வியாழன், 3 செப்டம்பர், 2015

முத்தாலம்மன் போற்றி


ஓம் அம்மையே முத்தால பரமேஸ்வரியே போற்றி
ஓம் ஆதிமுதற் சக்தியே போற்றி
ஓம் இதய இருள் நீக்குபவளே போற்றி
ஓம் ஈகையுடையோளே போற்றி
ஓம் உமையாம்பிகையே போற்றி
ஓம் ஊரைக் காப்பவளே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் நிறைந்தவளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை தருபவளே போற்றி

ஓம் ஓங்கார நாயகியே போற்றி
ஓம் ஒளடதத்து நாயகியே போற்றி
ஓம் கல்வி தந்தவளே போற்றி
ஓம் காத்து அருள்பவளே போற்றி
ஓம் கிழமையானவளே போற்றி
ஓம் கீர்த்தி தருபவளே போற்றி
ஓம் குறைகள் பொறுப்பவளே போற்றி
ஓம் கூட்டம் நிறைப்பவளே போற்றி
ஓம் கெங்கா தேவியே போற்றி
ஓம் கேள்வி ஞானமே போற்றி

ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கொடுத்து அருள்பவளே போற்றி
ஓம் கோமாதாவே போற்றி
ஓம் கௌரி அம்பிகையே போற்றி
ஓம் சக்தி தேவியே போற்றி
ஓம் சங்கடம்  ஒழிப்பவளே போற்றி
ஓம் சித்தி உடையவளே போற்றி
ஓம் சீர்மை நாயகியே போற்றி
ஓம் சுகம் தருபவளே போற்றி
ஓம் சூதை அளிப்பவளே போற்றி

ஓம் செண்பகா தேவியே போற்றி
ஓம் செந்தமிழ் வாசகியே போற்றி
ஓம் சைகை புரிந்தவளே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சோகம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் சௌந்திர நாயகியே போற்றி
ஓம் அஞ்ஞானம் அழிப்பவளே போற்றி
ஓம் மெய்ஞ்ஞான ஒளியே போற்றி
ஓம் கண்ணின் ஒளியே போற்றி
ஓம் கண்ணாத்தாள் தாயே போற்றி

ஓம் அணிகலன் தருபவளே போற்றி
ஓம் அணிமணிகள் நாதமே போற்றி
ஓம் வீணையின் நாயகியே போற்றி
ஓம் வினைகள் நீக்குபவளே போற்றி
ஓம் அணுவின் அணுவே போற்றி
ஓம் அனாத ரக்ஷகியே போற்றி
ஓம் பிணியை ஒழிப்பவளே போற்றி
ஓம் பிழை பொறுத்தருள்பவளே போற்றி
ஓம் காணியாய் நிற்பவளே போற்றி
ஓம் காளிகா தேவியே போற்றி

ஓம் தினை தேன் தருபவளே போற்றி
ஓம் தித்திக்கும் மாவிளக்கே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தானம் தருபவளே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தங்க முத்துமாரியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை குணத்தாளே போற்றி
ஓம் தென்றலாய் ஆனவளே போற்றி

ஓம் தேசம் காப்பவளே போற்றி
ஓம் தைத் திங்கள் சங்கரியே போற்றி
ஓம் தொல்லை நீக்குபவளே போற்றி
ஓம் தொண்டர்க்கு அருள்பவளே போற்றி
ஓம் தோழமை உடையாளே போற்றி
ஓம் தோசம் அகற்றுபவளே போற்றி
ஓம் நன்மை தருபவளே போற்றி
ஓம் நர்த்தன நாயகியே போற்றி
ஓம் நாட்டிய தேவியே போற்றி
ஓம் நாக தேவியே போற்றி

ஓம் புனித அருளே போற்றி
ஓம் நித்திய கல்யாணியே போற்றி
ஓம் நேசம் அளிப்பவளே  போற்றி
ஓம் நீதி காப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொடுப்பவளே போற்றி
ஓம் நுண்ணறிவானவளே போற்றி
ஓம் நூலை கொடுத்தவளே போற்றி
ஓம் நூலாய் ஆனாய் போற்றி
ஓம் நெறி வகுத்தவளே போற்றி
ஓம் நெய்யாய் உறைபவளே போற்றி

ஓம் நெஞ்சம் நிறைபவளே  போற்றி
ஓம் நொடியில் அருள்பவளே  போற்றி
ஓம் நன்மை தருபவளே  போற்றி
ஓம் பரமன் தேவியே போற்றி
ஓம் பரமக்குடி காப்பவளே போற்றி
ஓம் பாடலின் இசையே போற்றி
ஓம் பிச்சியாய் ஆனவளே போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பிறவா வரமருள்வாய் போற்றி
ஓம் பிள்ளைகளை காப்பவளே போற்றி

ஓம் புத்தொளி அருள்பவளே போற்றி
ஓம் புதுமை தருபவளே போற்றி
ஓம் புவனங்கள் ஆள்பவளே போற்றி
ஓம் பூமாதாவே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூமாரியே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூவாய் ஆனவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் பூமா தேவியே போற்றி

ஓம் முண்டக கண்ணியே  போற்றி
ஓம் முத்தொழில் புரிபவளே  போற்றி
ஓம் மங்கள விளக்கே போற்றி
ஓம் மகேசன் துணையே போற்றி
ஓம் மங்கள வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் மஞ்சள் நிறத்தவளே போற்றி
ஓம் மாமறை போற்றும் நிதியே போற்றி
ஓம் மூவுலகும் தொழும் முத்தால அம்மையே போற்றி போற்றி


 முத்துமாரி அம்மன் போற்றி!

ஓம் முத்துமாரி அம்மையே உமையவளே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி

ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உன்னத வாழ்வளிப்பாய்  போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி

ஓம் ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
ஓம் ஔடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி

ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி

ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
ஓம் சீதளா தேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூர நாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி

ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஓம் தாலிவரம்  தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்ய கல்யாணியே போற்றி

ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி

 ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி

 ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் முத்து மாரி நாயகியே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் சோத்து கண்ணி  வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக