திங்கள், 26 அக்டோபர், 2015

மாபெரும் அந்தஸ்து தரும் அன்னாபிஷேகம்


 
சிவலிங்கத்திற்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு இந்த பிறவியில் எண்ணற்ற புண்ணியங்கள் சேர்ந்து, தடைகள் விலகி சிறப்பு பெறுவர். இந்த பிறவியில் மட்டும் அல்லாமல் இனி வரும் பிறவிகளிலும் மாபெரும் இராஜயோக அந்தஸ்தை பெறுவார்கள் –  சொர்க்கம் கிடைக்கும் என்பதும்  ஐதீகம்.
 
மற்றவர்களின் பசியை போக்க இறைவன் மறைமுகமாக நமக்கு அன்னதானத்தின் மகிமையை உணர்த்துகிறார். அத்துடன் என்றென்றும் நமக்கு உணவு வழங்கிடும் சிவபெருமானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அரிசி சாதத்தை படைத்து, அந்த அரிசி சாதத்தின் நிறமான வெண்மையை போல், இறைவன் மீது நாம் வைத்திருக்கும் பக்தியும், அன்பும் தூய்மையானது என்பதையும் அன்னாபிஷேகத்தின் மூலமாக இறைவனுக்கு தெரிவிக்கிறோம்.
 
ஒவ்வொரு அரிசியிலும் சாப்பிடுபவர்களின் பெயர் இருக்கும் என்பார்கள். சிவபெருமானுக்கு அன்னாபிஷேகத்தில் நாம் சமர்பிக்கும் அரிசி சாதத்தில் நமது பெயரும் இணைந்திருப்பதால், அந்த அபிஷேக அன்னத்தை சாப்பிடும் நமக்கு  கோடி புண்ணியங்கள் சேருகிறது. சொர்க்கம்போல அந்தஸ்தான வாழ்க்கை நமது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கும்.
 
அதனால்தான் சொல்வார்கள், “சோறு கண்ட இடம் சொர்கம்” என்று.
 
அதாவது, சிவபெருமானை அலங்கரிக்கும் "அன்னாபிஷேக சோற்றை  கண்டாலே சொர்க்கம்தான்.”
அத்துடன் அந்த அன்னத்தை பிரசாதமாக சாப்பிடுவதற்கு நாம் எத்தனையோ பாக்கியம் செய்திருக்க வேண்டும்.வீ்ட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவர்களும்,  சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம்.
 
சிவனுக்கு அன்னபிஷேகம் செய்யும் நாளன்று,  சிவலாயத்திற்கு சென்று, சிவபெருமானுக்கு செய்யப்படுகிற அன்னாபிஷேகத்தை கண் குளிர தரிசித்து ஈசனின் அருளை பெற்றிடுவோம்.
 
வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே!”
 
பொருள்: இறைவா, எனக்கு என்ன வேண்டும் என்பதை நானறியேன். நீதான் அறிவாய். என் பிறவிப்பிணி தீர்க்கும் மருத்துவராக நீ இருக்கின்றாய். நோயாளியின் நோய் இன்னதென்று மருத்துவர் அறிவாரேயன்றி நோயாளி அறிய முடியாது.
 
அதுபோன்று, வினைப்பிறவி சார்ந்து துன்புறுகின்ற எனக்கு இப்பிறவித் துன்பம் நீங்கிட எதனை அருளவேண்டுமென்பதை நீயே அறிய வல்லவன்.
 
ஆக எனக்கு சுகம் அளிக்கவல்லது எதுவோ அதனை வழங்கும் பொறுப்பு உன்னுடையதே.!
 
 
 
 
 
 
 
 
 

செல்வம் பெருக குபேர வழிபாடு!


சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாள் அல்லது தேய்பிறை பிரதமை திதி வரும் நாள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவதும் சிறப்பானது.

தீபாவளித் திருநாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் சிறப்புவாய்ந்தது.

வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாள் மேலும் சிறப்புவாய்ந்தது. பூச நட்சத்திர நாளும் வழி படத்தக்கதே. அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்க்கவும்.

லட்சுமி குபேர விரதத்தைக் கடைப்பிடிப்பதற்கு முதல் நாளே சில பூஜைப் பொருட் களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். லட்சுமி குபேரன் படம், யந்திரம் போன்றவற்றை தூய்மைசெய்து வைத்துக்கொள்ளவும், என்ன இருக்கி
றதோ அதுபோதும்.

மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதானியம், தலை வாழையிலை போன்றவற்றை முடிந்த அளவு வாங்கிவைத்துக் கொள்ளவும்.

விரத நாளன்று காலை எழுந்து நீராடி, தூய்மையான ஆடையணிந்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல நேரத்தில் லட்சுமி குபேரன் படம், யந்திரம் (இருந்தால்) ஆகியவற்றை எடுத்து மஞ்சள், குங்குமம் வைத்து பூஜையறையில் வைக்கவும்.

குபேரன் படம், யந்திரம் மட்டும் இருந்தால் வடக்கு நோக்கி வைக்க
லாம். படத்துக்கு முன்னால் வாழையிலையை வைத்து, அதன் நடுவில் ஒரு கலசம் வைக்கவும். கலசத்தில் தூய்மையான நீரை நிறைத்து சிறிது மஞ்சள்தூள் போடவும். கலசத்தின்மீது மஞ்சள் பூசிய ஒரு தேங்காயை வைத்து சுற்றிலும் மாவிலை வைக்கவும். அந்த கலசத்தைச் சுற்றி நவதானியங்களை (ஒன்றுடன் ஒன்று கலக்காமல் தனித்தனியே) வைக்கவும். வெற்றிலை, பாக்கு, பழம் போன்றவற்றுடன் உங்களால் முடிந்த தட்சிணையையும் எதிரே வைக்கவும்.

கொஞ்சம் மஞ்சள்தூளை எடுத்து சிறிது தண்ணீர்விட்டு பிள்ளையார்போல பிடித்து வாழையிலையின் வலப்பக்கம் வைக்கவும். அதற்கு குங்குமப் பொட்டிட வேண்டும். லட்சுமி
குபேரன் படம், யந்திரம், கலசம், மஞ்சள் பிள்ளையார் அனைத்திற்கும் மலர்களை சாற்றி ஊதுவர்த்தி ஏற்றவேண்டும்.பூஜையறை கிழக்குநோக்கி இருந்தால் நீங்கள் வடக்குநோக்கி அமருங்கள். பூஜையறை வடக்குநோக்கி இருந்தால் கிழக்குநோக்கி அமரவும். உங்களுக்குத் தெரிந்த பிள்ளையார் மந்திரம் அல்லது சுலோகங்களை முதலில் கூறவேண்டும். பின் லட்சுமி சுலோகம், துதியைக் கூறவும்.
 

அதையடுத்து குபேர மந்திரம் கூறலாம். எதுவும் தெரிய வில்லையென்றால் மனதுக்குள் "விநாயகா போற்றி, லட்சுமி தேவியே போற்றி, குபேரா போற்றி' என்று கூறி வழிபடலாம்.

"நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான செல்வத்தையும், நிலையான மகிழ்ச்சியையும், நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் அனைவருக்கும் தரவேண்டும்' என்று மனமுருகி வேண்டுங்கள். பின்பு தூபதீபம் காட்டி, சர்க்கரை போட்டுக் காய்ச்சிய பசும்பால், வாழைப்பழம், பாயசம் போன்றவற்றை நிவேதனமாகப் படைக்கலாம். வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிப் பெண்களுக்கும், தட்சிணையை ஏழைகளுக்கும் கொடுக்கவும். இவ்வாறு வழிபட்டால் உங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகள், இன்னல்கள் எல்லாம் விலகும். வளமும் நலமும் உங்களை வந்தடைய லட்சுமியும் குபேரனும் நிச்சயம் அருளுவார்கள்.

இந்த விரதத்தை ஆண்- பெண், சிறுவர்கள்
என யார் வேண்டுமானாலும் மேற்கொள்ள லாம்.
குபேர காயத்ரி
"ஓம் யக்ஷ ராஜாய வித்மஹே
அளகாதீசாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத்.'



செல்வம் பெருக..


"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேர லக்ஷ்ம்யை
கமல தாரின்யை தனாகர்ஷிண்யை ஸ்வாஹா'

என்னும் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வணங்கிவந்தால் செல்வம் பெருகும்.
எளிய குபேர பூஜைஒரு தூய்மையான மரப்பலகையில் அரிசி மாவினால் ஒன்பது கட்டங்கள் போட்டுக்கொள்ளவும். அதற்குள் அரிசி மாவினாலேயே (இங்கு காட்டியுள்ளபடி) எண்களை எழுதவேண்டும். ஒவ்வொரு எண்ணின்மீதும்  ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் எண் 1 என்பது மேலே இருக்கவேண்டும். நாணயத்தின்மீது மஞ்சள் குங்குமம் வைக்கவும். பலகைக்கு முன் லட்சுமி குபேரர் படம் வைக்கவும். பின்னர் கீழுள்ள சுலோகத்தை 11 முறை கூறவும்.

"ஓம் யக்ஷாய குபேராய
வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே
தனதான்ய ஸ்ம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா.'

ஒவ்வொரு முறை கூறும்போதும் ஒரு செந்நிற மலரை ஒவ்வொரு கட்டமாக வைத்துக்கொண்டு வரவும். மீதி இரண்டு மலர்களை லட்சுமி குபேரன் படத்திற்கு சமர்ப்
பிக்கவும். இந்த பூஜையை தினமும் செய்யலாம்.

அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.

ஆனால் தடைப்படக்கூடாது. அப்படி நேர்ந்தால் மனதினாலாவது வழிபடவேண்டும். பூஜையில் வைக்கும் நாணயத்தை பலகையைக் கழுவும்போது மட்டும் எடுக்கவும். நம்பிக்கை யுடன்  இந்த பூஜையைச் செய்தால் குறைவற்ற செல்வம் வந்தடையும்.


குபேர சிந்தாமணி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம் உனபதுமாம் தேவஸக
கீர்த்திஸ்ச மணினா ஸக: ப்ராதுர் பூதேஸ்மி

ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் வருத்திம் ததாதுமே
ஓம் குபேராய ஐஸ்வர்யாய தனதான்யாதிபதயே
தன விருத்திம் குருகுரு ஸ்வாஹா!


மேற்கண்ட மந்திரத்தை சொல்லி குபேர முத்திரையுடன் வணங்க செல்வ வளம் பெருகும்.




காணாமல் போனவற்றை மீட்டுத்தரும் அரைக்காசு அம்மன்!






பொதுவாக புதுக்கோட்டை அருகேயுள்ள திருக்கோகர்ணம் பிரகதாம் பாளையே அரைக்காசு அம்மனாக வணங்கி வருகிறோம். களவு போனவை, காணாமல் போனவற்றை மீட்டுத்தரும் சக்தி வாய்ந்த தெய்வம் அரைக்காசு அம்மன்.



ஞாபக மறதியாக வைத்துவிட்ட பொருளைத் தேடும்போதும், காணாமல் போன பொருட்கள் கிடைக்கவும் இந்த அம்மனை எண்ணி வேண்டிக்கொண்டால் அவை கிடைக்கும். பொருள் கிடைத்ததும் வீட்டிலேயே வெல்லத்தில் பிள்ளையார்போல பிடித்துவைத்து, அதை அம்மனாக எண்ணி வழிபடவேண்டும்.






பின்னர் அந்த வெல்லத்தை அனைவரும் பிரசாதமாக உட்கொள்ளலாம். களவுபோன பொருட்கள் கிடைக்கவும், கொடுத்த கடன் திரும்ப வராமலிருந்தாலும், தங்கள் சொத்து கைக்கு வந்துசேர்வதில் தடையிருந்தாலும் இந்த அம்மனிடம் பிரார்த்தித்துக் கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அம்மனுக்கு வெல்லத்தில் பொங்கல் வைத்து நிவேதனம் செய்து வழிபடலாம்.





சனி, 24 அக்டோபர், 2015

நலம் தரும் நவராத்திரி!


நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது. அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது  (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும். இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார். இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.


வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை  விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை  அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி. கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள்,  சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.  இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.



தேவியரின் வாகனம்:

இந்திராணி - யானை
வைஷ்ணவி - கருடன்
மகேஸ்வரி - ரிஷபம்
கவுமாரி - மயில்
வராகி - எருமை
அபிராமி - அன்னம்
நரசிம்மி - சிங்கம்
சாமுண்டி - பூதம்


அம்பாளை வணங்குவதன் பலன்:

அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன. இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.


ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்
ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்
ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.  கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச்  சொல்லவும்.

பெண்கள் பண்டிகையா?

நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே. ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.


பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா
மகேஸ்வரி- சிவன்
கவுமாரி- குமரன் (முருகன்)
வைஷ்ணவி- விஷ்ணு
வராஹி- ஹரி (வராக அவதாரம்)
நரசிம்மி- நரசிம்மர்
இந்திராணி- இந்திரன்.

இதிலிருந்து, நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.


அம்மையைத் தடுக்க அஷ்டமி படிப்பு:

நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி
(நவராத்திரியின் எட்டாம் நாள்) நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது. பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை. நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். அம்மை நோய் வராது என்பது மிகவும் முக்கியம். நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை நீங்கள் வாசிக்கலாம்.

மூன்று மூன்றாக பிரித்தது ஏன்?
 
 நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள்  லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி. ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.

புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.  நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில்  சஞ்சரிப்பார். புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.




 

மாதங்கள் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானங்கள்



தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானங்கள்  குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதனைச் செய்தால் வாழ்வில்  சுபயோகம் வந்து சேரும்.


சித்திரை    -     நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்

வைகாசி    -     பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்


ஆனி    -     தேன்


ஆடி    -     வெண்ணெய்


ஆவணி    -     தயிர்


புரட்டாசி    -     சர்க்கரை


ஐப்பசி    -     உணவு, ஆடை


கார்த்திகை    -     பால், விளக்கு


மார்கழி    -     பொங்கல்


தை    -     தயிர்


மாசி    -     நெய்


பங்குனி    -     தேங்காய்



இதே போல, 7 கிழமைகளுக்கும்  கூட  தானம் இருக்கிறது.

ஞாயிறு    -     பொங்கல், பாயாசம்

திங்கள்    -     பால்

செவ்வாய்    -     வாழைப்பழம்

புதன்    -     வெண்ணெய்

வியாழன்    -     சர்க்கரை

வெள்ளி    -     கல்கண்டு

சனி    -     நெய்





 

ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள்!

ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள்! (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)

படிப்பில் வல்லவனாக:-

வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி:

வயிற்று வலி நீங்க:-
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:

உற்சாகம் ஏற்பட:-
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல:

ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட:-
மஹா புத்திர் மகாவீர்யோ மகாசக்திர் மஹாத்யுதி:

கண்பார்வை தெளிவுபெற :-
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

பெருமதிப்பு ஏற்பட :-
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோநர:

எண்ணிய காரியம் நிறைவேற :-
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப: ஸித்தித: ஸித்தி ஸாதன:

கல்யாணம் நடக்க :-
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத: ப்ரபு:

உயர்ந்த பதவி ஏற்பட :-
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந: ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ:

மரண பயம் நீங்க :- வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது:

அழியாச் செல்வம் ஏற்பட :-
அர்த்தோநர்த்தோ மஹாகோசோ மஹாபோகோ மஹாதந:

நல்ல புத்தி ஏற்பட :-
ஸர்வதர்சீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்

சுகம் உண்டாக :-
ஆநந்தோ நந்தநோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம:

க்ஷேமம் உண்டாக :-
அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ:

துன்பங்கள் தொலைய :-
பூசயோ பூஷணோ பூதிர் விசோக: சோகநாசன:

வியாதிகள் நீங்க :-
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி ரநாமய:

மோக்ஷமடைய :-
சத்கதி: சத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண:

சத்ருவை ஜெயிக்க :-
ஸுலப: ஸுவ்ருத: ஸித்த: சத்ருஜிச் சத்ருதாபன:

ஆபத்து விலக :-
அமூர்த்திரநகோ சிந்த்யோ பயக்ருத் பயநாசந:

மங்களம் பெருக :-
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:

துர்சொப்பனம் நீங்க :-
உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸ்வப்நநாசந:

பாபங்கள் நீங்க :-
தேவகீ நந்தந: ஸ்ரஷ்டா க்ஷிதீச: பாபநாசந:

 
 
 

கண் பார்வை குறைபாடு நீங்க!

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான கண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய்,  இதை சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.

கண் பார்வை குறைபாடு நீங்க!


 முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.


கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
 
முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.


இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.


வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.

முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில்
எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்  குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.


மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 
இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது.
 
ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
 
நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.
 
பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
 
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
உச்சி வெயிலில் அலையக் கூடாது.

முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர். இது குணமாக:

முருங்கை விதை – 100 கிராம்
மிளகு – 100 கிராம்


 இரண்டையும் நன்றாக  மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத் தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம் சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.


பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்” என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது.
 
கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

கண் பார்வை குறைபாடு சரி செய்ய வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று
.
 
நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும்.
 
அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப் பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும்.

1.மனக் கவலை தூள் படும்
2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்
3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்
4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கி விடுவோம்
6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்
7.ஒற்றைத்தலைவலி
சரியாகும்

 எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம்  தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.