வியாழன், 21 ஏப்ரல், 2016

சுகம் வழங்கும் அசோகாஷ்டமி விரதம்!

Distanced tragedy and to providing thrills for ashokastami fasting

இந்து மதத்தில் ஒரு சில புனித மரங்களையும் தாவரங்களையும் பெருமைப்படுத்தும் வகையில் அவற்றின் பெயரால் விரதங்களும் வழிபாடுகளும் அமைந்துள்ளன. உதாரணமாக அமாசோமவார விரதம். அமாவாசையும் சோமவாரமும் (திங்கள் கிழமை) சேர்ந்து வரும்போது அன்று அரச மரத்திற்கு பூஜைகள் செய்து 108 முறை வலம் வரும் ஒரு விரதம். மேலும் வடசாவித்ரி விரதம் (வடம்=ஆலமரம்), ஆமலக ஏகாதசி (நெல்லி மரம்), பகுள அமாவாசை (வகுளம்=மகிழ மரம்), கதலீ (வாழை மரம்) விரதம் போன்று பல விரதங்கள் உள்ளன. இந்த வரிசையில் அசோக மரத்தைப் பெருமைப் படுத்தி பூஜிக்கும் விரதம், அசோகாஷ்டமி ஆகும்.
 

 

பல அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த அசோக மரத்தைப் பெண்கள் வழிபடுவதாகிய இந்த அசோகாஷ்டமி விரதம் வட மாநிலங்களில் பாத்ரபத (புரட்டாசி) மாதத்திலும் தென் மாநிலங்களில் சித்திரை மாதம் (சைத்ர மாதம்) வளர்பிறை அஷ்டமி நாளன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் இதை அஷ்டமிக்கு முந்தைய நாளான சித்திரை மாதம் வளர்பிறை சப்தமி அன்று அசோக சப்தமி என்றும் கொண்டாடுகின்றனர்.  

பிரிந்து தவித்த ஸ்ரீராமபிரான் மற்றும் சீதாதேவியின் சோகத்தை சிவபெருமானும், பார்வதிதேவியும் நீக்கி அருளிய நன்நாளாக இந்த அசோகாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இந்த அஷ்டமி நாளுக்கு அடுத்த நாள் - ஸ்ரீராமநவமிப் பெருவிழா. மேலும் பார்வதிதேவி தவம் இயற்றி சிவபெருமானை இந்த அசோகாஷ்டமி நாளன்று மணந்ததாக இன்னொரு புராணக் கதை தெரிவிக்கிறது. பார்வதி தேவியின் சோகத்தை நீக்கி (சோகம், அசோகமானது) சிவபெருமானோடு இணைத்ததால் இந்நாள் அசோகாஷ்டமி நாள் என்றானது. இதேநாளில் பார்வதிதேவியையும் பக்தர்கள் வழிபடுவதால் இது பவானி அஷ்டமி என்றும் கூறப்படுகிறது.


 
அன்றுசுத்தமானஇடங்களில்மருதாணிமரங்களைபயிர்செய்விக்கலாம். மருதாணிமரம்இருக்கும்இடத்திற்குசென்றுஅதற்குதண்ணீர்ஊற்றலாம். மூன்றுமுறைவலம்வரலாம். முட்கள்இல்லாமல்ஏழுமருதாணிஇலைகளைபறித்துஅதைகீழ்கண்டஸ்லோகம்சொல்லிக்கொண்டேவாயில்போட்டுமென்றுசாப்பிடலாம்.

த்வாமசோக நராபீஷ்ட மதுமாஸ ஸமுத்பவ;
பிபாமி சோக ஸந்தப்தோமாம் அசோகம் ஸதாகுரு.


ஓமருதாணிமரமேஉனக்குஅசோகம் (துன்பத்தைபோக்குபவன்) எனப்பெயர்அல்லவா. மதுஎன்னும்வஸந்தகாலத்தில்நீஉண்டாகிஇருக்கிறாய். நான் உனது அருளை பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிடுகிறேன்.
நீ , பலவிததுன்பங்களால் எரிக்கப்பட்டவனாய் இருக்கும்எனது துன்பங்களை விலக்கி வஸந்தகாலம் போல் எவ்வித துன்பம் இல்லாமல் என்னை எப்போதும் பாதுகாப்பாயாக.. என்பதுஇதன்பொருள்.

இதைசொல்லிமருதாணிஇலைகளைசாப்பிடவேண்டும். இதனால் நம் உடலில்தங்கிஇருக்கும்பற்பலநோய்கள், துன்பத்திற்கு காரணமான பாபங்களும் விலகுகிறது என்கிறது லிங்கபுராணம்.

ஒடிஸா மாநிலத்தில் பூரி ஜகந்நாதர் ஆலயத்திற்கு அடுத்து மிகப் பிரபலமானதும், அம்மாநிலத்திலேயே மிகப் பெரிய ஆலயமுமான லிங்கராஜ் ஆலயத்தின் ருக்முனா (ருக்மிணி) ரத யாத்திரையும், திரிபுரா மாநிலத்தில் பாறைகளில் மிகப் பிரமாண்டமான அளவில் வடிக்கப்பட்டுள்ள பல்வேறு தெய்வங்களின் திருஉருவங்களைக் கொண்ட உனகோடி என்ற இடத்தில் ஜாத்ரா வைபவமும் இந்த அசோகாஷ்டமி நாளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

வட மாநிலங்களில் அசோகாஷ்டமி நாளன்று பக்தர்கள் அசோக மரத்தின் கீழ் சிவ-பார்வதி மற்றும் ராமர்-சீதை திருஉருவங்களை வைத்து பூஜைகள் செய்து மரத்தை வலம் வந்து வழிபடுகின்றனர். விரத நாளான அன்று காலை புனித நீராடி, அசோக மரத்திற்கு அதே மரத்தின் மலர்கள், கொழுந்துகளால் பூஜை செய்கின்றனர். இதனால் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

 

சீதாதேவியை ராவணன் இலங்கையில் தன் மாளிகையில் இருந்த அசோக வாடிகா என்ற அசோக வனத்தில் சிறை வைத்திருந்ததாகவும், மீண்டும் ஸ்ரீராமரோடு சேரும் பொருட்டு சீதாதேவி இந்த அசோகாஷ்டமி நோன்பை அனுஷ்டித்ததாகவும் ஐதீகம். இந்த நாளில் திருமாலுக்குரிய புதன்கிழமையும் ராமபிரானின் புனர்பூச நட்சத்திரமும் ஒன்று கூடினால் மிகவும் புனிதமானது என்பது மக்களின் நம்பிக்கை.  

ஒடிஸா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் ஆலயத்தையடுத்து மிகப் பிரபலமானது, மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ஸ்ரீலிங்கராஜ் ஆலயம். இங்கு அசோகாஷ்டமி நாளன்று நடைபெறும் ரதயாத்திரை பூரி ரத யாத்திரை போன்றே மிகச் சிறப்பானது. இதன் பின்னணி என்ன?

காளியின் அருளைப் பெற்ற ராவணனை யுத்தம் செய்து வதைக்க வழி தெரியாது ராமர் திகைத்து நின்றார். விபீஷணனின் அறிவுரைப்படி  அவர் சைத்ர மாதம் சுக்ல பட்சத்தில்  ஏழு நாட்கள் புவனேஷ்வர், லிங்கராஜ் மற்றும் காளி தேவியை நோக்கி மனதாற வழிபட்டு எட்டாவது நாள் தேவியின் அருளால் தனக்குக் கிடைத்த பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தி, அசோகாஷ்டமி நாளன்று  அவனை வதம் செய்தார். இவ்வாறு தனக்கு உதவிய சிவபெருமானை ராமபிரான் தேரில் வைத்து ரதோற்சவம் நடத்திக் கொண்டாடினார் என்றும் அதன் தொடர்ச்சியாகவே அசோகாஷ்டமி நாளில் இங்கு ரத யாத்திரை நடைபெறுகிறது என்கிறார்கள். பிரத்தியேகமாக, நான்கு சக்கரங்களுடன் மரச் சட்டங்களால் வடிக்கப்பட்ட 35 அடி உயர ரதத்தில் லிங்கராஜ் என்ற சந்திரசேகரர், ருக்மிணி, வாசுதேவர் ஆகியோரின் பஞ்சலோக விக்கிரகங்களை எழுந்தருளச் செய்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஷ்வர் மௌசிமா ஆலயத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். இந்த யாத்திரையில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

ருக்மிணி எழுந்தருளுவதால் இது ருகுணா ஜாத்ரா  என்றும் அழைக்கப்படுகிறது. நான்கு நாட்கள் ராமேஷ்வரில் இருந்த பின்னர் மீண்டும் ரதத்தை லிங்கராஜ் ஆலயத்திற்கு திரும்ப இழுத்து வருகின்றனர். பூரி ஜகந்நாதர் ஆலய ரதயாத்திரையின் போது பயன்படும் மூன்று ரதங்களும் (ஜகந்நாதர், பலபத்திரர், சுபத்ரா) பூரி ஆலயத்தைக் கட்டியதாகக் கருதப்படும் இந்திரத்யும்னன் என்ற மன்னனின் மனைவியான குந்திசா ஆலயத்திற்குச் செல்கின்றன. அங்கு ஏழு நாட்கள் இருந்த பின்னர் மீண்டும் பூரி ஆலயத்திற்கு அங்கிருந்து திரும்ப வந்த வழியில் இழுத்து வரப்படுகின்றன. ஆனால் லிங்கராஜ் ஆலய ரதத்தை திருப்பாது, அப்படியே பின்னோக்கி இழுத்து வருவது இந்த யாத்திரையின் சிறப்பு அம்சமாகும். எனவே இந்த ரதம் ஒடிஸா மொழியில் “அனலூத்தா ரதம்’’ (திருப்பப்படாத) என்று அழைக்கப்படுகிறது. ரதத்தில் எழுந்தருளியிருக்கும் மூன்று விக்கிரகங்களைக் கொண்ட பீடம் மட்டும் முன் நோக்கி திருப்பிவைக்கப்படுகிறது.

திரிபுரா மாநிலத்தில், தலைநகரான அகர்த்தலாவிலிருந்து சுமார் 145 கி.மீ. தொலைவில் கைலாஷஹர் என்ற இடத்தில் அமைந்துள்ள உனகோடி குன்றுகள் பாறைகளில் மலைவாழ் மக்களால்  பிரமாண்டமாக வடிக்கப்பட்ட தெய்வச் சிலைகளுக்குப் பெயர் பெற்றவை. இச்சிலைகளின் பின்னணியில் ஒரு புராணக் கதை கூறப்படுகிறது - ஒரு முறை சிவபெருமான் தன்னையும் சேர்த்து ஒரு கோடி தேவர்களுடன் கைலாயத்திலிருந்து காசிக்குப் புறப்பட்டு வந்தபோது ஒரு நாள் இரவு இந்த உன கோடியில் தங்க நேர்ந்ததாம். இரவு நன்கு உறங்கவிட்டு, மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே அனைவரும் எழுந்து யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று சிவபெருமான் ஆணையிட்டாராம். ஆனால், மறுநாள் காலை சிவபெருமானைத் தவிர யாரும் துயில் எழாததால் அவர்கள் அனைவரும் கல்லாக மாறுமாறு சபித்து விட்டு தன் யாத்திரையைத் தொடர்ந்தாராம். அந்த தேவர்களின் சிலைகளே இவை என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

கோடிக்கு ஒன்று குறைவு என்பதால் இதற்கு உனகோடி என்ற பெயர் ஏற்பட்டதாம்! மேலும் மலைவாசியான கல்லுக்குமார் என்ற சிற்பி தன்னை கைலாயத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சிவபிரானையும் பார்வதி தேவியையும் நோக்கி தவம் செய்ய, சிவபெருமான் அவனிடம் ஓர் இரவில் ஒரு கோடி தேவர்களின் சிலைகளை வடித்து முடிக்குமாறு ஆணையிட்டாராம். சிற்பியும் அன்றிரவு முழுவதும் கண் விழித்து சிற்பங்களைச் செதுக்கியும் கூட மறுநாள் அதிகாலை ஒரு சிற்பம் குறையவே சிவபெருமான் சிற்பியை விட்டுவிட்டு கைலாயம் திரும்பியதாக இன்னொரு கதை கூறுகிறது. இங்கு பாறையில் வடிக்கப்பட்டுள்ள நாயுடன் காணப்படும் உனகோடீஸ்வரர் காலபைரவர் சிற்பம் 30 அடி உயரம் கொண்டது. அவருக்கு அருகில் துர்க்கை சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

ஏழு-ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பாறைச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த உனகோடியில் அசோகாஷ்டமி நாளன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும்  ஜாத்ரா உற்சவம் நடைபெறுகிறது. பக்தர்கள் இங்குள்ள அஷ்டமி  குண்ட் என்ற குளத்தில் புனித நீராடி சிவபெருமான், பார்வதிதேவியை வழிபட்டுச் செல்கின்றனர். இங்குள்ள சிற்பங்கள் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. உனகோடியில் சிவபெருமான் கால பைரவராகவும், காளிதேவி துர்க்கையின் அம்சமாகவும் எழுந்தருளியிருப்பதால் ராமபிரான் வழிபட்ட இவர்களை ராமர் ராவணனை வதம் செய்த அசோகாஷ்டமி நாளன்று ஜாத்ரா உற்சவத்தில் சிறப்பித்துக் கொண்டாடுவது வழக்கத்தில் வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக