வெள்ளி, 20 மே, 2016

மத்ஸய அவதாரம்!

Picture
 
சித்திரை தேய்பிரை-திரியோதசி-மத்ஸய  ஜெயந்தி
 
ஓம் சமுத்ரராஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)
 
      பிரளயை காலத்தில் தோன்றும், விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்ச அவதாரம். உலகின் முதல் உயிர் வாழ்க்கை நீரிலேயே உருவானதாக கூறுகிறது
 
   பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது.அப்படியே தான் திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம். பிரளய காலத்தில் மச்ச அவதாரம் எடுத்து திருமால் உலகைக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
 
குருவாயூரப்பனின் அத்யந்த பக்தரான நாராயண பட்டத்ரி, வாத நோயால் பீடிக்கப்பட்டார். அப்போது குருவாயூரப்பன், மீனிலிருந்து ஆரம்பித்து நாராயணீயம் எனும் காவியத்தை எழுத பட்டத்ரிக்கு ஆணையிட்டார். அதை தன் குருநாதர் எழுத்தச்சனிடம் கூறினார் பட்டத்ரி. தசாவதாரத்தில் முதல் அவதாரமான மச்சாவதாரத்தைத்தான் குருவா யூரப்பன் உணர்த்தினார் என எழுத்தச்சன் கூற திருவருளோடு குருவருளும் சேர நாராயணீயத்தை எழுதினார் பட்டத்ரி. அதில் மச்சாவதார மூர்த்தியை தியானித்து ‘ஜஷாக்ருதிம் யோஜந...’ என ஆரம்பிக்கும் துதியில் எட்டு லட்சம் யோஜனை நீளமுள்ள (ஒரு யோஜனை - ஒன்றரை மைல்) மீனாக உருமாறி சப்தரிஷிகளையும் ஓடத்தில் ஏற்றிக் கட்டி இழுத்து பிரளய காலத்தில் காப்பாற்றினாயே, அப்போது அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்களே, அதுபோல நானும் ஆனந்தமாக வாழ உன் அருள் எனும் மருந்தால் என் நோயை நீக்குவாயாக என பிரார்த்தித்தார். அதோடு மட்டுமல்ல சோமுகாசுரன் எனும் அசுரன் நான்முகனிடமிருந்து கவர்ந்த நான்கு வேதங்களையும் இந்த மச்சமூர்த்திதான் சோமுகாசுரனைக் கொன்று அவனிடமிருந்து மீட்டு நான்முகனிடம் தந்தார். அந்த மகத்தான பெருமை யுடைய மச்ச மூர்த்தி அவதார தினம் இது.
 

ஆனி வளர்பிரை-துவாதசி-கூர்ம ஜெயந்தி

ஓம் தராதராய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்
(தசாவதார கூர்ம-காயத்திரி)
 
ஓம் கச்சபேசாய வித்மஹே
மஹாபலாய தீமஹி
தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத்
(கூர்ம காயத்ரி)
 
   இரண்டாவது அவதாரம், கூர்ம அவதாரம். ஆமையானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இது உயிர் வாழ்க்கையானது நீரில் இருந்து நிலத்திற்கு பரவியமையைக் காட்டுகிறது.
 ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.
 
சித்திரை தேய்பிரை-பஞ்சமி-வராக ஜெயந்தி
 
ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி தன்னோ வராஹ ப்ரசோதயாத்
(தசாவதார-காயத்திரி)
 
      சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் பன்றி உருவத்தில் பலத்துடன் பூமியைக் கொம்புகளில் சுமந்தவாறு நாராயணன் தோன்றினார்.

“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை”- இது ஒரு தெய்வீக விடுகதை.

        குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீஎன்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் குபேரன். பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன்.
 
       குபேரன் கடனை கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீவராகப்பெருமாள்.
 
          அதானால் பன்றியாகிய ஸ்ரீவராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள்.
 
          திருப்பதி-வராக சுவாமி கோயில்: வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இது ஆதி வராக க்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும். அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும்.
 
          வராக அவதாரம் ஆதி வராகம், பிரளய வராகம், யஜ்ன வராகம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது. இங்குள்ள வராக சுவாமி “ஆதி வராகர்’ எனப்படுகிறார்.  இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது.
 

வைகாசி வளர்பிரை-சதுர்த்தசி-நரசிம்ம ஜெயந்தி

ஓம் வஜ்ரநகாய வித்மஹே
தீக்ஷ்ணதங்குஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)
 
        நரசிம்ம அவதாரம், மனித-மிருக உருவம். உடல் ரீதியாக விலங்கு நிலையில் இருந்து மனித உருவமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை எடுத்துக்காட்டுகிறது
 
  வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும்.
 

ஆவணி-திருவோணம்-வாமன  ஜெயந்தி

உலகளந்த பெருமாள் (திருவிக்ரமன்)

ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே
சூக்ஷ்மதேஹாய தீமஹி
தன்னோ வாமந ப்ரசோதயாத்
(தசாவதார-காயத்திரி)
 
    ஐந்தாவது அவதாரம் வாமனன்: குள்ள மனித அவதாரம். மிருக சுபாவம் கொண்ட உருவத்தில் இருந்து புத்தி கூர்மை உள்ள மனித இனமாக மாறிய நிலையை உணர்த்துகிறது.
புரட்டாசி மாதத்தில் சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபர் இருவரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.
    ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன.
 

சித்திரை-தேய்பிரை-துவாதசி-பரசுராம  ஜெயந்தி

ஓம் அக்னி சுதாய வித்மஹே
வித்யாதேஹாய தீமஹி
தன்னோ பரசுராம ப்ரசோதயாத்
(தசாவதார-காயத்திரி)
 
 
பரசுராமர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
 
 
07. ராம அவதாரம்                  
08. பலராமன் அவதாரம்
09. கிருஷ்ண அவதாரம்      
10.கல்கி அவதாரம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக