செவ்வாய், 26 செப்டம்பர், 2017

இசை உலகின் பட்டத்து ராணி!

இசை உலகின் பட்டத்து ராணிக்கு  செப்டம்பர் 16 பிறந்த நாள்.

திருவேங்கடமுடையானை தினமும் பள்ளியெழுப்பும் பாக்கியம் பெற்றவர். தன் தெய்வீகக் குரலால் உலகத்துக்கே மகிழ்ச்சி உண்டாக்கியவர்.
 
 
”குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்று மனம் உருகி பாடும்போது உண்மையிலேயே அவருக்கு குறை ஒன்றும் இல்லை என்பதை அறியலாம்.
 
 
அதிலும் “ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா” எனும்போது அவருடைய முகபாவனையில் ஒரு கம்பீரம் தெரியும், “எனக்கு ஒரு குறையும் இல்லை கண்ணா, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று சொல்வது போல் இருக்கும்.
 

அவரின் இசையை மட்டுமே கேட்டு மயங்கியதை தவிர வேறொன்றும்  தெரியாது!
 
 
அம்மாவின் பாதங்களை  நமஸ்கரிக்கிறேன். குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் அருள் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக