புதன், 26 அக்டோபர், 2016

தீபாவளித் திருநாளில் இனிப்பு யாகம்!

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவிலை அடுத்து அமைந்துள்ள அய்யாவாடி திருத்தலத் தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. அதர்வண காளியாக தனிச் சந்நிதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக் கும் பிரத்தியங்கரா தேவியானவள் சிம்ம முகத் தோடு பதினெட்டு கரங்களுடன் சிரித்தபடி அருள் புரிகிறாள். தேவியின் அருகே ஸ்ரீலட்சுமியும் ஸ்ரீசரஸ்வதியும் காட்சி தருவது தனிச்சிறப் பாகும்.

இத்தலத்தில் அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் அருள்புரிகிறார்.

இவ்வாலயத்தில் மாதந்தோறும் நடக்கும் யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டால் இழந்த பதவியும் மரியாதை களும் மீண்டும் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. மேலும் மரணபயம் நீங்கும். நோய் நொடிகள், துக்கம், மனவேதனை, பில்லி சூன்யம், நவகிரகத் தொல்லைகள், தீயசக்தி களின் தாக்கம், திருஷ்டி போன்ற அனைத்தும் நிவர்த்தியாகும்.

"தன்னை ஆராதிப்பவர்களுக்கும் ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்களுக்கும் வேண்டும் வரத்தைத் தரும் தேவி, வழிபடுபவர்கள் தீய எண்ணங்களுடன் நடந்து கொண்டாலும் நெறி தவறினாலும் அவர்களுக்கு அருள் புரியாமல் அழித்துவிடும் குணம் கொண்டவள்' என்று அதர்வண வேதம் சொல்கிறது. எனவே, தூயமனம் கொண்டவர்கள், நல்ல உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே இங்கு நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

இழந்த அரச பதவியையும் நாட்டையும் மீண்டும் பெற பஞ்சபாண்டவர்கள் பூஜை செய்த திருத்தலம் இது. அதன் காரணமாகவே இத்தலத்திற்கு ஐவர் பாடி என்ற காரணப் பெயர் ஏற்பட்டு, அதுவே மருவி தற்போது அய்யாவாடி எனப்படுகிறது.

ராம-இராவண யுத்தம் நடந்தபோது, இராவணனின் மகன் இந்திரஜித், ராமபிரானைப் போரில் வெல்வதற்காக இத்திருத்தலம் வந்து நிகும்பலா யாகம் செய்தான். இதனை அறிந்த ராமபிரானும் மகாபிரத்தியங்கரா தேவியிடம் வந்து பிரார்த்தித்தார். நியாயம் உள்ள பக்கம் அருளினாள் தேவி. இந்திரஜித்தும் மாண்டான். இராவணனும் தோல்வியைத் தழுவி உயிர் விட்டான்.

மாதந்தோறும் அமாவாசை திதியில் ஸ்ரீபிரத்தியங்கராதேவியின் முன் காலை எட்டு மணி அளவில் தொடங்கும் யாகம், பகல் இரண்டு மணி வரை பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. இதில் 108 வகையான மூலிகைகள், ஹோமத்துக்குரிய பொருட்கள், பழங்கள், மலர்கள், பட்டாடைகள், பால்குணம் கொண்ட மரக்கட்டைகள், சமித்துக்கள், நெய் ஆகிய பொருட்களை அர்ப்பணிப்பதுடன் மிளகாய் வற்றலும் மூட்டை மூட்டையாக அர்ப்பணிக்கப்படுகிறது.

ஆடி, புரட்டாசி, கார்த்திகை, தை அமாவாசைகளில் செய்யப்படும் யாகம் மிகவும் சிறப்பானது. பக்தர்களின் பிரார்த்தனைகளுக்காகச் செய்யப்படும் இந்த யாகத்தை "நிகும்பலா யாகம்' என்பர்.

ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளித் திருநாளில் வரும் அமாவாசை நாளில் மட்டும் நடைபெறும் நிகும்பலா யாகத்தில் மேலே சொல்லப்பட்ட ஹோமப் பொருட்களை யாகக் குண்டத்தில் அர்ப்பணிப்பதில்லை. மேலும், யாருடைய உபயமாகவும் செய்யாமல் கோவில் நிர்வாகத்தி னரின் முழுச் செலவில் இந்த யாகம் நடை பெறும்.

அந்த யாகத்தில் பதினோரு ஆயிரம் எண்ணிக்கையில் இனிப்புப் பொருட்களான லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு என ஏதாவது ஒன்றினை யாகத்தில் சமர்ப்பிப்பார்கள். அன்று மிளகாய் வற்றல் சமர்ப்பிப்பது இல்லை. இனிப்புப் பண்டத்துடன் சமித்துக்கள், நெய் மட்டும் சேர்க்கப்படுகின்றன. இந்த யாகத்தை இனிப்பு யாகம் என்பர்.

தீபாவளி அன்று நடைபெறும் யாகம் மிகவும் சிறப்பானது.

பதினெட்டு சித்தர் பெருமக்கள் வழிபட்ட தலம்- அகத்திய மாமுனிவருக்குத் தேவி காட்சி தந்த திருத்தலம் அய்யாவாடி!

இங்குள்ள தலவிருட்சமான ஆலமரம் மிகவும் சிறப்பு பெற்றது. இந்த ஆலமரத்தில் ஐந்து வகையான இலைகள் துளிர்த்து, செழித்து இருக்கும் அதிசயத்தை இன்றும் காணலாம். பல பெருமைகளைக் கொண்ட ஸ்ரீபிரத்தியங்கரா தேவியை வழிபடுபவர்களின் இல்லங்களில் செல்வம் பெருகும். பகைவர்கள் அழிவர். அனைத்துக் காரியங்களும்- அது நியாயமாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும். ஆரோக்கியமான சூழ்நிலையில் வளமான வாழ்வு கிட்டும்!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக