சனி, 5 மார்ச், 2016

லக்ஷ்மி நீ வருவாய்! என் மனை மங்களம் பொங்க!

 
பாக்யாத லஷ்மி பாரம்மா மெட்டில் பாடவும்


(பல்லவி)

சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்

(சரணம்)
வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டு
வாழையும் தோரணமும் கட்டி
ஆசனம் அமைத்து நெய் விளக்கேற்றி
அன்புடன் அழைத்தோம்
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்


மல்லிகை, ஜாதி மருவுடன் ரோஜா
மணம் மிகு தாழை மலர்களும் மற்றும்
எல்லை இல்லாத பக்தியும் சேர்த்து
ஈஸ்வரியே உனக்கர்ச்னை செய்வோம்
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்


பாயசம் வகையும் பஷண வகையும்
பலவித பழங்களும் கொழுக்கட்டை தினுசும்
ஆசையுடன் உனக்கர்ப்பணம் செய்வோம்
அம்பிகையே எங்கள் அன்னையே வருக
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்

மாணிக்க சிவப்பில் மூக்குத்தி மின்ன
மரகத குண்டலம் காதினில் ஆட
ஆனிப் பொன் முத்து மாலைகள் அசைய
அச்சுதன் நாராயணன் மார்பினில் வாழும்
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்


அழகிய கூந்தல் இடைவரை புரள
அருள்மிகு கண்கள் கருணையும் பொழிய
எழில் மிகு நெற்றியில் குங்குமம் இலங்க
எங்கள் மங்கள பாக்கியங்கள் பெருக
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்

ஜல் ஜல் ஜல் என சதங்கைகள் ஒலிக்க
கண கண கண என வளையல்கள் குலுங்க
கல கல கல என கால் சிலம்பொலிக்க
கருணையால் எங்கள் கஷ்டங்கள் பறக்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்


கல்வியில் குழந்தைகள் சிறந்திட வேணும்
கன்னியர் நல்ல கணவனைப் பெறவும்
செல்வங்கள் சேர்ந்து மங்களம் பெருகி
சீருடன் சிறப்புடன் வாழ் என வாழ்த்தி
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்


கற்பூரம் சுற்றி கண்களில் ஒற்றி
கரத்தினில் மங்கள கங்கணம் கட்டி
பொற்பதம் சேவித்து பூக்களும் தூவி
புண்ணியம் அடைவோம் அன்னையே வருக
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய் என் மனை மங்களம் பொங்க
சௌபாக்ய லஷ்மி நீ வருவாய்
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக