செவ்வாய், 22 டிசம்பர், 2015

குருவாயூர் குசேலர் தினம்



மார்கழி மாத முதல் புதன் கிழமை குசேலர் தினமாக குருவாயூரில் கொண்டாடப்படுகிறது.

குசேலர் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிக்க ஆவலுடன் அவல்  கொண்டு சென்ற தினம் மார்கழி மாத முதல் புதன் கிழமை.

ஆகவே அன்றைய தினம் குருவாயூரப்பனுக்கு அவலும், அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப்படுகிறது.

அன்றைய தினம் ஸ்ரீ கிருஷ்ணர் குசேலருக்கு அருள் செய்த தினமாதலால் பக்தர்கள் இலையில் அவலும், அச்சு வெல்லமும் கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம்.

அன்று பக்தர்கள் படிகணக்கில் அவல் தானம் செய்வார்கள்.

அன்றைய தினம் குருவாயூரப்பனுக்கு அவல் படைத்து வணங்குவதால் ஐஸ்வர்யம் பெருகும்.
 

ஸ்ரீசுதர்சனர் மாலா மந்திரம்


செல்வம், நீண்ட ஆயுள்,உடல் நலம் தரும் ஸ்ரீசுதர்சனர் மாலா ம்ந்திரம்:


ஒம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீ:
ஜன வல்லபாய பராய பரமபுருஷாய
பரமாத்மனே பரகர்ம-மந்த்ர யந்த்ர தந்த்ர
-ஒளஷத அஸ்த்ர சாஸ்த்ராணி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய!
 
 ஒம் நமோ பகவதே! மஹா ஸுதர்சனாய தீப்த்ரே
ஜ்வாலா-பரீதாய ஸர்வதிக் ஷோபன கராய
ஹும் பட் ப்ரம்மனே பரம் ஜோதிஷே ஸ்வாஹா!
 
 
ஸ்ரீசுதர்சனர் காயத்ரி:
 
 ஓம் ஸுதர்சனாய வித்மஹே 
ஜ்வால சக்ராய தீமஹி 
தன்ன சக்ர ப்ரசோதயாத்!
 
 

மகா தானம்



காராம் பசு

குதிரை

எள்

யானை

தேர்

வீடு (நிலம்)

தங்கம்

ரத்தினம் (நவரத்தினம்)

ஆகியவற்றை தானம் செய்வது  மகாதானம் ஆகும்.

பூஜைகளில் செய்யக்கூடாதவை


விநாயகர்- துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது.
விஷ்ணு - அட்சதை, ஊமத்தைபூ, எருக்கம்பூ இவைகளால் அர்ச்சனை  செய்யக்கூடாது.
துர்க்கை---அருகம்புல் அர்ச்ச்னை செய்யக்கூடாது
சூரியன் ---வில்வம்,நெல்லி இலை அர்ச்சனை செய்யக்கூடாது.
லட்சுமி ---தும்பைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
சரஸ்வதி--பவள புஷ்பத்தால் அர்ச்சனை செய்யக்கூடாது.
பைரவர்---மல்லிகைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
பரமசிவன் - தாழம்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.

எந்த தெய்வத்திற்கும் செண்டு மல்லிகையோ, ஏனைய வாசமற்ற மலர்களையோ பயன் படுத்தக்கூடாது.
 
துலுக்க சாமந்திப்பூவை பூஜைக்கு பயன்ப்டுத்தக்கூடாது.

உணவு, பூஜை, மங்கல காரியம், ஜபம், ஹோமம்,மக்கள்,கூடுமிடம் ஆகிய இடங்களில் மூக்கை சிந்துவதோ,காரிஉழிழ்வதோ கூடாது.
 
விளக்கின் சுடரை கையால் தொடக்கூடாது. தொட்டால் குளிக்கவேண்டும்.

தான் செய்த புண்ணியத்தை தானம் செய்யக்கூடாது.

கல்லின் மேல் வைத்த சந்தனத்தை பூசிக்கொள்வது, பூனை வாய் வைத்த சாதத்தை, உணவுப் பொருட்களை சாப்பிடுவது, நீரிலே தன்னுடைய நிழழை பார்ப்பது இவைகள் எவ்வளவு பெரிய பணக்காரனையும் ஏழையாக்கிவிடும்.

கிழமையும் தானமும்


ஞாயிறு - சர்க்கரை பொங்கல், பாயாசம்
திங்கள் -- பால்
செவ்வாய் - வாழைப்பழம்
புதன் -- வெண்ணைய்
வியாழன் - சர்க்கரை
வெள்ளி -வெள்ளை சர்க்கரை
சனி -- பசும் நெய்

நட்சத்திரத்திற்குரிய மரங்கள்


அசுவணி----எட்டி
பரணி ----நெல்லி
கார்த்திகை--அத்தி
ரோகிணி ---நாவல்
மிருகசீரிடம்-கருங்காலி
திருவாதிரை-செம்மரம்
புனர்பூசம் --மூங்கில்
பூசம் -----அரசு
ஆயில்யம்--புன்னை
மகம் ---ஆல்
பூரம் ----பலா
உத்திரம் --அலரி
அஸ்தம்---வேலம்
சித்திரை--வில்வம்
சுவாதி----மருது
விசாகம்--விலா
அனுஷம்--மகிழம்
கேட்டை--குட்டிப்பலா
மூலம்----மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம்-சக்கைப்பலா
திருவோணம்-எருக்கு
அவிட்டம்---வன்னி
சதயம்-----கடம்பு
பூரட்டாதி -கருமருது
உத்திரட்டாதி-வேம்பு
ரேவதி------இலுப்பை
 
 
 

கிழமையும் பிரதோஷபலன்களும்!


ஞாயிறு----  மங்கள செயல்கள் நிறை வேறும்
திங்கள்-----  நல்ல சிந்தனை வளரும்
செவ்வாய்-- பசி,பஞ்சம்,வறுமை நீங்கும்
புதன் ------  புத்திரபாக்கியம் ,கல்வியில் சிறப்பு
வியாழன் -- ஆபத்து விலகுதல்
வெள்ளி---- எதிரிகள் தொல்லை தீருதல்
சனி--------  அஷ்டலக்ஷ்மியின் அருள் கிடைத்தல்