வியாழன், 31 டிசம்பர், 2015

ஸ்ரீ வேங்கடவர் துதிப்பாடல்



அலர்மேல் மங்கை யுறைமார்பனே அமரர்க்கு அரசே
நிலமேல் மாமலை யில் நின்று எல்லோர்க்கும் அருள்பவனே

பல கல்வியையளித்து புலவராய் ஆக் குபவனே
கலியு கவரத வாழ்க நீ வேங்க டவா எம்மானே.

அமர ரும்நர ரும்முனி வரும் வணங்குபவரே
இமயோ ரும் புவி யோரும் வந்தென்றும் வணங்குபவரே
யமன்அசன் வந்துன்னை என்றும் மலரால் போற்றுபவரே
சமம்தரும் விருடகி ரீசவேங் கடவா எம்மானே.

உண்ணும் சோறும் பருகும் நீரும் எல்லார்க்கும் தருவோனே
கண்ணும் கருத்துமாய் யாவரும் மனதால் போற்றுவோனே
மண்ணுல கத்தால் வாழவந்து நின்ற அமரர்கோவே
பண்பரு ணாம்நீல மலைக்கரசே வாழ்க எம்மானே

பஞ்ச மாபாத கம்யாவும் பறந்தோடச் செய்பவனே
வஞ்ச கர்யாவ ரும்விலகி ஓடஓடச் செய்வோனே
தஞ்ச மடைந்தோ ரைதயங்கா துநித்தம் காப்பவனே
அஞ்ச னாத்ரீச வாழ்க வேங்கடவா அருட்கடலே.

கலைமக ளும்மலை மகளும் இருவரும் உன்னுடை
மலையில் வந்து உன்னை மலரால் அர்சனை செய்பவரே
விலையிலா மாணிக்கமே மாமலை தணில் வாழ்பவனே
தலையால் பணிவேன் கருடாத் ரீசனே வேங்கடேசேன

கொடையாய் பாயாய் விதாநமாய் விசிரியாய் விளங்கிடும்
படைநடுங் கும்பணி அரசன் பணிசெய் திருவோனே
வடையழுது செய்வதி லே பிரிய முடையவனே
தடைநீக் கும்சேசாத்ரீசவாழ்க என்றும் வேங்கடேசனே

நலந்தரும் நராணன் நாமம்கொண்டமலை யரசனே
வலம்வந்து உன்னை பணிவோர்க் குவாழ்வு தருபவனே
பலமனைத் தைதந்து பவநா சத்தை தருபவனே
மலையில் நாராய ணாத்ரீச வாழ்கநீ வேங்கடேசனே.

மனிதர் களின் பாவம் போக்
கும் மாமலை யாம் திருமலை
கணிகளும் பூக்களும் பூத்துக் குலுங்கும் மலையரசே
பனிப்பட லம்மே கமும் சூழ்ந்தமாமலை யரசனே
தனிப்பெ ருமையாம் வேங்கடாத் ரீநாத என்றும் வாழ்கவே.

பாவம் அகற்ற தவமிருப் பவர்க்கு அருள்பவனே
தவமுனி வர்களெல் லாரும் உன் மலையில் வாழ்பவரே
அவமிலா அரசர் களெல்லாம் உன்பாதம் பணிவாரே
கவிபோற் றும் கருணாகர வாழ்கநீ வேங்கடேசனே.

அவதா ரம் பத்து எடுத்து அவனியை காத்தவனே
உவமானம் இல்லாத உருபெறும் தேவர் தலைவனே
எவரும் உன்னைத் தவிர வேறெவரை தொழாதவரே
அவனியில் அனைவரை யும் வேங் கடவா காத்தருளே.

வேங்கடேசன் திருவடிகளே சரணம்.



 

புதன், 30 டிசம்பர், 2015

பஞ்ச உபசாரங்கள்


சுவாமிக்கு செய்யவேண்டிய பஞ்ச உபசாரங்கள்:

1) சந்தனம் இடுதல்.

2) அர்ச்சனை செய்தல்.

3) தூபம் காட்டுதல்.

4) தீப ஆராதனை செய்தல்.

5) நைவேத்தியம் சமர்ப்பித்தல்.

ஆலய தரிசன பலன்


காலை  ----------- பிணி போக்கும்.

நண்பகல் --------- தனம் கொடுக்கும்.

மாலை ------------ பாவம் அகற்றும்.

அர்த்தசாமம்  ----- வீடு பேறு,முக்தி அளிக்கும்.
 

பஞ்ச பத்திரம்


துளசி, அருகம்புல், வேம்பு, வன்னி, வில்வம் ஆகியவை பஞ்ச பத்திரம் ஆகும்.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

சஷ்டி தேவி அருளிய துதி!

ஒவ்வொரு வளர்பிறை சஷ்டியிலும் கந்தனுடன் சஷ்டி தேவியையும் (தேவசேனை) துதித்து பலன் பல பெற்று நலமுடன் வாழ்வோமே!
சஷ்டி தேவி அருளிய துதி


"நமோ தேவ்யை மஹாதேவ்யை
ஸித்யை சாந்த்யை ச நமோ நம:
ஸுபாயை தேவஸேனாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:

வரதாயை புத்ரதாயை
தனதாயை நமோ நம:
ஸுகதாயை மோக்ஷதாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:

ஸ்ருஷ்ட்யை ஷஷ்டி அம்ச
ரூபாயை ஸித்தாயை நமோ நம:
மாயாயை ஸித்தயோகின்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸாராயை ஸாரதாயை ச
பரா தேவ்யை நமோ நம:
பால அதிஷ்டாத்ரு தேவ்யை ச
ஷஷ்டி தேவ்யை ச நமோ நம:

கல்யாணதாயை கல்யாண்யை
பலதாயை ச கர்மணாம்
ப்ரத்யக்ஷாயை ஸ்வபத்தானாம்
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸுத்த ஸத்வ ஸ்வரூபாயை
வந்திதாயை ந்ருணாம்ஸதா
தேவரக்ஷண காரிண்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

பூஜ்யாயை ஸ்கந்த காந்தாயை
ஸர்வேஷாம் ஸர்வகர்மஸி
ஹிம்ஸா கோடி வர்ஜிதாயை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

தனம் தேஹி யசோ தேஹி
புத்ரம் தேஹி ஸுசரேஸ்வரி
மானம் தேஹி ஜயம் தேஹி
த்விஷோ ஜஹி மஹேஸ்வரி

தர்மம் தேஹி ஸுகம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம,

தேஹி பூமி ப்ரஜாம் தேஹி
வித்யாம் தேஹி ஸுபூஜிதே
கல்யாணம் ச ஜயம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

தேவசேனை சஸ்ரநாமத்திலிருந்து நூதன துதிகள்

தயாமூர்த்தி தாரித்யதுக்க பயநாசினி
புஷ்கரா புஷ்கரக்ஷேத்ர தேவதா
மந்த்ரிணி மந்த்ர ஸாரக்ஞா
மாதவிஸுதா முக்தி தாயினி

ராதா லக்ஷ்மிபதிஸுதா
வாக்ப்ரதா சரஜன்மஸதி
ஷஷ்டி ஷஷ்டீஸ்வரி
ஷண்முகப்ரியா ஷடானன ப்ரீதிகர்த்ரீ

ஸங்கீதரஸிகா ஸ்கந்த உத்ஸாஹகரி
ஹரிநேத்ரஸமுத்பவா ஸ்வாமி மோஹினி
ஸ்வாமினி ஸ்வாமி அத்ரி நிலயா
க்ஷிப்ரஸித்திப்ரதா அம்ருதேஸ்வரி

அபார கருணா இஷ்டார்த்த தாயினி
உமாப்ரியா உமாஸுதப்ரியா
க்ருபாபூர்ணா க்ருத்திகா தனயப்ரியா
குஹ்யா குஹப்ரியா குஹ இஷ்டா

குஹஸ்ரீ குஹஉத்ஸுக சின்மயி
ஜயகரி ஞானதாத்ரி ஸர்வ அர்த்ததாத்ரி
ப்ரக்ருதி ஷஷ்டி அம்சா பரமேஸ்வரி பரதேவதா.




 

சஷ்டி தேவி விரத மகிமை!

 ஸ்வயம்பு மனுவின் புதல்வன் பிரியவிரதன். அவன் தவத்தில் மூழ்கியிருந்ததால் மணம் செய்துகொள்ளவில்லை. பின்னர் பிரம்மாவின் வற்புறுத்தலால் மணம் செய்துகொண்டான். ஆனால் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. அப்போது காசிப முனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். யாகப் பிரசாதத்தால் மனைவி மாலினி கருவுற்றாள். 12 வருடங்கள் கருவைச் சுமந்தவள் தங்க மயமான ஒரு குழந்தையைப் பெற்றாள். ஆனால் அது முழு வளர்ச்சியுடன் இல்லை.  அதைக்கண்டு மிகவும் மனம் வருந்திய பிரியவிரதன், அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு ஒரு காட்டுக்குள் சென்றான். 

அங்கே ஒரு ஒளிமயமான மண்டபம் தென்பட்டது. அதில் அழகிய ஒரு யோகினி தன் பக்தர்கள் புடைசூழ காணப்பட்டாள். அதிசயித்த பிரியவிரதன், ""தாயே- தாங்கள் யார்?'' என்றான்.""நான் தேவர்களுக்கு வெற்றி தரும் தேவசேனா தேவி. கந்தனின் மனைவி. பிரக்ருதியின் ஆறாவது அம்சம். தேவசேனை, ஈஸ்வரி, சஷ்டி என்கிற பிரபாவ நாமம் கொண்டவள். குழந்தை வேண்டுபவர்களுக்கு குழந்தையையும், மணமாகாதவர்களுக்கு கணவனையும் மனைவியையும், ஏழைகளுக்கு பணம், சுகம், சௌபாக்கியமும், நன்மை செய்பவர்களுக்கு மங்களமும் அளிப்பவள்'' என்றாள்.

ஸ்வயம்புவின் மகன் பிரியவிரதன் தன் குழந்தையைக் காண்பித்து வேண்ட, அவள் குழந்தையைத் தடவியதும் அது முழுஉருவத்துடன் மிளிர்ந்தது. சஷ்டி தேவி அவனிடம், ""மாதம்தோறும் வளர்பிறை சஷ்டி திதியில் என்னை இன்பமுடன் பூஜித்து வணங்கு. உன் மக்களிடமும் சொல். உன் குழந்தை ஸுவ்ரதன் என்று பெயர் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்வான். தான, தர்ம, யாகங்கள் செய்வான். வீரனாகவும் திகழ்வான். உன் நாடும் சிறப்புறும்'' என்று கூறி மறைந்தாள்.அன்றுமுதல் பிரியவிரதன் சஷ்டி விரதம் மேற்கொண்டான். அபிஷேக பூஜை, தூப, தீப, நிவேதன ஆராதனைகளுடன்,

"ஓம் ஹ்ரீம் ஷஷ்டி தேவ்யை ஸ்வாஹா'


என்னும் சஷ்டிதேவி
அஷ்டாட்சர ஜெபத்தைக் கூறி வணங்கிவந்தான். மன்னனும் மக்களும் நலமடைந்தனர்.

(இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஓதினால் குழந்தைப் பேறு கிட்டும்.)


எல்லாவித நலன்களும் பெற சொல்லவேண்டிய துதிகளை சஷ்டி தேவியே அருளியுள்ளாள். அவை தனியே கொடுக்கப்பட்டுள்ளன. முருகன், அவனது வேல், மயில், சேவல் என எல்லாவற்றையும் பாடிய அருணகிரியார் தேவசேனை, வள்ளி தேவியை தனித்துப் பாடவில்லை. அதிசயமே! வள்ளி, தேவசேனைக்கு இரண்டு அஷ்டோத்ரங்கள், சகஸ்ரநாமங்களும் உள்ளன. கோவில்களிலும் அவை தனியே பூஜிக்கப்படுவதில்லை.

தேவசேனை சகஸ்ர நாமத்திலிருந்து ஒருசில உருக்கமான நூதன நாமாவளிகள் இங்கு தனியே தரப்பட்டுள்ளன. வேறெங்கி லும் காணப்படாத நாமங்களை ஜெபித்து நன்மை பெறலாம்.

குமாரசஷ்டியில் ஆரம்பித்து, ஒவ்வொரு வளர்பிறை சஷ்டியிலும் கந்தனுடன் சஷ்டி தேவியையும் (தேவசேனை) துதித்து பலன் பல பெற்று நலமுடன் வாழ்வோமே!


சஷ்டி தேவி அருளிய துதி!


"நமோ தேவ்யை மஹாதேவ்யை
ஸித்யை சாந்த்யை ச நமோ நம:

ஸுபாயை தேவஸேனாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:

வரதாயை புத்ரதாயை
தனதாயை நமோ நம:

ஸுகதாயை மோக்ஷதாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:

ஸ்ருஷ்ட்யை ஷஷ்டி அம்ச
ரூபாயை ஸித்தாயை நமோ நம:

மாயாயை ஸித்தயோகின்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸாராயை ஸாரதாயை ச
பரா தேவ்யை நமோ நம:

பால அதிஷ்டாத்ரு தேவ்யை ச
ஷஷ்டி தேவ்யை ச நமோ நம:

கல்யாணதாயை கல்யாண்யை
பலதாயை ச கர்மணாம்

ப்ரத்யக்ஷாயை ஸ்வபத்தானாம்
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸுத்த ஸத்வ ஸ்வரூபாயை
வந்திதாயை ந்ருணாம்ஸதா

தேவரக்ஷண காரிண்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

பூஜ்யாயை ஸ்கந்த காந்தாயை
ஸர்வேஷாம் ஸர்வகர்மஸி

ஹிம்ஸா கோடி வர்ஜிதாயை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

தனம் தேஹி யசோ தேஹி
புத்ரம் தேஹி ஸுசரேஸ்வரி

மானம் தேஹி ஜயம் தேஹி
த்விஷோ ஜஹி மஹேஸ்வரி

தர்மம் தேஹி ஸுகம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம,

தேஹி பூமி ப்ரஜாம் தேஹி
வித்யாம் தேஹி ஸுபூஜிதே

கல்யாணம் ச ஜயம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம:


தேவசேனை சஸ்ரநாமத்திலிருந்து நூதன துதிகள்!

தயாமூர்த்தி தாரித்யதுக்க பயநாசினி
புஷ்கரா புஷ்கரக்ஷேத்ர தேவதா
மந்த்ரிணி மந்த்ர ஸாரக்ஞா
மாதவிஸுதா முக்தி தாயினி
ராதா லக்ஷ்மிபதிஸுதா
வாக்ப்ரதா சரஜன்மஸதி
ஷஷ்டி ஷஷ்டீஸ்வரி
ஷண்முகப்ரியா ஷடானன ப்ரீதிகர்த்ரீ
ஸங்கீதரஸிகா ஸ்கந்த உத்ஸாஹகரி
ஹரிநேத்ரஸமுத்பவா ஸ்வாமி மோஹினி
ஸ்வாமினி ஸ்வாமி அத்ரி நிலயா
க்ஷிப்ரஸித்திப்ரதா அம்ருதேஸ்வரி
அபார கருணா இஷ்டார்த்த தாயினி
உமாப்ரியா உமாஸுதப்ரியா
க்ருபாபூர்ணா க்ருத்திகா தனயப்ரியா
குஹ்யா குஹப்ரியா குஹ இஷ்டா
குஹஸ்ரீ குஹஉத்ஸுக சின்மயி
ஜயகரி ஞானதாத்ரி ஸர்வ அர்த்ததாத்ரி
ப்ரக்ருதி ஷஷ்டி அம்சா பரமேஸ்வரி பரதேவதா.



குமார சஷ்டி!



ப்பசி அமாவாசையை அடுத்த பிரதமை திதியிலிருந்து சஷ்டி திதிவரை ஆறுநாட்கள் தமிழகத்தில் கந்தசஷ்டி விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். அதுபோல கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டி திதியை குமார சஷ்டி, சுப்ரமணிய சஷ்டி என்று ஆந்திர, கர்நாடக, கேரளப் பகுதிகளில் கொண்டாடுவார்கள்.
பிள்ளைப்பேறு வேண்டி இவ்விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விரதமிருந்து பூஜை செய்து, ஒரு பிரம்மச்சாரிக்கு உணவளித்து வேட்டியை தானமாகத் தருவர்.
இதனை சஷ்டி தேவி வழிபாடு என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒருவரான கௌமாரியின் இன்னொரு பெயரே சஷ்டி தேவி. சிவனின் சக்தி பராசக்தி என்பதுபோல, குமரனின் சக்தி சஷ்டி தேவி.
குஜராத்தில் புகழ் பெற்ற ஆதிஅம்பாஜி கோவிலில் சஷ்டி தேவியைக் காணலாம். வியாசரின் பிரம்ம வைவர்த்த புராணமும், தேவி பாகவதமும் சஷ்டி தேவி பற்றியும், உபாசனைப் பலன்கள் பற்றியும் கூறுகின்றன.
பிரம்ம வைவர்த்த புராணத்தின் பிரகிருதி காண்டம், முதல் அத்தியாயம் (79-86 துதிகள்) சஷ்டி தேவியைப் பற்றி சுருக்கமாக விவரிக்கும்.
"ப்ரதான அம்சரூபா யா தேவஸேனா ச
நாரத மாத்ருகா ஸா பூஜ்யதமா
   ஸாச ஷஷ்டி ப்ரகீர்த்திதா ஸிசூனாம்
ப்ரதிவிஸ்வம் து ப்ரதி பாலன காரணி'
என்னும் சுலோகம், "பிரகிருதி தேவியின் பிரதான அம்சம், சஷ்டி தேவி என்கிற தேவசேனை; அவள் உலகத்திலிருக்கும் குழந்தைகளைக் காப்பவள்' என்று கூறுகிறது.
"தபஸ்வினி விஷ்ணுபக்தா
கார்த்திகேயஸ்ச காமினி
ஷஷ்ட அம்சரூபாச ப்ரக்ருதே:
தேன ஷஷ்டி ப்ரகீர்த்திதா.'
அவள் தவம் செய்பவள்; விஷ்ணுபக்தை; கார்த்திகேயன் மனைவி; பிரகிருதியின் ஆறாவது அம்சமானதால் சஷ்டி என்று பெயர்.
"புத்ர பௌத்ர தாத்ரி யா
தாத்ரி ச ஜகதாம் ஸதா
ஸுந்தரி யுவதி ரம்யா
ஸததம் பர்துரந்தி கே.'
மகன், பேரன் ஆகியோரை அளிப்பவள்;
ஜகத்தைக் காப்பவள்; அழகானவள்; யுவதியானவள்.
"பூஜா யா ஸுதிகாகாரே
பரஷஷ்டிதினே சிஸோ:
ஏக வம்சதிதமே சைவ
பூஜா கல்யாண ஹேதுகி.'
அவளை பிரசவ அறையில் ஆறாவது நாள், 21-ஆவது நாள் போற்றினால் மங்களமே நிகழும்.

"ஸஸ்வத் நியமிதா ச ஏஷா
நித்யா காம்யா அபி அத: பரா
மாத்ரு ரூபா தயாரூபா
ஸஸ்வத் ரக்ஷணகாரிணி
ஜலே ஸ்தலே ச அந்தரிக்ஷே
சிசூனாம் ஸ்வப்னகோசரா'
அவள் அன்னையின் வடிவமாய்; தயை, கருணையின் வடிவமாய்; நித்யமாய்- சாஸ்வதமாய் இருந்து, நிலம், நீர், ஆகாயம், கனவு போன்றவற்றிலெல்லாம் குழந்தையை எப்போதும் காக்கிறாள். ஆக, அவள் துதிப்பவர்களை- கர்ப்பத்திலிருந்தே குழந்தையைக் காப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மகனையும் மகளையும், பேரனையும் பேத்தியையும் அளித்து எப்போதும் காக்கிறாள்.
ஸ்ரீதேவி பாகவதத்தின் 9-ஆவது ஸ்கந்தம், 46-ஆவது அத்தியாயமானது,  சஷ்டி தேவி உபாக்யானம் என்று தேவசேனை (சஷ்டிதேவி) மகத்துவம் கூறும். (72 சுலோகங்கள்).
"ஷஷ்ட அம்சா ப்ரக்ருதே யா ச
ஸச ஷஷ்டி ப்ரகீர்த்திகா
பாலகானாம் அதிஷ்டாத்ரி
விஷ்ணுமாயா பாலதா.'  (4)
"மாத்ருகாஸுச விக்யாதா
தேவ ஸேனாபிதா சயா
ப்ராண அதிக ப்ரியா ஸாத்வி
ஸ்கந்த பார்யா ச ஸுவ்ரதா.'  (5)
"ஆயு: ப்ரதாச பாலானாம்
தாத்ரி ரக்ஷண காரிணி
ஸததம் சிசுபார்ஸ்வஸ்தா
யோகேன ஸித்த யோகினி.' (6)
சஷ்டி தேவி விஷ்ணுவின் மாயையாக உதித்தவள். குழந்தைகளைக் காப்பவள். சஷ்டி தேவியே தேவசேனை என்று மதிக்கப்படுபவள். உயிரைவிட நேசிப்பவள். கந்தனின் மனைவி. அவள் ஒரு யோகினி; குழந்தை அருகில் செவிலித் தாய்போல இருந்து ரட்சிப்பவள்.


குமார சஷ்டி அன்று சஷ்டி தேவியைப் போற்றுவோம்.