சனி, 19 டிசம்பர், 2015

விநாயக சதுர்த்தியன்று அர்ச்சிக்கும் இலைகளும், பலன்களும்



விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகரை வழிபடுவது சிறந்தது.  ஒவ்வொரு இலைக்கும் தனிதனிப் பலன்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த பலன்கள் குறித்த தகவல்கள் கீழே:


1.
முல்லை இலை - அறம் வளரும்.

2.
கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3.
வில்வம் இலை - இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4.
அருகம்புல் - அனைத்து நலன்களும் கிடைக்கும்.

5.
இலந்தை இலை - கல்வியில் மேன்மையை அடையலாம்.

6.
ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப்பெறும்.

7.
வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

8.
நாயுருவி இலை - முகப் பொலிவும், அழகும் கூடும்.

9.
கண்டங்கத்தரி இலை - வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10.
அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

11.
எருக்கம் இலை - கருவிலுள்ள குழந்தைக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

12.
மருதம் இலை - குழந்தைப்பேறு கிடைக்கும்.

13.
விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணிவு கைவரப்பெறும்.

14.
மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்.

15.
தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனதிடம் கிடைக்கும்.

16.
மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17.
அரசம் இலை - உயர்பதவியும், பதவியால் பெருமையும் கிடைக்கும்.

18.
ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

19.
தாழம் இலை - செல்வச் செழிப்புக் கிடைக்கும்.

20.
அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21.
தவனம் கர்ப்பூர இலை - நல்ல கணவன்/மனைவி அமையப்பெறும்.

இந்த 21 இலைகளில் அருகம்புல் கொண்டு வழிபடுவதால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பதால் அருகம்புல் மிகச்சிறந்ததாக இருக்கிறது.

ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம்

ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம்:


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம்
ஓம் நமோ பகவதி ஸ்ரீ ராஜமாதங்கேச்வரி
சர்வஜன மனோஹரி சர்வ முக ரஞ்சனி
க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்
சர்வ ராஜ வசங்கரி சர்வ ஸ்திரீ புருஷ வசங்கரி
சர்வ துஷ்டமிருக வசங்கரி சர்வ சத்வ வசங்கரி
சர்வ லோக வசங்கரி
த்ரைலோக்யம் மே வசமானய நமோ நமஹா!


ஸ்ரீ ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்

ஸ்ரீ ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்:

1.
சங்கீதயோகினி
2.
ஷ்யாமா
3.
ஷ்யாமளா
4.
மந்திரநாயிகா
5.
மந்திரிணி
6.
சசிவேசானி
7.
ப்ரதானேசி
8.
சுகப்ரியா
9.
வீணாவதி
10.
வைணிகீ
11.
முத்ரிணி
12.
ப்ரியகப்ரியா
13.
நீபப்ரியா
14.
கதம்பேசி
15.
கதம்பவனவாசினி
16.
சதாமதா

செவ்வாய், 1 டிசம்பர், 2015

கருட தரிசன மகிமை


ஞாயிறு ---நோய் தீரும்

திங்கள் ---துன்பங்கள் அகலும்

செவ்வாய் --அழகு சேரும்

புதன் ---விரோதிகள் விலகுவார்கள்
.
வியாழன் ---பில்லி, சூன்யம்நீங்கும்

வெள்ளி ---பூரன ஆயுள் கிடைக்கும்
 
சனி ---ஆயுள் விருத்தியாகும்

தானம் தரும் பலன்

நாம் தானம் தரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே:


1. அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.

2.
வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.

3.
பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.

4.
கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.

5.
தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.

6.
நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும்.

7.
தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.

8.
வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.

9.
தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்.

10.
நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.

11.
அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.

12.
பால் தானம் - துக்கம் நீங்கும்.

13.
தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.

14.
தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.

15.
பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.