ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

திருச்செந்தூர் ஆவணி திருவிழா!

 

 
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள் ஆவணி திருவிழா முக்கியமானது. வித்தியாசமானது.

சண்முகர் வருடத்தில் காணும் இரு பிரம்மோச்சவத்தில் 7, 8 ம் திருநாட்களில் 7ம் திருநாள் அதிகாலையில் கருவறையை விட்டு வெளி வந்து சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுவார். பின்னர் வெற்றிவேர் சப்பரத்தி பிள்ளையன் மண்டபத்திற்கு வருவார். அங்கு அவருக்கு சிறப்பான அபிஷேகம் நடைபெறும்.
 
அதன் பின்னர் சண்முகருக்கு சிவப்பு பட்டு, சிவப்பு நிற புஷ்பங்களால் அலங்கரித்து தங்க சப்பரத்தில் எழுந்தருளுவார் மாலை 3 மணி சுமாருக்கு. இதை சிவப்பு சாத்தி என்பார்கள்..  எட்டு மாடவீதிகளில் வலம் வந்து சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு வர நடு நிசி 2 மணி ஆகும்..



8-ம் நாள் அதிகாலை அந்த அலங்காரம் களைக்கப்பட்டு மற்றுமொரு சிறப்பு அபிஷேகத்திற்குப் பிறகு வெண்பட்டு , வெள்ளை நிறப்பூக்களால் அலங்கரிப்பார்கள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளுவார் சண்முகர். எட்டு வீதிகளியும் சீக்கிரம் வலம் வருவார் சண்முகர்.



அதுபோல வெள்ளை சாத்தி ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும். வெள்ளை சாத்தியை கண்டு இறைவனை தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்று கூறுகிறார்கள்!

பின்னர் அந்த அலங்க்காரம் களைகப்பட்டு. வெகு வெகு விமரிசையாக அபிஷேகம் அவருக்கு நடைபெறும்.



அதன்பின்  சண்முகருக்கு பச்சை பட்டு பச்சை நிறப்புஷ்பங்களால் அலங்காரம் செய்வர். பகல் 11 மணி அளவில் எட்டு திருவீதிகளிலும்  உலாவருவார் சண்முகர். இம்மூன்று தரிசனங்களுமே கண்கொள்ளா காட்சியாகும் .



இந்த சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி விழா மற்ற தலங்களில் காண இயலாதது.

சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி என்பது மும்மூர்த்திகளை பிரதிபலிக்கும் விழாவாகும். அதாவது முருகப் பெருமான் இத்தலத்தில் சிவன், பிரம்மா, பெருமாள் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும்.



அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி தேரோட்டங்கள் நடைபெறும்.



சிவப்பு சாத்தி தேரோட்டத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும்.



வெள்ளை சாத்தி நடக்கும் தினத்தன்றே மாலையில் பச்சை சாத்தி வரும்.

அதை பார்த்தாலே வாழ்வில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும்.
எனவே பச்சை சாத்திக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுவதுண்டு.

சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி மூன்றையும் கண்டு மும்மூர்த்திகளின் அருளைப் பெற்றால் எளிதில் முக்தி பெற முடியும் என்று திருச்செந்தூர் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மும்மூர்த்திகள் உலா வரும் ஆவணித் திருவிழாவை கண்டு களிப்பது பக்தி மட்டுமல்ல பலனும் தரக்கூடியதாகும்.






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக