சனி, 6 ஆகஸ்ட், 2016

தம்பதி ஒற்றுமைக்கு ஐக்யபத்ய வழிபாடு!


தம்பதி ஒற்றுமைக்கு அருள் செய்யும் ஐக்யபத்ய வழிபாட்டை அறிவோம்.


நல்லதொரு சுபநாளில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து மடியுடுத்தி, பூஜையறையில் தீபம் ஏற்றி வையுங்கள். பிறகு, அரிசி மாவினால் ஸ்வஸ்திகம் வரைந்து அதன் மீது இரண்டு குத்துவிளக்குகளை தீபமேற்றி வைக்க வேண்டும். பின்னர், அன்றைய பஞ்சாங்கக் குறிப்புகளைச் சொல்லிவிட்டு, கீழ்க்காணும் குறிப்புகளின்படி மந்திரம் சொல்லவும் - செய்யவும் வேண்டும்.


ஓம் சமஞ்சந்து இத்யாதி மந்த்ரஸ்ய
சிவித் யீருபதி :  (நெற்றியில் தொடுக)
அனுஷ்டுப் சந்த : (மூக்கில்)
சாவித்ரீ தேவதா (இதயத்தில்)
அனயோர் தம்பத்யோ அவிச்சிந்ந ப்ரீதி
அபிவிருத்யர்த்தே விநியோக :



(கைகூப்பி 11 முறை இதைச் சொல்லி வணங்க வேண்டும்)


பிறகு, கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.


ஓம் சமஞ்சந்து விச்வே தேவதா
சமாபோ இருதயாநி நௌ
சம்மாதரிச்வாசம் தாதா
சமுதேஷ்டயீ ததாது நௌ



இதையடுத்து, ஐக்ய பத்ய சூக்த மந்திரம் கூற வேண்டும்.


ஸமானோ மந்த்ர: ஸமிதி ஸமானீ ஸமானம் மன: ஸஹ
சித்த மேஷாம் ஸமானம் கேதோ அபிஸம்ரபத்வம்
ஸம்ஞானேன்வோ ஹவிஷா யஜாம: ஸமானீவ ஆஹுதி:
ஸமானா ஹ்ருதயானீவ: ஸமானமஸ்து வோமன:
யதாவ: ஸுசகா ஸதி (பெயர்) புருஷ பத்நீ அந்யோந்ய :



(இதை 32 முறை ஜபிக்கவும்)


பின்னர் ஸ்த்ரீ புருஷ வஸ்ய துதியை 3 முறை கூறி, தீபத்தில் அரளி மலரைப் போட்டு பழம், கல்கண்டு, தாம்பூலம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.


இந்த பூஜை வழிபாடுகள் முடிந்ததும், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் படத்துக்கு சந்தன குங்குமத் திலகம் இட்டு, தீபாராதனை செய்து வழிபடுவது விசேஷம். 54 நாட்கள் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வணங்கிவர, உமையருபாகனாய்த் திகழும் இறைவன், உங்களையும் மனம் ஒருமித்த தம்பதியாய் வாழ வைப்பான்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக