ஞாயிறு, 12 ஜூன், 2016

அபிஷேகப் பொருட்களும் அவற்றின் பயன்களும்!


 
ஸ்ரீ வினாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியின் போதும், சிவலிங்கத்துக்கு பிரதோஷத்தின் போதும், பௌர்ணமியின் போது, மற்றும் வழிபடும் விசேஷ தினங்களில் - தெய்வங்களுக்கு கீழ்க் காணும் பொருட்களை அபிஷேகம் செய்வதனால் கிடைக்கும் பலன்கள்:
 
மஞ்சள் பொடி           =இராஜ வசியம் தரும்
நல்ல தண்ணீர்     = ஒழுக்கத்தைத் தரும், சாந்தி உண்டாகும்
நல்லெண்ணெய், தேன், வாசனைத் தைலம்,
பச்சைக் கற்பூரம் =     விஷ ஜுர நிவர்த்தி, சுகத்தைக் கொடுக்கும்
பச்சரிசி மாவு      = கடனைப் போக்கும்



எலுமிச்சம்பழம் = உலகம் வசமாகும் நிலை
தரும், பகைமையை அழிக்கும்
விபூதி  =சகல சௌபாக்கியமும் தரும், மோட்சம் தரும்
சந்தனம்  =கீர்த்தியைக் கொடுக்கும், சுகம் பெறுதல்,இறைவனோடு இரண்டறக் கலக்க செய்யும்
பன்னீர் = சருமத்தைக் காக்கும், திருமகள் அருள் கிடைக்கும்
கும்பம்(ஸ்தபனம்), பழ பஞ்சாமிர்தம் = அஷ்டலட்சுமி சம்பத்தைத் தரும்,சாந்தி தரும்
சங்காபிஷேகம்  =சர்வ புண்ணியத்தையும் தரும்
வஸ்திரம், சொர்ணாம்பிஷேகம்   = லாபம் தரும்
சிவனுக்கு தேங்காய்ப் பூ அபிஷேகம் செய்தால், அரசுப் பதவி கிடைக்கும்







நெல்லிப்பருப்பு பொடி, புஷ்பங்கள் = சோகம் போக்கும்
திருமஞ்சனப் பொடி = வியாதியைப் போக்கும்
பஞ்ச கவ்யம் = பாவங்களைப் போக்கும், மனப் பரிசுத்தமாகும்
பால்              = நீண்ட ஆயுளைத் தரும்
தயிர், மாம்பழம்   = புத்திர பலனைக் கொடுக்கும்
நெய்   = மோட்சத்தைக் கொடுக்கும்
சர்க்கரை    =       சத்ருவை ஜெயிக்கும்
பஞ்சாமிருதம், திராட்சை    = (புஷ்டி)பலத்தைத் தரும்
கரும்புச் சாறு     = ஆரோக்கியம் தரும்
பழச்சாறு, நாரத்தை    = எம பயம் அகற்றும்
இளநீர்     = உயர்ந்த பதவி தரும்(போக பாக்கியம்)
அன்னாபிஷேகம்    = விருப்பம் நிறைவேறும்
அரிசி     = சாம்ராஜ்யத்தைத் தரும்
வாழைப்பழம்      = பயிர் விருத்தியாகும்
மாதுளம்பழம்      = கோபத்தைப் போக்கும்
பலாப்பழம்        = மங்களத்தைத் தரும்
சாத்துக்குடி        = துக்கத்தைப் போக்கும்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக