வியாழன், 28 ஏப்ரல், 2016

ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஷடாக்க்ஷர ஸ்தோதிரம்!

 
 
அதாதஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்
ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்
ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்
அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.

இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும்கேட்பவர்களுக்கும்,இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியதுவிரோதிகளைவெற்றி கொள்ளவும்நோய் நொடிகள் அண்டாமல்அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும்உலகிலுள்ளோர்அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமானமூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.

சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்
சரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ஸ்ரீயம்.

சரவணப் பொய்கையில் பிறந்தவரும்ஸ்கந்தனும்தன்னைசரணமடைந்தவர்களை காப்பவருமானதாங்களை சரணடையூம்எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

ராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்
ரதீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும்,தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும்கோடிமன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகலசெல்வங்களையும் அருள வேண்டும்.

பலாரி ப்ரமுகைர் வந்த்யவல்லீந்த்ராணி ஸுதாபதே!
வரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

இந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும்வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும்தன்னை அண்டியவர்களின்விருப்பத்தை நிறைவேற்றுபவனே!, எனக்கு சகல செல்வங்களையும்அருள வேண்டும்.

நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்
நவவீரைபூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்


நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும்சித்தர்கள்-கந்தர்வர்களாலும்வணங்கப்பட்டவரும்வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால்பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன்.எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.

பகவன் பார்வதீஸுநோஸ்வாமின் பக்தார்திபஞ்சன!
பவத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

பகவானே!, பார்வதி குமாரா!, தலைவனேபக்தர்களின் கவலைகளைப்போக்குகின்றவனேதங்களுடைய பாத கமலங்களில் குறைவற்றபக்தியையும்அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்கவேண்டும்.

வஸுதான்யம் யசகீர்திம் அவிச்சேதம்  ஸ்ந்ததே:
சத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்

தங்கம்தான்யம்அளவற்ற புகழ்மகன்-பேரன் என்று வம்ச விருத்தி,விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து,செல்வத்தையும் அருள் புரிவீர்களாக!

இதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்
படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பதசிந்திதாதிகா:

ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரத்தைஎப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும்மேலாக செல்வங்கள் கிடைக்கும்.
 
 

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

விஷ்ணு சஹஸ்ரநாமம்!


விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு: |
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந: || 1

பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி: |
அவ்யய: புருஷஸ் ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ க்ஷர ஏவ ச || 2

யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹவபுஸ் ஸ்ரீமாந் கேஸவ: புருஷோத்தம: || 3

ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர: || 4

ஸ்வயம்புஸ் ஸம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வந: |
அநாதி நிதநோ தாதா விதாதா தாதுருத்தம: || 5

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ: பத்மநாபோ அமரப்ரபு: |
விஸ்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ: || 6

அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தந: |
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் || 7

ஈஸாந: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: || 8

ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அநுத்தமோ துராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவாந்|| 9

ஸுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வதர்ஸந: || 10

அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமே யாத்மா ஸர்வயோக விநிஸ்ருத: || 11

வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: || 12

ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வயோநிஸ் ஸுசிஸ்ரவா: |
அம்ருதஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வராரோஹோ மஹாதபா: || 13

ஸர்வகஸ் ஸர்வவித்பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: || 14

லோகாத்யக்ஷஸ் ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ: || 15

ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி: புநர்வஸு: || 16

உபேந்த்ரோ வாமந: ப்ராம்ஸு ரமோகஸ் ஸுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ் ஸங்க்ரஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: || 17

வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரயோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: || 18

மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேஸ்யவபு: ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத் || 19

மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்கதி: |
அநிருத்தஸ் ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: || 20

மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: || 21

அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந்ஸ்திர: |
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா || 22

குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: || 23

அக்ரணீர் க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் || 24

ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா ஸம்வருதஸ் ஸம்ப்ரமர்த்ந: |
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீதர: || 25

ஸுப்ரஸாத: ப்ரஸந் நாத்மா விஸ்வருக் விஸ்வபுக் விபு : |
ஸத்கர்த்தா ஸதக்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர: || 26

அஸங்க்யேயோ ப்ரமேயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச் சுசி: |
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந: || 27

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தநோ வர்த்தமாநஸ்ச விவிக்தஸ் ஸுருதி ஸாகர: || 28

ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந: || 29

ஓஜஸ்தேஜோ த்யுதிர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி: || 30

அம்ருதாம் ஸூத்பவோ பாநு: ஸஸபிந்து ஸுரேஷ்வர: |
ஔஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்யதர்ம பராக்ரம: || 31

பூதபவ்ய பவந்நாத: பவந: பாவநோ நல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத ப்ரபு: || 32

யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஸந: |
அத்ருஸ்யோ (அ)வ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜிதநந்தஜித்|| 33

இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட: ஸிகண்டி நஹுஷோ வ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வபாஹுர் மஹீதர: || 34

அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ: |
அபாந்நிதி ரத்ஷ்டாந மப்ரமத்த: ப்ரதிஷ்டித: || 35

ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹந: |
வாஸுதேவோ ப்ருஹத்பாநுர் ஆதிதேவ: புரந்தர: || 36

அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூரஸ் ஸௌரிர் ஜநேஸ்வர: |
அநுகூலஸ் ஸதாவர்த்த: பத்மீ பத்ம நிபேக்ஷண: || 37

பத்மநாபோ அரவிந்தர்க்ஷ: பத்மகர்ப்பஸ் ஸரீரப்ருத்|
மஹர்த்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: || 38

அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: |
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ்ஜய: || 39

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவா நமிதாஸந: || 40

உத்பவ: க்ஷோபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப: பரமேஸ்வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ: || 41

வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநோதோ த்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்டஸ் ஸுபேக்ஷண: || 42

ராமோ விராமோ விரஜோ மார்கோ நேயோ நயோநய: |
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம: || 43

வைகுண்ட: புருஷ ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயு ரதோக்ஷஜ: || 44

ருதுஸ் ஸுதர்ஸந: கால: பரமேஷ்டி பரிக்ரஹ: |
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண: || 45

விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம்|
அர்த்தோ நர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந: || 46

அநிர்விண்ணஸ் ஸ்தவிஷ்டோபூர் தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷாம: க்ஷாமஸ் ஸமீஹந: || 47

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாங்கதி: |
ஸர்வதர்ஸீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்|| 48

ஸுவ்ரதஸ் ஸுமுகஸ் ஸூக்ஷ்ம ஸுகோஷஸ் ஸுகதஸ் ஸுஹ்ருத்|
மநோ ஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: || 49

ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்|
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நகர்ப்போ தநேஸ்வர: || 50

தர்மக்ருத் தர்மகுப் தர்மீ ஸதஸத் க்ஷரமக்ஷரம்|
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராமஸூர் விதாதா க்ருதலக்ஷண: || 51

கபஸ்தநேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூதமஹேஸ்வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு: || 52

உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞாநகம்ய: புராதந: |
ஸரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: || 53

ஸோமபோம்ருதபஸ் ஸோம: புருஜித் புருஸத்தம: |
விநயோ ஜயஸ் ஸத்யஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி: || 54

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமிதவிக்ரம: |
அம்போநிதி ரநந்தாத்மா மஹோததி ஸயோந்தக: || 55

அஜோ மஹார்ஹஸ் ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதந: |
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்யதர்மா த்ரிவிக்ரம: || 56

மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதிநீபதி: |
த்ரிபதஸ் த்ரிதஸாத் யக்ஷோ மஹாஸ்ருங்க: க்ருதாந்த க்ருத்|| 57

மஹாவராஹோ கோவிந்தஸ் ஸுஷேண: கநகாங்கதீ|
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர: || 58

வேதாஸ் ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோ த்ருடஸ் ஸங்கர்ஷணோச்யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: || 59

பகவாந் பகஹா நந்தி வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிர் ஆதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதிஸத்தம: || 60

ஸுதந்வா கண்ட பரஸுர் தாருணோ த்ரவிணப்ரத: |
திவிஸ்ப்ருக் ஸர்வத்ருக் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ: || 61

த்ரிஸமா ஸாமகஸ்ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்|
ஸந்யாஸக்ருச் சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி: பராயணம்|| 62

ஸுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரேஷ்டா குமுத: குவலேஸய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷ ப்ரிய: || 63

அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸ வக்ஷாஸ் ஸ்ரீவாஸ: ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர: || 64

ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீநிதிஸ் ஸ்ரீவிபாவந: |
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய: || 65

ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர: |
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்நஸம்ஸய: || 66
உதீர்ணஸ் ஸர்வதஸ்சக்ஷு ரநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர: |
பூஸயோ பூஷணோ பூதிர் விஸோக: ஸோகநாஸந: || 67

அர்ச்சிஷ்மா நர்ச்சித: கும்போ விஸுத்தாத்மா விஸோதந: |
அநிருத்தோ ப்ரதிரத: ப்ரத்யும்நோ அமித விக்ரம: || 68

காலநேமி நிஹா வீரஸ் ஸௌரி ஸூர ஜநேஸ்வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ: கேஸவ கேஸிஹா ஹரி: || 69

காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேஸ்யவபுர் விஷ்ணுர் வீரோநந்தோ தநஞ்ஜய: || 70

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந: |
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: || 71

மஹாக்ரமோ மஹாக்ரமா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: || 72

ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி ரநாமய: || 73

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வஸுமநாஹவி: || 74

ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண: |
ஸூரஸேநோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸ் ஸுயாமுந: || 75

பூதாவாஸோ வாஸுதேவஸ் ஸர்வாஸு நிலயோ நல: |
தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்தரோ தாபராஜித: || 76

விஸ்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்தி ரமூர்த்திமாந்|
அநேகமூர்த்தி ரவ்யக்தஸ் ஸதமூர்த்திஸ் ஸதாதந: || 77

ஏகோ நைகஸ் ஸவ: க:கிம் யத்தத் பதமநுத்தமம்|
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || 78

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங்கதீ|
வீரஹா விஷமஸ் ஸூந்யோ க்ருதாஸீ ரசலஸ்சல: || 79

அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமி த்ரலோக த்ருத்|
ஸுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்யமேதா தராதர: || 80

தேஜோ வ்ருக்ஷோ த்யுதிதரஸ் ஸர்வஸ் ஸத்ர ப்ருதாம் வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ: || 81

சதுர்மூர்த்திஸ் சதுர்பாஹும் சதுர்வ்யூஹஸ் சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவஸ் சதுர்வேத விதேகபாத்|| 82

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா|| 83

ஸுபாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ் தந்துவர்த்ந: |
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: || 84

உத்பவஸ் ஸுந்தரஸ் ஸுந்தோ ரத்நநாபஸ் ஸுலோசந: |
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வவிஜ்ஜயீ|| 85

ஸுவர்ணபிந்து ரக்ஷோப்யஸ் ஸர்வவாகீஸ்வரேஸ்வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ மஹாபூதோ மஹாநிதி|| 86

குமுத: குந்தர: குந்த: பர்ஜந்ய: பாவநோ நில: |
அம்ருதாம் ஸோம்ருதவபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோமுக: || 87

ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ருதாபந: |
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந: || 88

ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்தஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந: |
அமூர்த்தி ரநகோசிந்த்யோ பயக்ருத் பயநாஸந: || 89

அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ குணப்ருந் நிர்குணோ மஹாந்|
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந: || 90

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத: |
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷாமஸ் ஸுபர்ணோ வாயுவாஹந: || 91

தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதாதம: |
அபராஜிதஸ் ஸர்வஸஹோ நியந்தா நியமோயம: || 92

ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண: |
அபிப்ராய: ப்ரயார்ஹோர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தந: || 93

விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் ஸுருசிர் ஹுதபுக் விபு: |
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவிலோசந: || 94

அநந்தஹூதபுக் போக்தா ஸுகதோ நைகதோக்ரஜ: |
அநிர்விண்ணஸ் ஸதாமர்ஷீ லோகாதிஷ்டாந மத்புத: || 95

ஸநாத் ஸநாத நதம: கபில: கபி ரவ்யய: |
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: || 96

அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித ஸாஸந: |
ஸப்தாதிகஸ் ஸப்தஸஹ: ஸிஸிரஸ் ஸர்வரீகர: || 97

அக்ரூர: பேஸலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம்வர: |
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்ரவண கீர்த்தந: || 98

உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸவப்ந நாஸந: |
வீரஹா ரக்ஷணஸ்ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தித: || 99

அநந்தரூபோ நந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ: |
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ: || 100

அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் ஸுவீரோ ருசிராங்கத: |
ஜநநோ ஜநஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம: | | 101

ஆதாரநிலயோ தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: || 102

ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணப்ருத் ப்ராணஜீவந: |
தத்வம் தத்வ விதேகாத்மா ஜந்மம்ருத்யு ஜராதிக: || 103

பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதாமஹ |
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹந: || 104

யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதந: |
யஜ்ஞாந்தக்ருத் யஜ்ஞகுஹ்ய மந்நமந்நாத ஏவ ச || 105

ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந: |
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ: பாபநாஸந: || 106

ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்கதந்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத: || 107

வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ|
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோபி ரக்ஷது|| …………….108



நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் ஜபிக்கவும். வாழ்வில் அற்புதமான மாற்றத்தை உணர்வீர்கள்.

அஸ்விணி 1-4
பரணி 5-8
கார்த்திகை 9-12
ரோஹிணி 13-16
மிருகசீரிடம் 17-20
திருவாதிரை 21-24
புனர்பூசம் 25-28
பூசம் 29-32
ஆயில்யம் 33-36
மகம் 37-40
பூரம் 41-44
உத்திரம் 45-48
ஹஸ்தம் 49-52
சித்திரை 53-56
சுவாதி 57-60
விசாகம் 61-64
அனுசம் 65-68
கேட்டை 69-72
மூலம் 73-76
பூராடம் 77-80
உத்திராடம் 81-84
திருவோணம் 85-88
அவிட்டம் 89-92
சதயம் 93-96
பூரட்டாதி 97-100
உத்திரட்டாதி 101-104
ரேவதி 105-108



 

வியாழன், 21 ஏப்ரல், 2016

சுகம் வழங்கும் அசோகாஷ்டமி விரதம்!

Distanced tragedy and to providing thrills for ashokastami fasting

இந்து மதத்தில் ஒரு சில புனித மரங்களையும் தாவரங்களையும் பெருமைப்படுத்தும் வகையில் அவற்றின் பெயரால் விரதங்களும் வழிபாடுகளும் அமைந்துள்ளன. உதாரணமாக அமாசோமவார விரதம். அமாவாசையும் சோமவாரமும் (திங்கள் கிழமை) சேர்ந்து வரும்போது அன்று அரச மரத்திற்கு பூஜைகள் செய்து 108 முறை வலம் வரும் ஒரு விரதம். மேலும் வடசாவித்ரி விரதம் (வடம்=ஆலமரம்), ஆமலக ஏகாதசி (நெல்லி மரம்), பகுள அமாவாசை (வகுளம்=மகிழ மரம்), கதலீ (வாழை மரம்) விரதம் போன்று பல விரதங்கள் உள்ளன. இந்த வரிசையில் அசோக மரத்தைப் பெருமைப் படுத்தி பூஜிக்கும் விரதம், அசோகாஷ்டமி ஆகும்.
 

 

பல அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த அசோக மரத்தைப் பெண்கள் வழிபடுவதாகிய இந்த அசோகாஷ்டமி விரதம் வட மாநிலங்களில் பாத்ரபத (புரட்டாசி) மாதத்திலும் தென் மாநிலங்களில் சித்திரை மாதம் (சைத்ர மாதம்) வளர்பிறை அஷ்டமி நாளன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் இதை அஷ்டமிக்கு முந்தைய நாளான சித்திரை மாதம் வளர்பிறை சப்தமி அன்று அசோக சப்தமி என்றும் கொண்டாடுகின்றனர்.  

பிரிந்து தவித்த ஸ்ரீராமபிரான் மற்றும் சீதாதேவியின் சோகத்தை சிவபெருமானும், பார்வதிதேவியும் நீக்கி அருளிய நன்நாளாக இந்த அசோகாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இந்த அஷ்டமி நாளுக்கு அடுத்த நாள் - ஸ்ரீராமநவமிப் பெருவிழா. மேலும் பார்வதிதேவி தவம் இயற்றி சிவபெருமானை இந்த அசோகாஷ்டமி நாளன்று மணந்ததாக இன்னொரு புராணக் கதை தெரிவிக்கிறது. பார்வதி தேவியின் சோகத்தை நீக்கி (சோகம், அசோகமானது) சிவபெருமானோடு இணைத்ததால் இந்நாள் அசோகாஷ்டமி நாள் என்றானது. இதேநாளில் பார்வதிதேவியையும் பக்தர்கள் வழிபடுவதால் இது பவானி அஷ்டமி என்றும் கூறப்படுகிறது.


 
அன்றுசுத்தமானஇடங்களில்மருதாணிமரங்களைபயிர்செய்விக்கலாம். மருதாணிமரம்இருக்கும்இடத்திற்குசென்றுஅதற்குதண்ணீர்ஊற்றலாம். மூன்றுமுறைவலம்வரலாம். முட்கள்இல்லாமல்ஏழுமருதாணிஇலைகளைபறித்துஅதைகீழ்கண்டஸ்லோகம்சொல்லிக்கொண்டேவாயில்போட்டுமென்றுசாப்பிடலாம்.

த்வாமசோக நராபீஷ்ட மதுமாஸ ஸமுத்பவ;
பிபாமி சோக ஸந்தப்தோமாம் அசோகம் ஸதாகுரு.


ஓமருதாணிமரமேஉனக்குஅசோகம் (துன்பத்தைபோக்குபவன்) எனப்பெயர்அல்லவா. மதுஎன்னும்வஸந்தகாலத்தில்நீஉண்டாகிஇருக்கிறாய். நான் உனது அருளை பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிடுகிறேன்.
நீ , பலவிததுன்பங்களால் எரிக்கப்பட்டவனாய் இருக்கும்எனது துன்பங்களை விலக்கி வஸந்தகாலம் போல் எவ்வித துன்பம் இல்லாமல் என்னை எப்போதும் பாதுகாப்பாயாக.. என்பதுஇதன்பொருள்.

இதைசொல்லிமருதாணிஇலைகளைசாப்பிடவேண்டும். இதனால் நம் உடலில்தங்கிஇருக்கும்பற்பலநோய்கள், துன்பத்திற்கு காரணமான பாபங்களும் விலகுகிறது என்கிறது லிங்கபுராணம்.

ஒடிஸா மாநிலத்தில் பூரி ஜகந்நாதர் ஆலயத்திற்கு அடுத்து மிகப் பிரபலமானதும், அம்மாநிலத்திலேயே மிகப் பெரிய ஆலயமுமான லிங்கராஜ் ஆலயத்தின் ருக்முனா (ருக்மிணி) ரத யாத்திரையும், திரிபுரா மாநிலத்தில் பாறைகளில் மிகப் பிரமாண்டமான அளவில் வடிக்கப்பட்டுள்ள பல்வேறு தெய்வங்களின் திருஉருவங்களைக் கொண்ட உனகோடி என்ற இடத்தில் ஜாத்ரா வைபவமும் இந்த அசோகாஷ்டமி நாளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

வட மாநிலங்களில் அசோகாஷ்டமி நாளன்று பக்தர்கள் அசோக மரத்தின் கீழ் சிவ-பார்வதி மற்றும் ராமர்-சீதை திருஉருவங்களை வைத்து பூஜைகள் செய்து மரத்தை வலம் வந்து வழிபடுகின்றனர். விரத நாளான அன்று காலை புனித நீராடி, அசோக மரத்திற்கு அதே மரத்தின் மலர்கள், கொழுந்துகளால் பூஜை செய்கின்றனர். இதனால் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

 

சீதாதேவியை ராவணன் இலங்கையில் தன் மாளிகையில் இருந்த அசோக வாடிகா என்ற அசோக வனத்தில் சிறை வைத்திருந்ததாகவும், மீண்டும் ஸ்ரீராமரோடு சேரும் பொருட்டு சீதாதேவி இந்த அசோகாஷ்டமி நோன்பை அனுஷ்டித்ததாகவும் ஐதீகம். இந்த நாளில் திருமாலுக்குரிய புதன்கிழமையும் ராமபிரானின் புனர்பூச நட்சத்திரமும் ஒன்று கூடினால் மிகவும் புனிதமானது என்பது மக்களின் நம்பிக்கை.  

ஒடிஸா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் ஆலயத்தையடுத்து மிகப் பிரபலமானது, மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ஸ்ரீலிங்கராஜ் ஆலயம். இங்கு அசோகாஷ்டமி நாளன்று நடைபெறும் ரதயாத்திரை பூரி ரத யாத்திரை போன்றே மிகச் சிறப்பானது. இதன் பின்னணி என்ன?

காளியின் அருளைப் பெற்ற ராவணனை யுத்தம் செய்து வதைக்க வழி தெரியாது ராமர் திகைத்து நின்றார். விபீஷணனின் அறிவுரைப்படி  அவர் சைத்ர மாதம் சுக்ல பட்சத்தில்  ஏழு நாட்கள் புவனேஷ்வர், லிங்கராஜ் மற்றும் காளி தேவியை நோக்கி மனதாற வழிபட்டு எட்டாவது நாள் தேவியின் அருளால் தனக்குக் கிடைத்த பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தி, அசோகாஷ்டமி நாளன்று  அவனை வதம் செய்தார். இவ்வாறு தனக்கு உதவிய சிவபெருமானை ராமபிரான் தேரில் வைத்து ரதோற்சவம் நடத்திக் கொண்டாடினார் என்றும் அதன் தொடர்ச்சியாகவே அசோகாஷ்டமி நாளில் இங்கு ரத யாத்திரை நடைபெறுகிறது என்கிறார்கள். பிரத்தியேகமாக, நான்கு சக்கரங்களுடன் மரச் சட்டங்களால் வடிக்கப்பட்ட 35 அடி உயர ரதத்தில் லிங்கராஜ் என்ற சந்திரசேகரர், ருக்மிணி, வாசுதேவர் ஆகியோரின் பஞ்சலோக விக்கிரகங்களை எழுந்தருளச் செய்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஷ்வர் மௌசிமா ஆலயத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். இந்த யாத்திரையில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

ருக்மிணி எழுந்தருளுவதால் இது ருகுணா ஜாத்ரா  என்றும் அழைக்கப்படுகிறது. நான்கு நாட்கள் ராமேஷ்வரில் இருந்த பின்னர் மீண்டும் ரதத்தை லிங்கராஜ் ஆலயத்திற்கு திரும்ப இழுத்து வருகின்றனர். பூரி ஜகந்நாதர் ஆலய ரதயாத்திரையின் போது பயன்படும் மூன்று ரதங்களும் (ஜகந்நாதர், பலபத்திரர், சுபத்ரா) பூரி ஆலயத்தைக் கட்டியதாகக் கருதப்படும் இந்திரத்யும்னன் என்ற மன்னனின் மனைவியான குந்திசா ஆலயத்திற்குச் செல்கின்றன. அங்கு ஏழு நாட்கள் இருந்த பின்னர் மீண்டும் பூரி ஆலயத்திற்கு அங்கிருந்து திரும்ப வந்த வழியில் இழுத்து வரப்படுகின்றன. ஆனால் லிங்கராஜ் ஆலய ரதத்தை திருப்பாது, அப்படியே பின்னோக்கி இழுத்து வருவது இந்த யாத்திரையின் சிறப்பு அம்சமாகும். எனவே இந்த ரதம் ஒடிஸா மொழியில் “அனலூத்தா ரதம்’’ (திருப்பப்படாத) என்று அழைக்கப்படுகிறது. ரதத்தில் எழுந்தருளியிருக்கும் மூன்று விக்கிரகங்களைக் கொண்ட பீடம் மட்டும் முன் நோக்கி திருப்பிவைக்கப்படுகிறது.

திரிபுரா மாநிலத்தில், தலைநகரான அகர்த்தலாவிலிருந்து சுமார் 145 கி.மீ. தொலைவில் கைலாஷஹர் என்ற இடத்தில் அமைந்துள்ள உனகோடி குன்றுகள் பாறைகளில் மலைவாழ் மக்களால்  பிரமாண்டமாக வடிக்கப்பட்ட தெய்வச் சிலைகளுக்குப் பெயர் பெற்றவை. இச்சிலைகளின் பின்னணியில் ஒரு புராணக் கதை கூறப்படுகிறது - ஒரு முறை சிவபெருமான் தன்னையும் சேர்த்து ஒரு கோடி தேவர்களுடன் கைலாயத்திலிருந்து காசிக்குப் புறப்பட்டு வந்தபோது ஒரு நாள் இரவு இந்த உன கோடியில் தங்க நேர்ந்ததாம். இரவு நன்கு உறங்கவிட்டு, மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே அனைவரும் எழுந்து யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று சிவபெருமான் ஆணையிட்டாராம். ஆனால், மறுநாள் காலை சிவபெருமானைத் தவிர யாரும் துயில் எழாததால் அவர்கள் அனைவரும் கல்லாக மாறுமாறு சபித்து விட்டு தன் யாத்திரையைத் தொடர்ந்தாராம். அந்த தேவர்களின் சிலைகளே இவை என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

கோடிக்கு ஒன்று குறைவு என்பதால் இதற்கு உனகோடி என்ற பெயர் ஏற்பட்டதாம்! மேலும் மலைவாசியான கல்லுக்குமார் என்ற சிற்பி தன்னை கைலாயத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சிவபிரானையும் பார்வதி தேவியையும் நோக்கி தவம் செய்ய, சிவபெருமான் அவனிடம் ஓர் இரவில் ஒரு கோடி தேவர்களின் சிலைகளை வடித்து முடிக்குமாறு ஆணையிட்டாராம். சிற்பியும் அன்றிரவு முழுவதும் கண் விழித்து சிற்பங்களைச் செதுக்கியும் கூட மறுநாள் அதிகாலை ஒரு சிற்பம் குறையவே சிவபெருமான் சிற்பியை விட்டுவிட்டு கைலாயம் திரும்பியதாக இன்னொரு கதை கூறுகிறது. இங்கு பாறையில் வடிக்கப்பட்டுள்ள நாயுடன் காணப்படும் உனகோடீஸ்வரர் காலபைரவர் சிற்பம் 30 அடி உயரம் கொண்டது. அவருக்கு அருகில் துர்க்கை சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

ஏழு-ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இப்பாறைச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த உனகோடியில் அசோகாஷ்டமி நாளன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும்  ஜாத்ரா உற்சவம் நடைபெறுகிறது. பக்தர்கள் இங்குள்ள அஷ்டமி  குண்ட் என்ற குளத்தில் புனித நீராடி சிவபெருமான், பார்வதிதேவியை வழிபட்டுச் செல்கின்றனர். இங்குள்ள சிற்பங்கள் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. உனகோடியில் சிவபெருமான் கால பைரவராகவும், காளிதேவி துர்க்கையின் அம்சமாகவும் எழுந்தருளியிருப்பதால் ராமபிரான் வழிபட்ட இவர்களை ராமர் ராவணனை வதம் செய்த அசோகாஷ்டமி நாளன்று ஜாத்ரா உற்சவத்தில் சிறப்பித்துக் கொண்டாடுவது வழக்கத்தில் வந்துள்ளது.

கோலாகல வாழ்வருளும் கோபாலசுந்தரி!


அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாம் அன்னை ராஜராஜேஸ்வரியை பக்தர்கள் பல்வேறு வடிவங்களில் ஆராதிக்கின்றனர். தேவியின் திவ்யமான பல்வேறு வடிவங்களுள்  கோபாலசுந்தரியின் திருவடிவமும் ஒன்று.

இத்திருவடிவத்தில் கண்ணனே லலிதா திரிபுரசுந்தரியாகவும் லலிதா திரிபுரசுந்தரியே கண்ணனாகவும் அருட்கோலம் காட்டியருள்கின்றனர்.

இத்தேவியின் தியானத்தில் திருப்பாற்கடலிலுள்ள கற்பகவனத்தில் நவரத்தின மண்டபத்தின் நடுவில் ஸ்ரீபீடத்தில் எழுந்தருளி சங்கு, சக்கரம், புல்லாங்குழல், கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம் போன்றவற்றை ஏந்தி பிரம்மாதி தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவளுமான கோபாலசுந்தரியைப் போற்றுவோமாக எனக் கூறப்பட்டுள்ளது. பூர்வஜென்மத்தில் செய்த சிறந்த புண்ணியத்தின் பயனாகவே இந்த ஜன்மாவில் கோபாலசுந்தரியை உபாசிக்கும் பாக்கியம் கிட்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மூவுலகங்களிலுமுள்ள மந்திரங்கள் அனைத்திற்கும் ஸ்ரீவித்யா தலைமை மந்திரமாக போற்றப் படுகிறது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ஆலயத்தில் அருளும் கண்ணன், இத்தேவியின் வடிவமாகவே போற்றப்படுகிறார். உற்சவ ராஜகோபாலனின் திருவடியின் கீழ் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. த்ரிபங்க நிலையில் லலிதையைப் போன்றே அருட்கோலம் கொண்டுள்ளவர் இந்த மூர்த்தி.

தான் எடுக்கும் ஒவ்வொரு திருவடிவத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு பலனை தன் உபாசகர்களுக்கு அருள்கிறாள் தேவி.   லலிதையின் கரும்பு வில் காமீகாந்தனின் பாதத்தில் நிலை பெற்று காமாக்னி தோன்றுவது, காமம் இல்லையேல் உலகமில்லை, சிருஷ்டியும் இல்லை என்பதை உணர்த்துகிறது.

  அடியார்களின் காமங்கள் எனும் விருப்பங் களைத் தப்பாமல் நிறைவேற்றுவதாலும், யாவரும் விரும்பும் அதிசுந்தரத் திருமேனி கொண்டதாலும் கோபாலனாம் கோபாலசுந்தரி, காமீ காந்தா எனப் போற்றப்படுகிறாள். திருமாலுக்குப் பற்பல நாமங்கள். விருப்பம் எதுவாயினும் உண்மையாக எளிதில் நிறைவேறுவதால் அவன் ஸத்யகாமன். முக்தியை விரும்புவோரின் காமங்களையும் துயர் புரிவோரின் காமங்களையும் அழிப்பதால் காமஹா; காமனாகிய பிரத்யும்னனின் பிதா என்பதாலும் சாத்வீகர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாலும் காமக்ருதன், பக்தர்களுக்கு காமங்களை அவர்கள் வேண்டியதற்கும் விரும்பியதற்கும் மேலாக அளிப்பதால் காமப்ரதன் எல்லோராலும் மிகவும் விரும்பப்படும் காமபாலன், அடியார்களின் காமங்களைத் தப்பாமல் நிறைவேற்றுவதாலும் யாவரும் விரும்பும் அதியற்புத சுந்தரத் திருமேனி கொண்டதாலும் காமீகாந்தன்.

 நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் இந்த கோபாலசுந்தரியை ஸம்மோஹனகிருஷ்ணன் எனும் திருப்பெயரில் தரிசித்து அருள் பெறலாம்.

  சிவசக்தி ஐக்கிய வடிவான அர்த்தநாரீஸ்வர வடிவம் அடியார்களுக்கு அருள்வது போல் கண்ணனும் லலிதையும் கோபாலசுந்தரியாக அடியவர்க்கு அருள்கின்றனர். கண்ணனும் தேவியும் ஒன்றே என்பதை ‘கோப்த்ரீ கோவிந்த ரூபிண்யை நமஹ’ எனும் லலிதா ஸஹஸ்ரநாமமும் போற்றுகிறது.

  இந்த கோபாலனும் சுந்தரியும் இணைந்த திருக்கோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். மழலை வரம் வேண்டுவோர்க்கு தப்பாமல் அந்த வரம் பூர்த்தியாகும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும். அனைத்து சம்பத்துக்களையும் அளிக்கும். சகல சித்திகளும் கைவரும். தரித்திரர்கள் இத்தேவியை உபாசித்தார்களானால், குபேர வாழ்வு பெறலாம்.

  பூரண அலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து கருணை மழை பொழியும் கண்களோடும் ரத்ன கிரீடமும் மயில்பீலியும் தரித்து அருளும் கோபால சுந்தரி, வணங்குவோர் தீவினைகளை அகற்றிஆத்மஞானமும் அருள்பவள்.

  ஷட்கோண யந்திரத்தில் ஓங்காரமாகவும் ஒய்யாரமாகவும் நின்று குழலூதி உலகைக் காக்கும் கோபாலசுந்தரியைப் பணிந்து சகல நலன்களையும் பெறுவோம்.


கோபாலசுந்தரி தியானம்

1. க்ஷீராம்போநிதி மத்ய ஸம்ஸ்தித
லஸத் த்வீபஸ்த கல்பத்ருமோ
த்யானோத்யத்மணி மண்டபாந்த
ருதிதஸ்ரீபீட பாதோஜகம்
தோர்தண்டை: அரிசங்கவேணு ஸ்ருணி
ஸத்பாசேஷூ சாபாசுகான்
பிப்ராணம் கமலாமஹீ விலஸிதம்
வந்தேருணாங்கம் ஹரிம்.

க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரணபூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்த்ரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் ஸாங்குஸஞ்ச புஷ்பபாணம்ச  பங்கஜம்
இக்ஷு சாபம் வேணுவாத்யம்ச தாரயந்தம்  புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானுலிப்தாங்கம் புஷ்பவஸ்த்ர த்ர குஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே.

பாற்கடலில், கற்பக விருட்சத்தின் நடுவில் மணி மண்டபத்தில் ஒய்யாரமாக குழலூதியபடி, தன் கரங்களில் சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம் போன்றவற்றை ஏந்தி பக்தர்களுக்கு அருள்புரியும் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்று வணங்கப்படும் கோபாலசுந்தரியை நமஸ் கரிக்கிறேன்.
கிருஷ்ணனும், தாமரைக் கண்ணனும், சர்வாலங்காரங்களுடன் திகழ்பவனும் த்ரிபங்கி நிலையில் லலிதையோடு பேரழகாய் அருட்கோலம் காட்டுபவனும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் கோபாலனாம் கிருஷ்ணனை வணங்குகிறேன். 
இந்த மந்திரங்கள் மிகவும் அற்புதமானவை.
 இதை நம்பிக்கையுடன் ஜபம் செய்து வந்தால் பெருஞ்செல்வம் கிட்டும். மழலைவரம் வேண்டுவோர்க்கு அந்த பாக்கியம் பெறுவார்கள். கண்ணனின் திருவருளும் லலிதா பரமேஸ்வரி
யின் பேரருளும் கிட்டும்.

2. கோதண்டம் மஸ்ருணம் ஸுகந்தி விசிகம்
சக்ராப்ஜ பாசாங்குசம்
ஹைமீம் வேணுலதாம் கரைச்ச தததம்
ஸிந்தூர புஞ்ஜாருணம்
கந்தர்ப்பாதிக ஸுந்தரம் ஸ்மிதமுகம்
கோபாங்கனா வேஷ்டிதம்
கோபாலம் ஸததம் பஜாமி வரதம்
த்ரைலோக்ய ரக்ஷாமணீம்
        - க்ருஷ்ண கர்ணாம்ருதம்.

விசித்திரமான வில்லையும் நல்ல மணமுடைய புஷ்ப பாணத்தையும் சக்கரத்தையும் சங்கத்தையும் பாசத்தையும் அங்குசத்தையும் பொன்மயமான கொடி போன்ற குழலையும் ஏந்தி, அடர்ந்த நிறம் கொண்டவனாய், மன்மதனைக்காட்டிலும் பேரழகு கொண்டவனாய், புன்முறுவல் பூத்த முகத்தினனாய், கோபியர்களால் சூழப்பெற்றவனாய், மூவுலகையும் காப்பவனாய், வேண்டியதை எப்போதும் அருளும் கோபாலனாய் திகழ்பவனை தியானிக்கிறேன்.


 

சிறப்பான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி!

நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள் தான் சித்ரா பவுர்ணமி.                                

பொதுவாக மனிதனின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தெய்வ வழிபாடுகளும், விரதங்களும் தான். அந்த விரதங்களில் நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப்பலனை வழங்கும் என்பதை நாம் அனுபவத்தின் வாயிலாக உணரமுடியும்.

இது போன்ற சந்திர பலம் பெற்ற நாட்களில் கடல் தண்ணீர் மேல்நோக்கிப் பொங்கி எழும். கடல் அலை சீறிப்பாயும், அலைபாயும் அந்த நாளில் நாம் விரதமிருந்தால் அலைபாயும் மனதில் அமைதி கிடைக்கும். அப்படிப் பட்ட நாட்களில் ஓர் அற்புதமான நாள் தான் சித்ரா பவுர்ணமி ஆகும். 'சித்ரா பவுர்ணமி' கொண்டாடுவதன் மூலம் வாழ்வில் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற வழிபிறக்கின்றது.

kupthan

சித்திரை மாதம், பௌர்ணமி நாளன்று காமதேனுவின் வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திர புத்திரர் பிறந்தார். இந்தக்  குழந்தையை இந்திரனும் இந்திராணியும் வளர்த்து வந்தனர். இந்திரனின் மகனாக வளர்ந்த சித்திர புத்திரன், சிவபெருமானைத் தொடர்ந்து வழிபட்டு  வந்தான். சித்திர புத்திரனின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு அனைத்து உயிரினங்களின் செயல்பாடுகள் குறித்த கணக்குகளையும்  எழுதிப் பராமரிக்கும் பணியை வழங்கினார் என்றும் புராணம் கூறுகிறது.
 சித்திர குப்தர் வழிபாடு!
 
சித்ரா பௌர்ணமி  அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும்  வைத்து, ஒரு பேப்பரில் ”சித்திர குப்தன் படியளப்பு”என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள் , தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்.
 
இந்த வழிபாட்டின்போது 

"சித்திர குப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகனிபத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பரதரம்
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்''

 
என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பதிந்து வைக்கும் சித்ரகுப்தனை வழிபட்டு, நாம் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாக  செய்யும்படி கோரிக்கை வைக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய பாவத்தின் அளவு குறைந்து புண்ணியக் கணக்கின் அளவு கூடும்.

சித்ரகுப்தனுக்கு என்று காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளது. அருப்புக்கோட்டையில் தனிச்சன்னிதி உள்ளது. அங்கு செல்ல இயலாதவர்கள் இல்லத்திலேயே நினைத்து விரதமிருந்து சித்ரகுப்தனை வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபடுவதால் ஆயுள் விருத்தியும், ஆதாயமும் கிடைக்கும். செல்வ விருத்தி உருவாகும். சில பகுதிகளில் இந்த சித்ராபவுர்ணமி அன்று பொங்கல் வைத்து மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

அன்றைய தினம் பூஜை அறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து, அருகில் ஒரு வெண்கலச் சட்டியில் மண்ணுடன் தண்ணீர் கலந்து வைத்து அதன் மேல் ஒரு செம்பு வைத்து, அந்தச் செம்பில் முக்கால் அளவிற்கு மேல் தண்ணீர் நிரப்பி வைத்து, மாவிலை, தேங்காய் வைத்து, அதைக் கரகமாக நினைத்து வழிபட வேண்டும். அதன் அருகில் குத்துவிளக்கு ஏற்றிக் கோலமிட வேண்டும். பொங்கல் பொங்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். நவதானியம் பரப்பி வைத்து, வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து 'சித்ரகுப்தன் படியளப்பு' என்று எழுதி வைப்பர்.

சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் பொழுது சித்ரகுப்தனை சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும்.

சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசிக்கொழுக் கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் இலையில் வைத்து, பலாச்சுளை, நுங்கு, திராட்சை, மாம்பழம், இளநீர், நீர்மோர், மாவிளக்கு போன்றவற்றை வைத்துப் படைக்க வேண்டும். பச்சரிசி சாதத்திற்கு தட்டைப்பயறு மாங்காய் குழம்பு வைப்பது வழக்கம். பருப்பும், நெய்யும் வைக்க வேண்டும்.

வழிபாட்டின் பொழுது,

சித்ரகுப்தா, சித்திர குப்தா
சேவித்தேன் நான் சித்திரகுப்தா!
நான்  செய்த பாவமனைத்தும்
நல்லவனே நீ கடுகளவாக்கு!
நான்  செய்த புண்ணியமனைத்தும்
நல்லவனே நீ மலையளவாக்கு!
வானும், நிலவும் உள்ளவரைக்கும்
வாழ்க்கைப் பாதையை வளமாய் மாற்று!
உணவும், உடையும் உறைவிடம் அனைத்தும்
தினமும் வழங்கத் திருவருள் கூட்டு!

என்று பாடி ஒவ்வொருவரும் வழிபட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து பதினாறு பவுர்ணமிகள் வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிடைக்கும்.

சித்ரா பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தை தொடங்க வேண்டிய நாள் சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி அன்று தான். விரதத்தை மேற்கொள்பவர்கள் இரவு நிலவு பார்த்து வழிபட்ட பின்னரே உணவு அருந்த வேண்டும்.

எந்தக்கிழமையில் பவுர்ணமி வருகின்றதோ அந்தக் கிழமைக்கு உரிய கிரகத்தின் ஆதிபத்யமும் வழிபடுபவர்களுக்கு கிடைக்கும்.  'வியாழன் கூடினால் விவாகம் கூடும்' என்பது பழமொழி. எனவே சித்ரா பவுர்ணமி விரதத்தின் மூலம் திருமண யோகமும் கிட்டும். தித்திப்பான வாழ்க்கையும் அமையும். அன்று மலை வலம் வருவதன் மூலமும் மகத்தான பலன் பெறலாம்.
 
 

புதன், 20 ஏப்ரல், 2016

நலம் நல்கும் ராமநவமி!


ராமபிரான் சித்திரை மாத வளர்பிறை நவமி திதியில், புனர்பூச நட்சத்திரத்தில் திருஅவதாரம் செய்தார் என்பதால், எல்லா திருமால் தலங்களிலும் ராமநவமியை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர். ராமாயண நவாஹம் என்று, பிரதமை முதல் நவமி திதி வரையில் கர்ப்ப உற்சவம் நடத்துவர். சில இடங்களில் நவமியில் ஆரம்பித்து ஜனன உற்சவம் என்னும் பெயரில் ஒன்பது நாட்கள் விழா நடத்துவர். தாயின் வயிற்றில் 12 மாதங்கள் கர்ப்பவாசம் செய்தவர் ஸ்ரீராமன் என்பர்.

"உலகத்தை மகிழ்விப்பவனே! ஜானகியின் பிராணநாயகனே! நீ வெற்றியுடன் விளங்குவாய்.

ஆகாயத்தின் தலைவனான சூரியனின் நற்குலத்தில் தோன்றியவனே! மன்னர் மன்னனே!

நற்குணங்களின் உறைவிடமே! தேவர்களால் வணங்கப்படுபவனே! மங்களத்தை அளிப்பவனே!

எப்பொழுதும் அனைவருக்கும் ஆனந்தத்தை அளிப்பவனே! அளவிட முடியாதவனே!'

என்றெல்லாம் ஸ்ரீதியாகராஜசுவாமிகள் போற்றித் துதிக்கும் ஸ்ரீராமனின் திருப்பாதங்களைப் பணிவோம்.

ராமநவமியை அடுத்த தேய்பிறை நவமியில் அவதரித்தவள் சீதாபிராட்டி. ஜனக மகாராஜன் யாகம் செய்வதற்காக நிலத்தை உழுதான். அப்போது கலப்பையில் சிக்கிய பெட்டியிலிருந்து வெளிப்பட்டவள் சீதை. கலப்பைக்கு சீதா என்று பெயர். கலப்பையால் வெளிப்பட்ட தேவிக்கு சீதை என்று பெயர் அமைந்தது. இந்த இடம் சீதாமடி என்ற பெயரில், பாட்னாவிலிருந்து சுமார் எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜனகன் ஆண்ட நாடு விதேஹம் என்பதால் சீதை வைதேகி எனவும் அழைக்கப்பட்டாள். மிதிலை தலைநகராக விளங்கியதால் அவள் மைதிலி. எனவே நவமி திதி சீதையின் வழிபாட்டுக்கும் உகந்த நாள்.


 

செல்வ வளம் பெருக்கும் சித்திரை புத்தாண்டு!


"பிரபவ' முதல் "அட்சய' வரையிலான அறுபது வருடங்களுள் 26-ஆம் வருடமான நந்தன ஆண்டு நிறைவுற்று 27-ஆம் வருடமான விஜய வருடம் சித்திரை முதல் நாளில் தொடங்குகிறது. இது இளவேனிற் காலத்தின் தொடக்கம் என்றும் சொல்வர். தமிழ் மாதங்கள் பன்னிரண்டும் ஒவ்வொரு வகையில் சிறப்பாகத் திகழ்கின்றன. அந்த வகையில் சித்திரையின் முத்திரை சற்று அழுத்தமாகவே தெரிகிறது. இம்மாதப் பிறப்பன்று இறைவழிபாடு சிறப்பாகப் பேசப்படுவதுபோல், அன்று உணவில் இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவைகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும். குறிப்பாக வேப்பம்பூ பச்சடி, இனிப்பு, மாங்காய் பச்சடி இடம்பெற்றிருக்கும். இது வாழ்வில் இன்ப- துன்பம், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை சமமாக பாவிக்கும் மனோபாவத்தைக் குறிப்பதாகும்.

அன்று கோவில்களில் பஞ்சாங்கம் படித்து, பலாபலன்களை விளக்குவர். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனும் ஐந்து (பஞ்ச) அங்கங்கள் சேர்ந்ததே பஞ்சாங்கம். அனுதினமும் பஞ்சாங்கம் பார்த்து அறிவதால் அஷ்ட ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது முன்னோர் வாக்கு.

சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவது திதி.
 தினமும் திதி பார்ப்பதால் செல்வ வளம் பெருகும்.
வாரம் பார்த்தறிவதால் ஆயுள் விருத்தியாகும்.
நான்கு பாதங்களோடு திகழும் நட்சத்திர நடப்பு விவரங்களை தினமும் பார்த்தறிவதால் தீவினைகள் அகலும்.
ஒவ்வொரு யோகத்திற்கும் தனித்தனி விசேஷ குணங்கள் உண்டு.
தினமும் யோக விசேஷம் காண்பதால் பிணிகள் நீங்கும்.
திதியில் பாதி கரணம். கரணம் பற்றி பஞ்சாங்கம் பார்த்தறிவதால் காரியசித்தி உண்டாகும் என்று ஜோதிட ஆய்வாளர்கள் கூறுவர்.

சித்திரை முதல் நாளை கேரளாவில் "விஷு' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று காலை எழுந்ததும் ஒவ்வொரு வீட்டிலும் விஷுக்கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும்.

அன்று குருவாயூரப்பனை தரிசிப்பது மிகவும் போற்றப்படுவதால் முதல் நாளிரவே, கோவிலுக்குச் சென்று அங்கேயே தங்கிவிடுவார்கள். விடிந்ததும் குருவாயூரப்பனை தரிசித்து அருளாசி பெறுவார்கள். கோவில் அர்ச்சகர் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை பிரசாதமாக வழங்குவார்.

கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் யுகாதி என்ற பெயரில் வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. .யுகாதி நாளில்தான் பிரம்மன் தன் படைப்புத் தொழிலைத் தொடங்கினார் என்றும், இந்த பூலோகத்தை முதன்முதலில் படைத்தார் என்றும் புராணம் கூறுகிறது.

தமிழகக் கோவில்களில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சிபோல, ஆந்திராவிலும் யுகாதி அன்று பஞ்சாங்கம் படிக்கும் வைபவம் நடைபெறுகிறது. மாதலை என்னும் நகரில் "பஞ்சாங்க படனம்' என்ற பெயரில் அரசு விழாவாகவே நடைபெறுகிறது. திருமலை திருப்பதியில் சிறப்பு வழிபாடுகள், சுவாமி புறப்பாடு உண்டு.

மகாராஷ்டிர மாநிலத்தில் "குடி பாத்வா' என்ற பெயரில் யுகாதி கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து, மகாலட்சுமியை வரவேற்பதற்காக வீடு முழுவதும் வண்ண வண்ண ரங்கோலி கோலமிடுவர். இந்நாளில் ஸ்ரீராமபிரான் சீதாதேவியுடன் அயோத்தி திரும்பியதாகக் கருதப்படுகிறது.


அசாமில், பிஹு என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சித்திரை மாதம்தான் வசந்தகாலம். இந்த வசந்தகால சித்திரை திரிதியை அன்றுதான் மகாவிஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார். இம்மாத சுக்ல பட்ச பஞ்சமி திதியில் ஸ்ரீலட்சுமிதேவி வைகுண்டத்திலிருந்து பூமிக்கு வந்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது. சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுவதால், அன்று புனித நதியில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது.

சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்ல பட்ச திரிதியை திதியை "அட்சய திருதியை' என்று போற்றுவர். அன்று தானம்- தர்மங்கள் செய்வது பெரும்புண்ணியத்தைத் தருமென்று ஞான நூல்கள் சொல்கின்றன.

ஸ்ரீராமர் ஜெயந்தி, பலராமர் ஜெயந்தி, ஸ்ரீசங்கரர் ஜெயந்தி, ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி போன்றவை சித்திரைக்கு பெருமை சேர்க்கின்றன. சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையும் கிருத்திகையும்கூட சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

சித்திரையில் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் கஜேந்திர மோட்சம் என்னும் நிகழ்ச்சி தென்காவேரியில் நடைபெறுவதைக் காணலாம். வருடத்திற்கு ஆறுமுறை மட்டும் அபிஷேகம் காணும் தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் சிறப்பாக நடத்தப்படுகிறது.

சித்திரை மாத சுக்ல பட்ச வெள்ளிக்கிழமைகளில் அன்னை பார்வதியை வழிபட்டால் கணவன்- மனைவியரிடையே மகிழ்ச்சி பொங்கும். சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் விரதம் மேற்கொண்டு பைரவரை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும். சித்திரை மூல நட்சத்திரத்தன்று ஸ்ரீலட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும். சுக்ல பட்ச திரிதியை அன்று சிவ- பார்வதியை வணங்கி, தான- தர்மங்கள் செய்தால் சிறப்பான வாழ்வும், முடிவில் சிவலோக பதவியும் கிட்டும்.

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் கல்வி, ஞானம், பக்தியில் சிறந்து விளங்குவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

சித்திரை மாதத்துக்கு பல சிறப்புகள் இருந்தாலும், சித்திரைக்கு முத்திரை பதிப்பது சித்ரா பௌர்ணமி ஆகும். முழுச்சந்திரனின் ஒளி படரும்போது மூலிகைகள் நிறைந்த நிலப்பரப்பிலிருந்து ஒருவகை உப்பு வெளிப்படும். இதை "பூமிநாதம்' என்று சித்த மருத்துவர்கள் கூறுவர். அது சித்தமருந்துகளுக்கு அதிக சக்தியை அளிக்கும் திறன் கொண்டது. மக்களுக்கு மாறாத இளமையையும் நரை, திரை, மூப்பற்ற நலமிக்க உடலையும் வழங்கும் சக்தி கொண்ட அந்த பூமிநாதம் என்ற உப்பு, சித்ரா பௌர்ணமி இரவில் பூமியிலிருந்து வெளிவந்ததை முதன்முதலில் கண்டவர்கள் சித்தர் பெருமக்கள் ஆவர். அதனால்தான் சித்திரை மாதப் பௌர்ணமியை சித்தர் பௌர்ணமி என்று வழங்கப்பட்டதாகவும் சொல்வர்.

எமதர்மனின் கணக்கர் என்று போற்றப்படும் சித்திரகுப்தர் அவதரித்ததும் சித்ரா பௌர்ணமி நாள்தான். 

ஒரு சித்ரா பௌர்ணமி இரவில், சிவபெருமான் ஒரு தங்கப்பலகையில் இளைஞனின் சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்த அழகிய சித்திரத்தைக் கண்ட பார்வதி சிவபெருமானை நோக்கி, ""சித்திரத்திலிருக்கும் இவன் நமக்குப் புத்திரனாக இருந்தால் எப்படி இருக்கும்?'' என்று கேட்கவே, ""நீ அழைத்தால் இவன் உயிர்பெற்று வருவான்'' என்றார். 


உடனே தேவியார், ""மகனே, சித்திரத்திலிருந்து வெளியே வா'' என்று அழைக்க, இடதுகையில் ஓலைச்சுவடி, வலதுகையில் எழுதுகோலுடன் அவன் வெளிப்பட்டான். சித்திரத்திலிருந்து வெளிவந்ததால் சித்திரபுத்திரன் என்று பெயர் சூட்டினார்கள். இது குறித்து வேறு கதைகளும் உண்டு.

எமதர்மராஜன், மானிடர்களின் பாவ புண்ணியங்களைக் குறித்து வைத்துக்கொள்ள ஒருவர் வேண்டுமென்று சிவபெருமானிடம் பல காலமாக கேட்டுக்கொண்டிருந்ததால், சித்திரபுத்திரனை எமனுக்கு உதவியாக இருக்கும்படி ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்.

அன்று முதல் சித்திரகுப்தன் மானிடர்களின் பாவபுண்ணியங்களைக் குறித்து வைத்துக்கொள்ளும் நிபுணர் ஆனார். இவருக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் கோவில்கள் உள்ளன. அதில் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இவரை வழிபட கேது தோஷம், பூர்வ ஜென்ம தோஷம், புத்திர தோஷம் விலகுமென்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் பல திருத்தலங்களில் சித்திரைத் திருவிழா நடைபெறும். அதில் மதுரையில் நடைபெறும் விழா புராண கால தொடர்புடையது. ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண வைபவம், குண்டோதரனுக்கு அன்னம் வழங்கல் என்னும் திருவிளையாடல் புராண நிகழ்ச்சிகள், கள்ளழகர் வண்டியூரில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பது, பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆண்டாள் நாச்சியாரின் சூடிக்கொடுத்த மாலையைப் பெறுதல், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் மதுரைவாழ் மக்கள் மட்டுமல்ல; சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். தனித்துவம் பெற்ற இந்த விழா, மக்கள் வாழ்வோடு ஒன்றிணைந்த மிகப்பெரிய விழாவென்று போற்றுவர். இதேபோல் ஸ்ரீரங்கம் திருத்தலத்திலும் தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.


சித்ரா பௌர்ணமி நாளில் ஸ்ரீசத்தியநாராயணரைப் பூஜிப்பதும் வழக்கம். பால்பாயசம், கல்கண்டு, கனிவகைகள் முதலியவற்றைப் படைத்து, துளசி மற்றும் செண்பக மலர்களால் ஸ்ரீசத்தியநாராயணரை அர்ச்சித்து வழிபட்டால் சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பர். மேலும் புத்திர பாக்கியம், புகழ், கௌரவம், செல்வம், அந்தஸ்து, பட்டம், பதவி, திருமண யோகம் போன்ற அனைத்தையும் இந்தப் பூஜை தரவல்லது. ஸ்ரீநாராயணருக்குப் பிடித்தமான பால்பாயசம் நிவேதிப்பதால் நினைத்தது நடக்கும் என்பர்.

சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வதும் சிறப்பிக்கப்படுகிறது. அன்னதான சிவனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அன்று அன்னதானம் செய்து சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தால் கேட்டது கிடைக்கும்; கேட்க மறந்ததும் கிட்டும்.

சித்ரா பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவதும் மிகவும் போற்றப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலையை வலம் வரும்போது, நம் கண்களுக்குத் தெரியாமல் சித்தர்களும் நம்முடன் வலம் வருவதாக நம்பப்படுகிறது. அப்போது அவர்களின் உடலிலிருந்து வெளிப்படும் அற்புத சக்தி நம்மீதும் படுவதால், உடல் வளம் பெறும்; நோய் எதிர்ப்பு சக்தி கூடுமென்று பெரியோர் சொல்வர்.


சித்ரா பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு வெண்பட்டாடை சமர்ப்பித்து, பலாசு மலர் மாலையை அணிவித்து, பலாசு மலர்களாலும் மருக்கொழுந்து இலைகளாலும் அர்ச்சித்தால் ஸ்ரீலட்சுமி கடாட்சமும் சகல பாக்கியங்களும் கிட்டுமென்று சிவபுராணம் கூறுகிறது.

சித்திரை மாதமானது தேவர்களுக்கு 15 முதல் 20 நாழிகைகள் வரையுள்ள ஐந்து நாழிகை மதியவேளையாகிறது. இது பிதுர் தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்த நேரமென்று கருதப்படுவதால், அந்த வேளையில் புனித நீர்நிலையில் தர்ப்பணம் செய்தால் பித்ருக்கள் மகிழ்ச்சியடைவார்கள். பிதுர்தோஷம் விலகும்; பிதுர்களின் ஆசீர்வாதம் கிட்டும்.

சித்ரா பௌர்ணமி அன்று உப்பில்லாத உணவை இருவேளை சாப்பிட்டு விரதமிருந்தால் ஆயுள் பலம் கூடும். இந்நாளில் நெய்தீபம் ஏற்றி குபேரனின் மனைவி சித்ரா தேவியை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

சிலப்பதிகாரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று பூம்புகாரில் இந்திரவிழா நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன், மதுரைக்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுகிறான் என்ற ஐதீகம் உள்ளது.


சித்ரா பௌர்ணமி நாளிலும் அதற்கு அடுத்த நாளிலும் நீர்வீழ்ச்சியில் நீராடுவதும் போற்றப்படுகிறது. பொதுவாக நீர்வீழ்ச்சியுள்ள மலைப் பகுதிகளில் சித்தர்கள் வாசம் செய்வதால், அன்று நிலவொளியில் நீர்வீழ்ச்சியில் நீராடுவார்களாம். அந்த வகையில் தாமிரபரணியில் நீராடுவது சிறப்பிக்கப்படுகிறது. சிவன்- பார்வதிக்கு கயிலையில் பங்குனி உத்திரத்தன்று திருமணம் நடந்தது. அவர்கள் தம்பதி சமேதராக சித்ரா பௌர்ணமியன்று பொதிகை மலையில் காட்சி தந்தார்கள். இந்தக் காட்சியை தரிசிக்க அனைத்து நதிதேவதைகளும் பொதிகைக்கு வந்தார்கள். அந்த நதிகள் அனைத்தும் தங்களிடம் மக்கள் கரைத்த பாவங்களையெல்லாம் தாமிரபரணி நதியில் நீராடி நீங்கப் பெற்றார்கள்.  எனவே சித்ரா பௌர்ணமியன்று தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

தென்காசி- குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீகுற்றாலநாதர் கோவில். இங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மலைமேல் உள்ளது வனதேவதையான செண்பகா தேவியின் ஆலயம். சித்ரா பௌர்ணமி அன்று செண்பகாதேவிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த நாளில் இரவு வேளையில் மலைமேல் மஞ்சள் நிறத்தில் (சந்தனம்) மழை பெய்யும் என்று தலபுராணம் கூறுகிறது. அவ்வூரில் வசிக்கும் பெரியவர்களும் இது உண்மை என்கிறார்கள்.

இக்கோவிலுக்கு மேலேயுள்ள மலைமீது சிவ மதுகங்கை என்ற தேனருவியில், சித்ரா பௌர்ணமியன்று கங்கையானவள் சிவலிங் கத்திற்கு தேனபிஷேகம் செய்து வழிபடுவதால், தேன்துளிகள் சந்தன (மஞ்சள்) வண்ண மழையாகப் பெய்கிறது என்பது ஐதீகம். மலைமீது மழை பெய்ததற்கு அடையாளமாக சந்தன மணம் வீசுமாம். சிலசமயத்தில் சிறுதுளிகள் சாரல் போல் விழுவதும் உண்டாம்.

அடுத்த நாள் காலை மலைமீது ஏறிச் சென்று பார்த்தால், மழை பெய்ததன் அடையாளங்கள் மணல் பகுதியில் சந்தன நிறமாக காட்சி தருமாம். அந்த மணலைச் சேகரித்து வந்து பூஜித்து நெற்றியில் இட்டுக் கொள்வது வழக்கம்.

இதனால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியும் நிலவும் என்று கூறுகிறார்கள்.

எனவே, பல சிறப்புகள் பெற்ற சித்திரையைப் போற்றுவோம்; இறையருளால் நலமுடனும் வளமுடனும் வாழ்வோம்.



லல்
(1) சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்திலேயே 'சிவன்' சித்திரம் ஒன்று வரைய அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றியதாகவும், சித்திரை மாதத்திலேயே நான்முகன் இந்த புவியை படைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

 (2) சித்திரை மாதம் சுக்கில பட்ச  அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக 'தேவி பாகவதம்' கூறுகிறது.

 (3) சித்திரை மாத திருதியை திதியில் மகா விஷ்ணு மச்ச அவதாரம் (மீன் உருவம்) எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன. ஸ்ரீ ராமன் சித்திரை மாதத்தில்தான் அவதரித்தார். இருப்பினும் இந்தியாவில் பங்குனி மாத வளர்பிறையில் நவமி திதியிலேயே ராம நவமி கொண்டாடப்படுகிறது.

 (4)சித்திரை முதலாம் நாள்தான் இந்து சமயக் கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறும்.

 (5)இதே சித்திரை முதலாம் நாள்தான் தமிழ் முனிவர் அகத்தியருக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உமாமகேஸ்வரி திருமணக் காட்சியைக் காட்டி அருளினர். இவ்விழா ஆண்டுதோறும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் சித்திரை விசுத்திருவிழாவின் போது நடைபெற்று வருகிறது. வேறு சில சிவத்தலங்களிலும் இவ்விழா நடத்தப் பெறுகிறது.

 (6)சித்திரை மாதத்திற்கென்று மேலும் பல சிறப்புகளும் இருக்கின்றன. சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாம் பிறை தோன்றும் நாள் 'அக்ஷய திருதியை' என அழைக்கப்படுகிறது. இந்நாளில் வாங்கும் பொருள்கள் பன்மடங்காகப் பெருகும் என்கிற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடம் இன்றும் இருக்கிறது.

 (7) இந்த காலத்தில்தான் இந்துக் கோயில்களில் பிரமோற்சவம் எனும் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் வரும் பௌர்ணமி அன்று மதுரை மாநகரில் சொக்கநாதர் மீனாட்சி திருமண நிகழ்வுகள் சித்திரை விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.