வெள்ளி, 30 டிசம்பர், 2016

ஆருத்ரா தரிசனம்!

 
 
 
"கோவில்' என்ற சிறப்புப் பெயர் தில்லைக்கும் திருவரங்கத்துக்கும் மட்டுமே உண்டு.
 
உபாசனைகளில் குறிப்பிடப் படும் ஆறு ஆதார ஸ்தானங்களில், மூலாதாரத்தைக் குறிக்கும் தலம் திருவாரூர் என்றும்,

சுவாதிஷ் டானத்துக்குரிய தலம் திருவானைக்காவல் என்றும்,

மணிபூரகத்தைக் குறிப்பது திருவண்ணாமலை என்றும்,

தில்லையம்பதியான சிதம்பரத்தை அனாஹத க்ஷேத்ரமாகவும்,

விசுத்திக்குரிய தலமாக காளஹஸ்தியும்,

ஆக்ஞா க்ஷேத்திரமாக முக்தியைத் தரும் காசியும் கூறப்பட்டுள்ளன.
 

இத்தகைய பெருமை வாய்ந்த சிதம்பரேசனின் துணைவியான அன்னை சிவகாம சுந்தரியை வாக்கிற்கு அதிதேவதையான "மனோன்மணி' என்ற சக்தி ரூபமாக சாத்திரங்கள் கூறுகின்றன.

சிதம்பரத் தலத்திற்கு கனகசபை அல்லது பொன்னம்பலம் என்று பெயர்.

இதேபோல் ஹாலாஸ்ய க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் மதுரையம்பதிக்கு ரஜதசபை அல்லது வெள்ளியம்ப லம் என்றும்,

திருவாலங்காடு தலத்துக்கு ரத்ன சபை என்றும்,

திருநெல்வேலி ஆலயத்திற்கு தாமிர சபை என்றும்,

திருக்குற்றாலத்திற்கு சித்ர சபை என்றும் பெயர் வழங்கி வருகிறது.

இவையனைத்தும் கூத்தபிரானின் முக்கிய திருத்தலங்களாகும்.
 

இவற்றைத் தவிர, ராமாயண காவியத்தாலேயே போற்றப்பட்ட தலம் "ஆதிசிதம்பரம்' எனப்படும் திருவெண்காடாகும். சீர்காழிக்கு அருகில் உள்ள இத்தலத்திலும் நடராஜப் பெருமானுக்குத் தனி நடனசபை உண்டு. ஸ்படிகலிங்க பூஜையும், ஆகாயத் தத்துவ ரகசியமும் உள்ளன. ஒப்பற்ற அழகும் சான்னித்தியமும் உள்ள நடராஜரது பாதத்தில், பதினான்கு சதங்கைகளுடைய காப்பு அணிந்துள்ளார். பதினான்கு உலகங்களும் இவரது பாத அசைவினால் அசையும் என்பதை இது காட்டுகிறது. இவரது இடுப்பில் 81 சங்கிலி வளையங்கள் இணைத்த அரைஞாண் அணிந்துள் ளார். இது "ப்ரணவம்' முதலாக "நம' முடிய உள்ள 81 பத மந்திரங்களைக் குறிப்பிடுகிறது.
 
இருபத் தெட்டு எலும்பு மணிகளைக் கொண்ட ஆபரணம் ஒன்றினையும் அணிந்துள்ளார். இது இருபத் தெட்டு சதுர்யுகங்கள் முடிந்துவிட்டதைக் குறிப் பிடுகிறது. இவரது மார்பில் ஒருபுறம் ஆமை ஓடும், ஒருபுறம் பன்றிக் கொம்பும்போல் அமைந்த பதக்கமும் அணிந்துள்ளார். இது "என்பொடு கொம் பொடு ஆமை இவை மார்பிலங்க' என்ற கோளறு பதிகத்தை நினைவூட்டுகிறது. இ
 
வரது தலையில் ஷோடச கலைகளைக் குறிக்கும் பதினாறு சடைகள் உள்ளன. மயிற்பீலியும் அணிந்துள்ளார். மீன் போன்ற வடிவத்தில் கங்கையும், பிறைச்சந்திர னும் இவரது சிரசை அலங்கரிக்கின்றன. இறைவ னது நடனத்தை அருகில் நின்று களிக்கும் அன்னை சிவகாமசுந்தரி, "மஹேச்வர மஹாகல்ப மஹா தாண்டவஸாக்ஷினீ' என்ற லலிதா ஸஹஸ்ரநாம வரியை நமக்கு நினைவூட்டுகிறாள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நடராஜப் பெருமானின் பெருமையை விளக்கும் சிதம்பர மஹாத்மியம் என்ற நூல், "இறைவனது கரத்தில் உள்ள உடுக்கை படைக்கும் தொழிலையும், அபயக் கரம் காத்தலையும், ஒரு கரத்தில் உள்ள அக்னி அழித்தலையும், தூக்கிய திருவடி அருளையும், முயலகன்மீது வைத்திருக்கும் பாதம் மறைத் தலையும் செய்கிறது. இந்த ஐந்தொழில்களையும் இறைவன் தனது ஸங்கல்ப மாத்திரத்தில் நடத்துவதை இது குறிப்பிடுகிறது' என்று கூறுகிறது.

இவ்வாறு ஈசன் திருநடனம் புரியும் திருவாதிரைத் திருநாளில் நாம் அனைவரும் ஆடவல்லானாகிய சிவபிரானைப் போற்றிப் பரவுதல் வேண்டும்.
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக