வியாழன், 3 செப்டம்பர், 2015

துளசி பூஜை!



முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பவுர்ணமி அன்றும் இதைச் செய்யலாம்.

துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்க வேண்டும். தொடர்ந்து அவை ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஷ்ருஷிகேசா, பத்மநாபா, தாமோதரா என்று சொல்லி, மனதார வணங்கவும். அத்துடன், ஸ்வாகதம் என்றும் 3 முறை கூறவும்.

இனி, வெற்றிலையின் மீது சந்தனப் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அவருக்கு குங்குமத் திலகமிட்டு செம்மலரால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.

அடுத்து, தேங்காய் பழம், தாம்பூலம், பால் பாயாசம் நிவேதனத்துக்கு வைத்துக்கொண்டு பூஜையைத் துவக்குங்கள்.

ஓம் ஸ்ரீ விஷ்வக்சேனாய நம:- என்று மூன்று முறை சொல்லி விநாயகருக்கு துளசி தீர்த்தம் விடவேண்டும். தொடர்ந்து... ஓம் கஜானனாய நம: என்று துவங்கி விநாயகர் திருநாமங்கள் சொல்லி துதித்து, பழம் நிவேதித்து ஆரத்தி செய்யவும்.

அடுத்ததாக, அன்றைய நாள் குறிப்புடன் சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், கணவன்-மனைவி இருவருமே துளசி பீடத்துக்கு (துளசி மாடம் இருந்தால் அதன் முன்பு) முன்பாக அமர்ந்து, கீழ்க்காணும் நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம:
ஓம் விஸ்வ பூஜிதாயை நம:
ஓம் விஷ்ணுப்ரியாயை நம:
ஓம் தேவ மூலிகாயை நம:
ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம:
ஓம் சவுபாக்ய நிலயாயை நம:
ஓம் விஷ்ணு கேசின்யை நம:
ஓம் புஷ்பசாராயை நம:
ஓம் நந்தவன நாயகாயை நம:
ஓம் விஸ்வ பாவணாயை நம:
ஓம் யாக பூஜிதாயை நம:
ஓம் தான ப்ரதாயின்யை நம:
ஓம் மகாலக்ஷ்மி வாசாயை நம:
ஓம் சகல மாட கலாலங்கார்யை நம:
ஓம் ஸ்ரீராமப்ரியாயை நம:
ஸ்ரீ துளசீ தேவ்யை நமோ நம:

அர்ச்சனை முடிந்ததும் தூப தீப நிவேதனம் செய்து, கையில் மலர் எடுத்து மூன்றுமுறை தன்னையே சற்றிக்கொண்டு கீழ்க்காணும் துதியை மூன்று முறை சொல்லுங்கள்

ஓம் ப்ருந்தா ப்ருந்தாவனீ
விஸ்வ பூஜிதா விஸ்வபாவனீ
புஸ்பஸாரா நந்தனீச
துளசீ க்ருஷ்ண ஜீவனீ
ஏகாந்தாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம்
நாமார்த்த ஸம்யுதம் :படேத் தாம்ஸ
ஸம்பூஜ்ய அஸ்வ மேத பலம் லபேத்!

இப்போது மலர்களை அர்ப்பணித்துவிட்டு, மீண்டும் கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, மனதில் உங்களுடைய வேண்டுதல்களை நினைத்தபடி ஒரு நிமிடம் தியானித்து,

ப்ரசீத துளசி தேவி ப்ரசீத ஹரிவல்லபே
க்ஷீரோத மதநோத்பூதே துளசி த்வாம் நமாம்யஹம்

என்றபடி துளசிச்செடியின் மேல் மலர்களை போட்டு ஆரத்தி செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீத்ரிபுராயை வித்மஹே துளசி பத்ராய தீமஹி
தந்நோ துளசீ ப்ரசோதயாத்
யந்மூலே சர்வதீர்த்தாநீ யந்மத்யே சர்வதேவதா
யதக்ரே சர்வ வேதாஸ்ச துளசீம் தாம் நமாம்யஹம்
கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி

என்று சொல்லி நமஸ்கரித்து, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.

பெண்கள் அர்ச்சனை குங்குமத்தை திருமாங்கல்த்திலும், நெற்றி வகிட்டிலும் இட்டுக்கொள்ளலாம். மேலும், குடும்பத்தோடு சேர்ந்து துளசி ஆராதனை துதிப் பாடலைப் பாடி வழிபடுவதால், மேலான பலன்கள் கைகூடும். சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும்.

கார்த்திகை மாத சுக்கில பக்ஷ துவாதசியில் துளசி கல்யாணம் என்று கொண்டாடுவதும் உண்டு.

அப்பொழுது நெல்லிக் கிளையை மஹா விஷ்ணுவை மனதிலிருத்தி துளசியுடன் சேர்த்து வைத்து  பூஜிக்கலாம்.

நெல்லிக்காயில் விளக்கேற்றி பூஜிப்பவர்களும் உண்டு.

துளசி ஸ்தோத்திரம்!

 
ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா
வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க் கிழமை செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்
பச்சைப் பசுமை உள்ள துளஸி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே
ஹரியுடைய தேவி அழகீ நமஸ்தே
அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே
வனமாலை என்னும் மருவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே
அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டுவந்து
மண்ணில் மேல்நட்டு மகிழ்ந்து நல்ல நீருற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு
செங்காவிச் சுற்றமிட்டுத் திருவிளக்கும் ஏற்றிவைத்து
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து
புஷ்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்கு
என்ன பலனென்று ஹ்ருஷீகேசர்தான் கேட்க
மங்களமான துளசி மகிழ்ந்துரைப்பாள்
மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள்
தீவினையைப் போக்கிச் சிறந்தபலன் நான் அளிப்பேன்
அரும் பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்
தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்
புத்திரன் இல்லாதவர்க்குப் புத்திரபாக்கியம் அளிப்பேன்
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன்
பக்தர்கள்  பூஜை செய்யாதல் மோக்ஷபதம் கொடுப்பேன்
கோடீ காராம்பசுவைக் கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்குப் பொன்னமைத்துக்குளம்புக்கு வெள்ளிகட்டி
கங்கைக் கரைதனிலே கிரஹண புண்யகாலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மகாதானம் செய்த பலன்
நான் அளிப்பேன் சத்யம் என்றுநாயகியுமே சொல்லலுமே
அப்படியேயாக என்று திருமால் அறிக்கையிட்டார்
இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவி தன்னருளால்.

தாயே !  ஜகன் மாதா! அடியாள் செய்த சகல பாவங்களையும் மன்னித்து காத்து ரட்சித்து கோரும் வரங்களைத் தந்து அனுக்ரஹம் செய்ய வேண்டும் துளசி மாதாவே!


துளசி அஷ்டோத்திர சத நாமாவளி

 
ஓம் துளஸ்யை நம:
ஓம் பாவந்யை நம:
ஓம் பூஜ்யாயை நம:
ஓம் வ்ருந்தாவநநிவாஸிந்யை நம:
ஓம் ஜ்ஞாநதாத்ர்யை நம:
ஓம் ஜ்ஞாநமய்யை நம:
ஓம் நிர்மலாயை நம:
ஓம் ஸர்வபூஜிதாயை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் பதிவ்ரதாயை நம:

ஓம் வ்ருந்தாயை நம:
ஓம் க்ஷீராப்திமதநோத்பவாயை நம:
ஓம் க்ருஷ்ணவர்ணாயை நம:
ஓம் ரோகஹந்த்ர்யை நம:
ஓம் த்ரிவர்ணாயை நம:
ஓம் ஸர்வகாமதாயை நம:
ஓம் லக்ஷ்மீஸக்யை நம:
ஓம் நித்யஸுத்தாயை நம:
ஓம் ஸுதத்யை நம:
ஓம் பூமிபாவந்யை நம:

ஓம் ஹரித்யாநைகநிரதாயை நம:
ஓம் ஹரிபாதக்ருதாலயாயை நம:
ஓம் பவித்ரரூபிண்யை நம:
ஓம் தந்யாயை நம:
ஓம் ஸுகந்திந்யை நம:
ஓம் அம்ருதோத்பவாயை நம:
ஓம் ஸுரூபாரோக்யதாயை நம:
ஓம் துஷ்டாயை நம:
ஓம் ஸக்தித்ரயரூபிண்யை நம:
ஓம் தேவ்யை நம:

ஓம் தேவர்ஷிஸம்ஸ்துத்யாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் விஷ்ணுமந: ப்ரியாயை நம:
ஓம் பூதவேதாலபீதிக்ந்யை நம:
ஓம் மஹாபாதகநாஸிந்யை நம:
ஓம் மநோரதப்ரதாயை நம:
ஓம் மேதாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் விஜயதாயிந்யை நம:
ஓம் ஸங்கசக்ரகதாபத்மதாரிண்யை நம:

ஓம் காமரூபிண்யை நம:
ஓம் அபவர்கப்ரதாயை நம:
ஓம் ஸ்யாமாயை நம:
ஓம் க்ருஸமத்யாயை நம:
ஓம் ஸுகேஸிந்யை நம:
ஓம் வைகுண்டவாஸிந்யை நம:
ஓம் நந்தாயை நம:
ஓம் பிம்போஷ்ட்யை நம:
ஓம் கோகிலஸ்வராயை நம:
ஓம் கபிலாயை நம:

ஓம் நிம்நகாஜந்மபூம்யை நம:
ஓம் ஆயுஷ்யதாயிந்யை நம:
ஓம் வநரூபாயை நம:
ஓம் துக்கநாஸிந்யை நம:
ஓம் அவிகாராயை நம:
ஓம் சதுர்புஜாயை நம:
ஓம் கருத்மத்வாஹநாயை நம:
ஓம் ஸாந்தாயை நம:
ஓம் தாந்தாயை நம:
ஓம் விக்னநிவாரிண்யை நம:

ஓம் ஸ்ரீவிஷ்ணுமூலிகாயை நம:
ஓம் புஷ்ட்யை நம:

ஓம் த்ரிவர்கபலதாயிந்யை நம:
ஓம் மஹாஸக்த்யை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் லக்ஷ்மீவாணீஸுபூஜிதாயை நம:
ஓம் ஸுமங்கல்யர்சனப்ரீதாயை நம:
ஓம் ஸெளமங்கல்யவிவர்திந்யை நம:
ஓம் சாதுர்மாஸ்யோத்ஸ-வாராத்யாயை நம:
ஓம் விஷ்ணுஸாந்நியதாயிந்யை நம:

ஓம் உத்தானத்வாதஸீபூஜ்யாயை நம:
ஓம் ஸர்வதேவப்ரபூஜிதாயை நம:
ஓம் கோபீரதிப்ரதாயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நிர்குணாயை நம:
ஓம் பார்வதீப்ரியாயை நம:
ஓம் அபம்ருத்யுஹராயை நம:
ஓம் ராதாப்ரியாயை நம:
ஓம் ம்ருகவிலோசநாயை நம:
ஓம் அம்லாநாயை நம:

ஓம் ஹம்ஸகமநாயை நம:
ஓம் கமலாஸநவந்திதாயை நம:
ஓம் பூலோகவாஸிந்யை நம:
ஓம் ஸுத்தாயை நம:
ஓம் ராமக்ருஷ்ணாதிபூஜிதாயை நம:
ஓம் ஸீதாபூஜ்யாயை நம:
ஓம் ராமமன:ப்ரியாயை நம:
ஓம் நந்தநஸம்ஸ்த்திதாயை நம:
ஓம் ஸர்வதீர்த்தமய்யை நம:
ஓம் முக்தாயை நம:

ஓம் லோகஸ்ருஷ்டிவிதாயிந்யை நம:
ஓம் ப்ராதர்த்ருஸ்யாயை நம:
ஓம் க்வாநிஹந்த்ர்யை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் ஸர்வஸித்திதாயை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் ஸந்ததிதாயை நம:
ஓம் மூலம்ருத்தாரிபாவந்யை நம:
ஓம் அஸோகவநிகாஸம்ஸ்த்தாயை நம:
ஓம் ஸீதாத்யாதாயை நம:

ஓம் நிராஸ்ரயாயை நம:
ஓம் கோமதீஸரயூதீரஸோபிதாயை நம:
ஓம் குடிலாலகாயை நம:
ஓம் அபாத்ரபக்ஷ்யபாபக்ந்யை நம:
ஓம் தாநதோயவிஸுத்திதாயை நம:
ஓம் ஸ்ருதிதாரணஸுப்ரீதாயை நம:
ஓம் ஸுபாயை நம:
ஓம் ஸர்வேஷ்டதாயின்யை நம:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக