வெள்ளி, 20 மே, 2016

லஷ்மி குபேர பூஜை!



திருமகளின் திருவருளைப் பற்றி நினைத்தவுடனே அவள்  எப்போதும் நம்மை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணந்தான் முதலில் வருகிறது. ஆம் அவளும் அள்ளித் தரத்தான் ஆசைப்படுகிறாள்

கொடுக்க அந்த அலைமகளுக்குக் கருணை மிகுந்திருந்தாலும் பெற்றுக்கொள்ள நமக்கு தகுதி யிருக்க வேண்டாமா? அந்த தகுதியை வளர்த்து கொண்டு அவள் அருள் பெறுவோம்

ஐப்பசி மாதம் முழுவதும் லஷ்மி குபேர பூஜை செய்ய உகந்தது. அதிலும் குறிப்பாக தீபாவளி அமாவாசை முடிந்து பிரதமை ஆரம்பிக்கும் நேரம் மிக மிக சக்தி வாய்ந்த நேரமாக கருதப் படுகிறது

வீட்டினை சுத்தமாக பெருக்கி முடிந்தால் கோமியத்துடன் கொஞ்சம் மஞ்சள் கலந்து தெளிக்கவும் பின்னர் சுத்தமாக தண்ணீர் கொண்டு துடைக்கவும்


பூஜை செய்யும் முறை -

விநாயகரை வணங்கி பூஜை சிறப்பாக நடக்க வேண்டுவோம் -
மஞ்சளில் பன்னீர் கலந்து மஞ்ச பிள்ளையாரை பிடித்து வைத்து ஆரம்பிக்கவும்

பூஜையறையிலோ அல்லது வேறு எங்கோ கிழக்கு பார்த்து குபேர பூஜை செய்ய வேண்டும்

சுவாமிகள் அனைத்தும் கிழக்கு நோக்கியிருக்க வேண்டும்.
நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும் 

குபேரன் படம், லஷ்மி படம் எடுத்து அருகே வைக்கவும்

தாம்பாளம் அல்லது மனைக்கட்டையில் அல்லது சுத்தமான தரையில் குபேரன் படத்திற்கு முன் கீழ்கண்ட படத்தை அரிசி மாவினை கொண்டு வரைந்து கொள்ளவும். அரிசி மாவுடன் தண்ணீர் கலக்காமல் சுத்தமான பன்னீர் கலந்து அரிசி மாவினை செய்யவும் 

அடுத்து வரைந்துமுடித்தவுடன் ஓவ்வொரு கட்டத்திலும் உள்ள எண்களுக்கு ஏற்ப 1 ரூ, அல்லது 2 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயங்களை வைக்கவும்.

(எண் 27 எனி 27 = 1 ரூநாணயங்களை கட்டத்தில் வைக்கவும்)

அடுத்து அன்னை மஹாலஷ்மியினை கும்பத்தில் ஸ்தபிக்க வேண்டும்

ஒரு வாழை இலை போட்டு அதன் மேல் கால் படி பச்சரிசியினை பரப்பவும்  அதன் மேல் சொம்பினை வைக்கவும் அதில் முக்கால் அளவு தண்ணீரை நிரப்பவும், பின்னர் மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு மட்டை தேங்காயினை சொம்பின் மேல் வைக்கவும், மாவிலைகளை தேங்காயினை  சுற்றியும் அழகாக அமைக்கவும்.

இப்போது நம்ம வீட்டுக்கு மஹாலஷ்மியும் குபேரனும் வந்தாச்சு

அடுத்து அவர்களுக்கு முன் அழகான 5 முக விளக்கினை ஏற்றிவைக்கவும்,  மண் அகல் விளக்குகள் 2னையும் உடன் ஏற்றி மேற்கு நோக்கி அமைக்கவும்.

தீபஓளியின் வாயிலில் அன்னை மஹாலஷ்மி ஓளிவடிவில் வந்தாச்சு

2 செட் வெற்றிலை பாக்குகள் எடுத்து குபேரனுக்கும் மஹாலஷ்மிக்கும் வைக்கவும்

அடுத்து 2 தலை வாழை இலைகளை எடுத்து முன்னே வைக்கவும் அதில் பிரசாதம் எடுத்து வைக்கவும்

கண்டிப்பாக இருக்க வேண்டிய பிரசாதங்கள் குபேரனுக்கு

1. சக்கரை
2. பாதாம் பருப்பு
3. பிஸ்தா பருப்பு 
4. முந்திரி பருப்பு
5. அக்ரூட்
6. பனங் கற்கண்டு 
7. ஜாங்கீரி ( அவருக்கு மிகவும் விருப்பம்)
8.  மாதுளம்பழம் ரொம்ப முக்கியம்
9. வாழைப்பூ ரொம்ப ரொம்ப முக்கியம்
10. ஓரு டம்பளர் சுத்தமான பால் ( பனங்கற்கண்டு, பாதாம் சேர்த்து) 
11. ரவா கேசரி  

இவைகளை அழகாக இலையினில் வைக்கவும்
அவசியம் வாழைப்பூ வைக்க வேண்டும்  
  
அன்னை மஹாலஷ்மிக்கு சில கனிவகைகள் வைக்கவும். வாழை, ஆப்பிள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களை அவளுக்கு படைக்கவும்

அடுத்து நாம் பூஜை ஆரம்பிக்க போகிறோம்

விநாயகர் பாடல் 

வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பால் சார்வார் தமக்கு

ஆபிராமி அந்தாதி 

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் வழித்துணையே

குபேரன் மந்திரம் 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா  

எனும் இம்மந்திரத்தினை 3000 முறை கண்டிப்பாக படிக்க வேண்டும்

உங்கள் இல்லத்தில் 3 பேர் இருந்தால் ஒன்றாக அமர்ந்து ஆளுக்கு ஆயிரம் முறை சொல்லாம். எண்ணிக்கைகளை கணக்கிட ரோஜா பூக்களை பயன்படுத்தி அன்னைக்கு சமர்பிக்கலாம்

மஹாலஷ்மி மந்திரம் 

ஓம் ஸ்ரீம் ஐம் செளம் லம் மஹாலஷ்மி ஸ்வாஹா - 108 தடவை சொல்லவும்

அடுத்து சாம்பிரணி மிகவும் முக்கியமாக போடவும்

முடிந்துபின்  தீபம் காட்டி பூஜையினை முடிக்கவும்  

பூஜை முடிந்தவுடனே கலைக்க வேண்டாம்
அடுத்த நாள் காலை முடிந்த அளவு வேறு பிரசாதம் வைத்து தூப தீபம் காட்டி பின்னர் கலைக்கவும்

மஹாலஷ்மியாக வழிபாடு நடத்தப்பட்ட செம்பிலிருக்கும் நீரினை வீடு அலுவலகம் எங்கும் தெளிக்கவும்.

நாணயங்களை எடுத்து ஒரு சின்ன மூட்டையாக கட்டி பெருமாள் கோவில் உண்டியலில் போட்டுவிடவும்.

மஹாலஷ்மி பூஜையினை சிறப்பாக செய்யவும்........

அன்னை அருள் நிச்சியம் உங்களுக்கு உண்டு.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக