புதன், 29 மார்ச், 2017

ஸ்ரீ ராம நவமி!


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமு மின்றித் தீருமே
இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்'' 

காவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். 
ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், 

பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே...!
ஸஹஸ்ர நாமதத் துல்யம் ராம நாம வராநநே

ஒரு சமயம் பார்வதி அதி விசேஷமான மந்திரத்தை தமக்கு உபதேசிக்க வேண்டும் என்று கேட்டாளாம். சிவபெருமான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பார்வதிக்கு உபதேசித்தார்.

ஒரு சமயம் இருவரும் அவசரமாக வெளியே கிளம்பினார்கள். பார்வதியால் முழு பூஜையைச் செய்ய இயலவில்லை. மேற்கூறிய ``ஸ்ரீ ராம ராமேதி'' என்ற மந்திரத்தை மட்டும் கூறிவிட்டுப் புறப்பட்டாளாம்.

இந்த மந்திரத்தை மட்டும் கூறினால் கூட விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பூஜித்த பலன் கிடைக்கும்.

விரதம் இருக்கும் முறை :

ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.

அன்றைய தினம் ராமர் கோவில் களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். 

வீடுகளில் பாயசம், வடை அத்துடன் நீர் மோர், பானகம், பயத்தம் பருப்பை ஊற வைத்து அதில் வெள்ளரிக்காய், மாங்காய் போட்டுக் கலந்து கடுகு தாளித்து விநியோகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

நல்ல கணவர், குழந்தைகள் இரண்டையுமே இந்த விரதம் தந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக