புதன், 6 நவம்பர், 2019

27 நட்சத்திரங்களுக்கு தனம் தரும் நட்சத்திரங்கள்!

சம்பத்து நட்சத்திரம் - ஜென்ம நட்சத்திரத்திற்கு 2, 11, 20 வது நட்சத்திரம்
பரம மித்தர நட்சத்திரம் - ஜென்ம நட்சத்திரத்திற்கு 9, 18, 27 வது நட்சத்திரம்
சாதக நட்சத்திரம் - ஜென்ம நட்சத்திரத்திற்கு 6, 15, 24 வது நட்சத்திரம்

27 நட்சத்திரங்களுக்கு தனம் தரும் நட்சத்திரங்கள்!


பொருளாதார வளர்ச்சிக்கு தனம் எனும் பணவரவு மிக மிக முக்கியம். இந்த தன ஸ்தானத்தைக் குறிப்பிடும் இடம் இரண்டாமிடம்!
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்த ஸ்தானமே தன ஸ்தானம் ஆகும்.

இந்த தன ஸ்தானம் பாப கர்த்தாரியாக இருந்தாலும், தன ஸ்தானத்தின் அதிபதி பாபகர்த்தாரியாக இருந்தாலும், பண வரவில் தடைகளும், தாமதமும் ஏற்படும். அப்படியே பணம் நிறைவாக வந்தாலும் அதைக் காப்பாற்ற முடியாமல் ஏதாவதொரு செலவு வந்து பணத்தைக் கரைக்கும். இது பலருக்கும் உள்ள பிரச்சினை.
என்ன செய்தால் தன வரவை அதிகரிக்கச் செய்யலாம்? வந்த செல்வத்தை எப்படிப் பாதுகாக்கலாம்?

பாபகர்த்தாரியாகவே இருந்தாலும், நாம் சில விஷயங்களை கவனித்து முறைப்படுத்திக் கொண்டாலே செல்வ வளத்தை வளர்த்துக்கொள்ள முடியும். இதோ... இந்த நட்சத்திரத் தகவலை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இதன் படி செயல்படுங்கள். பணமும் வந்து கொண்டே இருக்கும். சொத்துக்களும் சேரும்.

உங்கள் நட்சத்திரம் எதுவோ அதற்கு அடுத்த நட்சத்திரம் வரும் நாட்களிலும், அந்த நட்சத்திரத்தின் அனு ஜென்ம மற்றும் திரி ஜென்ம நட்சத்திர நாளிலும், உங்களுக்கு பணம் வரும் விஷயங்கள் எதுவானாலும் முழுமையான வெற்றியைத் தரும்.

''என்னாங்க சார், ஏதோ அனு ஜன்மம், திரி ஜென்மம்னு சொல்றீங்க? எதுவுமே புரியலீங்களே?'' என்று ஒரு சிலர் சொல்லலாம்.
அதற்காகத்தான் அட்டவணை.. இதோ!

உங்கள் நட்சத்திரம் அஸ்வினி என்றால் ,
டுத்த அதாவது இரண்டாவது நட்சத்திரம் "பரணி."
இந்த பரணியின் அனு ஜென்ம நட்சத்திரம் "பூரம்" நட்சத்திரம்.
திரி ஜென்ம நட்சத்திரம் "பூராடம்."
ஆக இந்த பரணி பூரம் பூராடம் இந்த மூன்று நட்சத்திரங்களும் அஸ்வினி நட்சத்திரக்கார்ர்களுக்கு சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும்.

மேலும் இந்த பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திரத்திற்கான அதிதேவதையை வணங்கிவந்தால், இன்னும் செல்வ வளம் பெருகும்.

பணம் பல வழியிலும் வரும். செல்வவளம் குறையாமல் பார்த்துக்கொள்ளும். மன நிறைவான வாழ்க்கையைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாமல் வைத்துக்கொள்ளும்.

இனி மற்ற நட்சத்திரங்களுக்கு உண்டான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை? அதன் அதன் அதிதேவதை யார் என்பதை பார்ப்போம்.


அஸ்வினி :-
பரணி (துர்கை), பூரம் (பார்வதி), பூராடம் (வருணன், ஜம்புகேஸ்வரர்)

பரணி :- கார்த்திகை (அக்னி) உத்திரம் (சூரியன்), உத்திராடம்( கணபதி),

கார்த்திகை :- ரோகிணி (பிரம்மா), அஸ்தம்: (சாஸ்தா),திருவோணம்(விஷ்ணு),

ரோகிணி :- மிருகசீரிடம்(சந்திரன்), சித்திரை(விஷ்வகர்மா), அவிட்டம்(அஷ்டவசுக்கள்)

மிருகசீரிடம் :- திருவாதிரை(நடராஜர்),சுவாதி(வாயு), சதயம்(எமதர்மன்),


திருவாதிரை :- புனர்பூசம்(அதிதி), விசாகம்(முருகர்), பூரட்டாதி(குபேரன்),

புனர்பூசம் :- பூசம்(குரு), அனுசம்(லட்சுமி), உத்திரட்டாதி(காமதேனு)

பூசம் :- ஆயில்யம்(ஆதிசேஷன்), கேட்டை(இந்திரன்),ரேவதி(சனி)

ஆயில்யம் :- மகம்(பித்ருக்கள்,சுக்ரன்), மூலம்(நிருதி வாயு) அஸ்வினி(சரஸ்வதி)

மகம் :- பூரம்( பார்வதி) பூராடம்( வருணன்), பரணி(துர்கை)

பூரம் :- உத்திரம் ( சூரியன்), உத்திராடம் ( கணபதி), கார்த்திகை
(அக்னி)

உத்திரம் :- அஸ்தம் (சாஸ்தா), திருவோணம்( விஷ்ணு),ரோகிணி
(பிரம்மா),

அஸ்தம் :- சித்திரை (விஷ்வகர்மா), அவிட்டம் (அஷ்ட வசுக்கள்),
மிருகசீரிடம் (சந்திரன்),

சித்திரை :- சுவாதி(வாயு), சதயம்(எமதர்மன்), திருவாதிரை(நடராஜர்),

சுவாதி :- விசாகம் (முருகர்), பூரட்டாதி (குபேரன்),புனர்பூசம் (அதிதி)

விசாகம் :- அனுசம் (லட்சுமி), உத்திரட்டாதி (காமதேனு), பூசம் (குரு),

அனுசம் :- கேட்டை (இந்திரன்), ரேவதி (சனி), ஆயில்யம் (ஆதிசேஷன்),

கேட்டை :- மூலம் (நிருதி), அஸ்வினி (சரஸ்வதி), மகம் (பித்ருக்கள்),

மூலம் :- பூராடம் (வருணன்), பரணி (துர்கை),பூரம் (பார்வதி),

பூராடம் :- உத்திராடம் (கணபதி), கார்த்திகை (அக்னி), உத்திரம் (சூரியன்),

உத்திராடம் :- திருவோணம் (விஷ்ணு), ரோகிணி (பிரம்மா), அஸ்தம்( சாஸ்தா),

திருவோணம் :- அவிட்டம் (அஷ்டவசுக்கள்), மிருகசீரிடம் (சந்திரன்), சித்திரை (விஷ்வகர்மா),

அவிட்டம் :- சதயம் (எமதர்மன்), திருவாதிரை (நடராஜர்), சுவாதி (வாயு),

சதயம் :- பூரட்டாதி (குபேரன்), புனர்பூசம் (அதிதி),விசாகம் (முருகர்),

பூரட்டாதி :- உத்திரட்டாதி (காமதேனு),பூசம் (குரு), அனுசம் (லட்சுமி),

உத்திரட்டாதி :- ரேவதி (சனி), ஆயில்யம் (ஆதிசேஷன்),கேட்டை (இந்திரன்),

ரேவதி :- அஸ்வினி (சரஸ்வதி), மகம் (பித்ருக்கள்), மூலம் (நிருதி)

இப்படி இந்த சம்பத்து நட்சத்திரங்களையும், அதன் அதிதேவதைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற தலங்களில் வழிபாடுகள் செய்து வந்து, தன வரவையும், சேமிப்பையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக