புதன், 3 ஆகஸ்ட், 2016

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா!

குழந்தை பிறந்த உடன் சரியான நேரத்தையும் ஆண்டு, மாதம், தியதி, நட்சத்திரம், ஊர் போன்றவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தமிழ், ஆங்கில தேதி இரண்டையும் குறித்துக்கொள்ளுங்கள். குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து ஜாதகம் கணீக்க வேண்டும் .
 
குழந்தை பிறந்ததினத்திலிருந்து , வீடு கூடுவதற்கு 16ம் நாளை தேர்ந்தெடுப்பது உத்தமம்.அல்லது அடுத்து வரும் நல்ல சுபதின்த்தில் குருக்களைய்யாவை அழைத்து கிரகசுத்தி சடங்கை செய்யவும். அன்றைய தின்மே சுபவேளையில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவது நல்லது. அன்று முடியாவிட்டால் 3 மாதத்துக்குள் நடத்துவது நல்லது.
 
குழத்தைக்கு புது ஆடை அணிவித்து தாயாரின் மடியில் இருக்கும் குழந்தையை,
தாயும், தந்தையும் 3 முறை மாற்றிக்கொண்டபின் தகப்பனார் மடியில் வைத்துக்கொண்டு, ஒரு தாம்பாளத்தில் புழுங்கலரிசியை நிரப்பி,அரிசியில் முனை பழுதுபடாத விரலி ம்ஞ்சள் கொண்டு, குழந்தைக்கு சூட்டப்பட உள்ள பெயரை தகப்பனார் 3 முறை எழுதவேண்டும்.
 
பின் குழந்தையின் வலது காதில் தகப்பனார் மெல்லிய குரலில் 3 முறை உச்சரிக்கவேண்டும். பின் சபை அறிய 3 முறை உரத்த குரலில் சொல்லவேண்டும். குழந்தையின் அத்தை ( குழந்தையின் தகப்பனாரின் சகோதரி ) குழந்தைக்கு (காப்பிடுவது ) வளையல் அணிவிப்பது, தண்டை அணிவிப்பதும்ரபு.குழந்தையின் தாயின் வ்ழியிலிருந்து அரைக்கு சலங்கையும், தந்தைவழியில் கழுத்துக்கு சங்கிலியும் அணிவிப்பதும்ரபு.அதன்பின் ம்ற்றோர் குழந்தையை ஆசீர்வதிப்பது வழக்கம். வந்திருப்பவர்களுக்கு பூந்தி,காப்பரிசி கொடுக்கவெண்டும்.
 
காப்பரிசி - களைந்து அரித்த பச்சரிசியுடன் வ்றுத்த சிறுபருப்பும், எள்ளும் சேர்த்து தேவைக்கு ஏற்ப சர்க்கரைப்பாகில் கலந்து கொடுப்பது.
 
குழந்தை பிறந்த 6 வது மாதத்தில் ஒரு சுபதினத்தில் முதல்முறையாக சர்க்கரை பாயாசம் ஊட்ட வேண்டும்.குழந்தைக்கு திருவமுது ஊட்டும் இந்த சடங்கினை ஆலயங்களில் வைத்தும் செய்வதும் உண்டு. அதன்பிறகு குழந்தைக்கு எல்லவித உணவுகளும் கொடுக்கலாம்.
 
குழந்தைக்கு திருவமுது ஊட்டுவதற்குரிய பொருட்கள் தாய் வீட்டிலிருந்து கொண்டுவருவார்கள்.


முதல் பிறந்த நாள் !
குழந்தையின் முதல் வருட பிறந்த நாள் ஜென்ம நட்சத்திரத்தில் விழாவக கொண்டடுவது உண்டு.பிறந்த நாள் அன்று வீட்டில் கணபதி ஹோமம், ஆயுசு ஹோமம் செய்வித்தல் நல்லது.
 
பிறந்த நாள் அன்று கோவிலுக்கு அழைத்துச்சென்று குழந்தைக்கு புத்தாடை அணிவித்து நட்சததிரம், பெயர் சொல்லி அர்ச்சனை செய்வித்து வழிபாடு நடத்தவும்.
 
பிறந்த நாள் விழாவின் மறுதினம், குழந்தையை தாய்மாமன் மடியில் வைத்து குழந்தைக்கு முடி இறக்கி காது குத்த வேண்டும்( தேவைப்படும் பொருட்கள் தாயின் வீட்டிலிருந்து கொண்டு வருவார்கள்). இந்த சடங்கை ஏதாவது ஒரு கோவில் சன்னதியில் வைத்து செய்யவேண்டும்.
 
ஏதாவது பிரார்த்தனை ( நேர்த்திக்கடன் ) செய்திருந்தால் அந்த ஆலயத்தில் வைத்து இந்த சடங்குகளை செய்திட வேண்டும்.
 
வித்யாரம்பம் - ஏடு தொடங்குதல்!
குழந்தைக்கு 3 வயதுக்குள் ஒரு நல்ல தினத்தில் ஒரு குருவை வைத்து ஏடு தொடங்கவேண்டும். ( எழுத படிக்க சொல்லிக் கொடுக்க வேண்டும்).
 
வழக்கமாக விஜயதசமி அன்று ஏடு தொடங்கவேண்டும். திருவிளக்கின் முன் ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி , குழந்தையின் கையில் விரலி ம்ஞ்சளை கொடுத்து , குரு குழந்தையின் விரலை பிடித்து - வித்யா மந்திரத்தை 3 முறை எழுதி - எழுத்து ஆரம்பித்து வைக்கவேண்டும்.

 
 
ருது தின சடங்கு - பூப்புனித நீராட்டு விழா!
பெண்குழந்தை பருவம் அடைந்த நேரத்தையும் , அன்றைய தின நட்சத்திரத்தையும் குறித்து வைக்கவும் . அன்றையதினமே நல்ல நேரம் பார்த்து உறவு முறையில் எல்லோருக்கும் சொல்லி , தகப்பனாரின் சகோதரி குழந்தைக்கு தலைக்கு தண்ணிர் ஊற்றவும்.
 
(முடியும் என்றால் ஆண் குழந்தையை தலைமகனாகப்பெற்றவர்களை கொண்டு தண்ணிர் விடுவது சிறப்பு . தவறும் பட்சத்தில் 3 வது தின்ம் தலைக்கு தண்ணிர் விடவேண்டும் .அதன்பின் பெண்ணுக்கு புத்தாடை, கழுத்துக்கு பூமாலை, புதுபாவாடை , தாவணி உடுத்தவும். குழந்தைக்கு நல்லெண்ணெயும் கீரை விதையும் கொடுக்கவும்.
 
ஆரோக்கியத்தை கருதி , உளுத்தம் களி , உளுத்தம் பருப்பு சாதம் போன்றவை செய்து கொடுக்கவும். பருவம் அடைந்த பெண்ணை சடங்கு ( ருது மங்கள ஸ்நாணம் ) முடியும் வரை வெளியில் நடமாட விடுவதில்லை. பாதத்தில் ஒரு விரலில் இரும்பு மெட்டி அணிவது மரபு.
 
ருதுவான 16ம் நாள் பூப்புனித நீராட்டு செய்வது உத்தமம். தவறும் பட்சத்தில் ருது மங்கள ஸ்நாணம் நடத்திட ஒரு சுபதினத்தை தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். அன்றைய தினம் ஒரு குருக்களைய்யாவை நியமித்து வீட்டில் கிரக சுத்தி செய்து கும்பம் வைத்து , ஹோமம் வளர்த்த்ய் பூஜைகள் செய்ய வேண்டும்.
 
சுபவேளையில் பெண்குழந்தைக்கு கும்ப நீரை அபிசேகம் செய்யவேண்டும். பின் தாய் மாமன் கொண்டுவந்த புத்தாடைகளை அணிவித்து , நல்ல பூமாலைகளை அணிவித்து , சீர்வரிசை பொருட்களுடன் விளக்கின் முன் இருத்தி பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறவேண்டும் .
 
அழைப்பிற்கு இணங்கி வருகை தந்திருக்கும் உறவினர்களையும் , விருந்தினர்களையும் உபசரித்து விருந்து நடத்திட வேண்டும்.

திருமண சடங்குகள்!
 
குலதெய்வம் , இஷ்ட தெய்வங்கட்குக் காணிக்கை!
 
திருமணம் உறுதி செய்யப்பட்ட பின் , இதர திருமண காரியங்கள் தொடங்கு முன் , இறையருள் வேண்டித் தத்தம் குல தெய்வம் இஷ்ட தெய்வங்கட்கு விருப்பம் போல் தொகை காணிக்கையாகப் போட ஒதுக்கி வைப்பது அல்லது உண்டியலில் சேர்ப்பது  மரபு .

இறைவனுக்கு முதன்முதல் திருமண அழைப்பிதழ் சமர்ப்பணம்!
 
திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்ததும், அவற்றை மக்களுக்கு அனுப்பும் முன், இறைவன் பாதத்தில் அழைப்பிதழ் ஒன்றை தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, பூ, இவற்றுடன் வைத்து, அர்ச்சனை வழிபாடு செய்தல் மரபு.

அழைப்பிதழ் கொடுப்பது, ம்ஞ்சள் முதலிய மங்கலப்பொருட்கள் வாங்குதல்!

முதல் அழைப்பிதழ் கோவிலுக்கு சமர்ப்பித்த பின்பு அழைப்பிதழ்களை மற்றவர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுக்கலாம். வீட்டு மாப்பிள்ளைகளுக்கு மஞ்சள் தடவிய தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, விரலி மஞ்சள் ஆகியவற்றுடன் அழைப்பு கொடுப்பது வழக்கம் . பின் மற்றவர்களை ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்று திருமணத்திற்கு அழைப்பது வழக்கம் .
 
குறிக்கப்பட்ட நாளில் நல்வேளையில் விரலி மஞ்சள் , குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மல்லிகைசரம், கல்கண்டு ஆகியவைகளை முதலில் வாங்கிய பின் பிற பொருட்களை வாங்குவார்கள்.
 
 
முகூர்த்தக்கால் நாட்டல்!

முகூர்த்தக்கால் குறிப்பிட்ட நாளில் நல்வேலையில் நாட்ட வேண்டும் .

அரசு, மா, பலா, மரத்தின் கம்பு 5 அடி  நீளத்தில் செம்மண், சுண்ணாம்பு பட்டைகள் மாறி மாறி அடித்ததாக இருக்கவேண்டும் .

மஞ்சள் நீரில் நனைத்துக் காயவைத்த புது துணியில் நவதானியம் , பருத்திக்கொட்டை , நாணயம் இவற்றை வைத்து ஒரு கிழியாக மஞ்சள் நூல் கயிற்றால் கட்டி , அத்துடன் மாவிலைக் கொத்து சேர்த்து வைத்து ஒரு மஞ்சள் கயிறால் நாட்காலின் உச்சியில் கட்ட வேண்டும். கன்னி மூலையில் ( தென்மேற்கு மூலை) குறிப்பிட்ட இடத்தில் குழிதோண்டி அதில் பால், நவதானியம், சந்தனம், பணம் ( காசுகள் ) போடவேண்டும் .
 
பின் ஒரு வாழையிலையில் மஞ்சள் பிள்ளையார், நிறை நாழி, மாவிலையுடன் நிறைகுடம், திருவிளக்கு, தேங்காய், பழங்கள், தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு ) வைத்து தூபதீபம் கற்பூரம் காட்டி வழிபாடு செய்து  பந்தல்காரருக்கு திருநீறு, சந்தனம், தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு  ஆகியவற்றுடன் பணமும் கொடுத்து நாட்காலை மேற்படி குழியில் நட வேண்டும் .
 
 
 
  
 

2 கருத்துகள்: