திங்கள், 7 மார்ச், 2016

சகலமும் தருவாள் அரசு காத்த அம்மன் (எ) சம்பத்கரீஸ்வரி!

 
 
உலகதிற்கே தாயாக விளங்குபவள் காஞ்சி காமாட்சி! அந்த தாயையே பதுகாக்கும் தலைமை தெய்வமாக விளங்குபவள் அரசு காத்த அம்மன். சக்தி மிக்க இந்த தெய்வத்தை வணங்கி வருவோமா!

பார்வதி தேவி காஞ்சியில் தவம் செய்த போது அரசு காத்த அம்மன், பச்சை அம்மன், சந்தை வெளி அம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய பெண் தெய்வங்கள் காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றவள் அரசு காத்த அம்மன். சோழ மன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் "அரசு காத்த அம்மன்" என்று பெயர் வந்ததாக கூறுவர் .

வலது காதில் குண்டலம், இடது கத்தில் தோடு அணிந்து இருப்பாள். இவள்  வடக்கு நோக்கி வீற்றிருகிறாள். இரு  கோரைப் பற்களும், நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ் கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் எந்த அம்பிகை இடது காலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். வடக்கு நோக்கிய தெய்வங்கள் நகரை காவல் காக்கும் தெய்வங்களாக விளங்குவார்கள்.

சம்பத்கரீஸ்வரி!
அரசு காத்த அம்மனுக்கு சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு. 'சம்பத்' என்றால் செல்வம். 'கரி' என்றால் யானை. யானை மீது பவனி வந்து செல்வங்களை வாரி வழங்குவதால் இப்பெயர் வந்தது.

இதற்கு அடையாளமாக அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இடம் பெற்றுள்ளது. இந்த அம்பிகைக்கு பௌர்ணமி, வெள்ளி கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி, ஆடி, கடைசி வெள்ளிகிழமை அம்மன் உலா நடக்கும்.

சிறப்பு:
இங்கு சம்பத் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத பால சுப்பிரமணியர், ஐயப்பன், சந்நிதிகள் உள்ளன.
அம்பிகையின் எதிரில் துதிக்கையால் ஒருவனை வதம் செய்யும் நிலையில் யானை சிற்பம் உள்ளது.

திருவிழா: சித்ரா பௌர்ணமி, நவராத்திரி, ஆடி, தை வெள்ளி.

திறக்கும் நேரம்: காலை 6 - 12; மாலை 4 - 8.30

இருப்பிடம்:  காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி. மீ.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக