ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

திருவோணத் திருநாள்! வாமனர் த்யானம்!

முக்தாகெளரம் நவமணிலஸத் பூஷணம் சந்த்ரஸம்ஸ்தம்ப்ருங்காரை ரலகநிகரை ஸோபி வக்த்ராரவிந்தம்ஹஸ்தாப்ஜாப்யாம் கநககலஸம் ஸுத்ததோயபி பூர்ணம்தத்தயந்நாட்யம் கநகசக்ஷகம் தாரயந்தம் பஜாமஹ


-வாமனர் த்யானம்
மூலம்:

ஓம் க்லீம் ஸ்ரீம் வம் நமோ விஷ்ணவே ஸுரபதயே மஹாபலாய ஸ்வாஹா.

பொதுப்பொருள்:
தன் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தும் குறுமனித வடிவாக வந்திருப்பது திருமாலே என்பதை அறிந்தும் திருமாலுக்கே தானம் தரப்போகிறோம் என்ற அகந்தையில் மூவடி மண்ணை தானமாகக் கொடுத்தான் மகாபலி சக்ரவர்த்தி. ஓரடியால் விண்ணையும் ஈரடியால் மண்ணையும் அளந்து மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என விஸ்வரூப வடிவினனாய் மாறிய திருமால் கேட்க தன் தலை மீது திருமாலின் திருவடியை வைக்க வேண்டி நின்றான் அகந்தை அழிந்த மகாபலி.

(வாமன மூர்த்தியாய் திருமால் அவதரித்த அன்று இத்துதியை பாராயணம் செய்தால் பேரெழில் உண்டாகும்; அனைத்து நல்முயற்சிகளிலும் வெற்றி கிட்டும்.)



ஸ்ரீ ஸ்ரீநிவாச மங்கள ஸ்லோகம்!

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே!

பொதுப் பொருள்: திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீயப்பதியான ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

(புரட்டாசி சனிக்கிழமைகளில் இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.)


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக