சனி, 30 ஏப்ரல், 2016

வேண்டுவன எல்லாம் தரும் கந்தனின் 16 நாமங்கள்!

 வியாசர் ஸ்கந்த புராணத்தை ஆரம்பிக்கும் போதே, கந்தனின் உன்னதமான 16 பெயர்களைக் கூறி, அதற்கு பலஸ்ருதியும் கூறுகிறார்.

"ஸுப்ரமண்யம் ப்ரணமாம்யஹம்
ஸர்வக்ஞம் ஸர்வகம் ஸதா
அபீப்ஸிதார்த்த ஸித்யர்த்தம்
நாம ஷோடஸ ப்ரதமோ ஞான சக்த்யாத்மா
த்விதியோ ஸ்கந்த ஏவச
அக்னிபூஸ்ச த்ருதீயஸ்யாத்
பாஹுலேய: சதுர்த்தக:
காங்கேய: பஞ்சமோ வித்யாத்
ஷஷ்ட: சரவணோத்பவ:
ஸப்தம: கார்த்திகேய: ஸ்யாத்
குமாரஸ்யாத் அத அஷ்டக:
நவம: ஷண்முகஸ்சைவ
தஸம: குக்குடத்வஜ:
ஏகாதச: சக்திதர:
குஹோ த்வாதச ஏவச
த்ரயோதஸோ ப்ரம்மசாரி
ஷாண்மாதுர: சதுர்தச:
க்ரௌஞ்சபித் பஞ்சதசக:
ஷோடஸ: சிகிவாஹன:'

முருகனின் 16 நாமங்களைக் கூறுவதற்கு முன்பும் பின்பும் பலஸ்ருதி கூறுகிறார்.

கோரிய பொருட்களை அடைவதற்காக, எல்லாம் அறிந்தவனும் எங்கும் உள்ளவனுமான சுப்ரமண்யனை நமஸ்கரித்து முருகனின் 16 நாமங்களைக் கூறுகிறேன்.

1. ஞானசக்த்யாத்மா- ஞானம், சக்தி ஆகியவற்றின் உருவாக இருப்பவன்.

2. ஸ்கந்தன்- சத்ருக்களை அழிப்பவன்; (ஆறு குழந்தைகளையும் பார்வதி அணைக்க ஒன்றானவன்); ஆதாரமாக- பற்றுக்கோடாக இருப்பவன்; சிவஜோதியாக வெளிப்பட்டவன்.

3. அக்னி பூ- அக்னியில் உண்டானவன்; அக்னியால் ஏந்தப்பட்டவன்;அக்னி ஜோதியாக எழுந்தவன்.

4. பாஹுலேயன்- வாயு, அக்னியால் ஏந்தப்பட்டவன்.

5. காங்கேயன்- கங்கை நதியில் உண்டானவன்.

6. சரவணோத்பவன்- நாணற்காட்டில் பிறந்தவன். (அம்பிகையின் மறுவுருவம் சரவண மடுவாம்- அதனில் தோன்றியவன்).

7. கார்த்திகேயன்- கிருத்திகை நட்சத்திரத்தின் புதல்வன்.

8. குமாரன்- குழந்தையாக இருப்பவன்; (ஐந்து வயதுக்கு உட்பட்டவன்) இளைஞன்; யுத்தத்திற்கு அதிபதி; நிந்திப்பவரை அழிப்பவன்; மன்மதனைப் போல் அழகானவன்; லக்ஷ்மி கடாக்ஷம் அளிப்பவன்; அஞ்ஞானம் அழித்து ஞானம் ஈபவன்.

9. ஷண்முகன்- ஆறு முகம் உடைய வன்; கணேச, சிவ, சக்தி, ஸ்கந்த, விஷ்ணு, சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன்.

(அருணகிரியின் திருப்புகழ் பாடல் களைப் படித்தால் இது உண்மையென்று விளங்கும்).

10. குக்குடத்வஜன்- கோழியைக் கொடி யாகக் கொண்டவன்; சூரஸம்ஹாரத்திற்கு அக்னியே கோழிக் கொடியானான். சூர ஸம்ஹாரத் திற்கு பிறகு ஒரு பாதி கோழிக் கொடியானது.

11. சக்திதரன்- வேலை உடையவன்; சூரஸம்ஹாரத்திற்கு பராசக்தி வேலாக மாறிட, அதனை ஏந்தியவன். (11 ருத்ரர்களே முருகனுக்கு ஆயுதமாயினர்).

12. குஹன்- பக்தர்களின் இதயக் குகையில் வசிப்பவன்; முருகனுக்கே உகந்த ரகஸ்ய திருநாமம். இந்த குஹப்ரம்மத்தை லய குஹன், யோக குஹன், அதிகார குஹன் என்பர்.

(லய குஹன்- உயிரை ஒழிவில் ஒடுக்கி "ஒழிவில் ஒடுக்கம்' என்ற பதவி தருபவன்.

யோக குஹன்- ஒடுங்கிய உயிரை விரியச் செய்து யோக சக்தியை அளிப்பவன்.

அதிகார குஹன்- பஞ்சக்ருத்யங்கள் நடத்தி, அதிகாரம் அளிப்பவன்.)

13. ப்ரம்மசாரி- வேதஸ்வரூபன்; பரப்ரம்ம ஸ்வரூபன்; ப்ரம்மத்திலேயே லயித்திருப்பவன்.

14. ஷாண்மாதுரன்- ஆறு கிருத்திகா நட்சத்திர தேவிகளைத் தாயாக உடையவன்.

15. க்ரௌஞ்சபித்- க்ரௌஞ்ச மலையை வேல்கொண்டு பிளந்தவன்; அஞ்ஞானம் என்கிற மலையை- இருளை ஞானம் என்கிற வாளால் தகர்ப்பவன்.

16. சிகிவாஹனன்- மயிலை வாகனமாக உடையவன், சூரபத்ம சம்ஹாரத்திற்கு முன்பு இந்திரனே மயில் வாகனமானான். சூரசம்ஹாரம் முடிந்ததும் மாமரப் பாதி சூரனே மயில் வாகனமானான்.

மேலும் இந்த 16 நாமங்களை உச்சரிப்பதால் வரும் பலன்களை வியாசர் கூறுகிறார்.

"ஏதத் ஷோடஸ நாமானி
ஜபேத் ஸம்யக் ஸதாதரம்
விவாஹே துர்கமே மார்கே
துர்ஜயே சததைவ ச
கவித்வே ச மஹாஸாஸ்த்ரே
விக்ஞானார்த்தி பலம் லபேத்
கன்யார்த்தி லபதே கன்யாம்
ஜயார்த்தி லபதே ஜயம்
புத்ரார்த்தி புத்ரலாபம் ச
தனார்த்தி லபதே தனம்
ஆயு: ஆரோக்ய வஸ்யம் ச
தன தான்ய ஸுகாவஹம்'

அன்புடன் எப்போதும் இந்த 16 நாமங்களை ஜெபித்தால், திருமணத்திலும், செல்ல முடியாத வழியில் செல்லும்போதும், வெல்ல முடியாத கடினமான காரியத்திலும், கவிஞன் ஆவதிலும், மகத்தான உயர்ந்த சாஸ்திரங்களிலும் வேண்டிய பலனை அடையலாம். கன்னிகை வேண்டுபவன் கன்னிகையையும்; வெற்றியை வேண்டுபவன் வெற்றியையும்; பிள்ளைப் பேறு வேண்டுபவன் புத்திரர்களையும்; பொருள், தனம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், யாவரையும் வசீகரிக்கும் தன்மை, பொருள், தான்யம், சுகம், யாவும் பெற்று இன்புறுவான்..

பிரம்ம- நாரத சம்வாதமாக சுப்ரமண்ய ஸஹஸ்ர (1,000) நாமங்களுக்கு பலஸ்ருதி யாது கூறப்படுகிறது?

"இதிதாம்னாம் ஸஹஸ்ராணி
ஷண்முகஸ்ய ச நாரத
ய: படேத் ஸ்ருணுயாத் வாபி
பக்தி யுக்தேன சேதஸா
ஸஸத்யோ முச்யதே பாபை:
மனோ வாக்காய ஸம்பவை:
ஆயுர் வ்ருத்திகாம் பும்ஸாம்
ஸ்தைர்ய வீர்ய விவர்தனம்
வாக்யேன ஏகேன வக்ஷ்யாமி
வாஞ்சிதார்த்தம் ப்ரயச்சதி
தஸ்மாத் ஸர்வ ஆத்மனா ப்ரம்மன்
நியமேன ஜபத் ஸுதி:'

அன்புடன் இந்த 1,000 பேர்களைப் படித் தாலோ கேட்டாலோ மனம், வாக்கு  இவற்றால் உண்டான பாவங்கள் அழியும். வாழ்நாள் அதிகரிக்கும். உடல் பலம் அதிகரிக்கும். ஒரு நாமம் சொன்னாலும் கேட்ட பொருள் அடைய லாம். ஆக, யாவரும் நியமத்துடன் இதனை ஜெபம் செய்ய வேண்டும்.

16 நாமங்கள் சொல்வதன் பலன், 1,000 நாமங்கள் சொல்வதைவிட அதிகமாக உள்ளதே! ஆக 16 நாமங்களே மிக உன்னதம் போலும்!
                                        
                                                                                                 

பகை விலக்கி மங்களம் தரும் ஸ்ரீ சுதர்சனர்!

மகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் முதன்மையானதும் சிறப்பு பெற்றதுமாகத் திகழ்வது சக்கராயுதம். சக்கராயுதத்தில் உறையும் தேவனே சுதர்சனர் என்று போற்றப்படுகிறார். வைணவர்கள் சுதர்சனரை சக்கரத்தாழ் வார் என்று வழிபடுவார்கள். விஷ்ணுவின் சக்கர அம்சத்திற்கு சக்கரராயர், திருவாழி ஆழ்வான், சக்கரராஜன், ஹேதிராஜன், யந்திர மூர்த்தி, மந்திரமூர்த்தி என்று பல சிறப் புப் பெயர்கள் உள்ளன.

திருமால், தன் சங்கல்பத்தினால் சக்கராயுதத்தை தனக்கு நிகராக உருவாக்கி, தன்னுடைய உருவத்தையும் சக்தியையும் அளித்திருக்கிறார். திருமாலின் சேனாதிபதியான ஸ்ரீசக்கரத்தினை பருதி, நேமி, எஃகம்,  வளை, ஆழி, திகிரி என்றெல்லாம் அழைக்கின்றனர்.

பெருமாளின் ஐந்து நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர் யாமி, அர்ச்சை ஆகியவற்றில் சக்கரத்தாழ்வார் உடனிருக்கிறார். மகாவிஷ்ணு பூமியில் அவதரிக் கும்போதெல்லாம் சக்கரத்தாழ் வாரும் சில அவதாரங்களில் வெளிப்பட்டும், சில அவதாரங் களில் மறைந்தும் தன் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். காக்கும் தொழில் புரிபவர் திருமால். அவர் தீமைகளை அழித்து நன்மைகளை வழங்க சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

சக்கராயுதம்- அதாவது சுதர்சனம் என்பது மகா சக்கரம். நடுவில் "ஓம்' என்ற தாரகத்தினையும்; "ஷ்ரௌம்' என்ற நரசிம்ம ஏகாட்சரத்தினையும், ஆறு இதழ்களில் "சகஸ்ரா ஹும்பட்' என்ற சுதர்சன ஆறு அட்சரங் களையும்; எட்டு இதழ்களில் "ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாட்சரங்களையும்; பன்னிரண்டு இதழ்களில் பிந்துக்களுடன் கூடிய "அம்' தொடங்கி "அ' வரையிலான மாத்ருகா அட்சரங்களையும் கொண்டு, நரசிம்மானுஷ்டுப் மந்திர ராஜத் தின் அட்சரங்களான "உக்ரம், வீரம், மகாவிஷ்ணும், ஜ்வலந்தம், ஸர்வதோமுகம், ந்ருஸிம்மம், பீஷணம், பத்ரம், ம்ருத்யும், ருத்யும் நமாம் யஹம்' என்ற சுலோகத்தை முப்பத்திரண்டு இதழ்களிலும் எழுதப்பட்டது.

பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ் வாருக்கென்று தனிச்சந்நிதி உள்ளதைக் காண்கிறோம். காஞ்சிபுரமும், குடந்தையும் திருமாலின் சக்கர அம்சத்துக்குரிய சிறப் பான தலங்கள் என்பர். காஞ்சியில் அஷ்ட புஜ எண்கரங்கள் கொண்ட பெருமாள், திருமாலின் சக்கரசக்தி எனப் போற்றப் படுகிறார். குடந்தையில் ஸ்ரீசக்கரபாணி திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள், சுதர்சன வடிவம் எனப்படுகிறார். மேலும், மதுரை மேலூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமோகூர் என்னும் தலத்தில் சுதர்சனர் சிறப்பாக எழுந்தருளியுள்ளார். பின்பக்கத்தில் ஸ்ரீநரசிம்மராகவும், முன்புறம் ஸ்ரீசக்கரத் தாழ்வாராகவும்- நாற்பத்தெட்டு தேவதை கள் சூழ, ஆறுவட்டங்களுள் 154 அட்சரங் கள் பொறிக்கப் பெற்றிருக்க, பதினாறு திருக்கரங்களில் ஆயுதங்கள் தாங்கி எழுந்தருளி யுள்ளார். இந்த சக்கரத்தாழ்வாரை வழிபட, பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.

திருமாலுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சுதர்சனருக்கும் செய்வது என்பது நடை முறையில் உள்ளது. ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால்  நவகிரகங் களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். அவர் சந்நிதியில் நெய்விளக்கு ஏற்றி "ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம' என்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

சுதர்சன உபாசனை வீரம் அளிக்க வல்லது; தீராத நோய்களைத் தீர்க்கும்; போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். சுருங்கக்கூறின், எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. சிறந்த சுதர்சன உபாசியாக விளங்கிய சுவாமி தேசிகர் ஸ்ரீ சுதர்சன அஷ்டகம் என்ற பாமாலையினை சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.

திருமால் பக்தர்களுக்கு சங்கடங்களும் துன்பங்களும் வந்தால் அவற்றை திருமாலுக்கு வந்த இடையூறாகவே கருதி காப்பாற்றுபவர் சக்கரத்தாழ்வார் என்பதை இவ்வரலாறுகள் உணர்த்துகின்றன.

பொதுவாக சக்கரம் திருமாலின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.

பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. இதேபோல் திருவெள்ளறைத் திருத்தலத்தில் மூலவரைத் தரிசித்தபின் வலம் வரும்போது, தென்திசைச் சுவரில் சுதை வடிவிலான திருமாலின் வலது திருக்கரத்தில் உள்ள சக்கரம், உடனே பிரயோகிக்கும் நிலையில் காட்சி தருகிறது. திருமால் கோவிலில் உள்ள சுதர்சனர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் காணலாம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்; சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்பர்.

 

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

ஆனித் திருமஞ்சனம்!

இரவு நடராஜர் அபிஷேகம்
காலை நடராஜர் தரிசனம்

           தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம்; காலைப்பொழுது மாசி மாதம்; உச்சிக் காலம் சித்திரை; மாலைப்பொழுது ஆனி; இரவு ஆவணி; அர்த்த சாமம் புரட்டாசி என்பர்.

வைகறை பூஜை மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும்; காலைச்சந்தி பூஜை மாசி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்; உச்சிக்கால பூஜை சித்திரை திருவோணத்திலும்; மாலை (சாயரட்சை) பூஜை ஆனி மாத உத்திர நட்சத்திரத்திலும்; இரண்டாம் கால பூஜை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்; அர்த்தஜாம பூஜை புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியிலும் நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீநடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சில ஆலயங்களில் இந்த ஆனி மாத திருமஞ்சனத்தை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.

இது நடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலம். இந்தக் காலத்தில் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறான். அடுத்து வருவது தட்சிணாயன காலம். அப்போது தன் பாதையை சூரியன் மாற்றிக்கொள்கிறான். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலம் ஆரம்பம். இதையே "ஆனி இலை அசங்க' என்பார்கள். கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து இதமான நாட்கள் தொடங்கும் மாதம் ஆனி.

சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. மேலும், வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பொன்னம்பலமான சிதம்பரத்தில் பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்காக சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார். வெள்ளியம்பலமான மதுரையில் சுந்தரத் தாண்டவம் ஆடினார். இங்கு ராஜசேகர பாண்டியன் வேண்டிக் கொண்டதால், கால் மாறி வலதுகாலைத் தூக்கி ஆடியதாக வரலாறு சொல்கிறது. தாமிரசபையான திருநெல்வேலியில் இறைவன் ஆடியது சங்காரத் தாண்டவம்.

சித்திர சபையான குற்றாலத்தில் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் உள்ளதால், இத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் ஆனந்த நடனம் புரிந்தார் என்பர். ரத்தின சபையான திருவாலங்காட்டில் வலக்காலை உச்சந்தலை வரைத் தூக்கி அனைவரும் வியக்கும் வண்ணம் ஊர்த்துவத் தாண்டவம் ஆடினார்.

திருவெண்காடு ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள நடனசபை ஆதி சித்சபை என்று போற்றப்படுகிறது. இங்கே சுவாத கேது என்ற மன்னன் வேண்டிக்கொண்ட வண்ணம் இறைவன் நவ தாண்டவங்கள் ஆடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இதற்குப் பிறகுதான் சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடினாராம். அதனால் இத்தலத்தினை ஆதிசிதம்பரம் என்று சொல்வர்.

இதேபோல் பல திருத்தலங்களில் சிவபெருமான் திருநடனம் ஆடியதாகப் புராணம் கூறுகிறது. திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் இதனை அஜபா நடனம் என்பர். திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக- தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்று போற்றுகின்றனர். திருநள்ளாற்று தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்போல ஆடியதால் அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம் என்கின்றனர். இதனை வீசி நடனம் என்றும் சொல்வர். திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இந்த நடனத்தினை ஹம்ச நடனம் என்பர். திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்பர். திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம்.

இறைவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மேலும், சந்தியா தாண்டவம், கௌரித் தாண்டவம், திரிபுரத் தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்.

ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

கங்கை தீர்த்தம் அளித்தால் நம் பாவங்கள் நசியும்; எண்ணெய் அளித்தால் சுகம் கிட்டும்; மாப்பொடி அளித்தல் கடனைப் போக்கும்; நெல்லி முள்ளி பொடி அளித்தால் நோய் நீங்கும்; பஞ்சகவ்யம் அளித்தால் மனதில் தூய்மை உண்டாகும்; இளநீர் அளித்தால் சுகமான வாழ்வு கிட்டும்; தேன் அளித்தால் மகிழ்ச்சி உண்டாகும்; பால் அளித்தால் ஆயுள் வளரும்; தயிர் அளித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; நெய் அளித்தால் மோட்சம் கிடைக்கும்; கரும்புச்சாறு அளித்தால் உடல்பிணியைப் போக்கும்; சந்தனம் அளித்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்; பன்னீர் அளித்தால் பணத் தட்டுப்பாடு இருக்காது; பஞ்சாமிர்தம் தயாரிக்க பழங்கள் அளித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

பொதுவாக சிவபெருமானை வழிபட்டால் நமக்கு நல்லறிவு கிட்டும். இதனால் எது நல்லது- எது தவறு என்பதைப் பகுத்தறியலாம். உடலில் பதட்டம் இருக்காது. அமைதியான வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் சிவதரிசனம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. அதுவும் ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்வர். 

 

மங்கள வைபவங்கள் அருளும் வைபவலட்சுமி!

புதிதாகத் திருமணமான மணமக்களை, "பதினாறு பேறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என வாழ்த்துகிறோம். அந்தப் பதினாறு பேறுகளோடு அஷ்டலட்சுமிகள் தரும் எட்டு ஐஸ்வரியங்களையும் சேர்த்து, தன்னை வணங்குபவர்களுக்கு அருள்பவள்தான் வைபவலட்சுமி.

ஒரு சமயம் வைகுண்டத்தில் செந்தாமரை மலர்மீது அமர்ந்திருந்த மகாலட்சுமியை கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் தங்கள் தீர்த்தத்தால் நீராட்டின. எட்டுத் திக்குகளிலுள்ள அஷ்ட கஜங்கள் (யானைகள்) தங்கள் துதிக்கையால் நீரை முகர்ந்து லட்சுமிக்கு திருமஞ்சனம் செய்தன. பாற்கடல் ஆண் உருவம் எடுத்து லட்சுமி தேவிக்கு தாமரை மாலைகளையும் திருவாபரணங்களையும் சமர்ப்பித்தது. கந்தவர்கள் பாட, அப்சரஸ்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

லட்சுமிதேவிக்கு நடக்கும் இந்த வைபவத்தைப் பார்த்து மகாவிஷ்ணு மகிழ்ந்து கொண்டிருந்தார். அப்போது சூரியனின் மகனான ரேவந்தன் பாற்கடலில் தோன்றிய உச்சிஸ்ரவஸ் என்ற குதிரைமீது அமர்ந்து வைகுண்டம் வந்தான். அந்த அழகான குதிரையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி. அப்போது லட்சுமிதேவியைப் பார்த்து, ""இவன் யார்?'' என்று கேட்டார் விஷ்ணு. குதிரையின் நினைவில் இருந்ததால் கணவர் கேட்டதை லட்சுமிதேவி கவனிக்கவில்லை. இதனால் கோபமடைந்த விஷ்ணு பெண் குதிரையாகப் பிறக்கும்படி லட்சுமியைச் சபித்தார்.

அதன்படி காளந்தி, தமசா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பெண் குதிரையாகத் தோன்றி வாழ்ந்து வந்தாள் மகாலட்சுமி.

தேவி இல்லாத வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவுக்கு மகிழ்ச்சியில்லை. அதனால் அவளை அழைத்துப் போக ஆண் குதிரை வடிவமெடுத்து வந்த விஷ்ணு, பெண் குதிரையாகிய தேவியிடம் இன்பம் சுகித்தார். அதனால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.


அக்குழந்தையை பிள்ளை வரம் வேண்டித் தவமிருக்கும் யயாதியின் மகன் துர்வசுவுக்கு தானமாகக் கொடுக்க விரும்பினார் மகாவிஷ்ணு. இதற்கு மகாலட்சுமி ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது விஷ்ணு, ""தேவி! நீ இந்த ஆண் குழந்தையை துர்வசுவுக்குக் கொடுத்தால் உனக்கு எல்லா வைபவங்களையும் வழங்கும் ஆற்றல் கிடைக்கும். அதைக் கொண்டு பூலோகத்தில் வாழும் மக்களுக்கு வேண்டிய எல்லா வரங்களையும் வழங்கலாம். அதனால் உன்னை வைபவலட்சுமி என்று போற்றித் துதிப்பார்கள். நான் உன்னைத் தேடி வந்ததுபோல் உன்னை வணங்கும் பெண்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும்; இணைபிரியாமல் கணவனோடு சேர்ந்து வாழும் மகிழ்வையும் நீ கொடுக்கலாம். வைபவலட்சுமியாகிய உன் பெருமை உலகெங்கும் தெரியும்'' என்றார்.

மேலும், ""நான் உன்னோடு கூடியிருந்து பக்தர்கள் வேண்டும் எல்லா வரங்களையும் கொடுப்பேன்'' என்றும் உறுதி கூறி, லட்சுமியை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது, ""நான் அருளிய இந்த சுலோகத்தை தினமும் திருவிளக்குமுன் அமர்ந்து ஒன்பது முறை சொல்லும் பக்தைகளின் இல்லத்தில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வதோடு, மாங்கல்ய பலம் பெற்று புத்திரப் பேறுகளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்'' என்றாள் லட்சுமிதேவி.

அந்த சுலோகம்:

"மங்களே மங்களதாரே
மாங்கல்ய மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேஹி
மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

இத்துடன் ஸ்ரீசூக்தம் மற்றும் விருப்பப்பட்ட லட்சுமி சம்பந்தப்பட்ட சுலோகங்களையும் சொல்லி பிரார்த்தனை செய்யலாம்.

வியாழன், 28 ஏப்ரல், 2016

வாழைப்பந்தல் பச்சையம்மன் அருளாட்சி!

அகில உலகங்களையும் காத்திடும் அன்னை பார்வதி தேவி பரமனின் இடப்பாகம் பெற்றிட வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்தாள். வழியில் ஓரிடத்தில் வாழை இலையினால் பந்தல் அமைத்து, அங்கு மணலினால் லிங்கம் பிடித்து வழிபட எண்ணினாள்.

அதற்கு நீர் தேவைப்படுவதால் விநாயகரையும், முருகனையும் அழைத்து நீர் கொண்டு வருமாறு அனுப்பினாள். இருவரும் நீர் எடுத்து வரச் சென்று வெகு நேரமாகவே அன்னையே தனது கைப்பிரம்பினால் பூமியைத் தட்டி ஓர் நீரூற்றை ஏற்படுத்தி மணல் லிங்கம் பிடித்து முடித்தாள். பின்னரே விநாயகரும் முருகரும் ஆளுக்கொரு நதியோடு அங்குவந்து சேர்ந்தனர். ஆக அன்னை ஏற்படுத்திய நதியோடு சேர்ந்து அங்கே  மூன்று நதிகள் ஆயின. மூன்று நதிகளும் கூடும் அவ்விடத்தை முக்கூட்டு நதி என்று அழைக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து அன்னை சிவ பூஜை செய்யும் வேளையில் அருகிலுள்ள கதலி வனத்தில் இருந்த அரக்கன் ஒருவன் பல இடையூறுகளைச் செய்து வந்தான். இதையறிந்த சிவனும், விஷ்ணுவும் வாமுனி, செம் முனியாக அவதாரம் எடுத்து அவ்வரக்கனை வதம் செய்தனர். பின்னர், அன்னை சிவ வழிபாட்டை முடித்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றாள்.

அம்பிகை முதலில் வந்த ஊர் பின்னர் முணுகப்பட்டு என்றும், பின்னர் கடைசியாக தங்கி பிரயாணப் பட்ட இடம் பிரயாணப்பட்டு என்றாகி, பின்னர் பெலாம்பட்டு என்றும் அழைக்கப்படுகின்றது.  மூன்று நதிகளும் கூடி இருக்கும் இத்தலத்தில் அன்னை பிடித்த மணல் லிங்கம் தற்போது கல் லிங்கமாக மாறியதோடு, வளர்ந்துகொண்டே போவதாகவும் கூறுகிறார்கள். முதலில் 2 அடி உயரமே அந்த லிங்கம் இருந்ததாம்.

இங்கு துவார பாலகர்கள் வலப்பக்கத்தில் சிவ வடிவமாகவும், இடப்பக்கத்தில் விஷ்ணு வடிவமாகவும் காட்சியளிக்கின்றனர். ஈசன், மன்னார் சுவாமியாக அம்மனுக்கு வலப்புறம் தனியாக அமர்ந்து அருள்புரிகின்றார். நடுவில் சுதை வடிவில் அம்பிகை. வெளியே விநாயகரும் முருகனும் சுதை வடிவில் அருட்காட்சி அளிக்கின்றனர்.

வாகன மண்டபத்தில் யானை, சிம்மம் மற்றும் மயில் வாகனங்கள் உள்ளன. ஆலயத்தைச் சுற்றிலும் ஜமதக்னி முனிவர், அஷ்ட விநாயகர்கள், நவவீரர்கள், சப்தரிஷிகள் ஆகியோர் அம்பாளை நோக்கி தவம் புரிந்துகொண்டிருக்கின்றனர். இத்தலத்தில் வில்வ மரமும் வேம்பு மரமும் இணைந்து அவற்றினடியில் நாகராஜர் சிலை வடிவில் காட்சி தருகின்றார்.

3 நிலைகள், 3 கலசங்களுடன் சிறிய ராஜகோபுரம் கம்பீரத்துடன் காட்சியளிக்கின்றது. அதில் துவார சக்தியாக கண்டன், முண்டன். உள்ளே துவார கணபதியும் தேவேந்திரனும் வீற்றிருக்கின்றனர். பிராகாரத்தில் மிகப்பெரிய சுதை வடிவில் ஜடா முனி உள்ளார். விசேஷ காலங்களில் இவருக்கு வழிபாடு செய்த பின்னரே அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

ஆலயத்தின் வெளியே வலப் புறமாக சாலையையொட்டி செங்கல் சந்நதிகளில் வாமுனி, செம்முனி இருவரும் வரப்பிரசாதிகளாக சுதை வடிவில் அருள்புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆலயத்திற்குள் நவகிரகங்களுக்கும், அனுமனுக் கும் சந்நதிகள் உள்ளன. இந்த ஆலயத்தில் பிரசாதமாக பச்சைநிற குங்குமம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அங்கு ஆடிமாத திங்கட்கிழமைகளே விசேஷமாகும். நாடெங்கிலுமுள்ள பல பெருமக்களின் குலதெய்வமாக இந்த அம்மன் திகழ்கிறாள். ஆலயம் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். வெளியூர் பக்தர்கள் காது குத்துதல், திருமணம், பொங்கல் வழிபாடு ஆகியவற்றை இங்கே நடத்துகிறார்கள்.

பச்சையம்மனை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்து சிறந்த பலன்களைக் காண்கிறார்கள்.

மகிமை மிகுந்த இந்தத் தலம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் அமைந்துள்ளது. ஆரணி, வேலூர், செய்யார் போன்ற இடங்களிலிருந்து  இங்கு வருவதற்கு பேருந்து வசதியுள்ளது.

 

பெருமை நிறைந்த புருஷோத்தம மாதம்!

புருஷோத்தமன்  என்றால்  ஒருவரே, அவரே  நம்  கிருஷ்ணன். அவர் பெயரில் ஒரு மாதம் உண்டு.  புருஷோத்தம மாதம்.  நமது பஞ்சாங்கம் சந்திரனின் கதியை அடிப்படையாக கொண்டது. அவர் பெயரில் எப்படி ஒரு  மாதம்  அதிகமாக  உருவானது? அப்படி இருந்தால்  புருஷோத்தம மாதம் அதி உன்னதமானது என்று சொல்லவே வேண்டாமே. 

 
வருஷத்தில் ஒரு மாதம்  அதிகமாசம் என்று  பஞ்சாங்கக்காரர்கள் தீர்மானித்து   சொல்கிறார்கள்.  கிருஷ்ணன்  அதை எடுத்து அதற்கு தனிப் பெருமை கொடுப்போம் என்று எற்றுக்கொண்டுவிட்டான்.​


​சின்னதாக  மண்டையைக்  குழப்பும் ஒரு கணக்கு போடலாமா?   பூமியை சுற்ற சந்திரன் 27.3 நாள் எடுத்துகொள்கிறான்.  சூர்யனைச் சுற்ற 365.2422 days (= பூமியின் சுற்று வேகம்  29.79 km ஒருவினாடிக்கு ). எனவே பூமியும்  சந்திரனும்  27.3 நாள் நகர்வதால் சூரியனை சுற்றுவதில்  1/12 மாசம்  என்று ஆகிறது. அதாவது ஒரு பௌர்ணமியிலிருந்து மற்றொரு பௌர்ணமி வரை. சந்திரன் இன்னும் 2. 2  நாள்  சுற்றினால் தான் அது முழுமை பெரும் அல்லவா. இது பூமி சூரியனை கொஞ்சம்  வளைந்து சுற்றுவதால் ஏற்படும் வித்யாசம். சந்திரனோ  தனது சுற்றை  27.3 நாளில் முடிக்கிறான்.  ஆனால்  பூமி, சூரிய,  கதியை  சார்ந்து பௌர்ணமியாக   சந்திரனுக்கு  29.531நாள் தேவை.  ஒரு சந்திர  வருஷ கணக்கில்   29.531 நாள்  சந்திர மாதங்கள்  = 354.372 நாட்கள் ஒரு சந்திர  வருஷத்தில்.  நமது கணக்கில்  (365.2422 - 354.372) =10.87 நாள்  வித்தியாசம் வருகிறது.   வசிஷ்ட சித்தாந்தம்  ஒவ்வொரு  32 மாதம் 16நாள்  8 கடி  க்கும் (1 கடி: 24 நிமிஷம்)   ஒருமுறை  அதிக மாசம்  இவ்வாறு ஏற்படுகிறது. `--  உங்களுக்கு  புரிகிறதா?   எது சுற்றுகிறது, பூமியா,  சந்திரனா, தலையா? 

பரிமேலழகர் போலவோ  நக்கீரர் போலவோ  பேசாமல்  கொஞ்சம் சாதாரணமாக சொன்னால்   நமது சந்திரமான  வருஷத்தில்  ஒரு பிரதமை முதல் அடுத்த அமாவாசை  வரை ஒரு சந்திரமான மாசம்.  ஒரு சௌரமான (சூரிய) வருஷத்தில் 13 அமாவாசை வந்தால்  சந்திரமான  மாசங்கள் 13 ஆகிவிடாதா?  எந்த மாசத்தில்  2 அமாவாசை வருகிறதோ  அந்த முதல் அமாவாசை வரும் மாதத்திற்கு அடுத்த மாதம் ''அதிக'' மாசம்!!!  இந்த வருஷம் ஆணிமாசத்தில் 2 அமாவாசை.   முதலாவது அமாவாசைக்கு அப்புறம் பிரதமையிலிருந்து ஆரம்பிக்கும் மாசம்  ஆஷாட அதிக மாசம்.


இந்த மாதத்தில் கிருஷ்ணன் தனது கருணையை, அனுக்ரஹத்தை அதிகரித்து  அளிக்கிறார் என்று நம்பிக்கை.

எப்படி  அஷ்டமி,  நவமி  போன்றவைலௌகீகத்தில் ஏற்றவை அல்ல என்று புறக்கணிக்கப்பட்டாலும்  ராமனும்  கிருஷ்ணனும் அவற்றை ஏற்று புனித நாளாகச் செய்தார்களோ அதுபோல்   ஒரு  மாதத்தை பீடை மாதம் என்று வைக்கப்பட்டது. அதை கிருஷ்ணன் தனதாக ஏற்றுக்கொண்டு அதை மிகச்சிறந்த மாதமாக  செய்துவிட்டான்.  புருஷோத்தம மாதத்திற்கு ஒரு முன்னோடி மார்கழியே.

புருஷோத்தம மாதத்தின் நன்மைகள்:-

பத்ம புராணம் மற்றும் கந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது.


1 . பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்:  ” அனைத்து சக்தியும் வாய்ந்த” புருஷோத்தம மாதத்தினை” எவர் பின் பற்றுகிறாரோ  அவரை நான் ஆசிர்வதிக்கிறேன். எவரொருவர் புருஷோத்தம விரதத்தினைப் பின்பற்றுகிறாரோ, அவர்களது கடந்த கால பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.  புருஷோத்தம விரதத்தினை , பின்பற்றாமல் எவராலும் உண்மையான “பக்தி தொண்டு “செய்ய முடியாது.  வேதங்களில் குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான சாதனைகளையும், வேத காரியங்களைக் காட்டிலும், புருஷோத்தம மாதத்தில் எடுக்கப்படும் விரதமானது அதிக பலனுள்ளது ஆகும். எவரொருவர், புருஷோத்தம விரதத்தினை எடுக்கின்றனரோ, அவர்கள், தங்களது வாழ்க்கையின் கடைசிக் காலத்திற்கு பிறகு எனது “நித்திய உலகமான கோலோகத்திற்கு” வந்தடைவர்.

2.”துர்வாஷ முனிவர் ”  :- புருஷோத்தம மாதத்தில் எவரொருவர் புனித நதியில் நீராடுகிறார்களோ, அவர்களது பாவங்கள் தொலைக்கப்படும். மற்ற மாதங்களின் பெருமைகள் எவையும், இந்த புருஷோத்தம மாத  மகிமையின் ஒரு பகுதிக்கு  கூட நிகராகாது.  இந்த புருஷோத்தம மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலினாலும்,தான தர்மங்கள் வழங்குவதினாலும் , “ஹரே கிருஷ்ணா” மகா மந்திரத்தை உச்சாடனம் செய்தலினாலும், ஒருவரது அனைத்து துன்பங்களும் அழிந்து விடும். இதன் மூலம் ஒருவர்   எல்லாவிதமான பூரணத்துவமும் பெற்று, அவரது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறார்.

3. ஒரு “புருஷோத்தம விரதமானது” “ஆயிரம் மடங்கு கார்த்திகை விரதத்திற்கு” சமமாகும்.

4. வால்மீகி முனிவர்:- புருஷோத்தம மாத விரதத்தினை ஒருவர் எடுப்பதன் மூலம், ஒருவருக்கு 100″அஷ்வ மேத யாகத்தினை” செய்வதினால் உண்டாகும் பலன் கிடைக்கும்.  அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், புருஷோத்தம மாதத்தின் உடலில் தான் சங்கமமாகின்றது.  எவரொருவர் மிகுந்த நம்பிக்கையுடன் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனரோ, அவர்கள் ” கோலோக” விருந்தாவனத்திற்கு செல்வது உறுதி. 

5.  இம்மாதத்தின் போது “புனித தாமில்” வசிப்பவர்களுக்கு, 1000 மடங்கு பலன்கள் கிட்டும்.

6. “நைமி சாரண்யா” முனிவர்கள்:-  “கருணை மிகுந்த புருஷோத்தம மாதமானது, பக்தர்கள் அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றும் “கல்ப விருட்ச மரமாகும்”

7.  எவரொருவர், இந்த புருஷோத்தம மாதத்தில் ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் விக்ரஹங்களை வழிபடுகின்றனரோ அவர்களுக்கு அனைத்தும் கிடைக்கப் பெரும்.

8. எவரொருவர் புருஷோத்தம விரதத்தினை பின் பற்றுகிறார்களோ, அவர்களின் “கெட்ட கர்ம வினைகள் அனைத்தும் எரிந்து அவர்கள், ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணருக்கு நேரிடையாக சேவை செய்யும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

9.  புருஷோத்தம மாதமே,ஆன்மீக வளர்ச்சிக்கு சிறந்த மருந்தாகும், ஏனெனில்,பகவான்  ஸ்ரீ கிருஷ்ணரே நேரிடையாக ஒருவர் செய்த தவறினை மன்னித்து விடுகிறார்.

10. நாரத முனிவர் :- “புருஷோத்தம மாதமே!  மற்ற அனைத்து மாதங்களிலும்  பின்பற்றும் விரதங்கள் மற்றும் சாதனைகளைக் காட்டிலும் மிகச் சிறந்தது ஆகும். ஒருவர் மிகுந்த நம்பிக்கையுடன் இம்மாதத்தின் பெருமைகளைக் கேட்டாலே, அவருக்கு உடனடியாக கிருஷ்ண-பக்தி கிடைக்கப் பெற்று , அவரது அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபெருகின்றனர். எவரொருவர், இப்புருஷோத்தம விரதத்தினை, முறையாகப் பின் பற்றுகின்றனரோ, அவர்களுக்கு கணக்கிலடங்கா “சுக்ருதியும்” ஆன்மீக உலகத்திற்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இந்த புருஷோத்தம விரதம் எப்படி  பண்ணுவது?

சாத்வீகமாக இரு. பிரம்மச்சர்யம் அனுஷ்டி .  தரையில் படுக்கமுடிந்தால்  படுக்கலாம்.
) சூர்யோதயத்துக்கு முன்  குளிக்கலாம்.  முடிந்தால்  எங்காவது ஒரு புனித  க்ஷேத்ரத்தில், குறைந்தது  இந்த மாதத்தில் 3 நாளாவது.
 கிருஷ்ணனை நினை. அவன் சேஷ்டிதங்களை மனதில் அனுபவி. கேள். அவன் நாமங்களை சொல், ஹரே கிருஷ்ணா  மூல மந்திரம்  கொஞ்சம் சொல்.  (24, 32, 64  என்ற எண்ணிக்கையில்).
 ராதா கிருஷ்ணா  படத்துக்கு  சிறிய  நெய்  தீபம்.  ரோஜா, தாமரை மலர். துளசி மாலை  சூட்டலாம்.
தினமும்  ஸ்ரீமத் பாகவதம்  சிறிது பாராயணம், படிக்கலாம்.  (10 வது காண்டம், 14வது அத்தியாயம், பிரம்மா கிருஷ்ணனை பிரார்த்திப்பது விசேஷமானது). பகவத் கீதையில்  15வது அத்தியாயம்.

 பூஜை அறையில் இருக்கும் புத்தகங்களில்   ஸ்ரீ  ஜகன்னாதாஷ்டகம், ஸ்ரீ  நந்தனந்தனாஷ்டகம்,




​ கண்ணில் ​தென்பட்டால் நீங்கள் பாக்ய சாலிகள். அவற்றை படிக்கலாம்.  ராதா க்ருஷ்ண பஜனையோ  பிரார்த்தனையோ  அதி விசேஷம்.
 ரொம்ப பெரிய விஷயம் என்னவென்றால்  ''இந்த மாதம்  எல்லோரிடமும் அமைதியாக இருப்பேன்.  பொய்  பேசமாட்டேன்''  --   இது முடியுமா???
​முடிகிற  ஒன்று வேண்டுமானால் சொல்கிறேன்.   எவர் சில்வர் தட்டு வேண்டாம். இந்த ஒரு மாதம் மட்டும்  வாழை இலையில் சாப்பிடுவோம்.(முடிந்தால் தரையில் அமர்ந்து).  
பசுவுக்கு கீரையாவது தானம் கொடுப்போம்.  முடிந்தால் பிராமணர்களுக்கு கொஞ்சம் தக்ஷிணை.
இந்த ஒரு மாதம்  முடி திருத்தும் நிலையம் அணுகாமல் வேறுபக்கம் திரும்பி நடப்போம். நகத்தை வெட்டக்கூடாது.
 ஒருமாதத்தில் யாரும்  ஹிப்பியாக முடியாதே. 
கடுகு எண்ணெய்  வேண்டாம். ஒரு வேளை  ஆகாரம்.  மத்யானமோ  சூர்யாஸ்தமனத்துக்கு பிறகோ.  பால்  பழங்கள், சாதுர்மாச்யத்தில்  உபயோகிக்கும் காய் கறிகள் மட்டும் உபயோகிக்கலாம்.
கௌண்டின்ய முனி ஒரு மந்திரம் சொல்லிக்கொடுக்கிறார். அதைச் சொல்வோமே: 

 
கோவர்தன தரம்  வந்தே,
கோபாலம் கோப ரூபினம்
​கோகுலோத்சவம் ஈசானம் 
​கோவிந்தம் கோபிகா ப்ரியம் 

​கிருஷ்ணனை நினைக்க  இப்படியும் ஒரு வசதி இருக்கும்போது அதை கையகப் படுத்திக் கொள்வோமே.

ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஷடாக்க்ஷர ஸ்தோதிரம்!

 
 
அதாதஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்
ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்
ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்
அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.

இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும்கேட்பவர்களுக்கும்,இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியதுவிரோதிகளைவெற்றி கொள்ளவும்நோய் நொடிகள் அண்டாமல்அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும்உலகிலுள்ளோர்அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமானமூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.

சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்
சரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ஸ்ரீயம்.

சரவணப் பொய்கையில் பிறந்தவரும்ஸ்கந்தனும்தன்னைசரணமடைந்தவர்களை காப்பவருமானதாங்களை சரணடையூம்எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

ராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்
ரதீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும்,தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும்கோடிமன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகலசெல்வங்களையும் அருள வேண்டும்.

பலாரி ப்ரமுகைர் வந்த்யவல்லீந்த்ராணி ஸுதாபதே!
வரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

இந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும்வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும்தன்னை அண்டியவர்களின்விருப்பத்தை நிறைவேற்றுபவனே!, எனக்கு சகல செல்வங்களையும்அருள வேண்டும்.

நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்
நவவீரைபூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்


நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும்சித்தர்கள்-கந்தர்வர்களாலும்வணங்கப்பட்டவரும்வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால்பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன்.எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.

பகவன் பார்வதீஸுநோஸ்வாமின் பக்தார்திபஞ்சன!
பவத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

பகவானே!, பார்வதி குமாரா!, தலைவனேபக்தர்களின் கவலைகளைப்போக்குகின்றவனேதங்களுடைய பாத கமலங்களில் குறைவற்றபக்தியையும்அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்கவேண்டும்.

வஸுதான்யம் யசகீர்திம் அவிச்சேதம்  ஸ்ந்ததே:
சத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்

தங்கம்தான்யம்அளவற்ற புகழ்மகன்-பேரன் என்று வம்ச விருத்தி,விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து,செல்வத்தையும் அருள் புரிவீர்களாக!

இதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்
படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பதசிந்திதாதிகா:

ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரத்தைஎப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும்மேலாக செல்வங்கள் கிடைக்கும்.