திங்கள், 22 ஜூன், 2015

விக்னேஸ்வர சோடச நாமாவளி


ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே.


விநாயகரை விக்னநாசனனாக வழிபடுவதற்கென்று தனிப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன அவை விக்னேஸ்வர சோடச நாமம்" என்று பெயர் பெற்றவை.

அவருக்குச் சிறப்பாக பதினாறு நாமங்கள் கொண்ட சோடச நாமாவளியும் இருக்கிறதுஇந்தச் சிறப்பான நாமாவளி விநாயகரின் விக்னநாசன கணபதி அம்சத்துக்கு உரியது

சங்கடங்களை நீக்குவதற்கென்று சங்கடஹர கணபதி.

அதுபோலவே விக்னங்களை நீக்குவதற்கு விக்னநாசனன் அல்லது விக்னஹரன்.

விக்னநாசன கணபதியின் சோடச நாமங்களைத் தனித்தனியாகவும் சொல்லலாம்.

பதினாறையும் ஒரே மந்திர சுலோக தோத்திரமாகவும் சொல்லலாம்.

சுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷ¡ பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:


இதனையே நாமாவளியாக:
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் நாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம

இவை அனைத்திற்கும் சுருக்கமான விளக்கவுரையும் இருக்கிறது.

சுமுகாய நம: = மங்கலகரமான முறுவலுடன் கூடிய இனிய முகத்தோன்.

ஏகதந்தாய நம: = ஒற்றைத் தந்தமுடையவன்.

கபிலாய நம: = கபில நிறமுடையவன்.

கஜகர்ணகாய நம = யானைக்காது உடையவன்.

லம்போதராய நம = தொப்பையான வயிற்றையுடையவன்.

விகடாய நம = வேடிக்கையானவன்.

விக்நராஜாய நம = விக்னங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கி ஆளும் அரசன்.

விநாயகாய நம = தனக்கு மேலாக  தலைவன் யாரும் இல்லாதவன்.

தூமகேதவே நம = புகை போன்ற வண்ணம் கொண்ட உருவம் உடையவன்.

கணாத்யக்ஷ¡ நம = கணங்களுக்கு அதிபதியாக உள்ளவன் .

பாலச்சந்த்ராய நம = நெற்றியில் சந்திரனை அணிந்துள்ளவன்.

கஜானனாய நம = யானை முகத்தோன்.

வக்ரதுண்டாய நம = வளைந்த துதிக்கையை உடையவன்.

சூர்ப்பகர்ணாய நம = முறம் போன்ற காது உடையவன்.

ஹேரம்பாய நம = ஐந்து செம்முகங்களும் மஞ்சள் நிறமும் பத்துக்கரங்களும் கொண்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவன்.

ஸ்கந்தபூர்வஜாய நம = முருகனுக்கு முன்பு தோன்றியவன்.
இந்த மந்திரத்தை தினந்தோறும் மனம் உருகச் சொல்லி விநாயகரை வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களோடு, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.


ஸங்கஷ்டநாசன கணேச ஸ்தோத்திரம்


நாரத புராணத்தில் ஸங்கஷ்டநாசன கணேச ஸ்தோத்திரம் எனும் அற்புதமான ஸ்தோத்திரம் உண்டு.

நாரதர் விநாயகரின் 12 திருநாமங்களைப் போற்றித் துதிப்பதாகத் திகழ்கிறது.
இந்த ஸ்தோத்திரத்தின் பிற்பாதியில், இதை படித்து விநாயகரை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களை நாரதர் விவரிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த ஸ்தோத்திரம்:

ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந்நித்யமாயு காமார்த்தஸித்தயே
ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏக தந்தம் த்வ்தீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணயிங்காக்ஷல் கஜவக்த்ரம் சதுர்த்தகம்

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்னராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்
நவமம் பாலசந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம்
த்வாதஸைதானி நாமானி த்ரிஸந்த்யம் ய: படேந் நர;
ந ச விக்னபயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ;


ஆயுள், விருப்பம், பொருள் ஆகியவற்றை அடைவதன் பொருட்டு... கவுரியின் புதல்வனும், பக்தர்களிடம் வசிப்பவருமான விநாயகரை அனுதினமும் தொழுவோம் என்று துவங்கி,
ஒன்றாவதாக, இரண்டாவதாக... என்று வரிசைப்படுத்தி பிள்ளையாரின் பன்னிரு பெருமைகளை, பெயர்களைச் சிறப்பிக்கிறார் நாரதர்.

அவை:
வக்ரதுண்டர், ஏக தந்தர், க்ருஷண பிங்காக்ஷர், கஜவக்த்ரர், லம்போதரர், விகடமேவர், விக்னராஜர், தூம்ரவர்ணர், பாலசந்திரர், விநாயகர், கணாதிபதி, கஜானனர்.

இப்படி 12 பெர்களையும் சொல்லும் நாரதர், அடுத்ததாக இவற்றைப் படிப்பதனால் உண்டாகும் பலனைச் சொல்கிறார்.

இவற்றை சந்தியாகாலங்களில் படிப்பவருக்குத் தடைகள் மற்றும் இடையூறுகள் பயம் ஏற்படாது. சர்வ காரிய ஸித்தி ஏற்படும்.
இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து பிள்ளையாரை மனமுருகி வழிபட்டு, அவரிடம் படிப்பைக் கோருபவன் படிப்பை அடைவான்.

பொருளை விரும்புபவன் பொருளை அடைவான்.

பிள்ளைகளை விரும்புபவர் நல்ல சந்தான பாக்கியத்தை அடைவார்கள்.

மோட்சத்தை விரும்பும் அன்பார்கள் மோட்சத்தை அடைந்து மகிழ்வார்கள்.

இந்த கணபதி ஸ்தோத்திரத்தைப் படிப்பதால் 6 மாதங்களுக்குள் கோரிய பலன் கிடைக்கும்.
ஒரு வருடம் ஜபித்தால் அணிமாதி ஸித்திகள் ஏற்படும்.

இதில் சந்தேகம் இல்லை என்று விவரிக்கிறார் நாரத மகரிஷி.


விநாயகர் காரிய சித்தி மாலை

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவண்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறங்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம்புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் கரர்வழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன் அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம்அடைகின்றோம்

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்.
-
காசிப முனிவர்


மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும்.

தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர  மனநிம்மதி பெறுவர்.

சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும்.

தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை படித்து வர அரச வசியம் உண்டாகும்.

தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தை செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.



ஞாயிறு, 21 ஜூன், 2015

முதல் வணக்கம்



 சகல செளபாக்யத்துடன் அனைத்துக் கலைஞானமும் பெற்று
ஆரோக்யமாய் அரும்பெரும் வாழ்வு வாழ கற்பக  விருட்சமாக
வெற்றிகளை அள்ளிக்  குவிக்கும்
வித்தகக் கடவுள் கணபதியின் திருவருள்
என்றென்றும் நமக்குத் துணை நிற்கும்.




 அருள்மிகு சித்தி புத்தி உடனாய மகா கணபதி போற்றி 
அருள்மிகு வல்லப கணபதி போற்றி 




அருள்மிகு உண்ணாமுலை  உடனாய அண்ணாமலையார் போற்றி 


அருள்மிகு வள்ளி தேவசேனை உடனாய முருகபெருமான் போற்றி
  


அருள்மிகு முத்துமாரியம்மன் போற்றி 
அருள்மிகு முத்தாலம்மன் போற்றி