சனி, 30 ஏப்ரல், 2016

வேண்டுவன எல்லாம் தரும் கந்தனின் 16 நாமங்கள்!

 வியாசர் ஸ்கந்த புராணத்தை ஆரம்பிக்கும் போதே, கந்தனின் உன்னதமான 16 பெயர்களைக் கூறி, அதற்கு பலஸ்ருதியும் கூறுகிறார்.

"ஸுப்ரமண்யம் ப்ரணமாம்யஹம்
ஸர்வக்ஞம் ஸர்வகம் ஸதா
அபீப்ஸிதார்த்த ஸித்யர்த்தம்
நாம ஷோடஸ ப்ரதமோ ஞான சக்த்யாத்மா
த்விதியோ ஸ்கந்த ஏவச
அக்னிபூஸ்ச த்ருதீயஸ்யாத்
பாஹுலேய: சதுர்த்தக:
காங்கேய: பஞ்சமோ வித்யாத்
ஷஷ்ட: சரவணோத்பவ:
ஸப்தம: கார்த்திகேய: ஸ்யாத்
குமாரஸ்யாத் அத அஷ்டக:
நவம: ஷண்முகஸ்சைவ
தஸம: குக்குடத்வஜ:
ஏகாதச: சக்திதர:
குஹோ த்வாதச ஏவச
த்ரயோதஸோ ப்ரம்மசாரி
ஷாண்மாதுர: சதுர்தச:
க்ரௌஞ்சபித் பஞ்சதசக:
ஷோடஸ: சிகிவாஹன:'

முருகனின் 16 நாமங்களைக் கூறுவதற்கு முன்பும் பின்பும் பலஸ்ருதி கூறுகிறார்.

கோரிய பொருட்களை அடைவதற்காக, எல்லாம் அறிந்தவனும் எங்கும் உள்ளவனுமான சுப்ரமண்யனை நமஸ்கரித்து முருகனின் 16 நாமங்களைக் கூறுகிறேன்.

1. ஞானசக்த்யாத்மா- ஞானம், சக்தி ஆகியவற்றின் உருவாக இருப்பவன்.

2. ஸ்கந்தன்- சத்ருக்களை அழிப்பவன்; (ஆறு குழந்தைகளையும் பார்வதி அணைக்க ஒன்றானவன்); ஆதாரமாக- பற்றுக்கோடாக இருப்பவன்; சிவஜோதியாக வெளிப்பட்டவன்.

3. அக்னி பூ- அக்னியில் உண்டானவன்; அக்னியால் ஏந்தப்பட்டவன்;அக்னி ஜோதியாக எழுந்தவன்.

4. பாஹுலேயன்- வாயு, அக்னியால் ஏந்தப்பட்டவன்.

5. காங்கேயன்- கங்கை நதியில் உண்டானவன்.

6. சரவணோத்பவன்- நாணற்காட்டில் பிறந்தவன். (அம்பிகையின் மறுவுருவம் சரவண மடுவாம்- அதனில் தோன்றியவன்).

7. கார்த்திகேயன்- கிருத்திகை நட்சத்திரத்தின் புதல்வன்.

8. குமாரன்- குழந்தையாக இருப்பவன்; (ஐந்து வயதுக்கு உட்பட்டவன்) இளைஞன்; யுத்தத்திற்கு அதிபதி; நிந்திப்பவரை அழிப்பவன்; மன்மதனைப் போல் அழகானவன்; லக்ஷ்மி கடாக்ஷம் அளிப்பவன்; அஞ்ஞானம் அழித்து ஞானம் ஈபவன்.

9. ஷண்முகன்- ஆறு முகம் உடைய வன்; கணேச, சிவ, சக்தி, ஸ்கந்த, விஷ்ணு, சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன்.

(அருணகிரியின் திருப்புகழ் பாடல் களைப் படித்தால் இது உண்மையென்று விளங்கும்).

10. குக்குடத்வஜன்- கோழியைக் கொடி யாகக் கொண்டவன்; சூரஸம்ஹாரத்திற்கு அக்னியே கோழிக் கொடியானான். சூர ஸம்ஹாரத் திற்கு பிறகு ஒரு பாதி கோழிக் கொடியானது.

11. சக்திதரன்- வேலை உடையவன்; சூரஸம்ஹாரத்திற்கு பராசக்தி வேலாக மாறிட, அதனை ஏந்தியவன். (11 ருத்ரர்களே முருகனுக்கு ஆயுதமாயினர்).

12. குஹன்- பக்தர்களின் இதயக் குகையில் வசிப்பவன்; முருகனுக்கே உகந்த ரகஸ்ய திருநாமம். இந்த குஹப்ரம்மத்தை லய குஹன், யோக குஹன், அதிகார குஹன் என்பர்.

(லய குஹன்- உயிரை ஒழிவில் ஒடுக்கி "ஒழிவில் ஒடுக்கம்' என்ற பதவி தருபவன்.

யோக குஹன்- ஒடுங்கிய உயிரை விரியச் செய்து யோக சக்தியை அளிப்பவன்.

அதிகார குஹன்- பஞ்சக்ருத்யங்கள் நடத்தி, அதிகாரம் அளிப்பவன்.)

13. ப்ரம்மசாரி- வேதஸ்வரூபன்; பரப்ரம்ம ஸ்வரூபன்; ப்ரம்மத்திலேயே லயித்திருப்பவன்.

14. ஷாண்மாதுரன்- ஆறு கிருத்திகா நட்சத்திர தேவிகளைத் தாயாக உடையவன்.

15. க்ரௌஞ்சபித்- க்ரௌஞ்ச மலையை வேல்கொண்டு பிளந்தவன்; அஞ்ஞானம் என்கிற மலையை- இருளை ஞானம் என்கிற வாளால் தகர்ப்பவன்.

16. சிகிவாஹனன்- மயிலை வாகனமாக உடையவன், சூரபத்ம சம்ஹாரத்திற்கு முன்பு இந்திரனே மயில் வாகனமானான். சூரசம்ஹாரம் முடிந்ததும் மாமரப் பாதி சூரனே மயில் வாகனமானான்.

மேலும் இந்த 16 நாமங்களை உச்சரிப்பதால் வரும் பலன்களை வியாசர் கூறுகிறார்.

"ஏதத் ஷோடஸ நாமானி
ஜபேத் ஸம்யக் ஸதாதரம்
விவாஹே துர்கமே மார்கே
துர்ஜயே சததைவ ச
கவித்வே ச மஹாஸாஸ்த்ரே
விக்ஞானார்த்தி பலம் லபேத்
கன்யார்த்தி லபதே கன்யாம்
ஜயார்த்தி லபதே ஜயம்
புத்ரார்த்தி புத்ரலாபம் ச
தனார்த்தி லபதே தனம்
ஆயு: ஆரோக்ய வஸ்யம் ச
தன தான்ய ஸுகாவஹம்'

அன்புடன் எப்போதும் இந்த 16 நாமங்களை ஜெபித்தால், திருமணத்திலும், செல்ல முடியாத வழியில் செல்லும்போதும், வெல்ல முடியாத கடினமான காரியத்திலும், கவிஞன் ஆவதிலும், மகத்தான உயர்ந்த சாஸ்திரங்களிலும் வேண்டிய பலனை அடையலாம். கன்னிகை வேண்டுபவன் கன்னிகையையும்; வெற்றியை வேண்டுபவன் வெற்றியையும்; பிள்ளைப் பேறு வேண்டுபவன் புத்திரர்களையும்; பொருள், தனம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், யாவரையும் வசீகரிக்கும் தன்மை, பொருள், தான்யம், சுகம், யாவும் பெற்று இன்புறுவான்..

பிரம்ம- நாரத சம்வாதமாக சுப்ரமண்ய ஸஹஸ்ர (1,000) நாமங்களுக்கு பலஸ்ருதி யாது கூறப்படுகிறது?

"இதிதாம்னாம் ஸஹஸ்ராணி
ஷண்முகஸ்ய ச நாரத
ய: படேத் ஸ்ருணுயாத் வாபி
பக்தி யுக்தேன சேதஸா
ஸஸத்யோ முச்யதே பாபை:
மனோ வாக்காய ஸம்பவை:
ஆயுர் வ்ருத்திகாம் பும்ஸாம்
ஸ்தைர்ய வீர்ய விவர்தனம்
வாக்யேன ஏகேன வக்ஷ்யாமி
வாஞ்சிதார்த்தம் ப்ரயச்சதி
தஸ்மாத் ஸர்வ ஆத்மனா ப்ரம்மன்
நியமேன ஜபத் ஸுதி:'

அன்புடன் இந்த 1,000 பேர்களைப் படித் தாலோ கேட்டாலோ மனம், வாக்கு  இவற்றால் உண்டான பாவங்கள் அழியும். வாழ்நாள் அதிகரிக்கும். உடல் பலம் அதிகரிக்கும். ஒரு நாமம் சொன்னாலும் கேட்ட பொருள் அடைய லாம். ஆக, யாவரும் நியமத்துடன் இதனை ஜெபம் செய்ய வேண்டும்.

16 நாமங்கள் சொல்வதன் பலன், 1,000 நாமங்கள் சொல்வதைவிட அதிகமாக உள்ளதே! ஆக 16 நாமங்களே மிக உன்னதம் போலும்!
                                        
                                                                                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக