சனி, 19 டிசம்பர், 2015

விநாயக சதுர்த்தியன்று அர்ச்சிக்கும் இலைகளும், பலன்களும்



விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகரை வழிபடுவது சிறந்தது.  ஒவ்வொரு இலைக்கும் தனிதனிப் பலன்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த பலன்கள் குறித்த தகவல்கள் கீழே:


1.
முல்லை இலை - அறம் வளரும்.

2.
கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3.
வில்வம் இலை - இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4.
அருகம்புல் - அனைத்து நலன்களும் கிடைக்கும்.

5.
இலந்தை இலை - கல்வியில் மேன்மையை அடையலாம்.

6.
ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப்பெறும்.

7.
வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

8.
நாயுருவி இலை - முகப் பொலிவும், அழகும் கூடும்.

9.
கண்டங்கத்தரி இலை - வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10.
அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

11.
எருக்கம் இலை - கருவிலுள்ள குழந்தைக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

12.
மருதம் இலை - குழந்தைப்பேறு கிடைக்கும்.

13.
விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணிவு கைவரப்பெறும்.

14.
மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்.

15.
தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனதிடம் கிடைக்கும்.

16.
மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17.
அரசம் இலை - உயர்பதவியும், பதவியால் பெருமையும் கிடைக்கும்.

18.
ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

19.
தாழம் இலை - செல்வச் செழிப்புக் கிடைக்கும்.

20.
அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21.
தவனம் கர்ப்பூர இலை - நல்ல கணவன்/மனைவி அமையப்பெறும்.

இந்த 21 இலைகளில் அருகம்புல் கொண்டு வழிபடுவதால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பதால் அருகம்புல் மிகச்சிறந்ததாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக