வியாழன், 1 டிசம்பர், 2016

தொலைந்து போனதை திரும்ப கார்த்தவீர்யார்ஜுன மந்திரம்!



கார்த்த வீர்யார்ஜுன மந்திரம் : தொலைந்து போனதை திரும்ப பெற உதவும் மந்திரம்

உங்கள் இழந்து போன உடமைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை மீட்டு தரவல்ல , அதி அற்புதமான மந்திரம் - இந்த கார்த்த வீர்யார்ஜுன மந்திரம்.


உங்கள் வீட்டில் தொலைந்து போன பொருட்கள்,


நீண்ட , நெடு நாட்களாக உயிருக்குயிராக பழகிய நண்பர், சந்தர்ப்ப சூழ்நிலை / விதி வசத்தால்,  இழந்து போன நட்பு ,

அவருடனான நட்பைப் புதுப்பிப்பதின் மூலம் , உங்களுக்கு நிறைய அனுகூலங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கலாம் / வாழ்வில் மீண்டும் ஒளி கிடைக்கலாம். .

எதேச்சையா , தன்னாலே நடக்கற மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்துட்டா? அந்த அதிசயம் செய்வது தான் இந்த மந்திரம்..!


கார்த்த வீர்யார்ஜுன நாம ராஜா பாஹூ ஸகஸ்ரவான்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண { ----------}
கதம் நஷ்டம்ச லப்யதே..


{ -----------------} - இந்த இடத்தில் , நீங்கள் சந்திக்க விரும்பும் உங்கள் நண்பர் பெயரை / தொலைந்து போன பொருளை சொல்லவும்.


மேலே சொன்ன மந்திரம் தான் , கார்த்த வீர்யார்ஜுன மந்திரம்.


விரும்பும் நபரை சந்திக்க வேண்டும் என்று ஆன்மார்த்தமாக மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டு - தினம் 1008 முறை , மேலே சொல்லிய மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். 108 நாட்கள் - தொடர்ந்து ஜெபித்து வர , உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்..


உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளின் மதிப்பை , உலகத்தில் உங்களை விட யாராலும் கணிக்க முடியாது.. 108 x 1008 முறை ஜெபம் பண்ணும் அளவுக்கு, அது மதிப்புள்ளதா என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.. !


நிறைய வளங்களும், அனுகூலங்களும் தர இறைவனை அருள் புரியட்டும்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக