வெள்ளி, 20 ஜனவரி, 2017

தை மாத வளர்பிறை புத்ரதா ஏகாதசி!

தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா ஏகாதசி’ எனப்படும்.

அதன் மகிமை: பத்ராவதி நகரின் அரசர் சுகேதுமான். அவர் மனைவி சம்பகா. ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!’ என வாழ்த்துவது வழக்கம். கலையாத கல்வி, குறை யாத வயது, ஒரு கபடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணி இலாத உடல், சலியாத மனது, அன்பு அகலாத மனைவி, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடைகள் வாராத கொடை, தொலையாத நிதியம், கோணாத கோல், ஒரு துன்பமும் இல்லாத வாழ்வு, தெய்வபக்தி- என்னும் இந்தப் பதினாறு பேறுகளில் ஒன்பதாவதான ‘புத்திரப்பேறு’ மட்டும், சுகேதுமானுக்கும் சம்ப காவுக்கும் வாய்க்கவில்லை. ‘பிள்ளை இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை’ என்ற சாஸ்திரத்தை உணர்ந்த மன்னர் வருந்தினார்.

இதன் காரணமாக மன வருத்தத்துடன் மன்னர் செய் யும் சிராத்தத்தை அவரின் முன்னோர்கள், துன்பத்துடன் ஏற்றார்கள். இதுவும் மன்னரின் மன வருத்தத்தை அதிகரிக்கச் செய்தது.

‘‘போன பிறவியில் நாம் செய்த தீவினைதான் இந்தப் பிறவியில் இவ்வாறு நம்மைப் படுத்துகிறது’’ என்று புலம்பிய மன்னர், அதை நீக்குவதற்காக யாகம்- ஹோமம் முதலானவற்றைச் செய்தார். பலன் இல்லை. மன்னர் மனம் கலங்கியது. பைத்தியம் பிடித்தவரைப் போலக் குதிரை மீது ஏறி விரைந்தார். ‘எங்கு போகிறோம்? எதற்காகப் போகிறோம்?’ என்பதெல்லாம் மன்னருக்குத் தெரியவில்லை.

பாய்ந்து ஓடிய குதிரை காட் டுக்குள் நுழைந்து அழகான ஒரு குளத்தின் அருகில் நின்றது. குதி ரையை விட்டுக் கீழே இறங்கினார் மன்னர். குளமும் அதைச் சுற்றியிருந்த ஆசிரமங்களும் அலைபாய்ந்த மன்னரின் மனதை அமைதிப்படுத்தின.

ஓர் ஆசிரமத்துக்குள் நுழைந் தார் அரசர். சூரியனைப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த முனிவர்களை வணங்கினார். ‘‘முனிவர்களே! தாங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்?’’ எனக் கேட்டார்.

‘‘மன்னா! நாங்கள் விச்வே தேவர்கள். மாசி மாதம் வரப் போவதை முன்னிட்டு, இங்கே நீராட வந்தோம். இன்று புத்ரதா ஏகாதசி. உபவாசம் இருந்து இன்று மகாவிஷ்ணுவை பூஜை செய்தால், உத்தமமான பிள்ளை பிறக்கும்!’’ என்று சொன்னார்கள் முனிவர்கள்.

அந்த பதிலிலேயே தன் மனக் கவலைக்கான மருந்து இருப்பதை மன்னர் உணர்ந்தார். முனிவர்களுடன் சேர்ந்து தானும் நீராடினார். உபவாசம் இருந்தார். முனிவர்களை வணங்கி நாடு திரும்பினார்.

ஏகாதசி விரதத்தின் பலனாக மன்னரின் மனைவிக்கு மணி வயிறு வாய்த்தது. பத்தாவது மாதத்தில் அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். மன்னர் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்.

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கு இணங்க, ‘‘இந்த நாட்டிலுள்ள அனைவரும் இந்த (புத்ரதா) ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும்!’’ என்று கட்டளையிட்டார் மன்னர். ‘‘என்னைப் போலவே என் மக் களும், குறை இல்லாமல் இருக்க வேண்டும்!’’ என்றும் கூறினார்.

நல்ல பிள்ளையை அளிக் கக் கூடிய விரதம் இது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக