சனி, 6 ஆகஸ்ட், 2016
சந்ததி செழிக்க நந்தினி வழிபாடு!
அறிவும் அழகுமான மக்கட்செல்வம் வாய்க்க, சத்புத்திர பாக்கியம் பெறுவதற்கான சில வழிபாடுகளை ஞான நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று, நந்தினி வழிபாடு.
காமதேனுப் பசுவின் மகள் நந்தினிப் பசு; தெய்வ கடாட்சம் நிறைந்தது. ஒரு பசுவை அலங்கரித்து, நந்தினியாக பாவித்து வழிபட, நமக்கு நல்ல அறிவுள்ள சந்ததி உருவாவதுடன், வாழ்க்கையில் சகல செல்வங்களும் பெருகும் என்கின்றன் புராணங்கள்.
பவிஷ்ய புராணத்தில்…
ப்ருது என்ற மன்னன், தனது நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தைக் களைவதற்குப் பெரும் முயற்சிகள் எடுத்தான். ஆனாலும், வறட்சி நீங்கியபாடில்லை. அதற்குக் காரணம் பூமாதேவியே என்று கருதியவன், அவளைத் தாக்குவதற்கு ஆயத்தமானான். அப்போது பெண் உருவில் தோன்றிய பூமி மாதா,
”மானுடனே! பெண் உருவாய் உள்ள என்னைக் கொல்வதால் உன் குலமும் மக்களும் அழிவதோடு, பஞ்சம் மேலும் அதிகரிக்கும். உனக்காக நான் ஒன்று செய்கிறேன். அடக்கி வைத்திருக்கும் என் மடியைத் தளர்த்தி, அனைத்துச் செல்வங்களையும் பால் வடிவில் சொரிகிறேன். வேண்டும் என்பவர்கள், இளங்கன்றுக்குட்டியுடன் பாத்திரம் ஒன்றையும் கொண்டுவந்து, பாலைப் பெற்றுச் செல்லலாம்” என்றாள். அவளின் பசு ரூபத்தை சுரபி என்பார்கள்.
ப்ருது மன்னன், மனு பிரஜாபதியையே கன்றுக்குட்டியாக்கி, கைகளையே பாத்திரமாக்கி, சகல செல்வங்களையும் பெற்றுக்கொண்டான். தேவர்கள் இந்திரனைக் கன்றாக்கி, சொர்ண பாத்திரத்தைக் கொண்டு வந்து, பாலைக் கறந்து சென்றனர். மகரிஷிகள் பிரகஸ்பதியைக் கன்றாக்கி, இந்திரியங்களைப் பாத்திரமாகக் கொண்டு, வேத ரூபமான ஞானப் பாலைப் பெற்றுக் கொண்டனர். அசுரர்களோ பிரகலாதனைக் கன்றாக்கி, இரும்புக் குவளைகளில் மது என்னும் பாலைக் கறந்து சென்றனர். இந்தக் கதையை பவிஷ்ய புராணம் சொல்கிறது.
இப்படியான புராணச் சம்பவங்கள் மூலம், வறட்சி நீங்கி வளம் காணும் பொருட்டு, சுப நிகழ்வுகளில் முதலில் கோபூஜை செய்வது வழக்கத்துக்கு வந்தது எனலாம்.
நலம் யாவும் அருளும் நந்தினி பூஜை!
பூஜைக் காலம்: பசுவை நந்தினியாக பாவித்து அதன் கன்றுடன் சேர்த்து பூஜிப்பதே நந்தினி பூஜையாகும். விசேஷமான இந்த பூஜையை துவாதசி தினங்களில் மட்டும் செய்வது வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், கோபூஜை செய்யும் விதிப்படி பௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள், ஆஷாட நவராத்திரி எனப்படும் ஆடி மகா நவராத்திரி காலங்களிலும் இந்தப் பூஜையை செய்து நலம் பெறலாம்.
பூஜிக்கும் முறை: கொட்டிலில் கட்டியுள்ள பசுவையும் கன்றையும் வணங்கி, இரண்டையும் பரிசுத்தமான ஓரிடத்தில் நிறுத்தி, முதலில் பசுவின் தலையில் எண்ணெய் தடவவேண்டும். பிறகு, சிறிது மஞ்சள் நீர் தெளிப்பதுடன், சாதாரண நீரால் நீராட்ட வேண்டும். தொடர்ந்து, பன்னீர் முதலான வாசனை திரவியங்கள் தெளித்து, மீண்டும் கன்றுடன் சேர்த்துப் பசுவைக் குளிப்பாட்ட வேண்டும். அடுத்ததாக, மஞ்சள்பொடியைக் குழைத்து 21 இடங்களில்… பசு- கன்றின் நெற்றியில் துவங்கி, வால், பின்பகுதி, கால்கள் என 21 இடங்களில் திலகம் இட வேண்டும். அதன் மேல் குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். பின்னர், பூமாலைகள் சாற்றி, மீண்டும் மஞ்சள் சந்தனம் தெளித்து, வண்ண ஆடைகள் சாற்றிவிட வேண்டும்.
அடுத்து, மங்கல கலசக் கும்பம் ஸ்தாபிக்க வேண்டும். அதன் எதிரில் விளக்கு, தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, முளைவிட்ட பயறு, வெல்லம்- அரிசி கலவை, சர்க்கரை அன்னம், வெண்பொங்கல் ஆகியவற்றையும் தயாராக வைத்துக்கொள்ளவும். குங்குமம், உதிரிப்பூக்களும் அவசியம் வேண்டும்.
இனி, பூஜையைத் துவக்குவோம்.
முதலில், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, கிழக்குமுகமாக வைத்துக் கொள்ளுங்கள். ‘ஓம் ஸ்ரீ லக்ஷ்மி கணபதயே நம: ஓம் ஸ்ரீ கணபதயே நம: ஓம் ஸ்ரீ சக்தி கணபதயே நம:” என மூன்று முறை சொல்லி தூப-தீபம் காட்டி, கணபதிக்குக் கற்கண்டு நிவேதனம் செய்து வழிபடவேண்டும்.
அடுத்து, ‘மம குடும்ப சௌபாக்ய சித்யர்த்தம் அவயோக சாந்தியர்த்தம் ஸ்ரீநந்தினி பூஜாம் கரிஷ்யே’ என்று, வடக்கில் மஞ்சள் அரிசியை எடுத்துப் போட வேண்டும்.
பிறகு, ஸ்ரீகாமாக்ஷி தீபம் ஏற்றிவைத்து, ‘ஓம் தீபதேவி மகாதேவி லக்ஷ்மி ரூபே ஸநாதனி கோ பூஜா சுபசமய: சாட்சிதேவீ க்ருபா மயி’ என மூன்று முறை சொல்லவேண்டும். தொடர்ந்து, குங்குமம் மற்றும் வாசனை மலர்களால் கலசத்தை அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஓம் கோபுத்ரீச வித்மஹே
காமதேவ்யைச தீமஹி
தந்நோ நந்தினீ தேவி: ப்ரசோதயாத்
என்று கூறி, வணங்கிய பிறகு கலச அர்ச்சனை செய்யவேண்டும்.
ஓம் காமதேனுவே நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஹவ்ய கவ்ய பலதாயை நம:
ஓம் வ்ருஷப புத்ரியை நம:
ஓம் சௌரப்யை நம:
ஓம் மகாலக்ஷ்மி வாஸஸ்தயாயை நம:
ஓம் ரோகிணீ வல்லபாயை நம:
ஓம் ஸ்ருங்கிண்யை நம:
ஓம் க்ஷிரதாரிண்யை நம:
ஓம் காம்போஜ ஜனகாயை நம:
ஓம் பப்ல ஜனகாயை நம:
ஓம் யவன ஜனகாயை நம:
ஓம் மகனீயாயை நம:
ஓம் நைசிக்யை நம:
ஓம் சபலாயை நம:
ஓம் ஸ்ரீம் கோமாத:
புத்ரீம் நந்தீன்யை நம:
சகல ஆராதனை: ஸ்வர்ச்சிதம்
கலச அர்ச்சனை முடிந்ததும், உதிரிப்பூக்கள் இருக்கும் தட்டு, குங்குமம் ஆகியவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு, கணவன் மனைவி இருவரும் பசுவின் முன் நின்று, மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.
ஓம் ஈஸ்வர ரூபிண்யை நம:
ஓம் பிரம்ம ரூபிண்யை நம:
ஒம் விஷ்ணு சக்தியை நம:
ஓம் தீர்த்த வாசினே நம:
ஓம் லோகபீடாய நம:
ஓம் ஜ்யேஷ்டராஜாய நம:
ஓம் சூர்ய தேவாய நம:
ஓம் சந்திரப்ரகாசாய நம:
ஓம் மாருதயே நம:
ஓம் வருணாய நம:
ஓம் யட்சராஜாய நம:
ஓம் தர்மராஜாய நம:
ஓம் இந்திராய நம:
ஓம் நாகராஜாய நம:
ஓம் கந்தர்வராஜாய நம:
ஓம் அப்சதேப்யோ நம:
ஓம் கணாதிராஜாய நம:
ஓம் நேத்ர நிலயாய நம:
ஓம் ப்ருகுரிஷிப்யோ நம:
ஓம் சாத்தேப்யோ நம:
ஓம் உமாதேவ்யை நம:
ஓம் பூமிதேவ்யாய நம:
ஓம் மகாலக்ஷ்மியை நம:
ஓம் தேவேப்யோ நம:
ஓம் பிரும்மனே நம:
ஓம் விஷ்ணுவே நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் சதாசிவாய நம:
நானாவித பரிமளபத்ர புஷ்பம் சமர்ப்பயாமி.
இங்ஙனம் அர்ச்சித்து முடித்ததும், பசுவுக்கும் கலசத்துக்கும் தூப- தீபம், நிவேதனம் செய்து, பசு மற்றும் கன்றுக்கு அரிசி- வெல்லக் கலவையைக் கொடுத்து, கற்பூர ஆரத்தி செய்து, மூன்று முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். பின்னர், கண்களை மூடியபடி (கைகளில் மலர் எடுத்து) ஒரு நிமிடம் தியானித்து.
ஓம் சர்வகாம துகே தேவி சர்வ தீர்த்தா பிஷேசிநீ
பாவஸ்ரீ நந்தினீ ஸ்ரேஷ்டா தேவீ துப்யம் நமோஸ்துதே!
என்று கூறி, பின்வரும் கோமாதா துதிப்பாடலைப் பாடி வழிபடவேண்டும்.
திங்கட் பசுவின் மனம் நாறும் சீரடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து மோதரங் கக்கடலுள்
வெங்கட் பணியணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே!
பாடல் பாடி வழிபட்டபிறகு, ஆத்ம பிரதட்சிணம் செய்து, கீழே விழுந்து வணங்கவேண்டும். தொடர்ந்து, பசுவுக்கும் கன்றுவுக்கும் பழம், கீரைகள் கொடுத்து (அதிகம் தந்தால் உடல்நலம் கெடும் என்பதால், குறைந்த அளவு கொடுக்கவும்) போற்றி திருக்கருவைப் படித்து, பூஜையை நிறைவு செய்யலாம்.
ஓம் அன்பின் வடிவமே போற்றி!
ஓம் ஆனந்தம் தரும் தாயே போற்றி!
ஓம் திருமகள் வடிவே போற்றி!
ஓம் மடியுடை மாதே போற்றி!
ஓம் ஆதார சக்தியளே போற்றி!
ஓம் ஐம்பொருள் தருபவளே போற்றி!
ஓம் அறத்தின் வடிவமே போற்றி!
ஓம் கன்று தரும் கருணையே போற்றி!
ஓம் புல் விரும்பும் புனிதமே போற்றி!
ஓம் தர்மத்தின் வடிவமே போற்றி!
ஓம் உயிர் கொடுக்கும் உத்தமி போற்றி!
ஓம் உணவுக்கு ஆதாரமே போற்றி!
ஓம் நான்மறைக் காலனாய் போற்றி!
ஓம் கொம்பழகியே கோவே போற்றி!
ஓம் பால் கொடுத்து உயிரானாய் போற்றி!
ஓம் நந்தினித் தாயே நலமே போற்றி! போற்றி!
மாதுளை!
மாதுளையில் வீற்றிருக்கும் மகேசனே! உம் கருணையினால் மனமதைச் செம்மையாக்கி செழிப்பாய் வாழ முனைகிறோம் ஐயனே! உம் அருள்பெற்ற மாணிக்க வாசகரைப்போல் உம்மையே நினைக்கும் மனதை எமக்கும் தாரும் ஐயா!
கீழ்வேளூர் சிவத்தலத்தில் வீற்றிருக்கும் சிவனே! உம் திருவடி சரணமே இப்பிறவி யின் பயனாம்! பெருமான் உறைந்த மாதுளையை மருந்தாக்கி மக்கள் பிணி தீர்க்க முனைகிறோம் இறைவா!
விடாத இருமல் தீர…
உலர்ந்த மாதுளம்பூ மொட்டு, சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், காய்ந்த திராட்சை, தனியா ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப் பட்ட இருமலும் தீரும். சிலருக்கு குடற்புண் உண்டாகி, அதனால் தொண்டைக்கட்டு, இருமல் உண்டாகும். மேற்கண்ட கஷாயம் இப்பிரச்சினைக்கும் நல் மருந்தாய் அமையும்.
வயிற்றுப்போக்கை நிறுத்த…
ஒரு மாதுளம்பிஞ்சு, அதிவிடயம், கோரைக் கிழங்கு, விளாம்பழ ஓடு, சுண்டைக்காய், கசகசா, மாம்பருப்பு ஆகியவை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து அரைத்து, கட்டித் தயிரில் நெல்லிக்காய் அளவு கலந்து சாப்பிட எப்பேர்ப்பட்ட வயிற்றுப்போக்கும் நொடியில் விலகும்.
மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் தீர…
மாதுளம்பூ, மாசிக்காய், அருகம்புல் ஆகிய மூன்றையும் வகைக்கு பத்து கிராம் எடுத்து கஷாயமிட்டு, பாதியாகச் சுண்டச் செய்து சாப்பிட, மூக்கிலிருந்து அடிக்கடி உண்டாகும் ரத்தப்போக்கு சரியாகும்.
பற்களைப் பற்றிய வியாதிகள் தீர…
மாதுளை துளிர், மாதுளம் மொட்டு, மாதுளம்பூ, மாதுளம்பிஞ்சு, மாதுளை ஓடு, ஆலம்பட்டை, அரசம்பட்டை, மருதம்பட்டை, கருவேலம்பட்டை, மாசிக்காய், கடுக்காய், இந்துப்பு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேகரித்து தூள் செய்து, இத்துடன் 20 கிராம் அளவு பச்சைக் கற்பூரத்தையும் தூள் செய்து கலந்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பற்பொடியில் பல்துலக்கி வர முக வசீகரம் உண்டாகும். மேலும் பல்வலி, பல்கூச்சம், பல்ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறுவீக்கம், ஈறுஅரிப்பு, பல் அசைவு, சொத்தைப்பல் போன்ற பற்களைப் பற்றிய அனைத்து வியாதிகளும் தீரும். மேலும் நாக்கில் உண்டாகும் புண், நாசியில் உண்டாகும் புண், தொண்டைப்புண் போன்றவையும் இப்பற் பொடியால் தீரும்.
ரத்த பேதி நீங்க…
மாதுளம்பூ, அத்தி, துத்தி, ஆவாரம்பூ, பிரண்டை, பொடுதலை, வில்வம், வில்வ ஓடு, மாதுளை ஓடு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவு சேர்த்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை ஐந்து கிராம் அளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர, ரத்தபேதி மற்றும் ரத்த மூலம் குணமாகும். மேலும் ஆசனவாய்ப் பகுதியில் உண்டாகும். புண், அரிப்பு, தடிப்பு, வெடிப்பு போன்ற குறைபாடுகளும் முழுமையாய் நீங்கும்.
வாந்தியை நிறுத்த…
கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை நிறுத்துவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. வாந்தியை நொடிப்பொழுதில் நிறுத்தும் சக்தி மாதுளைக்கு மட்டுமே உண்டு. சித்த மருத்துவ மருந்துக்கடைகளில் கிடைக்கும், “மாதுளை மணப்பாகு’ என்ற மருந்தினை வாங்கி, மணிக்கு ஒருமுறை கொடுத்து வாருங்கள். ஐந்தாறுமுறை கொடுத்தபின் வாந்தி வருவது நின்றுவிடும். கடைகளில் வாங்க இயலாதபட்சத்தில் இங்கே குறிப்பிட்டபடி உங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
மாதுளைச் சாறு, நெல்லிச் சாறு, ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றை வகைக்கு 100 மி.லி. எடுத்து ஒன்றாக்கி, 300 மி.லி. தேனுடன் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாய் எரிக்கவும் சாறுசுண்டி பாகுபதம் வரும்பொழுது எடுத்து பத்திரப்படுத்தவும். எளிய முறையில் செய்யப் படும் இம்மாதுளை மணப்பாகு கடுமையான வாந்தியை நிறுத்தும் வல்லமை கொண்டது.
விக்கலை நிறுத்த அற்புதமான வழி…
மதுப் பழக்கத்தினால் கல்லீரலைக் கெடுத் துக் கொண்ட அன்பர்களுக்கு, அவர்களையும் வாழ்விக்கும் பொருட்டு அரிய மருந்தொன்று சொல்கிறேன். தீவிர மதுப்பழக்கம் உடையோ ருக்கு, கல்லீரல் கெட்டு ரத்த மாறுபாடுகள் உண்டாகி விக்கல் நோய் உண்டாகும். விக்கல் நோயை முற்றாகக் குணப்படுத்தும் வல்லமை மாதுளைக்கு உண்டென்பதை அடித்துச் சொல்லலாம்.
மாதுளம் பிஞ்சு, மாதுளம்பூ, வறுத்த சீரகம், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை விக்கல் கண்டபோது தேனில் குழைத்து சாப்பிட விக்கல் உடனே நிற்கும். மேலும் அடிக்கடி விக்கல் நோயால் அவதிப்படு பவர்களும், குடியிலிருந்து மீள நினைக்கும் அன்பர்களும் இதனைத் தொடர்ந்து பயன் படுத்தலாம். கல்லீரல் சார்ந்த பிற நோய்களான கல்லீரல் வீக்கம் மற்றும் சுருக்கம், கல்லீரலில் உண்டாகும் புண், கட்டி, சீழ்க்கட்டி, பித்தப் பையில் உண்டாகும் புண், கட்டி, கற்கள் போன்றவற்றையும் அதிசயமாய் குணப் படுத்தும். இம்மருந்தினை, எம்பெருமான் ஈசனை சரணடைந்து சாப்பிடுங்கள்; சகலமும் பெறுவீர்கள்.
மன உளைச்சலுக்கு மாதுளையே மாமருந்து…
சமீபத்திய மேலைநாட்டு ஆய்வறிக்கை, “மாதுளம்பழச் சாறை மனநோயால் பாதிக் கப்பட்டவர்கள், ரத்த அழுத்த இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மிகச் சிறப்பான பலனைப் பெறலாம்’ என்று தெரிவிக்கிறது.
ஆண்மைக் குறைவு நீங்க…
மாதுளை ஓடு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, அக்கிரகாரம், பூனைக்காலி விதைப்பருப்பு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர, நீர்த்துப் போன சுக்கிலம் கட்டியாகி, போக உணர்வு விருப்பம் போல் நீடிக்கும்.
உயிரணுக்கள் பெருக…
மாதுளை ஓடு, நெருஞ்சில், கோரைக்கிழங்கு ஆகிய மூன்றையும் ஒன்றிரண்டாய் சிதைத்து, பசும் பாலில் போட்டு வேக வைத்துக் காய வைக்கவும். நன்கு காய்ந்தபின் நன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மதியம்- இரவு என மூன்று வேளையும் பாலில் கலந்து சாப்பிட்டு வர, உயிரணுக்கள் கோடிக் கணக்கில் பெருகும். வளமையான உயிரணுக்கள் வலுவான நிலையில் உண்டாகும். உங்கள் வீட்டில் ஈசன் அருளால், மழலைச்சத்தம் வெகுசீக்கிரமாய் கேட்கும். குறிப் பெடுத்துக் களைத்துவிடாமல், மருந்து செய்யும் வேலையை மகேசனை வேண்டி ஆரம்பியுங்கள்!
புதன், 3 ஆகஸ்ட், 2016
சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்!

தலவரலாறு :
அசுர மன்னனுக்கும், எருமை அரசிற்கும் பிறந்தவன் மகிஷன். பல காலம் செய்த தன் தவங்களினால் கிடைத்த வரங்கள் அவனுக்குச் செருக்கை உண்டாக்கின. எனவே அவன் தேவர் மீது படையெடுத்து அவர்களை வென்றான். ஏழு உலகமும் அவன் பெயர் கேட்டு நடுங்கின. தேவர் துயர் நீக்க துர்கை கடும் தவம் புரிந்தாள் ஒன்பது நாட்கள் மஹிஷனுடன் கடும் போரிட்டு, தசமி அன்று மஹிஷனைக் கொன்று மஹிஷாசுர மர்த்தினி எனப் பெயர் பெற்றார்.
மஹிஷனுடன் போரிட்ட சினம் தணியவும், தன்னுடைய கொடிய தோற்றம் மாறவும் தவம் புரிய என்னினாள் தேவி. தேவி உக்ர சொருபத்துடன் வந்து சேர்ந்த இடம் திருவரங்கம். கோவிலில் ஆராதனை செய்யும் பட்டர்கள் வைஷ்ணவியின் உக்கிரம் தங்காமல், அவளை மக்கள் அதிகமாக செல்லாத வேப்பமரம் சென்று தவம் செய்யுமாறு வேண்டினர். தவத்திற்கு ஏற்ற இடமாக அமைந்தது காவேரி கரையில் உள்ள சமயபுரத்தில் இருந்த வேப்பங்காடு .
கௌமாரி என்னும் பெயருடன் தவம் புரிய வந்த செவ்வந்தி நிறத்துடையாள் மஞ்சள் நிற ஆடை அணிந்தாள். மென்மையான மலர்களால் தன்னை மூடிக்கொண்டாள். உண்ணா நோம்புடன் கடும் தவம் புரிந்தாள். தவம் பலித்தது. துர்கையின் கோபம் தீர்ந்தது. அந்த இடத்தில் வாழ்ந்த மக்களும் அம்மனுக்கு ஒரு ஆலாயம் எழுப்பி வழிபட்டு வந்தார்கள். அன்று முதல் மாரியம்மனாக மக்கள் மனக் குறைய தீர்க்க அன்னை அங்கேயே கோவில் கொண்டு உறைகிறாள் .
சுவாமி : மாரியம்மன்.
தலவிருட்சம் : வேம்பு மரம்.
தலச்சிறப்பு : சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் என்ற பழமொழிக்கு ஏற்ப பக்தர்களின் கஷ்டங்களை தக்க சமயத்தில் காப்பதாக ஐதீகம்.


"பச்சை பட்டினி விரதம்"!
மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை, உலக நன்மைக்காக அம்பாளே விரதம் மேற்கொள்கிறார். அந்த விரதம் இனிதே நிறை வேற பக்தர்கள் பூக்களை அம்பாளின் மீது அபிஷேகம் செய்வதே "பூச்சொரிதல்" என கூறப்படுகிறது.
அம்பாள் மேற்கொண்டிருக்கும் இந்த விரதத்தை "பச்சை பட்டினி விரதம்" என்பர்.
பூச்சொரிதல் நாள் முதல் 28 நாட்களுக்கு தளிகை, நெய்வேத்தியம் கிடையாது. இளநீர், கரும்பு, பானகம், துள்ளுமாவு, நீர்மோர் மட்டுமே அம்பாளுக்கு கொடுக்கப்படுகிறது.
கோவிலின் கட்டடக்கலை :
விஜய நகர மன்னர் ஒருவர் தென்னாட்டு படையெடுப்பின் போது மாரியம்மனை தொழுது அவள் ஆசியுடன் வெற்றி பெற்றார். தன் வேண்டுதளை நிறை வேற்றும் விதமாக கௌரிக்குப் பெரிய மதில்களுடன் ஆலயம் எழுப்பி. அதில் பரிவார பரிவர்த்தனைகள் தேவதைகளாக விநாயகரையும், கருப்பண்ண சாமியையும் பிரதிஷ்டை செய்தார்.
கோவிலின் வழிபாடு நேரம் : காலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை.
பூஜை விவரம் : ஆறு கால பூஜைகள்!
உசாத் காலம் - காலை 6.00 மணி.
கால சாந்தி - காலை 8.00 மணி.
உச்சி காலம் - பிற்பகல் 12.00 மணி.
உச்சி காலம் - பிற்பகல் 12.00 மணி.
சாய ரட்சை - மாலை 6.00 மணி.
இரண்டாம் காலம் - இரவு 8.00 மணி.
அர்த்த ஜாமம் - இரவு 9.00 மணி.
இரண்டாம் காலம் - இரவு 8.00 மணி.
அர்த்த ஜாமம் - இரவு 9.00 மணி.
தங்க தேர் - இரவு 7.00 மணி.
முகவரி :
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
சமயபுரம் - 621 112, திருச்சி மாவட்டம்.
தொலைபேசி எண் : 0431 - 2670460.
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர்!

எறும்புகளுக்காக தலை சாய்த்த இறைவன்!
தாரகாசுரனை அழிக்க பிரம்மன் சொல்லியபடி எறும்பு வடிவில் தேவர்கள் அசுரர்களுக்குத் தெரியாமல் சிவ லிங்கத்தின் மேல் ஏற முயன்றனர். ஆனால் எண்ணெய்ப் பசையின் காரணமாக ஏற முடியாமல் கஷடப்பட்டனர். அதனால் சிவபிரான் புற்றாக மாறி, சொசொரப்புத் திருமேனி கொண்டார். நம்முடைய கோரிக்கைகளையெல்லாம் செவிசாய்த்துக் கேட்டுக் கொள்வது போல சிவலிங்கம் சற்று சாய்ந்த நிலையில் காணப்படும். எறும்புகள் ஊர்ந்து சென்ற தடம் சிவலிங்கத்தின் மேல் தெரியும்.

திரு எறும்பீஸ்வரர் திருக்கோயில் பழமையான கோயில்களைப் பாதுகாக்கும் தொல்லியல் துறையின் கீழ் உள்ள கோயில். தமிழகத்தில் உள்ள 275 பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 124-வது ஸ்தலமாகும். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இது சோழர் காலக் கோயில். இக்கோயில் 120 அடி உயர மலையின் மேல் 125 படிகள் ஏறிச் சென்று காணும் வகையில் அமைந்துள்ளது.
திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : எறும்பீஸ்வரர் (மதுவனேஸ்வரர்)
தல நாயகி : சௌந்தரநாயகி அம்மன் (நறுங்குழல் நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ( படும தீர்த்தம்)

கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் லிங்கமாக இருக்கிறது. எனவே, லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர். லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்' என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.

தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம்.
சிவன் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில் ஒருவர் கோப முகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும் சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைகின்றனர் என்பதை இவ்வடிவம் காட்டுகிறது.
கோஷ்டத்தில் சிவனுக்கு பின்புறத்தில் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொழுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு.
சிவன் சன்னதியின் இடப்புறம் நவக்ரகங்கள் சன்னதியும், சிவன் சன்னதிக்கு வெளியே சௌந்தர நாயகி அம்மன் சன்னதியும் உள்ளன.

அம்பாள் நறுங்குழல் நாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கிறாள் என்பது ஐதீகம். எனவே, இப்பெயரில் அழைக்கின்றனர். இவளுக்கு தினமும் வேறுவேறு விதமாக அலங்காரம் செய்கின்றனர். இதனால் அம்பாள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் சிலை இருக்கிறது.

தல வரலாறு :
தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒரு நிலையில் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனைத் தோல்வியுறச் செய்தான். தோல்வி கண்ட இந்திரன், பிரம்மனிடம் முறையிட்டான். பிரம்மன் "தென்கயிலாயமான மணிக்கூடபுரத்துப் பெருமானை வழிபடுவாயாக, அப்போது ஒரு புதல்வன் தோன்றுவான், அவனே சூரனை அழிப்பான்" என்று வழி கூறினார். அதன்படி தாங்கள் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக் கூடாது என்பதால், இந்திரனும், தேவர்களும் எறும்புகள் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இறைவனை கருநெய்தல் மலர்களால் பூசித்து வந்தனர்.
எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபட சிரமமாக இருந்தது. இதனால் தன் வடிவத்தினைப் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்குத் திருவருள் செய்தார். இதே போல, சிவசருமன் என்ற சிறுவனுக்காக விரிஞ்சிபுரத்திலும், தாடகைக்காகத் திருப்பனந்தாளிலும் முடி சாய்த்து காட்சி தந்தது இங்கே நினைவு கூறத்தக்கது.
வழிபட்டோர் : முருகன், பிரம்மன், திருமகள், ரதி, இந்திரன், அக்னி, அகத்தியர், நைமிச முனிவர் மற்றும் கட்டாங்கழி சுவாமிகள் முதலானோர் வணங்கிப் பேறுபெற்றுள்ளனர்.
கோவில் சிறப்பு :
1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது. இது 70 வது தேவாரத்தலம் ஆகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவில் வழிபட்ட தலம். நவக்கிரக சன்னதியில் சூரியனுடன் அவரது மனைவியர்களான உஷா, பிரதியூஷா இருவரும் ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்தபடி இருக்கின்றனர். இக்கோயிலுக்கு இடது புறத்தில் கைலாசநாதர் தனிக்கோயிலில் இருக்கிறார்.
இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம், பதும தீர்த்தம், மது தீர்த்தம், குமார தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளது. ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே யார் பெரியவர் என போட்டி வந்தபோது வாயுவால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே இங்கு மலையாக இருக்கிறதாம்.
கருவறைக்கு பின்புறத்தில் இரண்டு காசி விஸ்வநாதர் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கர வடிவம் இருக்கிறது. சுவாமியையும், இச்சக்கரத்தையும் வழிபடுபவர்களின் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர்.
தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள்.
சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் உண்டாகும், துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் சொர்ணகால பைரவர் சன்னதி இருக்கிறது. மிகவும் உக்கிரமாக இருக்கும் இவரது சன்னதிக்கு நேரே கஜலட்சுமி தனிச்சன்னதியில் இருக்கிறாள். ஒரேசமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக்கொண்டால் பயங்கள் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் :
வைகாசியில் பிரம்மோற்சவம்,
ஐப்பசி அன்னாபிஷேகம்,
மகா சிவராத்திரி பௌர்ணமி கிரிவலம்,
பிரதோஷம் என சிவாலய விழாக்கள் அனைத்துமே நடைபெறுகின்றன.
திரு எறும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிச்செய்த தேவாரப் பாடல்:
விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாள்தோறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!
மருந்து வானவர் தானவர்க்கு இன்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யான் எங்கள் ஈசனே !!
நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்இறை
மரங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள் செய்தஎம் அங்கணன்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!
நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்திடுவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!
கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டுஎனை
எறும்பி யூரான் செய்த இயற்கையே !!
மறந்து மற்றிது பேரிடர் நாடொறும்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையில் இட்டுஎனை
எறும்பி யூர்அரன் செய்த இயற்கையே !!
இன்பமும்பிறப் பும்இறப் பின்னொடு
துன்ப மும்உட னேவைத்த சோதியான்
அன்ப னேஅர னேஎன்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே !!
கண்நி றைந்த கனபவ ளத்திரள்
விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துரு வாய்உயி ராயவன்
எண்நி றைந்த எறும்பியூர் ஈசனே !!
நிறங்கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்
நறுங்குழல் மட வாள்நடுக்கு எய்திட
மறங்கொள் வாளரக்கன் வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே !!
கோயில் முகவரி :
அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோவில்,
திருவெறும்பூர் - 620 013, திருச்சி மாவட்டம்.
Ph:0431 - 6574 738, 98429 - 57568.
திருப்பொன்னூசல்!
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329
மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330
முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்
தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333
மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334
உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335
கோலவரைக்குடுமி வந்து குவலத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337
திருச்சிற்றம்பலம்
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329
மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330
முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்
தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333
மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334
உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335
கோலவரைக்குடுமி வந்து குவலத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337
திருச்சிற்றம்பலம்
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா!
குழந்தை பிறந்த உடன் சரியான நேரத்தையும் ஆண்டு, மாதம், தியதி, நட்சத்திரம், ஊர் போன்றவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தமிழ், ஆங்கில தேதி இரண்டையும் குறித்துக்கொள்ளுங்கள். குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து ஜாதகம் கணீக்க வேண்டும் .
குழந்தை பிறந்ததினத்திலிருந்து , வீடு கூடுவதற்கு 16ம் நாளை தேர்ந்தெடுப்பது உத்தமம்.அல்லது அடுத்து வரும் நல்ல சுபதின்த்தில் குருக்களைய்யாவை அழைத்து கிரகசுத்தி சடங்கை செய்யவும். அன்றைய தின்மே சுபவேளையில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவது நல்லது. அன்று முடியாவிட்டால் 3 மாதத்துக்குள் நடத்துவது நல்லது.
குழத்தைக்கு புது ஆடை அணிவித்து தாயாரின் மடியில் இருக்கும் குழந்தையை,
தாயும், தந்தையும் 3 முறை மாற்றிக்கொண்டபின் தகப்பனார் மடியில் வைத்துக்கொண்டு, ஒரு தாம்பாளத்தில் புழுங்கலரிசியை நிரப்பி,அரிசியில் முனை பழுதுபடாத விரலி ம்ஞ்சள் கொண்டு, குழந்தைக்கு சூட்டப்பட உள்ள பெயரை தகப்பனார் 3 முறை எழுதவேண்டும்.
பின் குழந்தையின் வலது காதில் தகப்பனார் மெல்லிய குரலில் 3 முறை உச்சரிக்கவேண்டும். பின் சபை அறிய 3 முறை உரத்த குரலில் சொல்லவேண்டும். குழந்தையின் அத்தை ( குழந்தையின் தகப்பனாரின் சகோதரி ) குழந்தைக்கு (காப்பிடுவது ) வளையல் அணிவிப்பது, தண்டை அணிவிப்பதும்ரபு.குழந்தையின் தாயின் வ்ழியிலிருந்து அரைக்கு சலங்கையும், தந்தைவழியில் கழுத்துக்கு சங்கிலியும் அணிவிப்பதும்ரபு.அதன்பின் ம்ற்றோர் குழந்தையை ஆசீர்வதிப்பது வழக்கம். வந்திருப்பவர்களுக்கு பூந்தி,காப்பரிசி கொடுக்கவெண்டும்.
காப்பரிசி - களைந்து அரித்த பச்சரிசியுடன் வ்றுத்த சிறுபருப்பும், எள்ளும் சேர்த்து தேவைக்கு ஏற்ப சர்க்கரைப்பாகில் கலந்து கொடுப்பது.
குழந்தை பிறந்த 6 வது மாதத்தில் ஒரு சுபதினத்தில் முதல்முறையாக சர்க்கரை பாயாசம் ஊட்ட வேண்டும்.குழந்தைக்கு திருவமுது ஊட்டும் இந்த சடங்கினை ஆலயங்களில் வைத்தும் செய்வதும் உண்டு. அதன்பிறகு குழந்தைக்கு எல்லவித உணவுகளும் கொடுக்கலாம்.
குழந்தைக்கு திருவமுது ஊட்டுவதற்குரிய பொருட்கள் தாய் வீட்டிலிருந்து கொண்டுவருவார்கள்.
முதல் பிறந்த நாள் !
முதல் பிறந்த நாள் !
குழந்தையின் முதல் வருட பிறந்த நாள் ஜென்ம நட்சத்திரத்தில் விழாவக கொண்டடுவது உண்டு.பிறந்த நாள் அன்று வீட்டில் கணபதி ஹோமம், ஆயுசு ஹோமம் செய்வித்தல் நல்லது.
பிறந்த நாள் அன்று கோவிலுக்கு அழைத்துச்சென்று குழந்தைக்கு புத்தாடை அணிவித்து நட்சததிரம், பெயர் சொல்லி அர்ச்சனை செய்வித்து வழிபாடு நடத்தவும்.
பிறந்த நாள் விழாவின் மறுதினம், குழந்தையை தாய்மாமன் மடியில் வைத்து குழந்தைக்கு முடி இறக்கி காது குத்த வேண்டும்( தேவைப்படும் பொருட்கள் தாயின் வீட்டிலிருந்து கொண்டு வருவார்கள்). இந்த சடங்கை ஏதாவது ஒரு கோவில் சன்னதியில் வைத்து செய்யவேண்டும்.
ஏதாவது பிரார்த்தனை ( நேர்த்திக்கடன் ) செய்திருந்தால் அந்த ஆலயத்தில் வைத்து இந்த சடங்குகளை செய்திட வேண்டும்.
வித்யாரம்பம் - ஏடு தொடங்குதல்!
குழந்தைக்கு 3 வயதுக்குள் ஒரு நல்ல தினத்தில் ஒரு குருவை வைத்து ஏடு தொடங்கவேண்டும். ( எழுத படிக்க சொல்லிக் கொடுக்க வேண்டும்).
வழக்கமாக விஜயதசமி அன்று ஏடு தொடங்கவேண்டும். திருவிளக்கின் முன் ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி , குழந்தையின் கையில் விரலி ம்ஞ்சளை கொடுத்து , குரு குழந்தையின் விரலை பிடித்து - வித்யா மந்திரத்தை 3 முறை எழுதி - எழுத்து ஆரம்பித்து வைக்கவேண்டும்.
ருது தின சடங்கு - பூப்புனித நீராட்டு விழா!
பெண்குழந்தை பருவம் அடைந்த நேரத்தையும் , அன்றைய தின நட்சத்திரத்தையும் குறித்து வைக்கவும் . அன்றையதினமே நல்ல நேரம் பார்த்து உறவு முறையில் எல்லோருக்கும் சொல்லி , தகப்பனாரின் சகோதரி குழந்தைக்கு தலைக்கு தண்ணிர் ஊற்றவும்.
(முடியும் என்றால் ஆண் குழந்தையை தலைமகனாகப்பெற்றவர்களை கொண்டு தண்ணிர் விடுவது சிறப்பு . தவறும் பட்சத்தில் 3 வது தின்ம் தலைக்கு தண்ணிர் விடவேண்டும் .அதன்பின் பெண்ணுக்கு புத்தாடை, கழுத்துக்கு பூமாலை, புதுபாவாடை , தாவணி உடுத்தவும். குழந்தைக்கு நல்லெண்ணெயும் கீரை விதையும் கொடுக்கவும்.
ஆரோக்கியத்தை கருதி , உளுத்தம் களி , உளுத்தம் பருப்பு சாதம் போன்றவை செய்து கொடுக்கவும். பருவம் அடைந்த பெண்ணை சடங்கு ( ருது மங்கள ஸ்நாணம் ) முடியும் வரை வெளியில் நடமாட விடுவதில்லை. பாதத்தில் ஒரு விரலில் இரும்பு மெட்டி அணிவது மரபு.
ருதுவான 16ம் நாள் பூப்புனித நீராட்டு செய்வது உத்தமம். தவறும் பட்சத்தில் ருது மங்கள ஸ்நாணம் நடத்திட ஒரு சுபதினத்தை தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். அன்றைய தினம் ஒரு குருக்களைய்யாவை நியமித்து வீட்டில் கிரக சுத்தி செய்து கும்பம் வைத்து , ஹோமம் வளர்த்த்ய் பூஜைகள் செய்ய வேண்டும்.
சுபவேளையில் பெண்குழந்தைக்கு கும்ப நீரை அபிசேகம் செய்யவேண்டும். பின் தாய் மாமன் கொண்டுவந்த புத்தாடைகளை அணிவித்து , நல்ல பூமாலைகளை அணிவித்து , சீர்வரிசை பொருட்களுடன் விளக்கின் முன் இருத்தி பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறவேண்டும் .
அழைப்பிற்கு இணங்கி வருகை தந்திருக்கும் உறவினர்களையும் , விருந்தினர்களையும் உபசரித்து விருந்து நடத்திட வேண்டும்.
திருமண சடங்குகள்!
அழைப்பிதழ் கொடுப்பது, ம்ஞ்சள் முதலிய மங்கலப்பொருட்கள் வாங்குதல்!
முதல் அழைப்பிதழ் கோவிலுக்கு சமர்ப்பித்த பின்பு அழைப்பிதழ்களை மற்றவர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுக்கலாம். வீட்டு மாப்பிள்ளைகளுக்கு மஞ்சள் தடவிய தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, விரலி மஞ்சள் ஆகியவற்றுடன் அழைப்பு கொடுப்பது வழக்கம் . பின் மற்றவர்களை ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்று திருமணத்திற்கு அழைப்பது வழக்கம் .
முகூர்த்தக்கால் குறிப்பிட்ட நாளில் நல்வேலையில் நாட்ட வேண்டும் .
அரசு, மா, பலா, மரத்தின் கம்பு 5 அடி நீளத்தில் செம்மண், சுண்ணாம்பு பட்டைகள் மாறி மாறி அடித்ததாக இருக்கவேண்டும் .
மஞ்சள் நீரில் நனைத்துக் காயவைத்த புது துணியில் நவதானியம் , பருத்திக்கொட்டை , நாணயம் இவற்றை வைத்து ஒரு கிழியாக மஞ்சள் நூல் கயிற்றால் கட்டி , அத்துடன் மாவிலைக் கொத்து சேர்த்து வைத்து ஒரு மஞ்சள் கயிறால் நாட்காலின் உச்சியில் கட்ட வேண்டும். கன்னி மூலையில் ( தென்மேற்கு மூலை) குறிப்பிட்ட இடத்தில் குழிதோண்டி அதில் பால், நவதானியம், சந்தனம், பணம் ( காசுகள் ) போடவேண்டும் .
திருமண சடங்குகள்!
குலதெய்வம் , இஷ்ட தெய்வங்கட்குக் காணிக்கை!
திருமணம் உறுதி செய்யப்பட்ட பின் , இதர திருமண காரியங்கள் தொடங்கு முன் , இறையருள் வேண்டித் தத்தம் குல தெய்வம் இஷ்ட தெய்வங்கட்கு விருப்பம் போல் தொகை காணிக்கையாகப் போட ஒதுக்கி வைப்பது அல்லது உண்டியலில் சேர்ப்பது மரபு .
இறைவனுக்கு முதன்முதல் திருமண அழைப்பிதழ் சமர்ப்பணம்!
திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்ததும், அவற்றை மக்களுக்கு அனுப்பும் முன், இறைவன் பாதத்தில் அழைப்பிதழ் ஒன்றை தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, பூ, இவற்றுடன் வைத்து, அர்ச்சனை வழிபாடு செய்தல் மரபு.
அழைப்பிதழ் கொடுப்பது, ம்ஞ்சள் முதலிய மங்கலப்பொருட்கள் வாங்குதல்!
முதல் அழைப்பிதழ் கோவிலுக்கு சமர்ப்பித்த பின்பு அழைப்பிதழ்களை மற்றவர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுக்கலாம். வீட்டு மாப்பிள்ளைகளுக்கு மஞ்சள் தடவிய தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, விரலி மஞ்சள் ஆகியவற்றுடன் அழைப்பு கொடுப்பது வழக்கம் . பின் மற்றவர்களை ஆணும் பெண்ணும் சேர்ந்து சென்று திருமணத்திற்கு அழைப்பது வழக்கம் .
குறிக்கப்பட்ட நாளில் நல்வேளையில் விரலி மஞ்சள் , குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மல்லிகைசரம், கல்கண்டு ஆகியவைகளை முதலில் வாங்கிய பின் பிற பொருட்களை வாங்குவார்கள்.
முகூர்த்தக்கால் நாட்டல்!
முகூர்த்தக்கால் குறிப்பிட்ட நாளில் நல்வேலையில் நாட்ட வேண்டும் .
அரசு, மா, பலா, மரத்தின் கம்பு 5 அடி நீளத்தில் செம்மண், சுண்ணாம்பு பட்டைகள் மாறி மாறி அடித்ததாக இருக்கவேண்டும் .
மஞ்சள் நீரில் நனைத்துக் காயவைத்த புது துணியில் நவதானியம் , பருத்திக்கொட்டை , நாணயம் இவற்றை வைத்து ஒரு கிழியாக மஞ்சள் நூல் கயிற்றால் கட்டி , அத்துடன் மாவிலைக் கொத்து சேர்த்து வைத்து ஒரு மஞ்சள் கயிறால் நாட்காலின் உச்சியில் கட்ட வேண்டும். கன்னி மூலையில் ( தென்மேற்கு மூலை) குறிப்பிட்ட இடத்தில் குழிதோண்டி அதில் பால், நவதானியம், சந்தனம், பணம் ( காசுகள் ) போடவேண்டும் .
பின் ஒரு வாழையிலையில் மஞ்சள் பிள்ளையார், நிறை நாழி, மாவிலையுடன் நிறைகுடம், திருவிளக்கு, தேங்காய், பழங்கள், தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு ) வைத்து தூபதீபம் கற்பூரம் காட்டி வழிபாடு செய்து பந்தல்காரருக்கு திருநீறு, சந்தனம், தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் பணமும் கொடுத்து நாட்காலை மேற்படி குழியில் நட வேண்டும் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
