ஞாயிறு, 18 டிசம்பர், 2016

பந்தர்க்கவானா தேவி ஜகதாம்பா!

download

மகாராஷ்டிர மானிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள கேலாப்பூர் கிராமம். தேவி ஜகதாம்பா ஆலயத்தினால் பிரபலமடைந்துள்ளது. பந்தர்க்கவானா என்றும் அழைக்கப்படுகிற இத்தலத்துக்கு ஆந்திர மானிலத்திலிருந்தும் மக்கள் எராளமாகக் கூடுகிறார்கள்.

images (1)

வீர சிவாஜியின் அபிமான தேவியான துளஜாபூர் பவானியும் லோனவ்லாவில் உள்ள கார்லா குகை எகவீரா தேவியுமே இங்கு ஸ்ரீ ஜகதாம்பா தேவியாக வழிபடப் படுவதாகவும் இந்த இரு தேவிகளும் சுரங்க மார்க்கமாக இங்கு வந்து மா ஜகதாம்பா என்ற திரு நாமத்தோடு எழுந்தருளியிருப்பதாகவும் ஆலய அர்ச்சகர் தெரிவிக்கிறார். ஸ்ரீ ஜகதாம்பா தேவியின் கருவறையில் இந்தச் சுரங்கப்பாதையின் வாயில் உள்ளதாகக் கூறப்படுகிறது,

images (2)

ஸ்ரீ ஜகதாம்பா தேவியை பக்தர்கள் அம்பாஜி என்றும் அம்பா தேவி என்றும் அழைக்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு அம்பா தேவி ஆலயம் என்பதே பிரபலமான பெயராக அமைந்துள்ளது.

download (1)

ஆலயத்தைச் சுற்றிலும் சுமார் ஐம்பது கி மீ சுற்றளவில் உள்ள கிராமங்களில் வசிக்கின்ற மக்களுக்கு இந்த தேவியே குலதெய்வமாக விளங்குகிறாள். ஆந்திர மானிலம் அட்லாபாத்திலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக அம்பிகையைத் தரிசிக்கவும் குழந்தைப் பேறு அமையவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். விரதமிருந்து தரிசித்தால் விருப்பங்கள் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது. ‘கேலா’ என்ற சொல் வாழைப்பழத்தைக் குறிக்கும். இத்தலத்தில் தேவி வாழைப்பழ உருவத்தில் தோற்றமளிக்கும் சுயம்பு விக்கிரகத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். எனவே இத்தலம் கேலாப்பூர் எனப்படுகிறது.

images

நான்கு கால்களுடன் கூடிய வெள்ளியினாலான அழகிய மண்டபத்தில் ஸ்ரீ ஜகதாம்பா தேவி எழுந்தருளியிருக்கிறாள். நின்ற நிலையில் இரண்டு கரங்களையும் இருபுறங்களிலும் விரித்து காட்சி தரும் தேவியின் முகத்தில் வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டுள்ளது.

கருவறைக்கு வெளியே கருங்கல்லினால் செய்யப்பட்ட பெரிய எருமை வாகனமும் பலி பீடமும் உள்ளன. இதற்கு அருகில் பக்தர்கள் தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்து தீபங்களை ஏற்றி வழிபடுகிறார்கள்.

download (2)

நவராத்திரி  மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அது சமயம் “ அகண்ட மனோ காம்னா ஜோதி” என்ற பெயரில் ஏராளமான விளக்குகள் ஆலய வளாகம் முழுவதும் ஏற்றி வைக்கப்படுகின்றன. “ மனோ காம்னா” என்பது மனதில் ஏற்படும் அனைத்து ஆசைகளையும் குறிக்கிறது.

இந்த தீபத்தை ஏற்றி வைத்தால் பக்தர்களின் நியாயமான ஆசைகளை தேவி நிறைவேற்றி வைப்பாள் என்ற நம்பிக்கை உள்ளது. நவராத்திரி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு அருள்வேண்டி வருகின்றனர்.






 

அளப்பரிய ஆற்றல் அருளும் காயத்ரி மந்திரம்!


முக்தா வித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகை:
த்ரீக்ஷணை:யுக்தாமிந்து கலாநிபத்த ரத்ன மகுடாம்
தத்வார்த்த வர்ணாத்மிகாம்
காயத்ரீம் வரதாபயாங்குச கசா: சுப்ரம் கபாலம் கதாம்
சங்கம் சக்ரமதாரவிந்த யுகளம் ஹஸ்தைர்வஹந்தீம் பஜே!

- காயத்ரி தேவியின் ஸமஷ்டி ரூப த்யானம்!
 

பொதுப்பொருள்:
 
முத்து, பவழம், ஸ்வர்ணம், கறுப்பு, வெளுப்பு ஆகிய வர்ணங்களுள்ள ஐந்து முகமுள்ளவளும்,
 
அந்த ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் உள்ளவளும், சந்திரகலையை தலைமீது அணிந்தவளும்,
 
தத்வார்த்தம் உள்ளதான எழுத்து ரூபமான வளும்,
 
வரதம், அபயம், அங்குசம், பாசம், வெளுப்பான கபாலம், கதை, சங்கம், சக்ரம், இரு தாமரை ஆகியனவற்றைத் தன் கரங்களில் ஏந்தியவளுமான காயத்ரி தேவியே நமஸ்காரம்.
 
 காயத்ரிமந்திரத்தை இந்தபூமிக்கு அறிமுகப் படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார்.

வர் ஆகாயத்தில் சூட்சுமஒலியாக தியான நிலையி லிருந்து இதைக்கண்டறிந்தார்.

காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.
 
‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.

ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.


 
காயத்ரி மந்திரம்!

ஓம் பூ: புவ: ஸ்வஹ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோயோந: ப்ரசோதயாத்!

 
இதில் : என வந்தால் ஹ என உச்சரிக்கவும்.
 
அதாவது ஓம் பூஹ புவஹ ஸ்வஹஹ, த்யோயோநஹ என உச்சரிக்கவேண்டும். 
 
இதன் தமிழ்அர்த்தம் என்ன?

‘யார் நம் அறிவாகிய ஒளிச் சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக்கடவுளை நான் வணங்குகிறேன்’ என்பதே இதன் அர்த்தம் ஆகும்.




சூரியனுக்கு உள்ள்ளே காயத்ரி தேவி இந்த காயத்ரி மந்திரத்தின் ஸ்தூலவடிவமாக அமர்ந்திருக்கிறாள்.

அவளுக்கு 5 திருமுகங்கள்! 

லட்சுமி, சரசுவதி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து முகங்களும் சிவனின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் செய்தல் ஆகிய தொழில்களை நினைவு படுத்துகின்றன.



காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர் களின் அனைத்து ஆசைகளும்  உறுதியாக நிறைவேறும். தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ‘ஆத்மசுத்தி’ கிடைக்கும்.அவர்கள் இந்த உலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்.
 
இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும்.
 
மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி.
 
இதனை ஜெபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும்.



காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி-க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி-க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதி-க்காகவும் ஜபிக்கப்படுகிறது.


 
காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப் படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம்.
 

 


 
Widgets Magazine
 
 

கணேசாங்க நிவாஸினி ஸித்தலக்ஷ்மி!

 





முக்நாபாம் திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர் மேகலாத்யை:

நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம்
கர்பூரா மோத வக்த்ராம் அபரிமித க்ருபா


பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீலக்ஷ்மீம் பத்ம ஹஸ்தாம்
ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி!


- கணேசாங்க நிவாஸினி ஸித்தலக்ஷ்மி த்யானம்!





பொதுப்பொருள்:


முத்தாலான ஆபரணங்கள் அணிந்து, கஸ்தூரிப் பொட்டிட்டு, கல்ஹார மாலை அணிந்து இடையில் மேகலை தவழ நவமணிகள் இழைக்கப்பட்ட கச்சை அணிந்து அளவில்லா கருணை பொங்கும் விழிகளோடு தாமரை மலரை கையில் ஏந்தி கணபதியை அணைத்த வண்ணம் காட்சிதரும் கணேசாங்க நிவாஸினியான ஸித்தலக்ஷ்மி தேவியே தங்களை வணங்குகிறேன்.



இத்துதியை பாராயணம் செய்து வர அருள்வளம், பொருள்வளம் பெருகும்.



மூலமந்த்ரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி
வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா!