வெள்ளி, 15 ஜூலை, 2016

தேவலோகத்து அரம்பையர்கள்!



அரம்பையர்கள் என்பவர்கள் மேலோகத்தில் / தேவலோகத்தில் சிவபெருமானின் உமையாள் பார்வதிக்கு துணையாக இருக்கும் தோழிகள் ஆவார்கள். இந்த அரம்பையர்கள் பாற்கடலை கடையும் போது தோன்றியவர்கள் எனவும் கூறப்படுகிறது. அரம்பை என்பவள் தான் இந்த அரம்பியர் கூட்டத்தின் தலைவியாக கூறப்படுகிறாள்.

அரம்பையர்களை தேவ மகளீர், தேவ கன்னிகள், அப்சரஸ்கள் என்றும் கூற கூருகிறார்கள். பெரும்பாலும் இவர்களில் நாம் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்றவர்களை தான் நமது காவியங்களிலும், இலக்கியங்கள் மூலமும் அறிந்திருப்போம். ஆனால், இவர்கள் மொத்தம் 60,000 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற அரம்பையர்கள்

அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற் கொள்பவர்களாகத் திகழ்ந்ததுடன் உமைய வளுக்கும் தோழியராகவும் இருந்தார்கள்.

ரம்பை, ஊர்வசி, மேனகை மட்டுமின்றி தேவலோகத்தில் திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி என்ற சிலரும் கூட புகழ்பெற்ற அரம்பையர்களாக திகழ்ந்தனர்.

அப்சரஸ் பெயர் காரணம்

அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் கூட இருக்கிறது. “அப்ஜம்” என்றால் தாமரை என்று பொருள், “சரஸ்” என்றால் நீர்நிலை என்று பொருள். அப்சரஸ் என்றால் நீர்நிலையில் தோன்றிய தாமரை என்ற பொருள் பெறுகிறது.  நீர் நிலையில் தோன்றிய தாமரை எவ்வளவு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்குமோ அவ்வளவு அழகு நிரம்பியவர்கள் அரம்பியர்கள் என்பதால் இவர்கள் இந்த பெயர் பெற்றனர்.

தவம்

தாங்கள் வசிக்க ஓர் லோகம் வேண்டும் எனவும், தாங்கள் என்றுமே இளமை வாய்ந்தவர்களாக தோற்றமளிக்க வேண்டும் எனவும் சிவனிடம் வரம் வேண்டி தவம் செய்தனர். அரம்பையர்களின் தவத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் வரத்தை அளித்து, அவர்களுக்காக அப்சரஸ் எனும் லோகத்தையும் உருவாக்கி கொடுத்தார்.

அரம்பையர்கள் குணங்கள்

பார்வதிக்கு துணையாக, தோழியாக இருப்பது மட்டுமின்றி, சிவனுக்கு உரிய பூஜைகளும் செய்து வந்தனர். வசீகரமான வடிவும், அழகும் கொண்ட அரம்பையர்கள், யாழ் இசை மீட்டுவதில் பெரும் திறன் கொண்டவர்களாக திகழ்ந்தனர்.   அரம்பையர்கள் குணங்கள் பாடல்கள் படுவதிலும் திறன் வாய்ந்து விளங்கினர் அரம்பையர்கள். மேலும், நடனக் கலையிலும் வல்லமை படைத்தவர்களாக இந்த பேரழகிகள் இருந்தார்கள் என்றும் அறியப்படுகிறது.

உமையவள் சில காரணங்களுக்காக சிவபெருமானைப் பிரிந்து தவம் செய்திருக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அங்கெல்லாம் அரம்பையர்கள் உமையவளுக்குப் பலவிதங் களில் தொண்டு செய்வது வழக்கம்.

தலங்கள்

திருப்பைஞ்ஞீலி - இவ்விடத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவியதால், இன்றளவும் திருப்பைஞ்ஞீலி வாழைக்கு தலவிருட்சமாக போற்றப்படுகிறது.

காசி – இங்கு மேனகை எனும் அரம்பை சிவபெருமானை வழிபட்டு தனது சாபத்தினை போக்கிக் கொண்டார்.

தலங்கள் திருக்கழுக்குன்றம் – இங்கு திலோத்துமை எனும் அரம்பை சிவபெருமானை வழிபாடு செய்தார். 

மேலும், திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களில் அரம்பையர்கள் வழிபாடு செய்த தலங்களாக அறியப்படுகின்றன.

வழிபடுதல்
தேவலோக கன்னிகளான அரம்பையர்களை வழிபட்டால், இளமையும், செல்வமும், இன்பமும் பெருகும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இவர்களை வழிப்படும் முறை பழங்காலத்தில் இருந்து வந்துள்ளது. வட இந்தியாவில் இருக்கும் ஸ்ரீலட்சுமி பூஜையில் அரம்பையர்களையும் சேர்த்து தான் வழிப்படுகின்றனர்.

"பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணம் சொல்கிறது.

ஆனி மாதத் திரிதியை இவர்களுக்குரிய நாள். இந்நாளில் அப்சரஸ்களை வழிபடும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது.

தற்பொழுது, வடநாட்டில் இந்நாளில் ஸ்ரீலட்சுமி பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

அரம்பையர்கள் தேவலோகத்தில் மட்டுமல்ல; பூலோகத்திலும் உமையவள் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார்கள்.

ஆனி மாதத்தில் வரும் திரிதியை அன்று அந்தந்த திருத்தலங்களில் அருள்புரியும் இறைவனையும் அம்பாளையும் வழிபட்டால் அரம்பையர்கள் மனமகிழ்ந்து வாழ்த்துவார்கள். இதனால் அழகு கூடும்; செல்வ வளம் பெருகும்; கலை களில் சிறந்து விளங்கலாம்.

ஆனி மாத வளர்பிறை திரிதியை அன்று ரம்பா திரிதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட் டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்து வார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள்.

கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக