வியாழன், 7 ஜனவரி, 2016

வளம் சேர்க்கும் அதிர்ஷ்ட தேவி வழிபாடு!

 
 

செல்வத் திருமகளான மகாலக்ஷ்மியை ஐஸ்வர்ய லக்ஷ்மி, சௌபாக்ய லக்ஷ்மி, சௌந்தர்ய லக்ஷ்மி, யோக லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி என பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம். வட இந்தியாவில்  அதிர்ஷ்டத்தை தரும் லக்ஷ்மியை அதிர்ஷ்ட தேவியாக வழிபடுகின்றனர்.

இந்தியாவில் சில பிரிவினர், அக்னி பூஜை செய்வதால் அதிர்ஷ்டதேவியின் அருளைப் பெறலாம் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.

வட இந்தியர்களும், சீனர்களும், மலேசியா- சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சில பிரிவினரும் அதிர்ஷ்ட தேவதை என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகின்றனர். வீடுகளில் பஞ்ச பூதங்களையும் ஒவ்வோர் இடத்தில் நிறுத்தி, பென்சுயி அல்லது வாஸ்து முறையில் அதிர்ஷ்ட சக்தியை நிலை நிறுத்தமுடியும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

வட மாநிலங்களில் 'லக்கி மா’ என்ற பெயரில் அதிர்ஷ்ட தேவியை வழிபடுகிறார்கள்.



தெய்வ அனுக்கிரகத்தால் கைகூடும் வரமாக இருந்தாலும், அதோடு அதிர்ஷ்டமும் நமக்குத் துணை புரிந்து, நம் வாழ்க்கை வளமாக அதிகாலையில் எழுந்து செய்யும் வழிபாடு, பெறுகின்ற ஆசிகள் அனைத்தும் இரட்டிப்பான பலன்களைத் தரும். இல்லங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றி, வாசலில் கோலம் போடுவார்கள். வீடு மங்களகரமாக உள்ள தென்று, பிரம்ம முகூர்த்த வேளையில் வாசல் வழியாகச் செல்லும் மகாலட்சுமி வீட்டினுள் நுழைந்துவிடுவாளாம்.

நமது ஞானநூல்கள் சில, அதிர்ஷ்ட தேவி வழிபாட்டை விவரிக்கின்றன.
 

அதிர்ஷ்ட தேவி பூஜை முறை
 
பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரித்து, ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி, சந்தன-குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்தவேண்டும். நிவேதனத்துக்கு இனிப்பு, பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

முதலில், விநாயகர் துதி!

அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூறவேண்டும்.

அன்றைய திதி, நாள்- நட்சத்திரத்தைச் சொல்லியபடி, கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக்கொண்டு, கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைப் படிக்க வேண்டும்.


பங்கஜாட்சீம் சுவர்ணாபாம் சுரத்ன மகுடான் விதாம்
நாகாபரண சம்யுக்தாம் புஜத்வய சமன்விதாம்
சுதா பேடக சாலீஞ்ச வாம ஹாஸ்தேன தாரிணீம்
ஸவ்யேகரே சுபத்மஞ்ச லம்ப கேசேன சோபனாம்
பத்மோபவிஷ்டாம் ஸுவஸ்த்ராம் லம்பபாத யுகாம் சுபாம்
பாதாதஹ பங்கஜோ பேதாம் சங்கோலூக சமன் விதாம்
தீர்த்த மத்யே ஸ்திதாம் தேவீம் தான்ய லக்ஷ்மீ மஹம் பஜே.


கருத்து: தலையில் மாணிக்கக் கிரீடம் அணிந்து, செந்தாமரை மீது அமர்ந்தவளாக, வலக் கையில் தாமரையும் இடக்கையில் பொற்கிழியும் ஏந்தியவாறு, தன்னை வழிபடுபவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதற்காக நெற்கதிரும் வைத்திருக்கிறாள் அதிர்ஷ்ட தேவி.

தாமரைக் குளத்தில் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இந்தத் தேவியைக் கண்ட குபேரன் வலம்புரிச் சங்கின் வடிவிலும், திருமகள் சிந்தாமணி மற்றும் சாளக்கிராம வடிவிலும் அருகில் திகழ, மங்கலப் பொருட்களும் நிறைவாகச் சிதறிக் கிடக்கின்றன. இந்த தேவிக்கு ஆந்தையே சகுனப் பட்சியாக அமர்ந்துள்ளது.


அதிர்ஷ்டதேவியின் திருவுருவைச் சிறப்பிக்கும் இந்த தியான ஸ்லோகத்தைச் சொல்லி, தேவியை வணங்க வேண்டும்.

அடுத்து, காமாட்சி விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து, யோக சக்தியான அதிர்ஷ்டதேவியை வர்ணித்து, 26 நாமாவளிகளைக் கூறி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அவை:

ஓம் ஸ்ரீம் தாராயை நம,
ஓம் ஸ்ரீம் வித்யாயை நம,
ஓம் ஸ்ரீம் முநின்யை நம
ஓம் ஸ்ரீம் சரத்தாயை நம,
ஓம் ஸ்ரீம் ஜராயை நம,
ஓம் ஸ்ரீம் மேதாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வதாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வஸ்தியை நம,
ஓம் ஸ்ரீம் வர்மின்யை நம,
ஓம் ஸ்ரீம் பாலின்யை நம,
ஓம் ஸ்ரீம் ஜ்வாலின்யை நம,
ஓம் ஸ்ரீம் க்ருஷ்ணாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்மிருத்யை நம,
ஓம் ஸ்ரீம் காமாயை நம,
ஓம் ஸ்ரீம் உன்மத்யை நம,
 ஓம் ஸ்ரீம் ப்ரஜாயை நம,
ஓம் ஸ்ரீம் சிந்தாயை நம,
ஓம் ஸ்ரீம் க்ரியாயை நம,
ஓம் ஸ்ரீம் க்க்ஷாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் சாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் தாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் தயாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வஸ்திதாயை நம,
ஓம் ஸ்ரீம் தூத்யை நம,
ஓம் ஸ்ரீம் கத்யாயை நம,
ஓம் ஸ்ரீம்  அதிர்ஷ்ட கலாயை நம:

நாமாவளி அர்ச்சனை முடிந்ததும், தூப- தீபங்கள் காட்டி, நிவேதனம் செய்து,

'ஓம் ஸ்வர்ண ரூப்யைச வித்மஹே
கமல ஹஸ்தாய தீமஹி
தந்தோ அதிர்ஷ்டதேவி ப்ரசோதயாத்’

என்ற அதிர்ஷ்டதேவி காயத்ரீ மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி, ஆரத்தி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட தேவி படம் முன்பு அமர்ந்து,
 
 'ஓம் ஸ்ரீம் அதிர்ஷ்ட தேவ்யை ஸ்வர்ண வர்ஷின்யை சுவாஹா’

என்று 108 முறை ஜெபம் செய்வது விசேஷம்!









image : thanks to google

 

புதன், 6 ஜனவரி, 2016

குரு வார விரதம்:

வியாழக்கிழமை குரு வாரம் என்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் நம்மை தேடி வரும்.  வியாழன் தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்கி வந்தால் நலன் விளையும் என்கின்றன நமது சாத்திரங்கள்.
குருவார வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் ஆரம்பித்துச் செய்வது சிறப்பாகும். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, மஞ்சள் நிறம் ஆடையில் பிரதானமாக இருக்கும்படி ஆடை அணிந்து, நெற்றியில் சந்தனம் அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை ஆரம்பித்து செய்யவேண்டும்.
தென்முகம் கடவுளான தட்சணாமூர்த்தியின் திருவுருவ படம் அல்லது ஒருவருடைய பெருமதிப்பிற்குரிய ஆன்மிக குருவாக விளங்குபவர்கள், அல்லது மனதிற்கு உகந்த மகான்களின் திருவுருவப் படங்களை பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் மேற்கூறிய தெய்வத்திருவுருவங்களோ ஆன்மிக குருமார்களின் படங்களையோ நன்கு துடைத்து பொட்டிட்டு மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து நான்கு அல்லது ஆறு தீபங்களை (அகல்) ஏற்றிவைத்து, இனிப்புகளோ, கற்கண்டோ நைவேத்தியம் செய்து, தூப, தீப, கற்பூர ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.
அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதமிருந்து அடுத்த நாள் அதை நிறைவு செய்யலாம். இல்லாவிடில் காலையில் மட்டும் பூரண உபவாசம் இருந்து மதியம் உணவு எடுத்துக் கொள்ளலாம். காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வரையில்மவுன விரதம்இருப்பது மிகவும்சிறந்ததாகும்.
குருவின் ஆதிக்க நிலையின் வெளிப்பாட்டை ஒருவருக்கு அமையும் குழந்தைச் செல்வங்கள், இஷ்ட தெய்வம், ஆசிரியப் பெருமக்கள், ஆன் மிக குருமார்கள், சன்னியாசிகளின்ஆசிகள்ஆகியவற்றின் மூலமாக அறிந்து அதை நடை முறையில் உணர்ந்து கொள்ளலாம்.

வானவர்க் கரசே! வளம் தரும் குருவே! 
காணா இன்பம் காண வைப்பவனே! 
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்! 
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்! 


சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்! 
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்! 
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்! 
நிலையாய் தந்திட நேரினில் வருக!' 


நாளைய பொழுதை நற்பொழுதாக்கி  
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்! 
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்! 
வல்லவன் குருவே!  வணங்கினோம் அருள்வாய்! 
 
 

குரு கவசம்


1.வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே! உன்னை
தேனான சொல்லெடுத்து செவி குளிர போற்றுகின்றேன்
காணாத இன்பம் யாவும் காண நீவழி வகுப்பாய்
மீனமும் தனுசும் உந்தன் மேலான வீடதாகும்!
2.பொன்னிற முல்லையொடு புஷ்ப ராகத்தை ஏற்றாய்!
வண்ணத்தில் மஞ்சள் கொண்டாய் மரத்தினில் அரசை ஏற்றாய்!
எண்ணத்தில் நிற்கும் தேவா! எளிதினில் வெற்றி தாராய்!
மண்ணினில் பதினாறு ஆண்டை மறவாமல் நீயும் ஏற்றாய்!
3. சுண்டல் நைவேத்யதால் தொல்லைகள் தீர்ப்பவன் நீ!
கொண்டதோர் யானை உந்தன் கொண்டாடும் வாகனம் தான்!
தந்திடும் பதவி வாய்ப்பும் தடையில்லாக் காரிய சிறப்பும்
வந்திடும் பிள்ளைப் பேறும் வழங்குதல் உன் பொறுப்பே!
4. பொருளோடு புகழைத் தந்து போற்றிடும் வாழ்வைத் தந்து
வருங்காலம் அனைத்தும் செல்வம் வரும் காலம்ஆக்கி வைத்து
பெருமைகள் வழங்க வேண்டும் ! பேரருள் கூட்ட வேண்டும்!
அருள்மிகு குருவே உன்னை அடிப்பணிந்து வணங்குகின்றேன்!
5. வருடம் ஓர் ராசி வீதம் வட்டமாய் சுழன்று வந்தே
தருகிற பலனை நாங்கள் தங்கமாய் ஏற்றுகொள்வோம் !
வருகிற நாட்கள் எல்லாம் வசந்தமாய் மாறுதற்கே
அருள்தரும் உனது பார்வை அனுதினம் எமக்கு வேண்டும்!
6. குருவே நீபார்த்தால் போதும் கோடியாய் நன்மை சேரும்!
திருவருள் இணைந்தால் வாழ்வில் திருமணம் வந்து கூடும்!
பொருள் வகை பெருகும் நாளும் பொன்னான வாழ்வும் சேரும்!
அருள் தர வேண்டி உன்னை அன்போடு துதிகின்றோமே!
 
 

சனி, 2 ஜனவரி, 2016

விநாயகர் காரிய சித்தி மாலை!






பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம். 1

உலக முழுவதும் நீக்கமற
ஒன்றாய்நிற்கும் பொருள் எவன்அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை
ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம். 2
இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம். 3
மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன்அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 4
செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம். 5
வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம். 6
மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவின்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம். 7
பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம். 8

நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும்
சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண்
தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும். 9
திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பி மறைந்தார். 10

அஷ்டலக்ஷ்மீ மாலா மந்த்ரம்

 
 
ஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்
வம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,
கஜலக்ஷ்மீ, தனலக்ஷ்மீ, தான்யலக்ஷ்மீ,
விஜயலக்ஷ்மீ, வீரலக்ஷ்மீ, ஐஸ்வர்யலக்ஷ்மீ,
அஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே
த்ருடயா ஸ்த்திதாய ஸர்வலக வசீகரணாய
ஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன
ஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய
ஸித்திதாய, மஹாயோகேஸ்வரி, மஹா
ஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய
வர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய
ஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய
ஹ்ராம் ஹ்ரீம் மம ஸர்வசத்ரு பந்தய
பந்தய மாரய மாரய நாசய நாசய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு
குரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி
ஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு
ஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு
ஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு
ஓம் ஜம் க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதி ஸ்ரீ
மஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ
நமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா!
 
 
 
 

திருத்தணி திருப்படி திருப்புகழ் திருவிழா!

            
 திருத்தணி ஸ்ரீசுப்பிர மணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழாவும், ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெறுவது வழக்கம்.  இக்கோவிலுக் குச் செல்லும் படிக்கட்டு கள் 365 என்பதால், ஓராண்டின் 365 நாட்களை நினைவு கூர்ந்து இங்கே ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தைப்பூசம், விசாகம், ஆடிக்கிருத்திகை ஆகிய திருவிழாக்களைப்போல் திருப்படித் திருவிழாவும் ஒரு முக்கியமான உற்சவமாக ஜனவரி முதல் தேதியன்று கொண்டாடப் படுகிறது. இந்தத் திருப்படி உற்சவத்தினை 31-12-1917 இரவு மற்றும் 1-1-1918 ஆகிய நாட்களில் முதன்முதலில் துவக்கி வைத்தவர் "வள்ளிமலை' சுவாமிகள் என்று கூறப்படுகிறது.



ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஏராள மானோர் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு மற்றும் ஜனவரி முதல் தேதி காலையில் ஆங்கிலேயே அதிகாரிகளைப் பார்த்து, பழங்கள் முதலானவற்றைக் கொடுத்து "ஹேப்பி நியூ இயர்' என்று சொல்லும் வழக்கம் இருந்தது. இதைக்கண்ட"அர்த்தநாரி' என்ற இயற்பெயர் கொண்ட வள்ளிமலை சுவாமிகள், "நம்மை அடிமைப் படுத்தி ஆளும் அந்நியர்களைப் பார்த்து வாழ்த்தும் வணக்கமும் தெரிவிக்கிறார்களே! அதற்கு மாற்றாக இந்நாளில் நம்மை நலமுடன் வாழவைக்கும் முருகப் பெருமானை தரிசித் துப் பலன் பெறலாமே.... தெய்வ வழிபாடுகளில் ஈடுபடலாமே' என்று எண்ணினார். அதன் விளைவுதான் திருத்தணித் திருத்தலத்தில் "திருப்படி உற்சவம்' ஆரம்பமானது. டிசம்பர் 31-ஆம் தேதி மலையின்மீது விளக்கு ஏற்றியும், ஜனவரி முதல் தேதி படிப்பூஜையும் நடைபெறலாயிற்று.


 


மலைமேல் அமைந்துள்ள கோவிலில் டிசம்பர் 31-ஆம் தேதி மலை தீபம் ஏற்றுவார்கள்.  திருப்படி திரு விழாவை முன்னிட்டு 31-ஆம் தேதி காலை 8 மணிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு திருப்படிக்கும் சிறப்பு பூஜை செய்து மஞ்சள் குங்குமம் பூசி வெற்றிலை பாக்கு, பூக்கள்,  பழங்கள் வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு செய்யப்படும்.

 

 நூற்றுக்கணக்கான பஜனைக் குழுவினர், டிசம்பர்  31 அன்று  அதிகாலை சரவணப் பொய்கையில் புனித நீராடிய பின் ஒவ்வொரு திருப்படிக்கும் ஒவ்வொரு திருப்புகழ் பாடல் பாடியவண்ணம் 365 படிகள் வழியாக மலைக் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிப்பர்.

 அதேபோல் பெண் பக்தர்கள், ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் மலைக்கோயிலுக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர்.

படிப்படியாக ஏறிச்சென்றால், அதுவும் படிப் பூஜை செய்த வண்ணம் ஏறிச் சென்று இறைவனை தரிசித்தால், படிப்படியாக முன்னேற்றம் கிட்டுமென்ற நம்பிக்கையில் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அடிவாரத்திலிருந்து மேலே செல்ல வாகன வசதி இருந்தாலும், பக்தர்கள் இந்நாளில் 365 படிகள் ஏறிச்சென்று முருகனை தரிசிக்கவே விழைகிறார்கள்.


 
 
விழாவை முன்னிட்டு 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெள்ளித் தேரில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி மலைக்கோயிலை வலம் வருவார். நள்ளிரவு 12.01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு மகா தீபாராதனையும் நடைபெறும்.

 தொடர்ந்து, ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்புத் தரிசனம் நடைபெறும். அன்று இரவு 8 மணிக்கு தங்கத் தேரில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலை வலம் வருவார்.

 31-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மலைக்கோயிலில் உள்ள திருப்புகழ் பஜனை மண்டபத்தில், பல்வேறு பஜனை குழுவினர்களால் திருப்புகழ் பாடல்கள் தொடர்ந்து பாடப்படும். விழாவையொட்டி, 31-ஆம் தேதி இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும்.

திருத்தணியில் நடைபெறும் "திருப்படி' உற்சவம்போல் பழனி, சுவாமிமலை, திருப் பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய முருகன் திருத்தலங்களிலும்; திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், குன்றத்தூர், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய மலைக் கோவில்களிலும் படிப்பூஜை விழா அக்கோவில்களின் சிறப்பு நாட்களில் நடை பெறுகிறது. திருப்படி வழிபாடு மேற்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வும், சகல பாக்கியங்களும் பெற்று சுகமுடன் வாழலாம் என்பது ஆன்றோர் கூற்று.

திருத்தணி முருகர் திருப்படி திருவிழாவை தரிசித்து திருவருள் பெறுவோம்.



 

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இந்த 2016ம் ஆண்டு

அனைவருக்கும்

எல்லா விருப்பங்களையும்

நிறைவேற்றும் ஆண்டாக அமைய

இறைவன் அருள் புரியட்டும்.