புதன், 15 பிப்ரவரி, 2017

கேட்டதை கொடுக்கும் காமதேனு!



காமதேனு காயத்ரீ மந்திரம்!

ஓம் சுபகாயை வித்மஹே
காமதாத்ரியை ச தீமஹி
தந்தோ தேனு: ப்ரசோதயாத்!



தேவர்களும்,அசுரர்களும் பாற்கடலை கடந்த போது அதிலிருந்து  பல பொருட்கள் தோன்றின. அதில் ஒன்றுதான் காமதேனு.

காமதேனு என்பது தேவலோகத்தில் வசிக்கின்ற பசு . யார் அதனிடம் என்ன கேட்டாலும்  அதை கொடுக்கும் சக்தி  படைத்தது .இது பெண்ணின் தலை, மார்பு, பசுவின் உடல், மயில் தோகை போன்றவற்றுடன் இருக்கும்.




சிவன், முருகன், விநாயகன், பெருமாள் ஆகியோருக்கு வாகனமாக காமதேனு உள்ளது. இறைவன் வீதி உலா வருகையில் காமதேனு வாகனத்தில்  காட்சி தருகிறார். பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்ட வாகனமாக இருந்தாலும், தங்கம் வெள்ளியில் செய்த வாகனங்கள் சில கோவில்கள் உள்ளன.



பசு காயத்ரீ மந்திரம்!

ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்!

பசு  கன்று ஈனும்போது (தலை வெளிப்படும் சமயம்) வலம் வந்தால் உலகத்தைச் சுற்றி வந்ததற்குச்சமம் என்கிறது  சாஸ்திரம்.



பசு உடலில் எல்லா தெய்வங்களும் உள்ளதால்  கோபூஜை செய்து அதற்கு உணவு தர துன்பம் விலகி இன்பம் பிறக்கும்.

1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன் அவன் முன்னோர்கள் 7 தலை முறையைக் கரை ஏற்றிவிடுவான்.

பசு என்பதன் உண்மையான பொருள் தர்மத்திற்குக்கட்டுப்பட்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக