வெள்ளி, 27 நவம்பர், 2015

திந்த்ரிணி கௌரி விரதம்





பார்வதி தேவி, எம்பெருமானை அடையும் பொருட்டுத் தவம் இருந்த காலத்தில், ஒவ்வொரு மரத்தின் அடியிலும் அமர்ந்து தவம் செய்தார். அவ்வாறு தவம் இருந்த தினங்களே கௌரி விரத தினங்களாக அனுசரிக்கப்படுகின்றன.












கௌரி தேவியின் 108 விதமான ரூபங்களில் மிக முக்கியமான சில ரூபங்களைப் போற்றும் விதமாகவும் கௌரி விரத தினங்கள் அமைகின்றன.

பார்வதி தேவி, எந்தெந்த மரத்தின் அடியில் அமர்ந்து தவம் இயற்றினாரோ அந்தந்த மரத்தின் மலர்கள் அல்லது இலைகளைப் பயன்படுத்துதல், அந்தந்த மரக் கிளைகளின் கீழ் கௌரி தேவியின் சிறுவடிவத்திலான சிலையை வைத்துப் பூஜித்தல் அதிக பலன் தரும்.











திந்த்ரிணி கௌரி விரதம், பார்வதி தேவி, மகிழ மரத்தடியில் தவம் செய்ததைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுவதால், மகிழ மரத்தின் அடியிலோ அல்லது மகிழ மரக்கிளைகளின் அடியிலோ கௌரி தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜிக்கலாம். மகிழம்பூவால் அர்ச்சித்தல் நலம் தரும்.














விரதம் அனுசரிக்கும் தினம்:

கார்த்திகை மாதம், அமாவாசைக்குப் பின் வரும் துவிதியை திதி தினமே திந்த்ரிணீ கௌரி விரதம் அனுஷ்டிக்கும் தினமாகும்.

அன்றைய தினம் விரதமிருந்து, மஞ்சளால் கௌரி தேவி பிரதிமையை அலங்கரித்து ஐந்து வகை பழங்கள், இனிப்பு பொருட்கள், நைவேத்திய பொருட்கள், பட்சணங்கள்  வைத்து மகிழ மர கிளையை அருகில் வைத்து , மகிழம்பூவால்  அர்ச்சித்து வழிபட வேண்டும்.

முதலில் விக்னேஸ்வர பூஜை செய்து, பின் கௌரி தேவியை அஷ்டோத்ரம் கூறி அர்ச்சித்து, தூப, தீப ஆராதனை செய்து நிவேதனம் சமர்பிக்க வேண்டும்.


பின்னர், கற்பூர ஹாரத்தி எடுத்து பிரதட்சிண நமஸ்காரங்கள் செய்ய வேண்டும்.


பிரசாதங்களை அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக