புதன், 26 அக்டோபர், 2016

கோவர்த்தன பூஜை!


 வடமாநிலங்களில் தன திரயோதசி, நரக சதுர்த்தி, தீபாவளி, அன்னக்கூட்டு, பாய்ஜ் என அடுத்தடுத்து வரும் ஐந்து நாட்கள் முக்கியமாகும். இதில் கோவர்த்தன பூஜையை பீகார், அரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேச மாநிலங்களில் சிறப்பாகச் செய்வர்.

 

குஜராத் மக்கள் பெரும் பாலானவர்கள் தீபாவளியின் நான்காவது நாளை பெஸ்ட் வர்ஷ் என்று பெயரிட்டு தங்களின் புத்தாண்டு எனக் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் இந்திரனின் கோபத்திலிருந்து பிருந்தாவன கன்னிப் பெண்களையும்(கோபியர்கள்) பசுக்களையும் ஶ்ரீகிருஷ்ண பகவான் காத்த நாள் எனக் கொண்டாடுகிறார்கள். இந்த பூஜை கோவர்த்தன பூஜை என்று அழைக்கிறார்கள்



மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் மானச கங்கை குளக்கரையில் கோவர்த்தனகிரி உள்ளது. 5,000 வருடங்களுக்கு முன்பு இது 29 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததாம். இப்போது 80 அடி உயரமாக உள்ளது. பக்தர்கள் விழாவன்று இரவு விழித்திருந்து ஆடிப் பாடுவர். சிறு மலை உருவாக்கி அலங்கரிப்பர்.

அதன்முன் பலவித பலகாரங்களும், 56 வகை பதார்த்தங்களும், சாப்பாடும் வைத்து மலைபோல செய்வர். இதற்கு அன்னக்கூட்டு எனப் பெயர். பின் பூஜை செய்து அனைவரும் சாப்பிடுவர். 38 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரிவலப் பிரதட்சிணமும் செய்வர். இதனால் கோவர்த்தன கிரிதாரி அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக