமல், அறிவுக் கண்ணால் அசுர மாயையை அறிந்து, வெளி வந்து ''அறுமுகப் பெருமான் அயில் வேலால் அழியக் கடவாய்" எனச் சபித்தார். சூரனுடன் போர் புரிந்த போது  கிரவுஞ்சன் மலைவடிவாய் நின்று வீரவாகுத் தேவர் முதலியோரை மலைக்குள் புகுமாறு செய்து மயக்கினான். கந்தவேள் கிரவுஞ்சத்தைப் அழித்தார்.

 
 
 
 

மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் தமிழில்!

1. அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, பகவதீ, நீலகண்டரின் பத்தினியே, உலகமாகிய பெரிய குடும்பத்தை உடையவளே, அரியவற்றைச் சாதிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

2. ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி  திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நல்லோருக்கு வரங்களை மழைபோல் பொழிபவளே. கொடியவர்களை அடக்கி வைப்பவளே, கடுமையான வார்த்தைகளையும் பொறுப்பவளே, மகிழ்ச்சியுடன் பொலிபவளே, மூன்று உலகங்களுக்கும் உணவளித்துக் காப்பவளே, சிவபெருமானை மகிழ்விப்பவளே, பாவங்களைப் போக்குபவளே, பேரொலியில் மகிழ்பவளே, தீயவர்களிடம் கோபம் கொள்பவளே, கொடியவர்களை அடக்குபவளே, அலை மகளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

3. அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: உலகின் அன்னையே, என் தாயே, கதம்ப வனத்தில் வசிப்பதை விரும்புபவளே, சிரிப்பில் மகிழ்பவளே, மலைகளில் சிறந்த இமயமலையில் உச்சியிலுள்ள ஸ்ரீசக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பவளே, தேன்போல் இனியவளே, மது கைடப அசுரர்களை அழித்தவளே, கேளிக்கைகளில் மகிழ்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

4. அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: சதகண்டம் என்ற ஆயுதத்தால் முண்டாசுரனை வீழ்த்தியவளே, யானை முகத்தினனான கஜாசுரனின் தும்பிக்கையைத் துண்டித்தவளே, எதிரிகளான யானைகளின் கழுத்தைத் துண்டித்து எறிவதில் திறமை மிக்கவளே, தண்டாயுதம் போன்ற தன் தோள்களின் வலிமையால் முண்டாசுரனின் சேனாதிபதியைக் கண்டதுண்டமாக வெட்டியெறிந்தவளே,  மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

5. அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: அருவிபோல் எதிரிகளின் பிணக் குவியலைப் பொழிகின்ற ஆற்றல் பெற்றவளே, பகுத்து ஆராய்வதில் வல்லவரான சிவபெருமானை எதிரிகளிடம் தூதாக அனுப்பியவளே, தீய சிந்தனையும் கெட்ட நோக்கமும் கொண்ட அசுரர்களை அழிப்பவளே,  மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

6. அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தஞ்சம் அடைந்த எதிரிகளின் மனைவியருக்கும் சரணடைந்த வீரர்களுக்கும் அடைக்கலம் தந்து காத்தவளே, மூன்று உலகங்களுக்கும் தலைவியாக விளங்குபவளே, எதிரிகளின் கழுத்தில் திரிசூலத்தை நாட்டியவளே, தும் தும் என்று முழங்குகின்ற துந்துபி வாத்தியத்தையே வெட்கப்படச் செங்கின்ற கம்பீரக் குரல் படைத்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

7. அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தூம்ரவிலோசனன் முதலிய நூற்றுக்கணக்கான அசுரர்களை ஹூங்காரத்தினாலேயே தோற்று ஓடச்செய்தவளே, போரில் மாண்ட அசுரர்களின் ரத்தக்கடலில் தோன்றிய அழகிய சிவந்த கொடி போன்றவளே, சும்ப நிசும்ப அசுரர்களை அழித்ததாகிய மாபெரும் வேள்வியால் பூதகணங்களை மகிழ்வுறச் செய்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

8. தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: வில்லை வளைத்துப் போர் செய்வதால் நடனமாடுவது போல் அசைகின்ற கைவளைகளை அணிந்தவளே, பொன் அம்புகளில் ஒரு கையும் அம்பறாத்தூணியில் மற்றொறு கையுமாக விரைந்து அம்புகளைப் பொழிந்து, ஒலி எழுப்புகின்ற வீரர்களைக் கொன்றவளே, நால்வகை சேனைகளும் நிறைந்த போர்க்களத்தில் வெட்டப்பட்ட தலைகளைச் சதுரங்கக் காய்களைப்போல் விளையாடுபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

9. ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: பகைவர்களால் வெல்ல முடியாதவளே, ஜெய ஜெய என்ற கோஷத்துடன் உலகினரால் போற்றப்படுபவளே, ஜண ஜண என்று ஒலித்து சிவபெருமானை மோகத்தில் ஆழ்த்துகின்ற கொலுசுகளை அணிந்தவளே, நடனம், நாட்டியம், நாடகம், பாடல்கள் என்று விதவிதமான கேளிக்கைகளில் ஆர்வம் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

10. அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நல்மனம் படைத்த தேவர்களின் அழகிய சோலையில் மலர்ந்த பாரிஜாத மலர்களைப்போல் பிரகாசிப்பவளே, பாற்கடலில் பிறந்து இரவில் ஒளிரக்கூடிய நிலவை ஒத்த முகம் உடையவளே, பார்த்தவர் வியந்து நிற்கும் வண்ணம் சுழல்கின்ற அழகிய விழிகளைப் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

11. ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: மற்போரில் பல்வேறு திறமைகள் காட்டுகின்ற மாமல்லர்களுடன் மற்போர் செய்வதை விரும்புபவளே, மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற பல்வேறு மலர்களைச் சூடிய பெண்களால் சூழப்பட்டவளே, தளிரின் இளஞ்சிவப்பும் வெட்கப்படுகின்ற சிவப்பு நிறம் கொண்டவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

12. அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: ஓயாமல் மதநீரைப் பெருக்குகின்ற யானையின் இன்பநடையை ஒத்த நடை உடையவளே, மூன்று உலகங்களுக்கும் ஆபரணமான நிலவை ஒத்தவளே, பாற்கடலாகிய அரசனுக்குப் பிறந்தவளே, அழகிய பெண்களின் மனத்தில்கூட மோகத்தையும் ஆசையையும் தூண்டுகின்ற அழகுவாய்ந்த இளவரசியே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

13. கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தாமரை இதழ்போன்ற மென்மையும் அழகும் வாய்ந்த பரந்த நெற்றியை உடையவளே, எல்லா கலைகளின் இருப்பிடமும் நீயே என்பதை உணர்த்துகின்ற அன்னநடை உடையவளே, தாமரை மலர்களை வண்டுகள் சூழ்வதுபோல், வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்ற வகுள மலர்களைத் தலையில் சூடியவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

14. கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே

பொருள்: உன் கையிலுள்ள புல்லாங்குழல் வெட்கப்படுகின்ற அளவுக்கு குயில்போல் இனிய குரல் படைத்தவளே, மலைவாசிகள் பாடி மகிழ்ந்து திரிகின்ற மலைகளில் மகிழ்ச்சியுடன் உறைபவளே, நற்குணங்கள் அனைத்தும் சேர்ந்து ஓர் உருவம் பெற்றதுபோல் வேட்டுவப் பெண்களின் கூட்டத்தில் சிறந்து விளங்குபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

 15. கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நிலவின் தண்ணொளியைக்கூட தோற்கச் செய்கின்ற அழகிய கிரணங்கள் பிரகாசிக்கின்ற பட்டாடையை இடுப்பில் அணிந்தவளே, உன் திருவடிகளைப் பணிகின்ற தேவர் மற்றும் அசுரர்களின் கிரீடங்களில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் பிரதிபலிக்கச் செய்கின்ற நிலவொளி போன்ற ஒளியை வீசுகின்ற நகங்களை உடையவளே, யானையின் மத்தகத்தைப் போன்றதும், அழகில் பொன்மலையான மேருவை நிகர்த்ததுமான மார்பகங்களை உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

16. விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: உன்னால் வெல்லப்பட்ட கோடி சூரியர்களால் துதிக்கப்படுபவளே, தேவர்களைப் பாதுகாக்கவும் தேவ-அசுரப் போரை முடிவிற்கு கொண்டு வரவும் முருகப்பெருமானை மகனாகப் பெற்றவளே, சுரதன், சமாதி ஆகியோரின் உயர்ந்த நிலைகளைப்போல் உயர்நிலைகளை நாடுபவர்களிடம் ஆர்வமும் அக்கறையும் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

17. பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: கருணையின் இருப்பிடமே! தினமும் உன் திருவடித் தாமரைகளை வணங்குபவர்களின் இதயத் தாமரையை உறைவிடமாகக் கொள்கின்ற மகாலட்சுமியே! நீ அடியவர்களின் நெஞ்சில் வாழ்ந்தால் அவர்களே திருமால் ஆகிவிட மாட்டார்களா? உனது திருப்பாதங்களே மிக உயர்ந்த செல்வம் என்று கருதுகின்ற எனக்கு அதைவிட வேறு செல்வம் வேண்டுமா? மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

18. கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: பொன்போல் பிரகாசிக்கின்ற சிந்து நதியின் நீரினால் பக்தர்கள் உன்னை நீராட்டுகின்றனர். அவர்கள், தேவர்களின் தலைவியான இந்திராணியின் மார்பகங்களைப் போன்ற பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் தழுவுகின்ற சுகத்தைப் பெறமாட்டார்களா என்ன? அந்த சுகத்தைப் பெரிதென்று கருதாமல் உன்னையே நான் தஞ்சமடைந்துள்ளேன். என் நாவில் கலைமகளை எழுந்தருளச் செய்வாய். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

19. தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: எல்லா முகங்களையும் மலரச் செய்வதற்கு நிலவை ஒத்த உன் முகம் போதும். தேவலோகப் பெண்கள் உன்னை விடுத்து ஏன்தான் நிலவை நாடுகிறார்களோ? அதுவும் உன் செயல்தான் என்பது எனக்குத் தெரியும். சிவை என்ற பெயர் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

20. அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: அம்மா! உமையே! கதியற்ற என்னைக் கருணையுடன் காக்க வேண்டும். எல்லையற்ற கருணையால் நீ இந்த உலகிற்கெல்லாம் தாயாக விளங்குகிறாய். எது சரியானது என்று உனக்குப் படுகிறதோ அதைச் செய். என் மன ஏக்கத்தை அதுவே போக்கும். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை டையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

 
 
 

அஷ்டலட்சுமிகள் பிரபாவம்!

ஸ்ரீ மகாலட்சுமி தேவி அஷ்டலட்சுமிகள் என்ற வகையில் எண்வகைப் பெரு வடிவங்கள் கொண்டும் தம்மை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு சகல விதமான வாழ்க்கை வளங்களையும் அள்ளி அள்ளித் தந்து ஜொலிக்கிறாள். அதன் விவரம் வருமாறு:-

1. ஸ்ரீ ஆதி லட்சுமி    - அக அழகும், புற அழகும், கல்யாண வாழ்வும் தருபவள்.

2. ஸ்ரீ சந்தான லட்சுமி    - குழந்தைப் பேறு தருபவள்.

3. ஸ்ரீ வித்யா லட்சுமி    - கல்வியையும், கலைஞானங்களையும் கற்கச் செய்பவள்.

4. ஸ்ரீ தன லட்சுமி    - சகல செல்வங்களும் அள்ளித் தருபவள்.

5. ஸ்ரீ தான்ய லட்சுமி    - தானியங்கள் அனைத்தையும் செழிக்கச் செய்பவள்.

6. ஸ்ரீ கஜ லட்சுமி    - ராஜ போகமான வாழ்வளிப்பவள்.

7. ஸ்ரீ வீர லட்சுமி    - மனஉறுதியும், உடலுறுதியும், செயலாற்றலும் தருபவள்.

8. ஸ்ரீ விஜய லட்சுமி    - வெற்றிகளை அள்ளித்தருபவள்.

'திருவுந்தியார்' - பகை நீங்கி நலம் பெற!

விரோதிகளை அடங்கச் செய்து வெற்றியை நல்கும் பதிகம்.(மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளியது)

ராகம் - மோகனம்                        8-ம் திருமுறை
 
தில்லையில் மாணிக்கவாசக சுவாமிகள் தங்கியிருந்த காலத்தில் மகளிர் சிலர் கூடி, கைகள் இரண்டையும் மேலே தூக்கி இரு பக்கமும் நீட்டி, வானில் பறப்பது போல், இரு கைகளையும் சேர்த்துப் பெருவிரல் நுனியில் நின்று கொண்டு பாடி ஆடும் ஓர் ஆட்டவகையான, திருவுந்தியார் விளையாடுதலைக் கண்டு அவர்கள் வாய் மொழியாக இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
 
'திருவுந்தியார்' எனப்படும் இந்த இருபது பாடல்களிலும், மும்மல காரியம் ஆகிய முப்புரங்களும் சிவபெருமானது பேராற்றலினால் அழிந்ததையும், தக்கன் யாகம் ஒழிந்ததையும், அதனால் சூரியன், இந்திரன் முதலிய தேவர்களின் அகங்காரம் ஒடுங்கியமையும் பற்றியே கூறப்பட்டுள்ளது.
 
இறைவரது வெற்றியைப் போற்றுவதால் நாமும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. இதில் ஐயமே வேண்டாம், பகைமை, விரோதம் யாவும் நீங்கி நலம் பெறவும், வழக்குகளில் வெற்றி பெறவும், மணிக்கவாசகர் சுவாமிகள் பாடிய இத்திருப்பதிகம் பெரிதும் உதவும்.
 
திருவாசகத்தின் பெருமைக்கு மாணிக்கவாசகர் கூற இறைவரே தம் திருக்கையால் எழுதிக் கொண்டார் என்ற வரலாறே சான்று.

திருச்சிற்றம்பலம்

1. வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.


சிவபெருமான் முப்புரங்களை அழிக்கத் திருவுளங்கொண்டார். உடனே பொன் மலையாகிய மேருமலை வில்லாக வளைந்து அவர்தம் திருக்கையினடத்து வந்து சேர்ந்தது. உடனே போர் நிகழ்ந்தது. முப்புரங்களும் வருந்தின எனப்பாடி உந்திப் பறந்து விளையாடுவோமாக. அவை ஒன்று சேர எரிந்தன என்று பாடி ஆடுவோமாக.

2. ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற.

காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஏகம்பர் எனப்படுவார். அவர் திருக்கரத்தில் இரண்டு அம்புகள் காணப்படவில்லை. உள்ளது திருமாலாகிய ஓரம்பேயாகும். அந்த ஓர் அம்பும் அவருக்குப் பயன்படவில்லை. எதிர்த்து நின்ற கோட்டைகள் மூன்றாயினும் அவன் நகை செய்து எரித்தமையால் அவ்வோர் அம்பும் வேண்டாத ஒன்றாயிற்று. இதனைச் சொல்லி உந்தி பறந்து விளையாடுவோமாக.

3. தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்;
அச்சு முறிந்ததென் றுந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற.

தேவர்கள் தச்சுத் தொழிலால் அமைத்தத் தேரினைக் கொண்டு வந்து சிவபெருமான் முன் நிறுத்தினர். தேவர்களின் வேண்டுகோளின்படி அத்தேரில் சிவபெருமான் அடியெடுத்து வைத்தான். உடன் அத்தேரின் அச்சு முறிந்தது. ஆனாலும் திரிபுரம் அழிந்தன என்று சொல்லி உந்தி பறந்து விளையாடுவோமாக.

4. உய்யவல் லாரொரு மூவரைக் காவல்
கொண்டுஎய்யவல் லானுக்கே உந்தீபற
இளமுலை பங்கனென் றுந்தீபற.

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அரக்கர்களும் சிவபக்தியில் ஈடுபட்டனர். திரிபுரம் எரிந்த போது அவர்கள் பிழைக்கும்படி இறைவன் அவர்களைக் காத்து, அவர்களை கயிலைக்குத் துவார பாலகர்களாகச் செய்து ஏனையோரை அம்பால் அழித்தொழித்தான். அத்தகைய வல்லமை யுடையவன் இளமை மாறாத தனங்களையுடைய அருளம்மையின் பாகன் என்று கூறி பாடி ஆடுவோமாக.

5. சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருத்திர நாதனுக் குந்தீபற.

வீரபத்திரர் தாக்கிய போது, தக்கனது யாகம் அழியவே, தேவர்கள் தப்பிப் பிழைக்க ஓடிய விதத்தினைப் பாடுவீர். அத்தகைய உருத்திரனாகிய தலைவன் பொருட்டு உந்தி பறப்பாயாக.

6. ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் றுந்தீபற
சதுர்முகன் தாதையென் றுந்தீபற.

பிரமதேவனுக்குத் தநதையாகிய திருமால் தக்கன் யாகத்தின் அவியுணவைக் கொண்டான். அந்நாளில் வீரபத்திரக் கடவுளால் தாக்கப்பட்டு உயிர் ஒன்றை மட்டும் உடையவனாய் இருந்தான். அதனைக் கூறி உந்தி பறப்பாயாக!

7. வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டியகையைத்
தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

விருப்புடன் அக்கினி தேவன், அவியை உண்ணும் பொருட்டு ஒன்று சேர்த்த கையை வீரபத்திரர் வெட்டினார். யாகம் நிலைகுலைந்து போயிற்று. இதனைச் சொல்லி உந்தி பறப்பாயாக!

8. பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்;
பார்ப்பதென் னேஏடி யுந்தீபற
பணைமுலை பாகனுக் குந்தீபற.

உமையம்மை தனது மகள்தானே என்றும், அரனின் மனைவிதானே என்றும் இகழ்ந்து பேசின தக்கனை நாம் பெருமை யுடையவனாக நினைப்பது கூடாது என்று பாடுக. பருத்த தனங்களையுடைய உமாதேவி பங்கனாகிய சிவன் பொருட்டு உந்தி பறப்பாயாக.

9. புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரம்தனி லேறினார் உந்தீபற
வானவர் கோனென்;றே உந்தீபற.

தேவேந்திரன், யாகத்தை அழித்த வீரபத்திரருக்கு அஞ்சி, ஒரு அழகிய குயிலின் வடிவம் எடுத்து ஒரு மரத்தின் மேல் ஏறினான் என்று பாடுக. அவன் தேவர்களின் தலைவன் என்று உந்தி பறப்பாயாக.

10. வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தெடர்ந்து பிறப்பற உந்தீபற.

கொடிய கோபத்துக்கு ஆளாகிய தக்கன் வேள்வியில் யாக குருவாகிய வியத்திரனது தலை வெட்டுப் பட்டதைப் பாடி உந்தி விளையாடுக. நம்மைத் தொடர்ந்து பற்றி வருகின்ற நம் பிறப்பு நீங்கும்படி பாடி உந்தி பறப்பாயாக.

11. ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

யாகத்திற்குப் பலிகொடுத்து எஞ்சி நின்ற அறிவில்லாத ஆட்டினுடைய தலையைத் தக்கனுக்குத் தலையாகப் பொருத்திய விதத்தினைப் பாடி, நம் தனங்கள் நினறசைய உந்தி பறப்பாயாக.

12. உண்ணப் புகுந்த பகன்ஒளித் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
கருக்கெட நாமெலாம் உந்தீபற.

தக்கன் யாகத்தில் அவிர் பாகத்தை உண்ண வந்த 'பவன்' என்பவன் வீரபத்திரரைக் கண்டு ஒளித்து ஓடாத வண்ணம் அவனுடைய கண்களைப் பிடுங்கிய விதத்தை எல்லோருடைய பிறவியும் அழியும்படி பாடி உந்தி பறப்பாயாக.

13. நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம்நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.

தக்கன் வேள்வியில் கலைமகள் மூக்கறு படவும், பிரமன் தலை அறுபடவும், அவற்றோடு சந்திரன் முகத்தைத் தேய்த்துக் அழித்ததையும் பாடுவீர். நம் பழவினைகள் அழியும்படி பாடி உந்தி பறப்பாயாக.

14. நான்மறை யோனும் மகத்திய
மான்படப்போம்வழி தேடுமா ருந்தீபற
புரந்தரன் வேள்வியி லுந்தீபற.

தக்கனது யாகத்தில், பிரம தேவனும், யாகத்திற்குத் தலைவனாகிய தக்கனும் அழிய, இந்திரன் தப்பி ஓடும் வழியைத் தேடித் தவித்த விதத்தைப் பாடி உந்தி பறப்பாயாக.

15. சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.

சூரியனுடைய கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயில் உள்ள பற்களைத் தகர்த்து உதிர்த்த விதத்தைப் பாடி ஆடுக. அதனால் யாகமானது கலக்கமடைந்தது என்று சொல்லிப் பாடி உந்தி பறப்பாயாக.

16. தக்கனா ரன்றே தலையிழந் தார்
தக்கன்மக்களை சூழநின் றுந்தீபற
மடிந்தது வேள்வியென் றுந்தீபற.

தக்கனுடைய மக்கள் அவனைச் சூழ்ந்திருந்தும் அவனைக் காக்க முடியாமல் போனதால் தக்கன் தன் தலையை இழந்து விட்டான். யாகமும் அழிந்தது. இதனைச் சொல்லிப் பாடி உந்தி பறப்பாயாக.

17. பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.

அக்காலத்தில் பால் வேண்டிய வியாக்ரபாத முனிவரின் பாலனாகிய உபமன்யுவுக்கு திருப்பாற் கடலையே வரவழைத்துக் கொடுத்தருளியவன். அழகிய சடையுடையவனும், முருகப் பெருமானின் தந்தையானவனும் ஆகிய அவ்விறைவன் பொருட்டு உந்தி பறப்பாயாக.

18. நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
உகிரால் அரிந்ததென் றுந்தீபற.

அழகிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரம தேவனுடைய ஐந்து தலைகளுள் ஒரு தலை விரைவாக சிவபெருமானுடைய நகத்தால் கிள்ளப்பட்டதென்று பாடி உந்தி பறப்பாயாக.

19. தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
இருபதும் இற்றதென் றுந்தீபற.

இராவணன் தனது திக்கு விசயத்தின் போது தேரைச் செலுத்தினான். எதிர்ப்பட்ட கயிலை மலையை நகர்த்தத் தன் தேரை நிறுத்தி விட்டு அதனைப் பெயர்த்தெடுத்தான். அப்போது அவனுடைய பத்துத் தலைகளும், இருபது தோள்களும் இறைவனால் நெரிந்தது. அவ்வாறு நெரிந்த விதத்தினைப் பாடி உந்தி பறப்பாயாக.

20. ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீபற
அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.

மேலாடை அணிந்து வானிலே செல்லும் முனிவர்கள் சூரிய வெப்பத்தால் அழிந்து போகாமல் அவர்களைக் காக்கின்றவன் நம் இறைவன் என்றும், ஆகாயத்திற்கு அப்பால் உள்ளவர்களையும் அவனே காக்கின்றான் என்றும் பாடி உந்தி பறப்பாயாக.
 
 
 
 
 
 
 
 

ஸ்ரீசுக்தம் தமிழில்!

ஸ்ரீமகாலட்சுமி பொன் நிறம் கொண்டவள். மஞ்சள் நிறம் ஸ்வர்ணம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவர்கள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள், குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும்.

ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள். மந்த ஹாஸ முகமுடையவள். சுவர்ண பிரகாரங்களைக் கொண்டது. இவள் பவனம் கருணையுடையவள். வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள். அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால் திருப்தியுடையவன் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.

தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதாரகுணமுடையவள். இவள் "ஈம்'' என் பீஜாசரத்தை உடையவள். இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள். இவளை உபாசிப்பவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற அலட்சுமி அடையமாட்டாள். தரிச்திரத்தையும் குறைவையும் இவள் அகற்றும் சக்தி படைத்தவள்.

மகாலட்சுமி சூரியன் போன்று பிரகாசிப்பாள். இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது. இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் வீடு தேடி வந்தடைவர். இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம்.

இவள் செழிப்பைத் தருபவள். கோமயத்தில் (பசு மூத்திரம்) வாசம் செய்பவள். சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈச்வரி. ஆசையயை நிறைவேற்றி, வாக்குச் சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருட்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

மகாலட்சுமியின் குமாரர் கர்தமர். சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே. இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள். செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள்.

இந்த பெருமைகளையெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மை விட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கப்படுகின்றாள். இந்த ஸ்ரீசுக்தத்தை தினமும் ஐபம் செய்ய மகாலட்சுமியின் பேரரருள் முழுமையாகக் கிடைக்கும்.

அஷ்ட லக்ஷ்மீ தியான சுலோகம்!

1 தன லட்சுமி

 யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

2 வித்யா லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

3 தான்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

4 வீர லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

5 ஸௌபாக்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

6 சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

7 காருண்ய லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

8 ஆதி லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

 

செல்வம் பெருக சில விஷயங்கள்!

1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
6. எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
8. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).
9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.
10. பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
12. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.
13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.
14. கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
16. வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.
18. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.

காரிய சித்தி நட்சத்திரங்கள்!



புனர்பூசம் பூரம் ஸ்வாதி உத்திரட்டாதி ஆகிய நான்கும்


காரிய சித்தி நட்சத்திரங்கள்.

" காரிய சித்தி நட்சத்திரங்கள் என்றால் காரியத்தை சித்திக்க (நிறைவேற்றி) வைக்கும் நட்சத்திரங்கள் "

காரிய சித்தி நட்சத்திரங்களில் பிறந்தவர்களில்
நீங்களும் ஒருவராக இருப்பீர்கள் அல்லது உங்கள் நட்பு / உறவு வட்டத்தில் இருப்பார்கள்.

காரிய சித்தி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் இணைந்து பயனிக்க வாழ்க்கை இனிமையாகும் என்பது ஜோதிட விதி.

ஒருவர் ஒரு காரியம் நடைபெறவில்லை என்னும் வருத்தத்தை காரிய சித்தி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அத்தகைய நடக்காத பல காரியங்கள் நடைப்பெறும்.