ஞாயிறு, 25 டிசம்பர், 2016

“ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை!”

ஞான கணேசா சரணம் சரணம் 
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்

ஆக்கும் தொழில் ஐங்கரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே!
 
“வைரம்”

கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் 
அவம் பெருகும் பிழையோன் பேசத்தகுமோ!
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்கெமனாக எடுத்தவளே!
வற்றாத அருட் சுனையே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“நீலம்”

மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்!
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்1
வாலக் குமரி வருவாய் வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“முத்து”
 
முத் தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்!
வித்தே விளைவே சரணம் சரணம்!
வேதாந்த நிவாஸினியே சரணம்!
தத்தேறியநான் தனயன் தாய்நீ!
சாகாத வரம் தரவே வருவாய்!
மத்தேறு ததிக்கினை வாழ்வடைவேன்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“பவளம்”

அந்தி மயங்கிய வான விதானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்தமேடை!
சிந்தை நிரம்பவளம்பொழி யாரோ!
தேம்பொழிலாமிது செய்தவளாரோ!
எந்தையிடத்து மனத்தும் இருப்பாள்!
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தாள்!
மந்திர வேதமயப் பொருளானாள்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“மாணிக்கம்”

காணக் கிடையாக் கதியானவளே!
கருதக் கிடையாக் கலையானவளே!
பூணக் கிடையாப் பொலிவானவளே!
புனையக் கிடையாப் புதுமைத்தவளே!
நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடா தவளே!
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“மரகதம்”

மரகத வடிவே! சரணம் சரணம்!
மதுரித பதமே சரணம் சரணம்!
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்!
அரஹர சிவ என்றடியவர் குழும்
அவரருள் பெற அருள் அமுதே சரணம்!
வரநவ நிதியே சரணம் சரணம்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“கோமேதகம்”

பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் முன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தியெனத்
திடமாய் அடியேன் மொழியுந் திறமும்
கோமேதகமே குளிர் வான் நிலவே!
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்!
மாமெருவிலே வளர் கோகிலமே!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“பதுமராகம்”

ரஞ்சினி நந்தினி அங்கனி பதும!
ராகவி காஸ வியாபினி அம்பா!
சஞ்சல ரோக நிவாராணி வாணி
சாமபவி சந்த்ரகலாதரி ராணி!
அஞ்சன மேனி அலங்க்ருதபூரணி!
அம்ருத சொரூபிணி நித்யகல்யாணி!
மஞ்சுள மேரு ச்ருங்க நிவாஸினி!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
“வைடூரியம்”

வலையொத்த வினை கலையொத்த மனம்!
மருளப் பறையால் ஒலியொத் தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ!
நிகளம் துகளாக வரம் தருவாய்!
அலையற் றசைவற்று அநுபூதிபெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே!
மலயத்துவசன் மகளே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
 
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்

அவர் அற்புதசக்தியெல்லாம் அடைவார்
சிவரத்தினமாய்த் திகழ்வார்  அவரே!
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக