திங்கள், 26 அக்டோபர், 2015

காணாமல் போனவற்றை மீட்டுத்தரும் அரைக்காசு அம்மன்!






பொதுவாக புதுக்கோட்டை அருகேயுள்ள திருக்கோகர்ணம் பிரகதாம் பாளையே அரைக்காசு அம்மனாக வணங்கி வருகிறோம். களவு போனவை, காணாமல் போனவற்றை மீட்டுத்தரும் சக்தி வாய்ந்த தெய்வம் அரைக்காசு அம்மன்.



ஞாபக மறதியாக வைத்துவிட்ட பொருளைத் தேடும்போதும், காணாமல் போன பொருட்கள் கிடைக்கவும் இந்த அம்மனை எண்ணி வேண்டிக்கொண்டால் அவை கிடைக்கும். பொருள் கிடைத்ததும் வீட்டிலேயே வெல்லத்தில் பிள்ளையார்போல பிடித்துவைத்து, அதை அம்மனாக எண்ணி வழிபடவேண்டும்.






பின்னர் அந்த வெல்லத்தை அனைவரும் பிரசாதமாக உட்கொள்ளலாம். களவுபோன பொருட்கள் கிடைக்கவும், கொடுத்த கடன் திரும்ப வராமலிருந்தாலும், தங்கள் சொத்து கைக்கு வந்துசேர்வதில் தடையிருந்தாலும் இந்த அம்மனிடம் பிரார்த்தித்துக் கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அம்மனுக்கு வெல்லத்தில் பொங்கல் வைத்து நிவேதனம் செய்து வழிபடலாம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக