புதன், 10 பிப்ரவரி, 2016

'வேல் மாறல்'



வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய   'வேல் மாறல்'

     
  ... வேலும் மயிலும் துணை ...


திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

( ...
இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... )


( ...
பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் "திரு" என்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... )


  1.
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        
விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  2.
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
        
அடுத்தபகை அறுத்(து)எறிய
        
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

  3.
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
        
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
        
கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  4.
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
        
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
        
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  5.
சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
        
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
        
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

  6.
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
        
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
        
எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

  7.
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
        
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
        
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

  8.
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
        
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
        
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

9.
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
        
முளைத்த(து)என முகட்டின்இடை
        
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

10.
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
        
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
        
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

11.
தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
        
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
        
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

12.
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
        
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
        
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

13.
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
        
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
        
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

14.
சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
        
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
        
இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

15.
சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
        
பெருத்தகுடர் சிவத்ததொடை
        
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

16.
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
        
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
        
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

17.
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
        
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
        
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

18.
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
        
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
        
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

19.
தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
        
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
        
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

20.
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
        
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
        
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

21.
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
        
முளைத்த(து)என முகட்டின்இடை
        
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

22.
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
        
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
        
எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

23.
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
        
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
        
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

24.
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
        
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
        
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

25.
சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
        
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
        
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

26.
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
        
அடுத்தபகை அறுத்(து)எறிய
        
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

27.
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
        
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
        
கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )


( ...
முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் ... )


        
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
        
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
        
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
        
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.


        
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
        
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
        
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
        
தொளைத்தவேல் உண்டே துணை.


       
... ... ...
வேலும் மயிலும் துணை ... ... ...








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக